கடலில் மிதந்த மனித சடலம்

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Spread the love

கடலில் மிதந்த மனித சடலம்

திருகோணமலை – நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன இளைஞர் கடலில் சடலமாக மிதந்த நிலையில் இன்று (17) கரையொதுங்கி உள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலாவ – தம்பகஹவெல, பத்தியமுல்ல பகுதியைச் சேர்ந்த கே.என்.நளின் பிரியன்த (21 வயது) என்பவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது.

கடல் நீரேரிகளில் மிதக்கும் மனித சடலங்கள்

தனியார் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலர் நேற்று (16) நிலாவெளி கடற்கரைக்கு சென்றிருந்த நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த இளைஞர் காணாமல் போயிருந்தார்.

கடலில் மிதந்த மனித சடலம்

இதனையடுத்து கடற்படையினரும், உப்புவெளி பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் இளைஞர் சடலம் மீட்க முடியாமல் போயுள்ளது.

கடலில் மிதந்த பெண்ணின் சடலம் வாலிபன் மாயம்

இந்த நிலையிலேயே இளைஞரின் சடலம் இன்றைய தினம் கடலில் மிதந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது.

தொடர்ந்து கடலில் மிதந்த சடலம் மீட்க பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது .

பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம்சடலம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply