காணாமல் போன வாகனங்களைத் தேடும் பணி ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன வாகனங்களைத் தேடும் பணி ஆரம்பம்

காணாமல் போன வாகனங்களைத் தேடும் பணி ஆரம்பம்

காணாமல் போன மாகாண சபை வாகனங்களைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.

மாகாண சபைகளுக்குச் சொந்தமான திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பயன்படுத்துவதற்காக சில அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட சில வாகனங்கள்

காணாமல் போயுள்ளதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி
Posted in இலங்கை செய்திகள்

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் உறுமய 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை

வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது ஆவனங்களை வழங்கி உறுதிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தினை விரைவில்

நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் விசேட கூட்டம் இன்று (11) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர்களுமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

வியாழேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிக்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ந.முகுந்தன்,காணி பிரிவிற்கான பணிப்பாளர்

திருமதி கு.ஈஸ்பரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள்,நில அளவை திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டது.

இந்த திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 27,595 உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினை

குறிப்பாக இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றினை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இந்த திட்டத்தினை விரைவில் நினைவுசெய்து மக்களுக்கான உறுதிகளை வழங்க நடடிவக்கைகள் எடுக்குமாறு இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.

மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் ,தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று (09) முதல் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் தொழிற்சங்க

நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அனைத்து வைத்தியசாலைகளிலும் 4 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பு

அதன்படி இன்று காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 4

மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தாதியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடமாட்டார்கள் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி.மெதிவத்த தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கை அமுலப்படுத்தப்பட்டுள்ள மருத்துவமனைகளின் விபரங்கள் பின்வருமாறு

09 – வட மத்திய மாகாணம்
13 – மத்திய மாகாணம்
14 – சப்ரகமுவ மாகாணம்
15 – வடமேல் மாகாணம்
16 – தென் மாகாணம்
20 – ஊவா மாகாணம்
21-மேல் மாகாணம் போன்றவற்றில் தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்படும்.