கண்ணீர் புகை குண்டுகளுடன் இளைஞர் கைது

Spread the love

கண்ணீர் புகை குண்டுகளுடன் இளைஞர் கைது

இலங்கை ,கொழும்பு ; கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திருடப்பட்டதாக கூறப்படும் ஐந்து கண்ணீர் புகை

குண்டுகளுடன் ஏத்துல் கோட்டே பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான இவர் ஏத்துல் கோட்டே அழகேஸ்வர வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போராட்டம் இடம்பெற்ற தினத்தன்று பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை முச்சக்கரவண்டியில் கொண்டு வந்திருந்ததாகவும் அச்சந்தர்ப்பத்தில்

ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் குண்டுகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

குறித்த சந்தேகநபர் இன்று ஹல்ஸ்டோர்ஃப் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன்இச்சம்பவம் குறித்து The Anti-Vice Unit of the Western Province-South
பொலிஸ் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply