பதுளையில் கவிழ்ந்த பேருந்து

பதுளையில் கவிழ்ந்த பேருந்து
Spread the love

பதுளையில் கவிழ்ந்த பேருந்து

பதுளையில் கவிழ்ந்த பேருந்து, விபத்து மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் பயணிகள் பேருந்து தலைகீழாக கவிழ்வதற்கு காரணமாக அமைந்த சம்பவம் அந்த பேருந்து சாரதியில் உதவியாளரை அந்த பேருந்து செலுத்தியதாகவும் அதனாலயே இந்த பேருந்து கவர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மூவரையும் இழந்து 34 பேர் காயமடைந்துள்ளனர்.

சாரதி அனுமதி பத்திரம் என்று சாரதி உதவியாளர் பேருந்து ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டுச் சிந்தனை காரணமாக பயணிகளை ஏற்றியபடி பயணித்த பேருந்தை, சாரதியின் அனுமதிப்பத்திரம் இல்லாது , சாரதியின் உதவியாளர் ஓட்டிச் சென்ற விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தை எடுத்து தற்பொழுது பேருந்து சாரதி உதவியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த பேருந்து விபத்தில் காயவடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இறந்தவரின் உடல்கள் மரண பரிசோதனை பின்னல் உறவினர்களிடம் கை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள், அதிகரித்து காணப்படுவதும் அதனை தடுக்க முடியாது இலங்கை போலீஸ் சற்று திணறி வருவது குறிப்பிடத்தக்கது.