Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இருந்து தப்பி சென்ற போலந்து நாட்டவர் தமிழகத்தில் கைது

இலங்கையில் இருந்து தப்பி சென்ற போலந்து நாட்டவர் தமிழகத்தில் கைது

இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் குற்ற செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட போலந்து நாட்டை சேர்ந்த ஒருவர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பி சென்ற நிலையில் அங்கு கைது செய்ய பட்டுள்ளார்.

கைதானவ இந்திய கடவுசீட்டு இன்றி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்.

தமிழக கடல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் படகு மீட்க பட்ட நிலையில் நடத்த ப்பட்ட தேடுதலின் பொழுதே இவர் பொலிஸாரால் கைது செய்ய பட்டுள்ளார்.

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் வாங்கிட நிரையில் நின்றவர் மரணம்

எரிபொருள் வாங்கிட நிரையில் நின்றவர் மரணம்

இலங்கை ,மாத்தளை ; இலங்கையில் எரிபொருள் வாங்கிட இரு நாட்களாக நிரையில் நின்ற நபர் பலியாகியுள்ளார்.

இரண்டு நாட்களாக எரிபொருளை பெற்றிட நிரையில் நின்ற அறுபத்தி மூன்று வயது நபரே இவ்விதம் மரணமாகியுள்ளார் .

எரிபொருள் பெற்றிட காத்திருந்து மரணமாணவர் இலங்கை மாத்தளை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .

இலங்கையில் எரிபொருள் வாங்கிட நிரையில் நின்று இறப்பவர்கள் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்கின்றமை கவலை தருகிறது .

    Posted in இலங்கை செய்திகள்

    இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி: இலங்கையர்கள் உட்பட 15 பேர் கைது

    இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி: இலங்கையர்கள் உட்பட 15 பேர் கைது

    இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி தொடர்பாக இலங்கையர்கள் உட்பட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இலங்கை பிரஜைகளை உள்ளடக்கிய கடவுச்சீட்டு மோசடி தொடர்பான விசாரணையில் இந்திய பொலிஸார் மற்றும் கடவுச்சீட்டு அதிகாரிகள் உட்பட

    41 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் தமிழக அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

    மேலும் இலங்கை பிரஜைகள் சிலர் வெளிநாடு செல்வதற்காக இந்திய கடவுச்சீட்டுகளை பெற முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தமிழ்நாடு

    காவல்துறையின் கியூ பிராஞ்ச் மதுரை பிரிவு விசாரணை நடத்தி வந்ததாகவும் இது தொடர்பாக 2019 செப்டம்பரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவு சீட்டினை வாங்கியது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 5 போலிஸ் அதிகாரிகள், 14 கடவுசீ‌ட்டு

    அதிகாரிகள், 2 தபால் துறை ஊழியர்கள் உள்பட 41 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    குறித்த வழக்கு தொடர்பாக மொத்தம் 15 பேர் (நான்கு இலங்கை தமிழர்கள் மற்றும் 11 பயண முகவர்கள்) இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
    இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய காவல் உதவி ஆணையாளர்

    (உளவுத்துறை) மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மதுரை ஆட்சியர் இந்த ஆண்டு மே மாதம் ஒப்புதல் அளித்த நிலையில், அந்தந்த திணைக்கள

    ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் அஞ்சல் துறைகள் தமது அனுமதியினை வழங்கி உள்ளது.


    அதனை தொடர்ந்து 2021 டிசம்பரில் 14 கடவுச்சீட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில்,

    இதுவரையில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை எனவும், கியூ பிராஞ்ச் விசாரணை முடிந்து 41 பேருக்கு எதிரான இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    விசாரணையில், 124 கடவுச்சீட்டுகளை கைப்பற்றியுள்ளதாகவும் மேலும் 51 பேர் இந்திய கடவுச்சீட்டினைபெற்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    மொத்த 175 கடவுச்சீட்டுக்களில் 28 இலங்கைத் தமிழர்களால் போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டினை பெற்றுள்ளதாக இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    மேலும் 30 கடவுச்சீட்டுகள் நிலை என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு


    வருகிறது எனவும் மீதமுள்ள 117 பேரில் 116 பேர் இந்திய நாட்டினரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      கோத்தபாயாவுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு

      கோத்தபாயாவுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு

      உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌சவினை கைது செய்து நீதியின் முன் நிறுத்தக் கோரும் கையெழுத்து போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.

