Tag: இலங்கை
தலதா மாளிகைக்கு புறப்பட கோட்டபாய
தலதா மாளிகைக்கு புறப்பட கோட்டபாய
இலங்கையில் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டபாய இன்று சிங்களவர்களின் புனித தளமாக போற்ற படும் தலதா மாளிகைக்கு பயணம் செய்துள்ளார் .
தமது ,அரசியல் அதிகாரத்தில் ஏறியதன் பின்னர் இவரது பயணம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
தீயில் கருகி பலியான மூன்று மாணவிகள்
ஆசாரபயானில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி பிபலியான மூன்று இலங்கை மாணவிகள் சடலத்தை
இலங்கை எடுத்து வரும் நடவடிக்கையில் இலங்கை அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சடலங்கள் தற்போது மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,போலீசார் விசாரணைகள் முடிவின் பின்னர்
இலங்கையிடம் கையளிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது
இவர்கள் தங்கி இருந்த வீட்டில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கின் காரணமாக அந்த வீடு தீ பற்றி எரிந்த நிலையில் இவர்கள பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

வெளிநாட்டு தமிழர்கள் – இலங்கை வர வேண்டுமாம் – விக்கி கூவல்
இந்தியா உள்ளிட்ட மற்றவெளிநாட்டு தமிழர்கள் -இலங்கைஇலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று
வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் நாட்டில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட வடமாகாண முன்னாள் முதல்வர்
சி.வி.விக்னேஷ்வரன் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்ததாக இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா, திருவள்ளுவர் விழா ஆகியவை வேலூர் ஊரீசு கல்லூரியில்
இன்று (10) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் க.வி.விக்னேஷ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியா உள்பட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும். அவ்வாறு
இந்தியாவில் இருந்து இலங்கை திரும்புபவர்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடையும் வரை இந்தியாவுக்கு வந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கும்.
வெளிநாட்டு தமிழர்கள் – இலங்கை வர வேண்டுமாம் – விக்கி கூவல்
இதனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு, இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கிடவும் வேண்டும்.
போர் சமயங்களில் இலங்கையில் இருந்து 10 லட்சம் தமிழர்கள் வெளியேறி விட்டனர். அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் தமிழர்களுக்கு உரிய வழமான வாழ்க்கைச்
சூழ்நிலையை ஏற்படுத்திட பலமாக அமையும். மேலும், அவ்வாறு இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழர்களின் 65 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக உள்ளன.
அங்கு இன்னும் ராணுவ முகாம்கள்தான் உள்ளன. அந்த நிலங்களை தமிழர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
வெளிநாட்டு தமிழர்கள் – இலங்கை வர வேண்டுமாம் – விக்கி கூவல்
புதிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதால் அவர் தனது அரசியல் வாழ்க்கையை
பௌத்தர்களுக்கு ஆதரவானதாக மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் உள்ளது. அவரது போக்கு விரைவில் வரக்கூடிய பிரதமர் தேர்தலுக்கு பிறகே உறுதியாக தெரியவரும்.
அவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள, பௌத்தர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை
மேற்கொண்டால் சர்வதேச அளவில் தமிழ் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்றார்.
பொலிஸாரால் 20 பேர் கைது
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடியில் வைத்து பொலிஸ் மோப்பநாயின் ஊடக வாகனங்களை பரிசோதனைக்கு
உட்படுத்தபட்ட போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து ஒரு தொகை கேரளா கஞ்சா, மதனமோதகம், சட்டவிரோதமான சிகரட்டுகள் என்பன மீட்கபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, மாத்தறை, காலி, குருணாகல் போன்ற பகுதிகளை
சேர்ந்தவர்கள் என குற்றதடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை சிவனொளி பாதமலைக்கு வருகின்ற பக்த அடியார்கள் போதைப்பொருளை கொண்டுவர வேண்டாமென பொலிஸார் கோரியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
ஆயுதங்களுடன் இருவர் கைது
ஆயுதங்களுடன் இருவர் கைது
இலங்கை – மட்டகளப்பு வாழைச்சேனை பகுதியில் இலங்கையில் தடை செய்ய பட்ட டீ 56 ரக துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது .
கைதானவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
கிணற்றில் வீழ்ந்து சிசு பலி
கிணற்றில் வீழ்ந்து சிசு பலி
உல்பத, தெற்கு பிரதேசத்தில் வீட்டில் இருந்த ஒரு வயதுடைய ஆண் குழந்தை ஒன்று கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.
குழந்தை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு பகமுண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஓடி வரும் சீன உயர் குழு
இலங்கைக்கு ஓடி வரும் சீன உயர் குழு
இலங்கையில் ஏழாவது ஜனாதிபதியாகி பதவி ஏற்றுள்ள கோட்டபாயவை சந்தித்து பேசிட சீனாவின் உயர் பீட குழு ஒன்று எதிர் வரும் வாரம் வருகிறது .
இங்கே வரும் இந்த குழு முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் உடன் படிக்கையில் கைச்சாத்திடுவதுடன் ,சீனாவுக்கு
வருமாறு கோட்டபாயவுக்கு அழைப்பு விடுக்க படும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .
இதே கால பகுதியில் ஆசியாவுக்கு பொறுப்பான பிரதி அமெரிக்கா அதிகாரியும் வருகை தரவுள்ளார் .
இவர்களிடம் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறவுள்ள மனித உரிமை அமர்வில் தம்மை காப்பாற்றும் படி
இலங்கை வேண்டுகோள் விடுக்கலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது .
தங்க கொள்ளையர்கள் மூவர் கைது
இலங்கையில் – தொடர் தங்க கொள்ளையில் ஈடுபட்ட குழுவொன்று
காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .
பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
கைதானவர்க்ள தீவிர விசாணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் ,விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
மேலும் பல கொள்ளை சம்பவம் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனவும் கருத படுகிறது
இலங்கை வரும் அமெரிக்கா அதிகாரி
இலங்கை வரும் அமெரிக்கா அதிகாரி
அமெரிக்காவின் ஆசிய நாடுகளுக்கான முதன்மை துணை உதவி செயலர் இலங்கை வருகிறார் ,
இவர் இலங்கையில் இடம்பெறும் தை பொங்கல் தமிழர் விழாவை முன்னிட்டு இலங்கையில் தங்கி இருப்பார் .
இவ்வேளையில் கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சில் ஈடுபடுவார் என தெரிவிக்க பட்டுள்ளது
,கோத்தபாய அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் இலங்கை வரும் முதல் அமெரிக்கா உயர் அதிகாரி இவர் என்பது குறிப்பிட தக்கது
தமிழர் பகுதியில் எரிபொருளுக்கு தாட்டு பாடு இல்லை -ஆளுநர்
தமிழர் பகுதியில் எரிபொருளுக்கு தாட்டு பாடு இல்லை -ஆளுநர்
இலங்கை தமிழர் தாயாக பகுதியான வடக்கு பகுதியில் எரிபொருளுக்கு தட்டு பாடு இல்லை எனவும் இதனால்
மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என வடக்கு ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்துள்ளார் .
ஈரான்,அமெரிக்கா முறுகல் உச்சம் பெற்ற நிலையில் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார் .
மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகி அச்சம் கொள்ளாது இயல்பு வாழ்வுக்கு திரும்புமாறு வேண்டு கொள் விடுக்க பட்டுள்ளது
14 ஆயிரம் வீடுகள் கட்டும் மகிந்த
இலங்கையில் ஆளும் மகிந்த அரசாட்சியில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 14 ஆயிரம் வீடுகள் கட்டும் படி மகிந்த
வேண்டுகோள் விடுத்துளளார் .
அமைச்சரவையில் வைக்க பட்ட தீர்மானத்திற்கு அமைய ஒரு வீடு சுமார் ஆறு லடசம் ரூபா செலவில் இந்த வீடுகள் கட்ட படுகின்றன
சுனாமி வீட்டுத்திட்டத்தில் மோசடி செய்த மகிந்தா இதுவரை அந்த பாத்திக்க பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டி தரவில்லை .
