Tag: கலந்துரையாடல்
காற்றாலை மின்திட்டம் விசேட கலந்துரையாடல்
காற்றாலை மின்திட்டம் விசேட கலந்துரையாடல்
காற்றாலை மின்திட்டம் விசேட கலந்துரையாடல் ,மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் 07 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர்கள் தலைமையில் விசேட
கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று (05) பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தேன்.
காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது குறித்து மன்னார் மாவட்டத்தில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கும்
ஜனாதிபதியை சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாட வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு அவரிடம் கோரி இருந்தேன்.
என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க இணைந்து இதற்கு பொறுப்பான அமைச்சரை சந்தித்து உரையாடினோம்.
குறித்த உரையாடலின் பலனாக எதிர்வரும் 7 ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முக்கிய பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் தலைமையில் பாராளுமன்ற
வளாகத்தில் குறித்த கூட்டம் இடம்பெற உள்ளது. ஜனாதிபதியும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது.
குறித்த கலந்துரையாடல் இடம்பெறும் வரை எவ்வித நகர்வும் முன்னெடுக்கப்படாது என உரிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் இறுதி முடிவை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தல் குறித்து கலந்துரையாடல்
உள்ளூராட்சித் தேர்தல் குறித்து கலந்துரையாடல்
உள்ளூராட்சித் தேர்தல் குறித்து கலந்துரையாடல் வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாட, பாராளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவை சந்தித்துள்ளனர்.
சந்திப்பின் போது எதிர்க்கட்சி பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளை, குறிப்பாக பட்ஜெட் விவாதத்தின் போது, அதை இடையூறு இல்லாமல் நிறைவேற்ற அனுமதிக்கும் வகையில், உள்ளூராட்சித்
தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவை வலியுறுத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் மற்றும் பிரச்சார செயல்முறை தங்கள் பாராளுமன்றப் பொறுப்புகளில் தலையிடக்கூடும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கவலைப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“அரசாங்கத்தின் புகழ் குறைவதற்கு முன்பு தேர்தலை நடத்த அரசாங்கம் ஆர்வமாக உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏப்ரல் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் நேரம் குறித்த பிரச்சினையை அரசாங்கம் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
இது தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் தோல்வியை அம்பலப்படுத்தக்கூடும், இது அதன் வாக்காளர் தளத்தில் பெரும் பகுதியினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு செவிசாய்க்காமல், தேர்தல் ஆணைக்குழு அதன் சுதந்திரத்தையும் நம்பகத்தன்மையையும் பராமரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியதாக எம்.பி. சாணக்கியன் மேலும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் ,முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (30) விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த கலந்துரையாடல் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர்.
அண்மையில், முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட உயரதிகாரிகளின் பாதுகாப்பை நீக்க அரசாங்கம் தீர்மானித்தது.
எவ்வாறாயினும், அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகள் தங்களின் பாதுகாப்பு மற்றும் தமக்கு தேவையான பாதுகாவலர்களின் எண்ணிக்கை குறித்து அறிவித்துள்ளனர்.
இதன்படி, இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ஏனைய கடமைகளில் ஈடுபட்டு வந்த உத்தியோகத்தர்களை சேவையின்
தேவையின் அடிப்படையில் பொலிஸ் நிலையங்களில் இணைப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி இன்று முக்கிய கலந்துரையாடல்
ஜனாதிபதி இன்று முக்கிய கலந்துரையாடல்
வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று பிற்பகல் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இதன் போது புதிய பொலிஸ் மா அதிபர் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது
காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்
காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்
காணிப் பிரச்சினைகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் தலைமையிலான கலந்துரையாடல், முல்லைத்தீவு – உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில், நேற்று (02) மாலை நடைபெற்றது.
மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் காணி விடயங்கள் தொடர்பாகவும், ஏனைய காணி விடையங்களுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்
இந்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா மற்றும் காணி அமைச்சின் செயலாளரும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருமான ம.பற்றிக்டிறஞ்சன், மாகாண காணி ஆணையாளர்
ஆ.சோதிநாதன்,உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு
மாவட்டங்களின் பிரதேச செயலாளர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.



