      சிங்கப்பூரில் தற்போது கோத்தபாயாவுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு நிலைகொண்டுள்ள நிலையில், அந்நாட்டு சட்டமா அதிபரை நோக்கியதாக இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

      குறுகியகால விசாவில் தங்கியிருக்கும் கோத்தபாய இராஜபக்‌சே, எந்த சமயத்திலும் சிங்கப்பூரை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதால், உலகத் தமிழர்கள் அனைவரும் விரைவாக கையெழுத்திட்டு இதற்கு வலுச்சேர்க்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

      இந்நிலையில் பிரான்ஸ் தமிழர்களின் கொண்டாட்டமாக இருக்கின்ற தமிழர் விளையாட்டு விழாவில் பங்கெடுத்திருந்த மக்கள், ஆர்வத்துடன் இக்கையெழுத்து போராட்டத்தில் பங்கெடுத்திருந்ததோடு, இனப்படுகொலைக்கு எதிரான தமது உணர்வலைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

      கைபேசி செயலிவாயிலாகவும், பிரதி ஒப்பங்களாகவும் இப்போராட்டத்தில் மக்கள் பங்கெடுத்திருந்தனர்.

      குறித்த https://chng.it/rQVfCj4KdQ இந்த இணைப்பின் ஊடாக அனைவரும் இலகுவாக பங்கெடுத்துக் கொள்ள முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      கோத்தபாய இராஜபக்சே, இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன.

      1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் சிங்கப்பூர் சட்டமாஅதிபரினை நோக்கி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

      சர்வதேச சட்டங்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரின் உள்நாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலும் கூட,


      ஜெனீவா சட்டம் தொடர்பாக சிங்கப்பூர் உள்நாட்டுச் சட்டம், சிங்கப்பூரின் குற்றவியல் சட்டத்தின் கீழும்,


      அவரைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய கடமைப்பாடு சட்டமாஅதிபருக்கு உண்டு என்பதை நாம்


      இங்கு சுட்டிக்காட்டி இருக்கின்றோம் என எனத் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

      https://youtu.be/FUdhloyFrO0
        Posted in உலக செய்திகள்

        மியன்மாரில் நான்கு போராட்ட காரர்கள் இராணுவத்தால் தூக்கிலிட்டு படுகொலை

        மியன்மாரில் நான்கு போராட்ட காரர்கள் இராணுவத்தால் தூக்கிலிட்டு படுகொலை

        மியன்மார் நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகிறது .இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போரட்டம் நடத்திய நால்வரை அந்த நாட்டு இராணுவம் தூக்கில் மாட்டி படுகொலை செய்துள்ளது .

        இந்த அப்பாவி ஜனநாயக போராட்ட வாதிகள் நால்வர் படுகொலை மியான்மாரில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

        இந்த நால்வர் படுகொலையை கண்டித்து ஆளும் இராணுவதத்திற்கு எதிராக போராட்டங்களை வெடித்துள்ளன .

        விரைவில் மியன்மாரும் இலங்கையை போல மக்கள் புரட்சி வெடித்து இராணுவ தலைமைகள் விரட்டியடிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கை மீது பாயும் பொருளாதார தடை எச்சரிக்கும் சஜித் பிரேமதாசா

          இலங்கை மீது பாயும் பொருளாதார தடை எச்சரிக்கும் சஜித் பிரேமதாசா

          இலங்கை ,கொழும்பு ;இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்க பட்ட பின்னர் மக்கள் மீது இராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்திய நிலையில்

          இலங்கை மீது ராயத்தந்திர மற்றும் பொருளாதார தடைகள் விதிக்க பட்டு வருவதாக சஜித் பிரேமதாசா எச்சரித்துள்ளார் .

          இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு ஆளும் அரசுகள் செயல் பட மறுத்தால் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என சஜித் பிரேமதாசா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

          சஜிதா எதிர் காலத்தில் ஜனாதிபதியாகி விடுவார் எனவும் அவரது வெற்றியை தடுக்க ரணில் விக்கிரமசிங்க பல அரசியல் விளையாட்டை

          ஆரம்பித்துள்ள நிலையில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

            Posted in இலங்கை செய்திகள்

            ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக போராடுங்கள் சரத் பொன்சேகா அழைப்பு

            ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக போராடுங்கள் சரத் பொன்சேகா அழைப்பு

            இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக போராடும் மக்களுக்கு தனது ஆதரவு என முன்னாள் இலங்கை இராணுவ தளபதி பீல்ட் மாசால் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

            ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .

            அவ்வாறு அமைந்துள்ளதை இந்த ஆதரவு வழங்குதல் ஊடகங் அமைய பெறுகிறது.

              Posted in இலங்கை செய்திகள்

              அஜித் நிவ்ராட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல தடை

              அஜித் நிவ்ராட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல தடை

              இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவ்ராட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் மேலும் தடை விதிக்க பட்டுள்ளது.

              கோட்டபாய ஆட்சியில் மத்திய வாங்கி ஆளுநராக செயலாற்றினார் அஜித் நிவ்ராட் கப்ரல் .

              இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்க பிரதான காரணியாக இருந்தார் என்கின்ற குற்ற சாட்டில் விசாரணைகள் நடத்த பட உள்ளமையால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது குறிபிட தக்கது .

                Posted in இலங்கை செய்திகள்

                இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு

                இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு

                பெல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்த்தின் பொழுது இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட டி-56 ரபில்,

                மற்றும் அதற்குரிய குண்டுகள் என்பன பாலத்திற்கு கீழ் இருந்து மீட்க பட்டுள்ளதா பொலிஸ் தெரிவித்துள்ளது.

                இந்த பாலத்திற்கு கீழ் குறித்த ஆயுதங்கள் வைக்க பட்டுள்ளது என்பதை இராணுவம் எவ்வாறு கண்டுபிடித்தது என்பது தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுளளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம் ! உலகத் தமிழர்களை நோக்கி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அழைப்பு

                  கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம் ! உலகத் தமிழர்களை நோக்கி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அழைப்பு

                  சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்‌சவைவினை, உலகளாவிய

                  நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது.

                  புலம்பெயர் நாடுகளில் சிங்கப்பூர் தூதரகங்களை நோக்கி கவனயீர்ப்பு போராட்டங்களையும், கோரிக்கை மனுவினை கையளித்திருந்த நாடுகடந்த

                  தமிழீழ அரசாங்கம், அதன்தொடர்சியாக தற்போது (ஒப்பிடுவதற்கான இணைப்பு : https://chng.it/rQVfCj4KdQ ) இக்கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளது.

                  இது தொடர்பில் உலகத்தமிழ் உறவுகளை நோக்கி அழைப்பினை விடுத்துள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி இனப்படுகொலை,

                  மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்தவர். இதற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன. 1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும்,

                  1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் நாம் இந்தக் கோரிக்கைகளை சிங்கப்பூர் சட்ட மாஅதிபரினை நோக்கி முன்வைக்கின்றோம்.

                  சர்வதேச சட்டங்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரின் உள்நாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலும் கூட, ஜெனீவா சட்டம் தொடர்பாக சிங்கப்பூர் உள்நாட்டுச்

                  சட்டம், சிங்கப்பூரின் குற்றவியல் சட்டத்தின் கீழும், அவரைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய கடமைப்பாடு சட்டமாஅதிபருக்கு உண்டு என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.

                  கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம் ! உலகத் தமிழர்களை நோக்கி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அழைப்பு

                  மேலும் 2011ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் முன்னாள் செயலாளர் பான் கீ மூனால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையிலும் சிறீலங்காவின் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணம், தமிழர்கள் அங்கு அரசியல் நீரோடையில் இல்லை

                  என்றும்” the root caused is the conflict …..”என்று கூறியிருப்பதையும் மற்றும் 2021ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பஷிலேற் அவர்களும் dangerous exclusionary policy of the Sri Lankan Government என்று அதாவது அங்கே

                  இனநாயகம் தலைதூக்கி இருப்பதையும் நாங்கள் இங்கு சட்டிக்காட்டி, மேலும் சிறீலங்கா ஒரு இனவாத அரசு, அரச கட்டமைப்புக்கள் நீதிமன்றம் உட்பட

                  சிங்களத்தை மையப்படுத்தி இருப்பதால் அங்கு தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதையும் நாம் இம் மனுவில் சுட்டிக் காட்டி உள்ளோம்.

                  உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் சிறீலன்ஹ்காவில் நடந்த இந்தக் குற்றங்கள் அந்தந்த நாடுகளின் நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் நவிப்பிள்ளை,

                  அல்குசேன் மற்றும் தற்போதைய ஆனையாளர் மிசேல் பசேலே ஆகியோர் நாடுகளை நோக்கி முன்வைத்த கோரிக்கையினையும் எமது கோரிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளோம்.

                  கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம் ! உலகத் தமிழர்களை நோக்கி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அழைப்பு

                  இன்றைக்கு கோத்தபாய ராஜபக்‌சே திரும்பவும் கொழும்புபிற்கு திரும்பினால், அவர் அங்கு ஊழல் குற்றங்களுக்காகவே நீதியின் முன்னால் நிறுத்தப்படுவாரேயன்றி, தமிழனப் படுகொகைக்காகவோ,

                  மானிடத்திற்கெதிரான குற்றங்களுக்கு எதிராகவோ, போர்க்குற்றங்களுக்காவோ நீதியின் முன் நிறுத்தப்பட மாட்டார்.

                  தற்சமயம் சர்வேந்திர டி சில்வா இன்னொரு இனப்படுகொலையாளி. இன்னொரு போர்க்குற்றவாளி. அமெரிக்காவின் ளயnஉவழைn இற்கு

                  உள்ளானவர் இன்றைக்கு அங்கு ஒரு முக்கிய பதவியை வகித்துக் கொண்டு வருகின்ற இந்த வேளையில் அங்கு தமிழர்களுக்கான நீதி ஒருபோதும் கிடையாது.

                  எனவே சிங்கப்பூர் கோத்தபாயாவைக் கைது செய்து விசாரித்து நீதியின் முன்னால் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை


                  தாயகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் சார்பாகவும், புலத்தில் வசிக்கும் தமிழர்கள் சார்பாகவும், உலகத்தில் தமிழர்கள்
                  சார்பாகவும் நாங்கள் இந்தக் கோரிக்கையை வைத்து இந்தக் கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளோம்.


                  இது உடனடியாக செய்ய வேண்டிய விடயம். ஏனெனில் ராஜபக்‌சே எந்த சமயமும் சிங்கப்பூரை விட்டு வெளிக்கிட்டு


                  விடுவார் எனவே விரைவாக இதில் அனைவரும் கையெழுத்து இட்டு உலகளாவிய தமிழர்களின் கோரிக்கை இது


                  என்பதை சிங்கப்பூர் சட்டமாஅதிபருக்கு நாங்கள் எடுத்துரைப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
                  பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார்.

                  https://youtu.be/7RVatQcjKzY
                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையர் விமான நிலையத்தில் கைது

                  இலங்கையர் விமான நிலையத்தில் கைது

                  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

                  இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர்.

                  அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர்.

