ஊதிய உயர்வைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் உறுதி
Posted in இலங்கை செய்திகள்

ஊதிய உயர்வைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் உறுதி

ஊதிய உயர்வைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் உறுதி

ஊதிய உயர்வைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் உறுதி யளித்தனர்.

2026 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ்

2026 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,750 ஆக உயர்த்த அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து,

அக்கரபத்தனை பகுதி தொழிலாளர்கள் சனிக்கிழமை (09) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பால் சோறு தயாரித்து பகிர்ந்து கொண்டனர்.

தொழிலாளர்கள் தங்கள் அன்றாட பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஆசிர்வதித்தனர்,

இந்த நடவடிக்கையை தோட்ட சமூகங்களின் நீண்டகால கஷ்டங்களை ஒப்புக்கொண்ட ஒரு வரலாற்று மற்றும் இரக்கமுள்ள முடிவு என்று விவரித்தனர்.

வரலாற்றில் இதுவே முதல் முறை

வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும், போராட்டங்கள் அல்லது வேலைநிறுத்தங்கள் இல்லாமல் ஒரு அரசாங்கம் தோட்ட ஊதியத்தை

அதிகரித்ததாகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததற்காக ஜனாதிபதியைப் பாராட்டியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தொழிலாளர்கள் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாகவும், 2028 க்கு அப்பால் அவரது தலைமையையும் – தற்போதைய அரசாங்கத்தையும் – ஆதரிப்பதாகவும் உறுதியளித்தனர்.

மக்களுக்கு காணி உறுதிகள்
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு காணி உறுதிகள்

மக்களுக்கு காணி உறுதிகள்

மக்களுக்கு காணி உறுதிகள் ,முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் என்பது பாரிய செயற்பாடாக மாறியுள்ளது.

எனவே, மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு முழுமையான காணி உறுதிப் பத்திரம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில்

புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற வவுனியா மாவட்ட ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 600 முழுமையான காணி உறுதிப் பத்திரங்கள் இங்கு வழங்கப்பட்டதோடு,

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் 1,376 இலவசப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி என்ற வகையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுமய காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முக்கியமானது.

யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் கட்டடங்கள் அழிந்து போனதுடன் பலர் தமது காணிகளை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் என்பது பாரிய செயற்பாடாக மாறியுள்ளது.

எனவே, இந்தப் பிரதேசத்தில் உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு முழுமையான காணி உறுதிப் பத்திரம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி
Posted in இலங்கை செய்திகள்

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் உறுமய 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை

வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது ஆவனங்களை வழங்கி உறுதிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தினை விரைவில்

நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் விசேட கூட்டம் இன்று (11) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர்களுமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

வியாழேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிக்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ந.முகுந்தன்,காணி பிரிவிற்கான பணிப்பாளர்

திருமதி கு.ஈஸ்பரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள்,நில அளவை திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டது.

இந்த திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 27,595 உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினை

குறிப்பாக இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றினை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இந்த திட்டத்தினை விரைவில் நினைவுசெய்து மக்களுக்கான உறுதிகளை வழங்க நடடிவக்கைகள் எடுக்குமாறு இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.