பிரிட்டனில் முக கவசம் அணிய வழியுறுத்து
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் முக கவசம் அணிய வழியுறுத்து

பிரிட்டனில் முக கவசம் அணிய வழியுறுத்து

பிரிட்டனில் மீளவும் மக்கள் முக கவசம் அணிந்திட வழியுறுத்த பட்டுள்ளது .

கொரோனோ நோயானது மீளவும் வேகமாக பரவி வருவதனால் ,மக்களை அதில் இருந்து காப்பாற்றவும் ,மருத்துவ மனைகளில் வேலை பளுவை குறைக்கும் நோக்குடனும் இந்த அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .

சீனா ஆமெரிக்காவில் பல நூறு மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ள நிலையில் ,அந்த மக்கள் இந்த நாடுகளுக்குள் படையெடுத்து வருவதாலும் ,இந்த நோயானது பரவும் நிலை ஏற்படலாம் என படுகிறது .

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் முகக்கவசம் கட்டாயம் அணிந்திட வலியுறுத்து

இலங்கையில் முகக்கவசம் கட்டாயம் அணிந்திட வலியுறுத்து

இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து முக கவசம் அணிந்திட வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சு கண்டிப்பாக வேண்டுதல் விடுத்துள்ளது .

இலங்கையில் மீளவும் கொரனோ நோயின் தோற்று அதிகரித்து வருவதும் மக்கள் மீளவும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ள நிலையில் இந்த வேண்டுதலை இலங்கை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது.

    Posted in Uncategorized

    முக கவசம் அணியாவிடின் – ஆறுமாதம் சிறை

    முக கவசம் அணியாவிடின் – ஆறுமாதம் சிறை

    இலங்கையில் முகக் கவசம் அணியாது பயணித்தால் அவர்களுக்கு அரசு ஆறு மாதம் சிறை

    தண்டனை வழங்க படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    நாள் தோறும் பலநூறு பேர் கைது செய்ய பட்டு வரும் நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் முக கவசம் அணிய மறுத்து உலவியவர்களுக்கு கொரனோ

      இலங்கையில் முக கவசம் அணிய மறுத்து உலவியவர்களுக்கு கொரனோ

      இலங்கையில் மேல மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயில் இருந்து

      மக்களை காப்பாற்ற பல்வேறு பட்ட வழிமுறைகள் செய்ய பட்டுள்ள

      பொழுதும் ,அரசு கூறும் விதிகளை மீறி மக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றி வருகின்றன

      இவ்விதம் வெளியில் நடமாடிய இரண்டு டசினுக்கு மேற்பட்டவர்கள் நோயின்

      தாக்குதல் அறிகுறியுடன் இனம் காணப்பட்டு தனிமை படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

      மேலும் ,இவ்வாறு திரிபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய பட்டு வருகிறது

      Posted in உலக செய்திகள்

      முக கவசம் அணியாததால் – சிலி நாட்டில் அதிபருக்கு ரூ.2½ லட்சம் தண்டம்

      முக கவசம் அணியாததால் – சிலி நாட்டில் அதிபருக்கு ரூ.2½ லட்சம் தண்டம்

      சிலி நாட்டில் முக கவசம் அணியாததால் அதிபர் செபாஸ்டியன் பெனெராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

      சிலி நாட்டில் முக கவசம் அணியாததால் அதிபருக்கு ரூ.2½ லட்சம் அபராதம்

      தென் அமெரிக்க நாடான சிலி கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 135 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

      செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 16 ஆயிரத்து 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு வைரஸ்

      பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

      அதன்படி சிலியில் முக கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. பொதுவெளியில் முக கவசம் அணியாமல் இருப்பது

      தண்டனைக்குரிய குற்றமாகும். அதாவது முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறிய நபர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.

      இந்த நிலையில் அந்த நாட்டின் அதிபரே முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் அதிபர் செபாஸ்டியன் பெனெரா தனது

      சொந்த ஊரான கச்சாகுவா நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்துக்காக அவருடன் செல்பி படம் எடுத்துக்கொண்டார். அப்போது அதிபர்

      செபாஸ்டியன் பெனெரா முக கவசம் அணிந்திருக்கவில்லை. எனவே இந்த செல்பி படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.

      இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிலி அரசு, அதிபர் செபாஸ்டியன் பெனெராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் (இந்திய

      மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம்) அபராதம் விதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட அதிபர் செபாஸ்டியன் பெனெரா தனது செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

      Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

      லண்டனில் முக கவசம் அணியாதவரை அடித்து ரயிலுக்குள் வீசிய கும்பல்

      லண்டனில் முக கவசம் அணியாதவரை அடித்து ரயிலுக்குள் வீசிய கும்பல்

      பிரிட்டன் London Underground Circle line service,High Street Kensington station.