                  அதில், இலங்கையை சேர்ந்த நைமுதீன் (வயது 28) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

                  அதில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவர் சிறிய பாக்கெட்டுகளாக ரத்தின கற்களை விழுங்கியிருந்தமை தெரியவந்தது.

                  இலங்கையர் விமான நிலையத்தில் கைது

                  பின்னர் அவருக்கு இனிமா கொடுத்து அவற்றை வெளியே எடுத்த போது 56 சிறிய பாக்கெட்டுகளில் பளபளக்கும் ரத்தின கற்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை வகைப்படுத்தினர்.

                  இதையடுத்து ரூ.94 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 8 ஆயிரத்து 309 கேரட் கொண்ட 1,746 இரத்தின கற்களை பறிமுதல் செய்தனர்.

                  இதைத்தொடர்ந்து இரத்தினக்கற்களை கடத்தி வந்த இலங்கை இளைஞனைகைது செய்த அதிகாரிகள்,


                  இரத்தினக் கற்கள் கடத்தல் பின்னணியில் உள்ளது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    ஜனாதிபதி மாளிகையில் திருட்தில் ஈடுபட்ட மூவர் கைது

                    ஜனாதிபதி மாளிகையில் திருட்தில் ஈடுபட்ட மூவர் கைது

                    ஜனாதிபதி மாளிகையில் திரை அணிகலன்களாக பயன்படுத்தப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட 40 செப்பு உருண்டைகளை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                    2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு ஆக்கிரமித்தனர்.

                    அதன்போது,சந்தேகநபர்கள் பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                    செப்பு உருண்டைகளை பழைய உலோகமாக விற்பனை செய்ய முற்பட்ட இவர்கள் வெலிக்கடை பொலிஸாரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

                    28, 34 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்கள் ராஜபகிரிய ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் போதைக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.

                    இந்நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை
                    மேற்கொள்ளும் விசேட பொலிஸ் குழுவிடம் சந்தேகநபர்கள் மூவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      காவல்துறையால் ஒருவர் சுட்டுக்கொலை

                      காவல்துறையால் ஒருவர் சுட்டுக்கொலை

                      இலங்கை அம்பலாங்கொட பகுதியில்
                      சந்தே நபர் ஒருவரை காவல்த்துறையினர் தேடி சென்றனர்.

                      இதன் பொழுது காவல்துறையினர் மீது கத்தியால் குத்திட முயன்ற சந்தேகநபர் காவல்துரையினரால் சுட்டு கொலை செய்யபட்டுள்ளார்.

                      இறந்தவர் சடலம் மீட்க பட்டு உடல்கூறு பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது.
                      மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் போராட்டத்தை தடுக்க கொரனோ பீதியை கிளறும் அரசு

                        இலங்கையில் போராட்டத்தை தடுக்க கொரனோ பீதியை கிளறும் அரசு

                        இலங்கை ; இலங்கையில் ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

                        இந்த மக்கள் போராட்டத்தினால் தினறி வரும் அரசு தமது அரசை காப்பாற்றி கொள்ள இலங்கையில் கொரனோ பரவி வருவதாக பீதியை கிளறி வருகிறது.

                        மக்கள் ஒன்று கூடலை தடுத்திட இந்த கொரனோ நோயின் அபாயத்தில் நாடு சிக்கியுள்ளதாக பரப்புரையை தற்போது சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

                        இந்த நோயின் தாக்குதலை திணித்து நாட்டை முடக்கும் நிலைக்கு செல்ல ரணில் திட்டங்கள் போட்டுள்ளதாக மேற்படி விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன.

                          Posted in இலங்கை செய்திகள்

                          ஜனாதிபதி மாளிகையில் காணமல் போன பொருட்கள் தொடர்பாக விசாரணை

                          ஜனாதிபதி மாளிகையில் காணமல் போன பொருட்கள் தொடர்பாக விசாரணை

                          இலங்கை ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகையில் காணாமல் போன பொருட்கள் தொடர்பான ஆய்வுகளை நடத்திட விசேட குழு நியமிக்க பட்டுள்ளது.

