Tag: சடலம்
குளத்தில் மிதந்த பெண் சடலம்
குளத்தில் மிதந்த பெண் சடலம்
காணமால் போன இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்
மருதமுனையில் காணமல் போன் தாயை தேடிய உறவுகளுக்கு, இவரது சடலம் குளத்தில் மிதந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மீட்க பட்ட சடலம் மருத்துவ சுடல பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது
சமீப நாட்களில் நீர் நிலைகளில் தொடராக மனித சடலங்கள் மிதந்த வண்ணம் உள்ளது
இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் கோட்டாவின் நிழல் டிவிஷன் படைகள் செயல் படுகிறதா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது
காணாமல் போவார்கள் ,பலர் இவ்விதம் குளத்தில் ,
நீர் நிலைகளில் சடலங்களாக மீட்க பட்டு வருகின்றமை மேற்படி சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது
குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- மிரட்டும் கொலைகள்
குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- மிரட்டும் கொலைகள்
மல்லாக்க மிதந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து
பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா? அல்லது படுகொலைச்
செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் யாருடையது என இதுவரைஅடையாளம் காணப்படவில்லை.
உருக்குலைந்த நிலையிலேயே சடலம் காணப்படுகின்றது எனவும் மேலதிக
விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கணேசபுரம் காட்டுப்பகுதியில் 16 வயது பெண் சடலம் மீட்பு
கணேசபுரம் காட்டுப்பகுதியில் 16 வயது பெண் சடலம் மீட்பு
நேற்று மாலை, குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அண்மித்த பாதை ஒன்றில் அவரது காலணி மற்று புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
குறித்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதுடன், அந்தப் பகுதியில்
இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் சடலம் மீட்பு
தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் சடலம் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை துரைரட்ணசிங்கம் (65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் நீண்ட காலமாக தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் மீட்க பட்ட சடலம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேனில் புதைகுழிகள் கண்டு பிடிப்பு
உக்கிரேனில் புதைகுழிகள் கண்டு பிடிப்பு
உக்கிரேன் மீது ரசியா இராணுவம் போரினை நடத்தி வருகிறது மூன்று மாதங்களில் எட்டி பிடிக்கும் இந்த தாக்குதல்களில் உக்கிரேன் மக்கள் பல்லாயிரம் பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
ரசிய இராணுவத்தினரால் புதைக்க பட்ட மனித புதைகுழிகள் மீட்க பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது
எமது வைபர் குழுவில் இணைந்தது கொள்ள அழுத்தங்கள்
https://invite.viber.com/?g2=AQBkqkUKd91hf08vW8ZJb0B44D8YD6HD4MQPuO1VYTA7mLlP0eJEaGNoYU2tX%2FGcஇனப் படுகொலை ஒன்றை ரசியா நடத்தி வருவதாக உக்கிரேன் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
கிளிநொச்சியில் ஆலயத்தில் சடலம் மீட்பு
கிளிநொச்சியில் ஆலயத்தில் சடலம் மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர் ஐயப்பன் கோவில் மண்டபத்தில்
ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கிளிநொச்சியை சேர்ந்த 43 வயதுடைய லாலசிங்கம் சங்கர் என்ற 2
பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் பல்வேறு கோணங்களில்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதியில் தங்கிய பளை மாணவி -சடலமாக மீட்பு
விடுதியில் தங்கிய பளை மாணவி -சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக
மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.
உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
கலைப்பீட இரண்டாம் வருட மாணவி என தெரியவந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
இலங்கை மட்டு கொக்குவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
இவர் கொலை செய்ய பட்டு குறித்த குணற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது
சடலம் மீட்க பட்டத்தை அடுத்து தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கோட்டா ஆட்சியில் நீர் நிலைகளில் தொடராக மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
கடலில் மிதந்த மனித சடலம்
கடலில் மிதந்த மனித சடலம்
திருகோணமலை – நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன இளைஞர் கடலில் சடலமாக மிதந்த நிலையில் இன்று (17) கரையொதுங்கி உள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலாவ – தம்பகஹவெல, பத்தியமுல்ல பகுதியைச் சேர்ந்த கே.என்.நளின் பிரியன்த (21 வயது) என்பவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
கடல் நீரேரிகளில் மிதக்கும் மனித சடலங்கள்
தனியார் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலர் நேற்று (16) நிலாவெளி கடற்கரைக்கு சென்றிருந்த நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த இளைஞர் காணாமல் போயிருந்தார்.
கடலில் மிதந்த மனித சடலம்
இதனையடுத்து கடற்படையினரும், உப்புவெளி பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் இளைஞர் சடலம் மீட்க முடியாமல் போயுள்ளது.
கடலில் மிதந்த பெண்ணின் சடலம் வாலிபன் மாயம்
இந்த நிலையிலேயே இளைஞரின் சடலம் இன்றைய தினம் கடலில் மிதந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
தொடர்ந்து கடலில் மிதந்த சடலம் மீட்க பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது .
பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம்சடலம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு
உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு
மூன்று மாடி கட்டிடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இனந்தெரியாத நபரின் சடலம் உருகுலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பிரதான நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி நவீன் இந்திரஜித் புத்ததாச சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கமைய மேலதிக விசாரணைகளுக்காக சடலம் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த கட்டிடத்தில் இருந்து பல நாட்களாக துர்நாற்றம் வீசியதால் நேற்று (25) பிற்பகல் குறித்த சடலம் பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறையின் படுக்கையில் இரண்டு தனித்தனி துண்டுகளாக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியில் மிதந்த மனித சடலம்
வீதியில் மிதந்த மனித சடலம்
ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன்- சிங்கமலை குளத்திலிருந்து இன்று (17)
காலை ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வனப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், இந்த சடலத்தைக் கண்டு,
ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் மிதக்கும் தமிழர் உடல்கள் நடப்பது என்ன ..?
கடலில் மிதக்கும் தமிழர் உடல்கள் நடப்பது என்ன ..?
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த
ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் காணாமல் போன நிலையில் நேற்று காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபர் இன்று (14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (13) காலை யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் மூன்று மீனவர்கள் கோந்தை பிட்டி கடலில் தமது படகை செலுத்தி தொழிலுக்குச் செல்ல சரி பார்த்துள்ளனர்.
இதன் போது படகில் வெளி இணைப்பு இயந்திரத்தை இணைந்து படகை செலுத்தி பார்த்துள்ளனர். இதன் போது குறித்த படகில் மீனவர்கள் உட்பட 8 பேர் இருந்துள்ளனர்.
இதன் போது படகின் வெளி இணைப்பு இயந்திரம் திடீரென இயங்காத நிலையில் காணப்பட்டுள்ளது.
இதன் போது காற்றின் காரணமாக படகு கடலில் சென்று கொண்டிருந்தது. இதன் போது படகின் முன் அணியத்தில் நின்ற ஒருவர் திடீரென கடலில் வீழ்ந்து கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றைய மீனவர் அவரை காப்பாற்ற கடலில் குதித்துள்ளார்.
எனினும் குறித்த மீனவரும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.
எனினும் ஏனையவர்கள் போராடியும் குறித்த இருவரையும் மீட்க முடியவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த படகின் வெளி இணைப்பு இயந்திரம் இயங்கிய நிலையில் இவர்கள் கரை திரும்பி ஏனைய மீனவர்களின் உதவியுடன் தேடியுள்ளனர்.
இதன் போது கோந்தை பிட்டி கடலில் இருந்து சற்று தொலைவில் தர்ஷன் (வயது-19) என்பவர் மீட்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீனவர்களால் மீட்கப்பட்டு கோந்தைப்பிட்டி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
மற்றைய மீனவரை மீனவர்கள் தேடிய நிலையில் இன்று (14) காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
காட்டுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்பு – நடந்தது என்ன
காட்டுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்பு – நடந்தது என்ன
இலங்கை மாத்தளை பகுதி காடு ஒன்றுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்க பட்டுள்ளது ,மேற்படி
சடலங்களை காட்டுக்கு விறகு வெட்ட சென்றவர்கள் கண்ணுற்று பொலிஸாருக்கு தெரிவித்த
நிலையில் இரு சடலங்களும் மீட்க பட்டுள்ளன
மேற்படி இருவர் மரணத்திற்குரிய காரணம் தெரியவில்லை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கடலில் மிதந்த பெண்ணின் சடலம் – வாலிபன் மாயம்
கடலில் மிதந்த பெண்ணின் சடலம் – வாலிபன் மாயம்
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்று (13) காலை
சடலமாக கரை ஒதுங்கிய யுவதி, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் இளைஞர் ஒருவருடன் நடந்து வருகின்ற CCTV காட்சி வெளியாகியுள்ளன.
குறித்த காட்சியானது கடந்த வியாழக்கிழமை (11) மாலை பதிவாகி உள்ளது.
குறித்த யுவதியும், இளைஞன் ஒருவரும் முகக்கவசம் அணிந்து நடந்து வருகின்ற காட்சி பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் வியாழக்கிழமை (11) மாலை 7 மணி அளவில் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து
கடலில் மிதந்த பெண்ணின் சடலம் – வாலிபன் மாயம்
பெண் ஒருவர் கடலில் குதித்ததாக நேரில் கண்டவர் மீனவர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்த
நிலையில் பொலிஸாரும், கடற்படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
எனினும் எவரும் மீட்கப்படவில்லை.
சாக்கில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
இந்த நிலையில் நேற்று (13) காலை யுவதி ஒருவர் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் சடலமாக
கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் இது வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.
பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது
பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது
இலங்கையில் குப்பை மேட்டு பகுதியில் இருந்து மீட்க பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக குற்ற
புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்
மேற்படி பெண் அணிதிருந்த தங்க நகைகளை திருடிய கும்பல் அவரை அடித்து கொன்று குப்பை
மேட்டு பகுதியில் வீசியது தெரிய வந்துள்ளது
உலக்கையால் அடித்து கொலை செய்து ,ஆட்டோ ஒன்றில் பெண்ணின் சடலம் எடுத்து வரப்பட்டு
குப்பை மேட்டு பகுதியில் வீச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
தம்பதிகளிடம் சந்தேகம் உற்ற காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் மேற்படி
விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது
நீர் தாங்கியில் காவல்துறை அதிகாரி சடலம்
நீர் தாங்கியில் காவல்துறை அதிகாரி சடலம்
இலங்கை காவல்துறையை சேர்ந்த அதிகாரி எஸ். இளங்கோவன், கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு
வழங்க படும் நீர் தாங்கியில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்ட பொழுது காணாமல் போயிருந்தார்
இந்த நிலையில் அந்த அ மருத்துவமனைக்கு வழங்க படும் நீரில் ஒருவித மணம் வீசுவதாக
தெரிவிக்க பட்ட நிலையில் ,அதனை சோதனை செய்த பொழுது சடலம் இருப்பது கண்டு பிடிக்க பட்டது
ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?
ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?
மட்டக்களப்பட்டு ஏறாவூர் பகுதியில் உள்ள வாவி ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது
இவர் படுகொலை செய்ய பட்டு ஆற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இலங்கையில் சமீப காலங்களாக நீர் நிலைகளில் மனித சடலங்கள் மிதந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
வவுனியாவில் ஒரே நாளில் 8 கொரோனா சடலங்கள் தகனம்
வவுனியாவில் ஒரே நாளில் 8 கொரோனா சடலங்கள் தகனம்
வவுனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் மரணித்தவர்களின் சடலங்கள் அதிரித்து செல்லும் நிலையில் நிலமையை சீர் செய்யும் முகமாக சுகாதாரப் பிரிவினரும், நகரசபையினரும் இணைந்து நேற்று (21) 8 சடலங்களை தகனம் செய்யதனர்.
வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக தொடர்ந்தும் பலர் மரணித்து வரும் நிலையில் கொவிட்டால் மரணமடைந்தவர்களின் சடலங்கள் தேக்கமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சடலங்கள் தேக்கமடைவதை தவிர்க்கும் பொருட்டு வவுனியா சுகாதாரப் பிரிவினரும், நகர சபையினரும் இணைந்து காலை 7 மணியில் இருந்து மாலை 8 மணி வரை சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை பூந்தோட்டம் மின் மாயானத்தில் முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி 8 சடலங்கள் அதிகபட்சமாக ஒரே நாளில் தகனம் செய்யப்பட்டப்பட்டன.
வழமையாக நாள் ஒன்றுக்கு மின் தகன இயந்திரத்தின் வினைததிறனை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக 6 வரையிலான சடலங்களே எரியூட்டப்பட்டு வந்தன. அத்துடன் இயந்திரமும் அவ்வப்போது பழுதடைந்தமையாலும், கோவிட் உயிரிழப்புக்கள் தொடர்கின்றமையாலும், ஏனைய மாவட்டங்களில் இருந்தும் சடலங்கள் வருவதானாலும் வவுனியாவில் பல சடலங்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் அதனை துரிதமாக தகனம் செய்யும் முகமாக இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
குளத்தில் மிதந்த மனித சடலம்
குளத்தில் மிதந்த மனித சடலம்
வட்டவளை, லொனெக் தோட்ட பாற்பண்ணைக்கு அருகில் இருக்கும் குளத்திலிருந்து இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நீராட சென்றிருந்த இருவருமே இவ்வாறு இன்றுக்காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
முதலாவது சடலம் காலை 6.10க்கும் இரண்டாவது சடலம் 7 மணிக்கும் மீட்கப்பட்டுள்ளது.
இருவரில் ஒருவர் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் வட்டவளை லொனெக் தோட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்த வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
சிலாபம் பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கதக்க சஜிந்த தில்சான் என்பவரும் லொனெக் தோட்டத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்க தக்க இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான சின்னையா ராஜா என்பவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இறந்த பெண் சடலத்தை உறவினருக்கு மாற்றி கொடுத்த மருத்துவமனை
இறந்த பெண் சடலத்தை உறவினருக்கு மாற்றி கொடுத்த மருத்துவமனை
இலங்கை பணத்துறையில் இரண்டு பெண்கள் மரணித்துள்ளனர் ,இதில் ஒருவர் முசுலீம் .
அதில் உறவினர்கள் தமது உறவினர் என நினைத்து வழங்க பட்ட சடலத்தை அடக்கம் செய்து விட்டனர்
ஆனால் அந்த சடலத்தினை உரியவர்கள் சென்று மருத்துவமனையில் விசாரித்த பொழுது அது
தவறாக வேறு ஒருவருக்கு வழங்க பட்டது தெரிய வந்துள்ளது
மேற்படி சம்பவம் பெரும் அதிரவலைகளை கிளப்பியுள்ளது







