Tag: லண்டன்
லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்
லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்
மேற்கு லண்டன் பகுதியில்கடந்த தினம் முதல் ஒன்பதுவயது ஆசிய நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் ,
இவரை தெரிந்தால் தமக்கு உடனடியாக தெரிவிக்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இவர் கடத்த பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது
சிறுமி இறுதியாக நின்ற பகுதியில் உள்ள கமராக்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டு வருகின்றன
இவரை யாரவது கண்ணுற்ற்றால் தமக்கு உடனடியாக தெரிவிக்கும் படி போலீசார்
வேண்டியுள்ளதுடன் ,இந்த செய்தியினை அதிகமாக சேர் ,பகிர்ந்து உதவும் படி மன்றாடி
வேண்டியுள்ளனர் ,மக்களே முடிந்தவரை இதனை பகிருங்கள் ,சிறுமியை மீட்க இது உதவியாக அமையலாம்
லண்டனில் தமிழ் பெண்ணிடம் 3000 பவுண்டுகளை மிரட்டி பறித்த கும்பல்- வீடியோ
லண்டனில் தமிழ் பெண்ணிடம் 3000 பவுண்டுகளை மிரட்டி பறித்த கும்பல்- வீடியோ
பண மோசடி
லண்டனில் தமிழர்களிடம் HMRC என கூறி பணம் பறிக்கும் ,கும்பல் ஒன்று சிக்கியது ,அவர்களது மிரட்டல்களையும் ,எவ்வாறு
மோசடியில் ஈடுப்புகின்றனர் என்பதை தமிழ் வாலிபர் ஒருவர் பதிவு செய்து வெளியிட்ட திகில் காணொளி இது,அவர் அந்த கும்பலை எவ்வாறு கழுவி ஊத்தியுள்ளார் என்பதற்கு இது நல்ல சான்று
பணத்தை இழந்த தமிழ் பெண்
சில நாட்களுக்கு முன்னர் லண்டன் குறைடன் பகுதியில் தமிழ் பெண்ணிடம் மூவாயிரம் பவுண்டுகளை குறித்த கும்பல் மோசடி செய்துள்ளது
பணத்தை செலுத்திய பின்புதான் இவர்கள் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என அந்த பெண் புரிந்துள்ளார் ,
அவர் மொன்சா காட் மூலம் பணத்தை செலுத்தியதால் அதனை மீள் பெற முடியாத நிலையில் சிக்கியுள்ளார் ,வங்கிகள் மூலம் செலுத்தி இருப்பின் அவர் அதனை பெற்று கொண்டிருக்க முடியும் .
பொலிஸ் விசாரணை
குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் ,தமிழர்களே இந்த காணொளியை முடிந்தவரை உங்கள்
நண்பர்களுக்கு பகிருங்கள் , இவ்வாறான மோசடி கும்பலிடம் இருந்து ஏனையவர்களை காப்பாற்றி கொள்வோம்
காரோடு சிறுவர்களை கடத்தி சென்ற திருடர்கள்
பிரிட்டன் புறநகர் பகுதியாக விளங்கும் Birmingham பகுதியில் பதின் ஐந்து வயதுடைய திருடர்கள் சிறுவர்களுடன் காரினை கடத்தி சென்றுள்ளனர் .