                          இந்த மாளிகையில் பழையகால புராதன ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் என்பன பாதுகாக்க பட்டு வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                          மிகவும் பெறுமதிமிக்க இந்த பொருட்களை திருடி சென்றவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                            Posted in இலங்கை செய்திகள்

                            அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

                            அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

                            இலங்கை ; அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

                            இதுதொடர்பாக கல்வி அமைச்சு 19.07.2022 அன்று வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், வலய

                            பொறுப்பாளர்,உதவி கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அதிபர்களுக்கும் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

                            எனினும் மறுஅறிவித்தல் வரை பாடசாலைகள் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலேயே இடம்பெறும்.

                            புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

                            இதுபற்றிய ஆலோசனை கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              கண்ணிவெடி வெடித்து முகமாலையில் ஒருவர் காயம்

                              கண்ணிவெடி வெடித்து முகமாலையில் ஒருவர் காயம்

                              இலங்கை பளை முகாமாலை பகுதியில் கண்ணிவெடி வெடித்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார் .

                              கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர் ஒருவர் கண்ணிவெடியைச் செயல் இழக்க செய்யும் பொழுது அது வெடித்து

                              சிதறியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்.


                              இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து 13 வருடங்களை கழிந்துள்ள நிலையில் சிங்கள இராணுவத்தினரால் புதைக்க பட்ட கண்ணிவெடிகள்

                              மிதிவெடிகள் என்பன தொடர்ந்து வெடித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                எரிபொருள் விநியோகத்தை முறையாக முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவு

                                எரிபொருள் விநியோகத்தை முறையாக முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவு

                                இலங்கை ,கொழும்பு ; நாடுமுழுவதும் எரிபொருள் விநியோகத்தை விரைவாகவும் முறையாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

                                இதேபோன்று பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து பஸ்கள் மற்றும் வேன்களுக்கு ,நாடுமுழுவதும் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து

                                டிப்போக்கள் மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்யுமாறு ஜனாதிபதி போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

                                எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று (23)

                                இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

                                கடற்றொழில், சுற்றுலாத்துறை , உர விநியோகம் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்காகவும், பொது போக்குவரத்து சேவைகளுக்காகவும்

                                முன்னைய முறைப்படி இலங்கை போக்குவரத்து டிப்போக்கள் மற்றும்
                                நாடளாவிய ரீதியில் உள்ள முப்படைத் தளங்களில் எரிபொருளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  லண்டன் பாராளுமன்றம் முன்பாக கறுப்பு யூலை போராட்டம் வீடியோ

                                  லண்டன் பாராளுமன்றம் முன்பாக கறுப்பு யூலை போராட்டம் வீடியோ

                                  பிரிட்டன் லண்டனில் பாராளுமன்றம் முன்பாக இன்று மதியம் ஒருமணியளவில் கறுப்பு யூலை கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

                                  சிங்கள அரச பயங்கரவாதம் தமிழர்கள் மீது நடத்திய 1983 ஆம் ஆண்டு இனபடுகொலை நிகழ்ந்து இன்றுடன் 39 ஆண்டாகிறது .

                                  அன்றில் இருந்து இன்றுவரை தனி சிங்கள மொழி மற்றும் ஆட்சி என முழங்கும் சிங்கள இனவாத பவுத்த வெறியர்களினால் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளபட்ட இனப் படுகொலைக்கு நீதி கிட்டவில்லை.

                                  லண்டன் பாரளுமன்றம்  முன்பாக கறுப்பு யூலை போராட்டம் வீடியோ
                                  லண்டன் பாராளுமன்றம் முன்பாக கறுப்பு யூலை போராட்டம் வீடியோ

                                  இறுதி போரில் ஒரு லட்சத்திற்குஅதிகமான தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்டுள்ள சிங்கள அரசுகளுக்கு இதுவரை ஐக்கிய நாடுகளினால் தண்டனை எதுவும் வழங்கப்படா நிலையில் லண்டன் போராட்டம் இடம்பெறுகிறது ..