இவ்வாறான நிலையில் மீளவும் வீட்டு திட்ட ,அபிவிருத்தியில் கையாடல் இடம்பெற கூடும் என்றே அடித்து கூற படுகிறது
வீட்டு திட்டங்களை என சர்வதேச நாடுகள் ஒதுக்கிய நிதியை மகிந்த ஆட்சியில் காணாமல் போனது ,
மீள சகோதரன் கோட்டா ஆட்சியில் இவையும் காணாமல் போகும் நிலை உருவாகும் என மக்கள் அச்சம் கொள்கின்றனர்
மாணவிக்கு ஆசிரியர் புரிந்த செயல்
வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 19 வயதான மாணவி ஒருவரை
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியரான வவுனியா நகர சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நேற்று
(08) மாலை சந்தேகத்தின் பேரில் செட்டிக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகப்படுத்த குறித்த ஆசிரியர் முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் வசிக்கும் 41 வயதான ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்த உள்ளதாக சம்பவம் தொடர்பில்
மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழு சண்டை – ஒருவர் வெட்டிக் கொலை -இருவர் காயம்
குழு சண்டை – ஒருவர் வெட்டிக்கொலை -இருவர் காயம்
இலங்கை – இரதமலானை பகுதியில் கடந்த இரவு வீடொன்றில் இடம்பெற்ற தகராறில் சிக்கி ஒருவர் கோரமாக
கத்தியால் வெட்டியும் ,குத்தியும் படுகொலை செய்ய பட்டுள்ளார் ,
மேலும் இருவர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் கலுபோவாவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
எனினும் இந்த படுகொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .
இலங்கையில் இவ்வாறான காத்தி வெட்டு படுகொலைகள் நாள் தோறும் அதிகரித்து செல்வதுடன் இதனை தடுப்பதில்
இலங்கை பொலிசார் தவறி வருகின்றனர் என மக்கள் மத்தியில் பொதுவான குற்ற சாட்டு எழுந்துள்ளது .
லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை
இலங்கையில் -லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை
இலங்கையில் – புத்தளம் பகுதியில் பணி புரிந்து வந்த கான்ஸடபிள்,மற்றும் இன்ஸபெக்டர் தர காவல்துறை
அதிகாரிகள் இருவர் பத்தாயிரம் ரூபா லஞ்சம் பெற்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு வந்தனர் .
இந்த குற்ற சாட்டில் சிக்கிய இவர்களுக்கு சுமார் 28 வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .இலங்கை சட்டத்தின்
நான்கு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது .
இந்த தீர்ப்பிலேயே இவ்வாறு 28 வருட சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .
லஞ்சம் பெரும் அரச ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதுடன் ,அவர்கள் பணியில் இருந்து நீக்க படுவதுடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் என
கோட்டா அதிரடியாக அறிவித்து ,இரகசிய போலீசார் 2500 பேரை காவல் பணியில் ஈடுபடுத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
விபச்சாரத்தில் ஈடுபட்ட -4 பெண்கள் கைது
விபச்சாரத்தில் ஈடுபட்ட -4 பெண்கள் கைது
கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட மர்ம விபச்சார விடுதி ஒன்று காவல்துறையினரால் சுற்றிவளைக்கப் பட்டது .
இந்த சுற்றிவளைத்த இரகசிய விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள்
உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்ட பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர்
இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
இலங்கையில் ஆளும் இனவாத அதிபர் கோத்தபாயா அரசு நாள்தோறும் அதிரடி அறிவிப்புக்களை ,புதிய
நடைமுறைகளையும் புதிதாக அமூல் படுத்தி வரும் நிலையில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது .
இதன் அடிப்படையில் சமீப நாட்களில் இலங்கையில் சொத்துக்கள் வாங்குபவர்கள் அதனை ஐந்து வருடத்திற்கு
முன்னர் விற்பனை புரிந்தால் ,ஐம்பது வீதம் வரிசெலுத்த வேண்டும் என
கோட்டா அரசு அறிவித்துள்ள நிலையில் புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இலங்கையில் அசையா
சொத்துக்களை வாங்கி குவிப்பதில் பின் நகரத்து செல்கின்றனர் .
இங்கிருந்து வந்து இலங்கையில் பல வணிக வளாகங்கள் ,மற்றும் கல்யாண மண்டபங்கள் ,விவசாய காணிகள்
இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
,பண்ணைகள் என பல் துறை சார் விடயங்களை மேற்கொண்ட தமிழர்கள்
அச்சத்தின் பிரதி காரணமாக பின்வாங்கி செல்வதுடன் ,அவர் தாம் வாழும் வெளிநாடுகளில் அசையாத
சொத்துக்களை வாங்கி குவிப்பதில் தீவிர கவனம் செலுத்து வருகின்றனர் .
கோட்டபாய அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்கள் ,மற்றும் கட்சிகளுக்கு பேரம்பேசி லஞ்சம் வாங்கி கொடுக்கும் முகவர்கள்,தரகர்கள் ,ஐடியா மணிக்கல் கூட இந்த
விடயத்தை அவருக்கு எடுத்து விளக்கி அதனை மாற்றம் செய்திட முனைய வில்லை என்பது கவனிக்க தக்கது .
இலங்கையின் வடக்கு ப்குதியில் அசையாத சொத்துக்கள் வாங்கிய தமிழர்களில் சிலர் நம்முடன் உரையாடும் பொழுதே மேற்படி விடயத்தினை தெரிவித்தனர் .
செல்வந்தர்களாக விளங்கும் இவர்களது எண்ணங்களில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளவர் , ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய மாற்றம் பிடித்துள்ளார்
புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களை இலங்கையில் முதலீடு புரியுமாறு அழைப்பு விடுத்துள்ள கோட்டா அரசு ,இவ்விதம் திடீர் சட்ட மாற்றங்களை ஏற்படுத்துவதால் இவர்கள் மத்தியில் அச்ச நிலை மேலோங்கியுள்ளது .
தொலை நோக்கு சிந்தனை அற்ற நிலையிலும் ,தமிழர் ,அல்லது இலங்கையர் மன நிலைகளை அறிந்து கொள்ள மறந்து இயல் படும் கொள்கை அற்ற
இனவாத சிந்தனை செயல் திட்டத்தின் செயல் வழி கதாநாயகனாக ஆளும் அதிபர் கோட்டபாய விளங்கி வருவதை, இவர்கள் என்ன மாற்றத்தின் புரிதல் ஊடாக அவதானிக்க முடிகிறது
- வன்னி மைந்தன் –
சரத் பொன்சேகா கைது செய்யப் படும் அபாயம்
சரத் பொன்சேகா கைது செய்யப் படும் அபாயம்
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் தமிழர்களை கோரமாக கொன்று குவித்தவரும் ,இன்றைய
மகிந்த கோட்டபாய அரசுகளின் நேரடி எதிரியுமாக விளங்கும்,விளங்கி வரும் சரத் பொன்சேகா கைது செய்ய படும் அபாயம் எழுந்துள்ளது .
கோட்டா ,மகிந்த சிந்தையின் நேரடி கைது வேட்டை பட்டியலில் இவரும் ஒருவராக இடம் பிடித்துள்ளாராம் .
விரைவில் இவரும் கைது செய்யப் படலாம் என கொழும்பு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன .
பழி வாங்கும் அரசியலை நடத்தி செல்லும் ஆளும் இனவாத அதிபர் கோத்தபாயவின் கழுகு
பார்வை இவர் மீதும் வீழ்ந்துள்ளதாகவே அந்த உள்ளக வட்டாரங்கள் அலசுகின்றன.
இவ்வாறான தொடர் கைதுகள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்மறை விளைவுகளை ஆளும் அதிபர் கோத்தபாயாவுக்கு ஏற்படுததலாம் என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் .
அவர் அதனையும் தாண்டி சிங்கள பவுத்த மக்கள் தனக்கு தகுந்த வாக்கினை வழங்கி தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர வைப்பார் என நம்புகிறார்
இது சாத்தியமா என்பதை எதிர்வரும் பங்குனி மாதம் தெரியவரும் .
ஐரோப்பா செல்ல வந்த யாழ் வாலிபன் சடலமாக மீட்பு
ஐரோப்பா செல்ல வந்த யாழ் வாலிபன் சடலமாக மீட்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் உயிர் ஆபத்து கருதி வெளிநாடுகளுக்கு உயிர் பாதுகாப்பு தேடி
சென்ற யாழ்பாணத்தை சேர்ந்த தமிழ் வாலிபன் ஒருவர் ,துருக்கி அருகில் உள்ள கிரீஸ் நாட்டு எல்லையில் சடலமாக மீட்க பட்டுளளார் .
இதே எல்லை பகுதி ஊடாக துருக்கிக்குள் நுழைய முற்படும் நபர்கள்,அல்லது துருக்கியில் இருந்து வெளியேறி
ஐரோப்பா எல்லைக்குள் நுழைய முனைபவர்கள் மீது அந்த நாட்டு இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது .
அவ்வாறே இவரும் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என கருத படுகிறது .