சிறுவர் கடத்தல்
இயந்திரத்தை ஆன் செய்தபடி காரினை விட்டு சென்ற தந்தைக்கு ஏற்பட்ட மேற்படி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மேற்படி சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு விரைந்து தெரிவிக்க பட்ட நிலையில் ,
பொலிசார் சுற்றிவளைப்பு
விரைந்து செயல் பட்ட மிட்லண்ட் காவல் துறையினர் கடத்தல் காரர்களை காருடன் மடக்கி பிடித்தனர்
சிறுவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி மீட்க பட்டனர்
மேற்படி இரு கார் திருடர்களும் கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
திருடர்கள்
,இவ்விருவரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் திருடர்கள் என கண்டு பிடிக்க பட்டுள்ளது
பெற்றவர்களே யாக்கிரதை பிள்ளைகளை இவ்விதம் காருக்குள் விட்டு செல்லாதீர்கள்
லண்டனில் பற்றி எரிந்த warehouse- அடித்துமூடப் பட்ட வீதிகள்
லண்டனில் பற்றி எரிந்த warehouse- அடித்துமூடப் பட்ட வீதிகள்
தீ பரவல்
லண்டன் எம் 67 வேக சாலைக்கு அருகில் அமையப் பெற்றிருந்த warehouse
ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது ,இந்த தீ பரவல் அதிவேகமாக பரவிய நிலையில் அந்த கடை முற்றாக எரிந்து அழிந்துள்ளது
இந்த தீ பரவல் வானில் பெரும் புகை மூட்டங்களாக காணப்பட்ட நிலையில் குறித்த வேக சாலை அடித்து மூடப் பட்டதுடன்
வீட்டு யன்னல்கள் பூட்டு
அயலில் உள்ள வீட்டு யன்னல்கள் யாவரும் அடித்து பூட்டும்படி உத்தரவிடப்பட்டது
இந்த தீயினை கட்டுப்படுத்த சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் களத்தில் குவிக்க பட்டனர்
தொடரும் விசாரணைகள்
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
வடக்கு லண்டனில் £184 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு -10 பேர் கைது
பிரிட்டன் – வடக்கு லண்டன் பகுதியில் விசேட காவல்துறை அணியினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் £184 மில்லியன் பெறுமதியான கொக்கையின் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது
பெரும் போதைவஸ்து கடத்தல்
இந்த பெரும் கடத்தல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள் அனைவரும் 21 வயது முதல் 56 வயதும் கொண்டவர்கள்
தொடரும் விசாரணை
கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,பெரும் தொழில் நிறுவன ஒன்றை வைத்து நடத்தி வந்த குழுவினரே
லொறி ஒன்றுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்டு மேற்படி போதைவஸ்தை மீட்டுள்ளனர்

இரகசிய தகவல்
உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது ,இதன்போது ஆயுதங்கள்
மற்றும் பெருமளவான பணமும் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
புலிகள் தடை ,பிரிட்டன் உள்துறை அமைச்சுக்கு மூன்று மாதம் கெடு
புலிகள் தடை ,பிரிட்டன் உள்துறை அமைச்சுக்கு மூன்று மாதம் கெடு
பிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகள் மீது தடை நீடிப்பதா இல்லையா என முடிவினை எடுக்க கோரி
பிரிட்டன் உள்துறை அமைச்க்கு மூன்று மாத கால கெடு அதாவது 90 நாட்கள் வழங்க பட்டுள்ளன,
சட்டரீதியாக முறையான ஆதரங்களுடன் புலிகள் தடை நீடிக்க படவேண்டும்
எனின் அதனை உள்துறை அமைச்சை நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் ,அவ்வாறு
அல்லா விடின் புலிகள் மீதான தடை முற்றுமுழுதாக நீக்க படக்கூடிய நிலைக்கு இது இட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது
புலிகள் மீதான தடை நீக்க பட்ட பொழுதும் அதற்கு எதிராக சிங்கள அரச வாதிகள்
வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் மேற்படி உத்தரவு
பிறப்பிக்க பட்டுள்ளதாக தமிழர் தரப்பை மையப்படுத்தி தெரிவிக்க படுகிறது
பிரிட்டன் கடலில் போதைவஸ்து படகை துரத்தி பிடித்த கடற்படை – 2.6 தொன் மீட்பு
பிரிட்டன் கடற்பரப்பில் சந்தேகித்திற்கு இடமான முறையில் சென்று கொண்டிருந்த மீன் பிடி படகு ஒன்றை கடற்படையினர் வழிமறித்தனர் ,அப்போது அந்த படகு அவர்கள் முற்றுகையில்
இருந்து தப்பிக்க முயற்சித்தது ,சந்தேகம் அடைந்த அவர்கள் அதனை துரத்தி பிடித்தனர் ,
சுற்றைவளைக்க பட்ட படகில் இருந்து சுமார் 11 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான போதைவஸ்து மீட்க பட்டது
கடந்த பத்து மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,6 தொன்
எடையுள்ள போதைவஸ்து மீட்க பட்டுள்ளதாக ராயல் கடற்படை அறிவித்துள்ளது
இந்த ஆண்டில் சிக்கிய மிக பெரும் போதைவஸ்து கடத்தல் இதுவாக பதிவு பெற்றுள்ளது
ஏயன்சி வேலை செய்த இருவர் -லண்டனில் கைது
லண்டனில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆட்களை கடத்தும் எயன்ஷி வேலை செய்த இருவரை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .
கிளாஸ்கோ விமான நிலையம் ஊடக இந்த கடத்தலில் ஈடுபட்ட பொழுதே இவர்கள் இருவரும் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
இருபத்து எட்டு வயது பெண் ஆற்றும் முப்பத்தி இரண்டு வயது ஆண்
ஆகியோரே இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதான இருவரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
லண்டனில் நபர் வெட்டிக் கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்
ஓட ஓட வெட்டி கொலை செய்ய பட்ட நபர் – சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்த பரிதாபம் – நடந்தது என்ன விசாரணையில் பொலிஸ்
கடந்த தினம் இரவு 7,40 மணியளவில் Highgate Road, Kentish Town, பகுதியில் நபர் ஒருவரை மர்ம நபகள் துரத்தி கோரமாக வெட்டி
கொன்றனர் ,பலத்த கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான இவர் மீட்க பட்டு சிகிச்சை வழங்க பட முன்னரே சம்பவ இடத்தில இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேற்படி கொலை செயலை புரிந்த இருவர் கைது செய்ய
பட்டுள்ளனர் ,இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,லண்டன்
பகுதியில் இவ்விதமான வன்முறை குற்ற சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
ஐஸ்கட்டியால் உறைந்த ஆற்றின் மேலே ஓடிவிளையாடும் வாலிபர்கள்
குளிரால் முடங்கிய பிரிட்டன் -ஆறுகள் ஏரிகள் ஐஸ் கட்டியால் உறைந்துள்ள வினோதம், 23 வருடங்களின் பின் ஏற்படட அதிக குளிர்
பிரிட்டனில் 1995 ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிக உறைபனி குளிர்இவ்வருடம் ஏற்பட்டுள்ளது ,இதனை அடுத்து மிக முக்கிய
கால்வாய்கள் மற்றும் ஏரிகள் என்பன ஐஸ்கட்டியால் உறைந்து காணப்படுகின்றன ,
அவ்வாறான பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் வாலிபர்கள் உள்ளிட்ட மக்கள் உலாவிய காட்சிகள் வெளியாகியுள்ளன
குப்பை வாளிக்குள் பெண்மணி
இவ்வேளை குப்பை போடும் வாளிக்குள் நிறைந்திருந்த மழை நீர் உறைபணியாக உள்ளது அதற்குள் பெண்மணி ஒருவர் குளிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன
தேம்ஸ் நதி
உலகில் மிக முக்கிய நதியாகவும் , ஐரோப்பாவின் தொடர்பு பட்டு பாய்ந்து வரும் தேம்ஸ் நதியும் உறைபணியில் சிக்கியுள்ளது
லண்டன் நகரை அழகு படுத்துவதும் ,அதிக உல்லாச பயணிகள் பார்வை இட்டு செல்வதும் இந்த தேம்ஸ் நதியாகும் ,
அவ்வாறன நதியே இப்பொழுது அசைவுகள் ஏதுமின்றி ஐஸ் கட்டியால் உறைந்து கிடக்கிறது
லண்டனில் இயங்கி வந்த கஞ்சா கபே – சுற்றி வளைத்த பொலிஸ்
இரகசியமாக இயங்கி வந்த காஞ்சா கபே -உள்ளே புகுந்து ஆட்டம் காட்டிய காவல்துறை – ஆயுதங்களுடன் சிக்கிய பெரும் புள்ளி
பிரிட்டனில் இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த Whitechapel பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த கபே ஒன்று
,இருபத்தி ஆறுக்கு மேற்பட்ட காவல்துறையினரால் திடீரென சுற்றிவளைக்க பட்டது
கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது கஞ்சா போதைவஸ்து
விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்ய பட்டார்
அங்கு வருகை தந்த நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை இடம் பெற்றுள்ளது
இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 1,052 பேர் மரணம்
இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 1,052 பேர் மரணம்
இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்
மட்டும் 1,052 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 12,364 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
அதேபோல அமெரிக்காவில் 2,589 பேர் பலியாகியும் சுமார் 80,195 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
குளிர்காலம் ஆரம்பிக்க பட்டுள்ளதால் நோயின் தொற்று அதிகரிக்க
கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது
சீனாவுக்கு ஆயுத ரகசியங்களை விற்ற 200 லண்டன் அக்கடாமிகள் – விசாரணைகள் ஆரம்பம்
சீனாவுக்கு ஆயுத ரகசியங்களை விற்ற 200 லண்டன் அக்கடாமிகள் – விசாரணைகள் ஆரம்பம்
பிரிட்டனில் இருந்து இயங்கும் இருநூறுக்கு மேற்பட்ட ரீ சேர்ச் அக்கடாமிகள்
பிரிட்டனில் கண்டுபிடிக்க பட்ட புதியவகை , ஆயுத இரகசியங்களை சீனாவுக்கு விற்றுள்ளதும் ,
அதன் வழியாகசீனா அதே மாதிரியான ஆயுதங்களை தயாரித்துள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு வழங்க பட்ட தகவல்களின் அடிப்படையில் விமானங்கள் ,ஏவுகணைகள் ,கப்பல்கள்
உள்ளிட்ட முக்கிய தரவுகளை இந்த இருநூறு அக்கடாமிகளினால் வழங்க
பட்டுள்ளன என்ற சதேகத்தில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
பிரிட்டன் வெளியக உளவுத்துறையிடம் சிக்கிய தகவல் ஒன்றின்
அடிப் படையில் இந்த விசாரணைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
குற்றங்கள் நிரூபிக்க பட்டால்,தகவல் வழங்கியவர்களுக்கு பல்லாண்டுகள் சிறை வசம் அனுபவிக்க
படுவார்கள் என்பதும் ,குறித்த நிறுவனங்கள் மீள இயங்காத நிலை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது
இந்த தகவல் கசிவினால பிரிட்டனில் இயங்கு பல அக்கடாமிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன ,
அமெரிக்காவில் உள்ளக முக்கிய ஆராய்ச்சியாளர்களை விலைக்கு வாங்கி கொரனோ கிருமிகளை
உலக நாடுகளில் பரப்பியது போன்று ,சீனா பிரிட்டனுக்குள்ளும் நுழைந்து தனது உளவு விளையாட்டை காண்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
ஐந்து படகுகளில் லண்டனுக்குள் நுழைந்த 140அகதிகள்
ஐந்து படகுகளில் லண்டனுக்குள் நுழைந்த 140அகதிகள்
பிரான்சில் இருந்து ஆங்கில கால்வாயை கடந்து ,சட்ட விரோத குடியேற்ற வாசிகள் எழுபது பேர் சனிக்கிழகை காலை 4.30 மணியளவில் லண்டனுக்குள் உள் நுளைந்துள்ளனர்
ஐந்து படகுகளில் டோவர் பகுதிக்குள் நுழைந்த எழுபது அகதிகள் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட் படுத்த பட்டுள்ளனர்
இவ்வாறு உள் நுழைந்தவர்களில் ஆண் ,பெண்கள் உள்ளடங்கும் ,கொரனோ
வேளையில் இவ்விதம் அகதிகள் நுழைந்துள்ளதால் அவர்கள் 14 முதல் 21
நாட்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க படலம் என தெரிவிக்க பட்டுள்ளதுடன்
,அனைவருக்கும் கொரனோ சோதனை இடம்பெற்றுள்ளது
மேலும் வெள்ளிகிழமையும் இவ்வாறு நுழைந்துள்ளார் .கடந்த 24 மணித்தியாலத்தில் 140 அகதிகள் நுழைந்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன

லண்டனில் இருந்த து 208 பேரை காவி சென்ற இலங்கை விமானம்
லண்டனில் இருந்த து 208 பேரை காவி சென்ற இலங்கை விமானம்
பிரிட்டனில் தவித்து கொண்டிருந்த 208 இலங்கையரை காவிய படி இலங்கை எயார்லைங்கா விமானம் ஒன்று இலங்கை சென்றுள்ளது .
இதில் பயணித்த அனைவரும் 21 நாட்கள் தனிமை படுத்தலின் பின்னர்
அவர் தம் குடும்ப உறவுகளுடன் இணைத்து கொள்வார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
சிகிச்சை அளித்த டாக்டர்கள் பெயரை குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்
சிகிச்சை அளித்த டாக்டர்கள் பெயரை குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களது பெயரை தனது குழந்தைக்கு வைத்துள்ளார்.
சிகிச்சை அளித்த டாக்டர்கள் பெயரை குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன், கேரி சைமண்டஸ்
லண்டன்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு சமீபத்தில் லண்டன்
மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் போரிஸ் மற்றும் சைமண்ட்ஸ் என்ஹெச்எஸ் மகப்பேறு குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.
கொரோனா வைரசுடனான தனது போரின்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன்
நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் கடந்த வாரம் பணிக்குத் திரும்பினார்.