                                  இலங்கையில் குற்றம் செய்தவர்கள் தப்பித்து திரிகின்றனர் .ஆனால் அப்பாவிகளை கொன்று அதனை வேடிக்கை பார்க்கும் நாடுகளாக பிரிட்டன் உள்ளிட்டவை இருப்பது தமிழர்கள் மத்தியில் கவலையை தருவித்துள்ளது.

                                  இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதத்தினால் நடத்த பட்ட கறுப்பு யூலை இனப் படு கொலைக்கு என்று தீவரு வழங்க படும் ..?

                                  கேள்வியோடே வலிகளை தாங்கிய வண்ணம் பயணிக்கிறது தமிழர் தேசம்.
                                  லண்டன் பாரளுமன்றம் முன்பாக இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவு பகிர்வும் கண்டன ஆர்ப்பாட்டம் மூலம் என்றாலும் தமிழர்களுக்கு தீர்வு கிட்டுமா ..?

                                  ( இதில் அழுத்தி லண்டன் போராட்டம் யாவும் ஒரே இணைப்பில் பார்க்கலாம் )

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    லண்டனில் இலங்கை தூதரகம் முன்பாக கறுப்பு ஜூலை கண்டன ஆர்ப்பாட்டம்

                                    லண்டனில் இலங்கை தூதரகம் முன்பாக கறுப்பு ஜூலை கண்டன ஆர்ப்பாட்டம்

                                    பிரிட்டன் ,லண்டன் ; இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிங்கள பேரினவாதம் வலிந்து நடத்திய கருப்பு ஜூலை 39 வது ஆண்டு இனப்படுகொலையை நினைவு கூர்ந்து லண்டனில் மிக பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .

                                    சிங்கள பவுத்த இனவாத அரசினால் அப்பாவி தமிழ் மக்களின் அழிப்புக்கு நீதி வேண்டி கண்டன போராட்டம் இடம் பெறுகிறது .

                                    பிரிட்டன் சட்ட விதிகளை பின் பற்றி அமைதியான முறையில் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் அமைப்பினால் நடத்த பட்டது .

                                    23/07/2022 இன்று மதியம் 1 மணிக்கு பிரித்தனியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால் பிரித்தானிய காவல்துறையினர் முன்னிலையில் மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தினர்.

                                    லண்டனில் கறுப்பு ஜூலை 39 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்
                                    லண்டனில் இலங்கை தூதரகம் முன்பாக கறுப்பு ஜூலை கண்டன ஆர்ப்பாட்டம்

                                    இதன் போது லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக கறுப்பு ஜூலை கொலை வெறியின் நினைவு படங்ககளை தாங்கிய வண்ணம் போராட்டங்கள் இடம்பெற்றது .

                                    லண்டனில் கறுப்பு ஜூலை 39 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்


                                    லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை உள்ளே இருந்து ஜன்னல் வழியாக
                                    சிங்கள அதிகாரிகள் படம் பிடித்ததாக பங்கு பற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.

                                    இதே லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என இலங்கை இராணுவ தளபதி ஒருவர் சைகை மூலம் தெரிவித்து லண்டனை விட்டு தப்பி ஓடியமையும் சட்ட போராட்டம் இடம்பெற்றமையும் இங்கே குறிப்பிட தக்கது .

                                    (லண்டன் போராட்டம் யாவும் –லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக என்பதில் அழுத்துவதன் ஊடாக பார்க்கலாம் )

                                    லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
                                    லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
                                    லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
                                    லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
                                    லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
                                    லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
                                    லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
                                    லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
                                    லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
                                    லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
                                    லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
                                    லண்டனில் கறுப்பு ஜூலை 39 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்
                                    லண்டனில் கறுப்பு ஜூலை 39 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்