      பகுதியில் ரயிலில் பயணித்த பயணிகளில் சிலர் முக கவசம் அணிய மறுத்து பயணம் செய்துள்ளனர்

      இதனை அவதானித்த குழு ஒன்று அந்த நபர்கள் மீது வாக்குவாதத்தில்

      ஈடுபட்டனர் ,திடீர் தாக்குதலை நடத்தி ரயிலுக்கு வெளியே வீசியுள்ளனர் ,

      இதனால் அவரது கண்ணில் பலத்த காயமடைந்த நிலையிலும் ,உடலின்

      சில பகுதிகளில் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார் .

      தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

      Posted in உலக செய்திகள்

      கனடாவில் முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து

      கனடாவில் முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து

      கனடாவில் 19 மாத பெண் குழந்தை முக கவசம் அணியாத காரணத்தால் விமான சேவை ரத்தான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

      கனடாவில் முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து
      முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து
      டொராண்டோ:

      கனடாவில் கல்கரி நகரத்தில் இருந்து டொராண்டோ நகருக்கு வெஸ்ட்ஜெட் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் சப்வான் சவுத்ரி என்ற பயணி தனது மனைவி மற்றும் 2 பெண்

      குழந்தைகளுடன் ஏறி இருந்தார். ஆனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அனைத்து பயணிகளும் தர்ம சங்கடத்துக்கு ஆளாகினர். இதற்கு காரணம், தனது இளைய குழந்தை (19 மாத

      பெண் குழந்தை) முக கவசம் அணிந்தே ஆக வேண்டும் என்று விமான நிறுவனம் கட்டாயப்படுத்துவதுதான் என்று சவுத்ரி கூறினார். மேலும், விமானம் புறப்படுவதற்கு முன் தனது 3 வயது

      மகள் முக கவசம் அணியாமல், தின்பண்டம் சாப்பிட்டு கொண்டிருந்ததாகவும், குழந்தை சாப்பிட்டு முடிப்பதை கூட

      சகித்துக்கொள்ளாமல் விமான சிப்பந்திகள், குழந்தை முக கவசம் அணியாவிட்டால், விமானத்தின் கதவுகளை மூட முடியாது என மறுத்து விட்டதாகவும் கூறினார்.

      அதைத் தொடர்ந்து சவுத்ரியும் குழந்தைக்கு முக கவசம் அணிவிக்க சம்மதித்தார். அவரது 3 வயது மகள் முக கவசம் அணிந்து விட்டாள். ஆனால் 19 மாத குழந்தைதான் அணியவில்லை என கூறப்படுகிறது

      . இதற்கிடையே நடந்த நிகழ்வுகளை பார்த்த அந்த குழந்தை வாந்தியெடுத்தது. இதில் ஆத்திரம் அடைந்த விமான சிப்பந்திகள், தீவிரமாயினர். அந்த குடும்பத்தினரை விமானத்தை விட்டு

      வெளியேறுமாறு கூறினர். அப்படி அவர்கள் வெளியேறாவிட்டால் கைது, வழக்கு, தண்டனை என நடவடிக்கை நீளும் என எச்சரித்ததுடன், போலீசாரையும் வரவழைத்தனர். அதைத்

      தொடர்ந்து தாங்கள் மரியாதைக்குரியவர்கள் என்று கூறி சவுத்ரி குடும்பத்தினர் வெளியேற சம்மதித்தனர். ஆனால் விமான சிப்பந்திகளோ விமானத்தை இயக்கும் மன நிலையில் இல்லை என

      கூறி விட்டனர். இதற்கிடையே போலீசார் வந்து விமானத்திற்குள் இருந்த அனைத்து பயணிகளையும் வெளியேற்றினர். விமான சேவையும் ரத்தானது. இருப்பினும் கனடாவில் கொரோனா

      கட்டுப்பாட்டு விதியின்படி 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முக கவசம் அணிந்தால் போதும் என தெரிய வந்துள்ளதாக சவுத்ரி தெரிவித்தார். ஆனால் விமான நிறுவனமோ, 3 வயது குழந்தை முக

      கவசம் அணியாமல் இருந்ததுதான் பிரச்சினைக்கு வழிவகுத்தது என கூறியது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

      Posted in உலக செய்திகள்

      முக கவசம் அணியாமல் வெளியில் சென்றால் €2,500 தண்டம் – 6 மாதம் சிறை

      முக கவசம் அணியாமல் வெளியில் சென்றால் €2,500 தண்டம் – 6 மாதம் சிறை

      டப்பிலினில் புதிய சட்டம் திங்கட் கிழமை முதல் அமுலுக்கு வருகிறது


      இங்கு பொது சேவைகளில் பேரூந்து ரயில் போன்றவை உள்ளடங்களாக, முக கவசம் அணியாமல் சென்றால் அவருக்கு

      இரண்டாயிரத்து ஐநூறு யூரோக்கள் தண்டம் அறவிட படுவதுடன் ஆறுமாதம் சிறை தண்டனை வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது

      எனவே டப்பிலின் மக்களே எச்சரிக்கை ,இது உங்களுக்குமான முக்கிய செய்தியாகும்