உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

Spread the love

உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

மூன்று மாடி கட்டிடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இனந்தெரியாத நபரின் சடலம் உருகுலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பிரதான நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி நவீன் இந்திரஜித் புத்ததாச சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கமைய மேலதிக விசாரணைகளுக்காக சடலம் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த கட்டிடத்தில் இருந்து பல நாட்களாக துர்நாற்றம் வீசியதால் நேற்று (25) பிற்பகல் குறித்த சடலம் பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறையின் படுக்கையில் இரண்டு தனித்தனி துண்டுகளாக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Leave a Reply