Tag: முகக்கவசம்
பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம்
பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம்
பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம் ,நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
இருப்பினும், இது ஒரு தொற்றுநோய் நிலைமை அல்ல என்று அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (04) இரவு “டிவி தெரண”வில் ஒளிபரப்பான புதிய பாராளுமன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தலைவர்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கருத்து வௌியிடுகையில், இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.
சமீப காலமாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
இவ்வகை நுளம்புகளே சிக்குன்குனியாவுக்கும் காரணமாகின்றன. இந்த இரண்டு நோய்களிலும் அதிக ஆபத்து உள்ளது. தற்போது இன்ஃப்ளூயன்ஸா நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இது வயதான சிலருக்கு கடுமையான நிலைமைகளுக்கும் மரணத்திற்கும் கூட வழிவகுக்கும்.
இதேவேளை, புதிய நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் முகக்கவசம் அணிவது தொடர்பான தற்போதைய பிரசாரம் குறித்தும் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கினார்.
வைரஸ் சுவாச நோய்
உங்களுக்கு வைரஸ் சுவாச நோய் இருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது நல்லது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவித்தலால் சிக்கல் நிலைமை உருவாகலாம்.
நாம் ஏதாவது ஒன்றைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமெனில், நாங்கள் தயங்க மாட்டோம். முகக்கவசங்களை அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை அணியவேண்டும் என்று நாங்கள் குறிப்பிடுவோம்.
ஆனால், இந்த நேரத்தில் அது அவசியமில்லை என்பது தெளிவாகிறது. இது சாதாரணமாகிவிட்டது. எனவே, பெரிய அளவிலான சிக்கல்கள் மற்றும் இறப்புகள் ஏற்படும் சூழ்நிலை இனி இல்லை.
முகக்கவசம் மீண்டும் கட்டாயம்
முகக்கவசம் மீண்டும் கட்டாயம்
அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
நியூயோர்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினோய்ஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் இந்த முடிவை எடுத்துள்ளன.
டிசம்பர் 17-23 வரையான வாரத்தில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 16% அதிகரிப்பாகும் என வௌிநாட்டு ஊடங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும்
மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும்
மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும் என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
ஜே.என். 1 ஒமிக்ரோன் உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவி வருகின்றமையே இதற்கு காரணமென அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக இலங்கையில் சளி போன்ற நிலைமை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாமெனவும் பேராசிரியர் ச்சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.
இலங்கையில் முகக்கவசம் கட்டாயம் அணிந்திட வலியுறுத்து
இலங்கையில் முகக்கவசம் கட்டாயம் அணிந்திட வலியுறுத்து
இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து முக கவசம் அணிந்திட வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சு கண்டிப்பாக வேண்டுதல் விடுத்துள்ளது .
இலங்கையில் மீளவும் கொரனோ நோயின் தோற்று அதிகரித்து வருவதும் மக்கள் மீளவும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ள நிலையில் இந்த வேண்டுதலை இலங்கை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது.
முகக்கவசம் தேவையில்லை – வெளியான அறிவிப்பு
முகக்கவசம் தேவையில்லை – வெளியான அறிவிப்பு
இலங்கையில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து முகக்கவசம்
தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியானது
இந்த நிலையில் தற்பொழுது போக்குவரத்து மற்றும் உள்ளக செயல்பாடுகள் தவிர்ந்த
இடங்களில் இவை அவசியம் இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது
முகக்கவசம் அணியாத 1,831 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை
முகக்கவசம் அணியாத 1,831 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் முறையாக முகக்கவசம் அணியாத 1,831 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 778 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன், மேல் மாகாணத்தில் நேற்று(19) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது 3,021 மோட்டார் சைக்கிள்கள், 2,645 முச்சக்கர வண்டிகள் மற்றும் 7,810 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணிய மறுத்த 306+ பேர் கைது
முகக்கவசம் அணிய மறுத்த 306+ பேர் கைது
இலங்கையில் பரவி வரும் கொரனோ தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ள முக
கவசம் அணியுமாறு அறிவுறுத்தல் விடுக்க பட்டது
இந்த விதிகளை பின்பற்ற மறுத்து உலவிய சுமார் 306 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
முகக்கவசம் அணியாத மேலும் 351 பேர் கைது
முகக்கவசம் அணியாத மேலும் 351 பேர் கைது
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் காவல்துறையினரால் 351 பேர் கைது
செய்ய பட்டுள்ளனர்
கைதான அனைவரும் முக கவசம் அணியாது வீதியில் சென்றவேளை பொலிஸாரினால் கைது
செய்ய பட்டுள்ளனர் ,இவ்வாறு கைதானவர்களுக்கு தண்டம் அறவிட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
சுவிசில் முக்காடு – முகக்கவசம் அணிய தடை – அதிர்ச்சியில் மக்கள்