வெளிநாடுகளுக்கு என தமது உயிரை பணயம் வைத்து வெளிக்கிளம்பி வரும் தமிழர்கள் ,ஆபத்தான பகுதியான
,போலந்து நதிக்கரையில் ,மற்றும் ரசியா,துருக்கிய பகுதியில் சடலங்களாக மீட்க பட்டமை வரலாறாக உள்ளது
சிங்கப்பூர் அரசுடன் கோட்டா பேச்சு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் சிங்கப்பூர் சட்டம்
மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை
சந்தித்தார். ஜனாதிபதி அவர்களும் அமைச்சர் சண்முகமும் இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் முக்கியமாக வர்த்தகம் மற்றும்
முதலீட்டு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, இணையப் பாதுகாப்பு, தீவிரவாதத்தை
கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின் அச்சுறுத்தல்கள் மற்றும்
புலனாய்வுத்துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வெறுப்புப் பேச்சு, இணைய வழியாக தவறான தகவல்களை பரப்புதல் ஆகியவற்றிற்கு தீர்வு காணுதல் மற்றும் சமய நல்லிணக்கத்தை பேணுதல் தொடர்பாக சிங்கப்பூர்
அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டங்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். வர்த்தக அபிவிருத்தி, செயற்பாடு மற்றும் ஊக்குவிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த தரவு
முகாமைத்துவத்தை வர்த்தகத் துறைகள் அதிகளவில் நம்பியிருக்கும் சமூக ஊடக புலனாய்வு மாதிரிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
டிஜிட்டல் மற்றும் ஆளடையாளத் தரவுகள் (பயோமெட்ரிக்) ஆகிய இரு துறைகளையும் இணைக்கும் மறுக்கமுடியாத
அடையாளமாக சிங்கப்பூர் தற்போது ஆராய்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இந்த சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அமைச்சர்
சண்முகத்திற்கு ஜனாதிபதி அலுவலகத்தில் பகற் போசன விருந்தளித்தார். அதன் பின்னர் அமைச்சர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
சிங்கப்பூர் அரசுடன் கோட்டா பேச்சு

இது சிங்கள நாடா.?தமிழர் நாடா.? மனோ கேள்வி
இலங்கை இன்று . சிங்கள நாடா.?தமிழர் நாடா.? மனோ கேள்வி தனிநபர் பிரேரணை பற்றி விஜேதாசவிடம் மனோ கணேசன் தனியார் தொலைக்காட்சியில் கேள்வி
எனக்கு சிங்கள ராஜ்யமோ, தமிழ் ராஜ்யமோ, முஸ்லிம் ராஜ்யமோ வேண்டாம். இலங்கை ராஜ்யமே வேண்டும்.
நான் முதலில் ஒரு இலங்கையன். அப்புறம்தான் தமிழன். ஆனால், நீங்கள் முதலில் யார்? நீங்கள் இந்த நாட்டில் ஒரு சிங்கள பெளத்த ராஜ்யத்தை கட்டி எழுப்ப முயல்கிறீர்கள் என்ற அறிகுறிகள் தெளிவாக தெரிகின்றன.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகியோரை உள்ளடக்கிய இலங்கை ராஜ்யத்தையா அல்லது சிங்கள பெளத்த ராஜ்யத்தையா நீங்கள் இந்த நாட்டில் உருவாக்க
விளைகிறீர்கள் என்று எனக்கு பதில் கூறுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் நேற்றிரவு நடைபெற்ற
தனியார் தொலைக்காட்சி அரசியல் விவாதத்தில், தனிநபர் பிரேரணை மூலம் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்களை குறைக்கும் அரசியலமைப்புக்கான
இது சிங்கள நாடா.?தமிழர் நாடா.? மனோ கேள்வி
21ம் திருத்தத்தை கொண்டுவந்துள்ள அரசாங்க எம்பி விஜேதாச ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினார்.
நேற்று நள்ளிரவு கடந்து, சிங்கள மொழியில் நடைபெற்ற இந்த விவாதத்தில் ஜேவிபி எம்பி நளின்த ஜயதிஸ்ஸ, ஐதேக
எம்பி முஜிபுர் ரகுமான், பொதுஜன பெரமுன எம்பி விஜேதாச ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நாட்டில் இனங்கள் மத்தியில் நல்லிணக்கம் இல்லாமல் இருப்பதற்கு சிறுபான்மை கட்சிகள் இருப்பதே காரணம் என்று கூறுகிறீர்கள். ஆகவே தேர்தல் வெட்டுபுள்ளியை
உயர்த்தி சிறு கட்சிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்கிறீர்கள். இன்று இந்நாட்டில் நல்லிணக்கம் இல்லை என்பது மெத்த சரி. அது ஒரு நோய்.
ஆனால், அந்த நோய்க்கு நீங்கள் சொல்லும் மருந்துதான் பிழையானது.
