தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்
கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
17 அடிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும், எவையும் சிக்கவில்லை. அகழ்வுப் பணியின் போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் முன்னிலையில் இருந்தனர்.
தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்
இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது. இதன் போது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியான பணி நாளை 9.00 மணியளவில் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது
- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்
- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்
- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது
- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு
- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி
- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது
- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது
