சுவிசில் முக்காடு – முகக்கவசம் அணிய தடை – அதிர்ச்சியில் மக்கள்
சுவிஸ் நாட்டில் புதிதாக கொண்டுவரப் பட்டுள்ள சட்ட நடவடிக்கையை அடுத்து
முஸ்லீம் மக்கள் தமது மத ,கலாச்சார வழிமுறையை பின்பற்றி நடைமுறை படுத்த படும் முக்காடு அணிய தடை விதிக்க பட்டுள்ளது
மேலும் வீதியால் செல்லும் மக்கள் பாதுகாப்பை கருதி முகக்கவசம் அணியவும் தடை விதிக்க பட்டுள்ளது
நள்ளிரவு முதல் மேற்படி சட்டம் அமுலுக்கு வருகிறது ,இதனை மீறு வோருக்கு தண்டம் அறவிட படுவதுடன் சிறைவாசம் வழங்க படும் எனவும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
அரசின் இந்த முடிவிற்கு முஸ்லீம் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது
முகக்கவசம் இன்றி நடமாடிய 377 பேரில் 3 பேருக்கு கொரோனா
முகக்கவசம் இன்றி நடமாடிய 377 பேரில் 3 பேருக்கு கொரோனா
முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து ரபிட் ஆன்டிஜன் அல்லது பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற திட்டத்தின்
மூலம் நேற்றைய தினம் (07) கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடிக் கொண்டிருந்த 377 பேர் நேற்றைய தினம் கைது
செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 220 பேர் ஆன்டிஜன் பரிசோதனைக்கும், 157 பேர் பி.சீ.ஆர் பரிசோதனைக்கும்
உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை மீன் கடைகள், மரக்கறிக் கடைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் கொரோனா
தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை
முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை
கொவிட் சூழ்நிலை காரணமாக முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போது முகக்கவசம்
அணியாமல் இருப்பது என்பது பொதுமக்களிடேயே மிகவும் சாதாரண நிலைமையாக மாறி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன கருத்து தெரிவிக்கையில், தற்போதைய கொவிட் நிலைமையை கட்டுப்படுத்த இது
ஒருபோதும் பொருத்தமானதல்ல என்றும் இன்று முதல் முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட
சட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதுவரையில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான ஆண்டிஜன் பரிசோதனைகள் இதற்குப் பின்னர் ஏனைய
மாகாணங்களிலும் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதுவரையில் இலங்கையில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45,000 க்கும்
அதிகமாகவுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 467 நபர்கள்; இவ்வாறு பதிவாகியுள்ளனர். இதன்படி இதுவரையிலும்
இலங்கையில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45,242 ஆகும்.
முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 75 பேர் கைது
முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 75 பேர் கைது
முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத
75 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்
பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (04) தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 15ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு
அமைய முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயமானதாகும்.
முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
மேல் மாகாணத்தின் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் நேற்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளதுடன்
14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் வைரலாகி வரும் புதிய முக கவசம்
கனடாவில் வைரலாகி வரும் புதிய முக கவசம்
கனடாவில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது புதிய முக கவசம் ஒன்று அறிமுக படுத்த பட்டுள்ளது
கொஞ்சம் குசும்பு பிடித்த ஆடை அலங்கரிப்பாளர் ஒருவர் .இவ்விதம் புதிய
வடிவிலான முக கவசத்தை வடிவமைத்து மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்
அதுவே தற்பொழுது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது .கொரனோ வைரல் என்பது இதைத்தான் போலும்

கொரனோ போலி கருவிகளை வழங்கி – கனடாவை ஏமாற்றிய சீனா
கொரனோ போலி கருவிகளை வழங்கி – கனடாவை ஏமாற்றிய சீனா
கொரனோ நோயில் சிக்கி தவித்து வரும் கனடா ,முன்னிலை பணியாளர்கள் பயன்படுத்தும் முக கவசங்களை கொள்வனவு
செய்திட முயன்றது ,இவ்வேளை இந்த முக கவசங்களைசீனா நிறுவனம் ஒன்று வழங்கிடா தயாராக இருந்தது .
இதன் அடிப்படையில் ஒரு மில்லியன் முக கவசங்களை சீனா கனடாவுக்கு ஏற்றுமதி செய்தது ,இவ்வாறு கனடா வந்தடைந்த ஒரு
மில்லியன் முக கவசங்களை பாவனைக்கு உதவாத போலி என கனடா கவலையுடன் தெரிவித்துள்ளது
KN95 masks இந்த முக கவசங்களை தரும் படி ஆடர் செய்தது ,ஆனால் அதில் கலர் படம் புரிந்து போலியானவற்றை சீனா நிறுவனம் வழங்கியுள்ளது ,
இலங்கை,அமெரிக்கா,கனடா ,நெதர்லாந்து போன்ற நாடுகளும் இவ்வாறு போலியான முக கவசங்களை பெற்று ஏமாற்றம்
அடைந்தன ,அதன் தொடர்ச்சியாக இப்பொழுது கனடாவும் ஏமாற்ற பட்டுள்ளது
சீனா இதனை திட்ட மீட்டு செய்து வருகிறது ,ஆனால் இந்த வல்லரசு நாடுகளுக்கும் வேறு வழியின்றி சீனாவை நம்பியாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளனர் ,
பாதிக்க பட்ட நாடுகள் கூறும் பொழுது அலட்சியம் செய்த கனடா இப்பொழுது அதை வாங்கி நொந்த பின்னர் இவ்வாறு போலிகளை வழங்கி ஏமாற்றி விட்டது என புலம்புகிறது
கொரனோ வேளையில் சீனா இவ்வாறு விளையாடி வருவது மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

