நல்லிணக்கம் இல்லாமல் போனதற்கு இந்நாட்டு பெரும்பான்மை கட்சிகள் சிறுபான்மை மக்களை அரவணைக்க தவறியதே காரணம்.
அதனால்தான் வேறு வழிகள் இல்லாமல், சிறுபான்மை கட்சிகள் உருவாகின. சிங்களம் மட்டும் என்று 1950களில் இனவாதத்தை மையமாக கொண்டு பெரும்பான்மை
அரசியல்வாதிகள் அரசியல் செய்ய புறப்பட்டதாலேயே, சிறுபான்மை கட்சிகள் உருவாக வழி ஏற்பட்டது.
இதனால், சுமார் 70 வருடங்கள் இந்நாடு இருளில் இருந்தது. மிகவும் பிரயாசைப்பட்டு அதை மாற்ற நாம் முயன்று வரும் போது, மீண்டும் அதே பழைய இருளை நோக்கி நீங்கள்
இது சிங்கள நாடா.?தமிழர் நாடா.? மனோ கேள்வி
இந்நாட்டை பின்னோக்கி கொண்டு செல்ல முயல்கிறீர்கள். அதாவது வரலாற்றில் இருந்து இன்னமும் நீங்கள் பாடம் படிக்கவில்லை என்று எனக்கு புலனாகிறது.
இந்நாட்டில் இப்போது, தமிழ் பேசும் மக்கள் தமது தாய்மொழியில் தமது தாய்நாட்டை உணர்வோடு, “தாயே” என தேசிய கீதமாக பாட முடியாத நிலைமைக்கு நீங்கள்
கொண்டுவர முயல்கிறீர்கள். இதுதான் இன்றைய யதார்த்தம். இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருக்கும், இந்நாட்டின் இன்றைய ஜனாதிபதி, பிரதமர்,
அமைச்சர்கள், அரச எம்பீக்கள் ஆகியோர் இதையிட்டு வெட்கி தலை குனிய வேண்டும்.
இதுதான் பிரிவினை. சிறுபான்மை இனங்களை ஒதுக்கி வைப்பதுதான் பிரிவினை. ஒரே நாட்டை உருவாக்க வேண்டும் என்றால், இந்நாட்டில் வாழும் எல்லா
இனங்களுக்கும், மொழிகளுக்கும், மதங்களுக்கும் அங்கீகாரம் தருவதன் மூலமே அதை செய்ய முடியும் என்பதை உணருங்கள்.
இந்தியாவில் சிறுபான்மை சீக்கிய இனத்தை சேர்ந்த மன்மோகன் சிங் பிரதமர் ஆக முடியும். அப்துல் கலாம் என்ற முஸ்லிம் ஜனாதிபதி ஆக முடியும்.
இங்கே லக்சமன் கதிர்காமர் கூட பிரதமராக முடியாது. இங்கே இனவாதம் உள்ளத்தில் ஆழமாக ஊறி விட்டது. அதை நீங்கள் இன்னமும் வளர்க்கிறீர்கள்.
இன்று உள்ள தேர்தல் சட்டத்தை திருத்த நாமும் தயார். ஆனால், எப்படி திருத்துவது? இப்படி வெட்டுப்புள்ளியை உயர்த்தி சிறு கட்சிகளை ஒழிப்பதன் மூலம் அல்ல.
அது இருக்கும் நிலைமையை இன்னமும் மோசமாக்கி விடும். இது சிறுபான்மை கட்சிகளை மட்டுமல்ல, அனைத்து சிறு கட்சிகளையும் பாதிக்கும். எம்மை விட ஜேவிபியை
அதிகம் பாதிக்கும். அரசில் உள்ள ஈபீடீபியை பாதிக்கும். கடந்த காலங்களில் ஆயுதம் தூக்கி விட்டு, பின் அவற்றை
கைவிட்டு, பாராளுமன்ற பாதையை தெரிவு செய்தவர்களை பார்த்து மீண்டும் ஆயுத போருக்கு போங்கள். காட்டுக்குள் போங்கள். பங்கருக்குள் போங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
வரலாற்றில் இருந்து பாடம் படிக்கவும் மாட்டீர்கள். இலங்கை ராஜ்ஜியம் என்ற அனைவாராலும் ஏற்றுக்கொள்ள கூடிய இலக்கையும் நிராகரிப்பீர்கள்.
ஆனால், நாம் எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்த எமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமையையும் கைவிட வேண்டும். இது என்னய்யா நியாயம்?






