Tag: வழக்கு ஒத்திவைப்பு
சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு என இன்று அறிவிக்க பட்டுள்ளது .
காணி அபகரிப்பு என தெரிவித்து சுண்டிக்குளம் மக்களுக்கு எதிராக வனஜீவராசிகள் அமைச்சினால் வழக்கு தொடுக்க பட்டது .
மக்களுக்கு எதிரான வழக்கு தற்போது ஒத்திவைப்பு என முன்னாள் வடமாகாணசபை சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ள்ளார் .
சிங்கள ஆக்கிரமிப்பு
திட்டமிடப்பட்டு மக்கள் விவசாய காணிகளை அபகரிக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் நடத்த பட்டு வருவதாக ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார் .
உடையார் கட்டு குளத்தின் கீழ் ,நீர்ப்பாசன விடயத்தை பெற்று மக்கள் விவசாயம் செய்யும் 138 பேரது காணிகளை அபகரித்துள்ளது என பாதிக்க பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
காரிய வயல் தொடர்பான வழக்கு, வனஜீவராசிகள் திணைக்களத்தால் இந்த குடும்பங்களுக்கு எதிராக தொடுக்க பட்டுள்ளது என ரவிகரன் சுட்டிகாட்டாடினார் .
காணி அபகரிப்பு
அந்த காணி அபகரிப்பு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ள பட்ட நிலையில் ,தற்போது இந்த வழக்கு ஒத்திவைக்க பட்டுள்ளது .
அரச காணி சட்டத்தின் கீழ் காணிகளுக்கு உறுதி வழங்க பட்ட நிலையில் ,அந்த காணிகள் அரசுக்கு சொந்தமானது என தெரிவித்து ,வனஜீவராசிகள் திணைக்களம் அபகரிக்க முனைந்துள்ளதாக கண்ணீர் மல்க மக்கள் தெரிவித்துள்ளனர் .
சிங்கள காணி அபகரிப்பு
சமாதான தேவன் என தன்னை அறிமுக படுத்திய ரணில் விக்கிரமசிங்காவின் காலத்தில் ,சிங்கள இனவாத அடிப்படையில் தமிழர் மீது இவ்விதமான நடவடிக்கைகள் நடத்த பட்டு வருகின்றன .
ஆண்டுகளாக தமிழர்கள் அடக்க பட்டு ஒடுக்க பட்டு அவர்களது பூர்வீக குடியேற்றங்கள் சிங்கள இனவாத ஆக்கிரமிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது
பரம்பரை பரம்பரையாக தமிழர் வாழ்ந்த பூமி
பரம்பரை பரம்பரையாக தமிழர் வாழ்ந்த பூமி ,தமது உடமை என தெரிவித்து ,தமிழர்களை அடக்கி ஒடுக்கி வாழும் நிலைக்கு இலங்கை ஆட்சியாளர்கள் செல்கின்றனர் .
சமாதானத்தை ஏற்படுத்துவோம் எனவும் ,ஒன்றித்த இலங்கையில் வாழ்வோம் என தெரிவிக்கும் ஆளும் ஆட்சியாளர்கள் ,தொடராக தமிழ் மக்கள்மீது வன்முறை யை கட்டவிழ்த்து விட்டுள்ள செயல் , மீளவும் ஒரு பேரழிவை நோக்கி இலங்கை செல்ல போகிறது என்பதே காலநிலவரமாக உள்ளது .
Featured
தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு
தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு
தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு
தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலை
இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கருத்துரைக்கையில்,
07 எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், 2ஆம்,4ஆம் எதிராளிகளான தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்,
செயலாளராக தெரிவாகிய ச.குகதாசன் ஆகியோர்களுக்கு சார்பாக ஆஜராகினேன். சுமார் மூன்று மணி நேரம் இவ்வழக்கு விவாதிக்கப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டது.
வழகுகல் தாக்கல்
கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி வழகுகல் தாக்கல் செய்யப்பட்டு 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு பொதுநலன் கருதி முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கட்சி யாப்பை மீறியதாக இங்கு எதுவும் சொல்லப்படவில்லை. குறிப்பாக சில விதிகளில் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் வழக்கு தொடர்ந்தால் அதனை வெற்றி கொள்ளலாம். ஆனால், காலம் செல்லும், இதனால் வழக்கை காலம் சென்ற நிலையில், வெற்றி கொண்டால் தோல்வியாகவே கருதப்படும். வழக்காளி கோரும் நிவாரணத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, இதனை வழக்காளி தனது சட்டத்தரணி ஊடாக தெரிவிக்கவேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும் என எனது வாதத்தை நீதிமன்றில் தெரிவித்தேன் என்றார்.