ஆண் குழந்தை பிறந்த செய்தியைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பிலிருந்தும் போரிஸ் ஜான்சன்-கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்தன.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களது பெயரை தனது குழந்தைக்கு வைத்துள்ளார்.
இதுதொடர்பாக, போரிஸ் ஜான்சன் காதலி கேரி சைமண்ட்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் தனது குழந்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ள
செய்தியில், கொரோனா பாதிப்பால், போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் இருந்தபோது தீவிர சிகிச்சை அளித்து வந்த
இரு டாக்டர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிக்கோலஸ் என்ற பெயரை சேர்த்து வில்பிரட் லேவெரி நிக்கோலஸ் ஜான்சன் என தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

பிரிட்டனில் பொலிஸ் அடாவடி -15 வயது சிறுவனை கோரமாக தாக்கும் காட்சி – video
பிரிட்டனில் பொலிஸ் அடாவடி -15 வயது சிறுவனை கோரமாக தாக்கும் காட்சி – video
பிரிட்டனில் பதின் ஐந்து வயது ஆசிய நாட்டு சிறுவன் ஒருவனை காவல்
துறையினர் கைது செய்கின்றனர் ,அப்பொழுது அவர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயல்கின்றார்
இவ்வேளை அவரை நிலத்தில் போட்டு கால் ,மற்றும் கைகளினால் சரமரியாக அந்த சிறுவன் உடல் மீது தாக்குகின்றனர்
இந்த சம்பவத்தை படம் பிடித்த நபர் ஒருவர் காட்சியை வெளியிட்ட நிலையில்
,குறித்த போலீசார் ,மனித உரிமை மீறல் ,மற்றும் பல்வேறு குற்ற சாட்டின்
கீழ் கைது செய்யப் பட்டு விசாரணைக்கு உட்படுத்த படும் நிலைக்கு சென்றுள்ளனர்
காவல் துறையினர் கைது செய்யும் பொழுது இவ்வாறு தாக்குதல் ஆகாது என்பது
,விதி, தாம் போலீசார் என்ற நிலையில் இவ்விதம் செயல் பட்ட சிலர் ,பின்னாட்களில்
இது போன்ற காணொளிகள் வெளியான நிலையில், அவர்கள் வேலை
பறி போனதுடன் ,சிறையில் வாடிய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளமை குறிப்பிட தக்கது
லண்டனில் தமிழ் குழந்தைகள் இருவர் கோரமாக வெட்டி கொலை – கொலையாளி கைது photo
லண்டனில் தமிழ் குழந்தைகள் இருவர் கோரமாக வெட்டி கொலை – கொலையாளி கைது photo
கடந்த தினமும் மாலை ஆறு மணியளவில் லண்டன் இல்போர்ட் பகுதியில் , தமிழர் கடை ஒன்றுக்குள் மேல் வசித்து வந்த தமிழ் குடும்பத்தினரின்
இரு பிள்ளைகள் கத்தியால் கோரமாக குத்தியும் ,வெட்டியும் படு கொலை செய்ய பட்டுள்ளனர் (ஆண் ,பெண் ,பிள்ளை )
,பலமான கத்தி குத்து தாக்குதலில் ஒருவயது மற்றும் மூன்று வயது குழந்தைகளே பலியாகியுள்ளனர்,மேலும் கணவர் படுகாயமடைந்துளளார்
இவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளார் .மனைவியை கத்தி முனையில் கொலையாளி வதை செய்துளளார் ,அவ்வேளை இவர் சத்தமிட்டு உதவி கோரி கத்தியுள்ளார் ,அதன் பின்னர் வெளியில் பயந்து ஓடிவிட்டார்
அவ்வேளை இந்த கத்தி குத்து ,வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,2014 ஆண்டு திருமணம் செய்த இவர்கள் சிறப்பான வாழ்வில் இந்த துயர நிகழ்வு இடம்பெற்றுள்ளது
முன் விரோதம் காரணமாக திட்டமிடப் பட்டு இந்த படுகொலை கணவரால் அரங்கேற்ற பட்டு உள்ளது ,நாப்பது வயதுடைய கணவரே கொலையாளியாக உள்ளார்
மேலும் அந்த தமிழர் கடையில் இருந்த cct v கமரா ரெக்கோடர் காவல்துறையினரால் எடுத்து செல்ல பட்டுள்ளது ,(கீழே படத்தை பார்க்க )
கடந்த 24 மணித்தியாலம் அந்த கடையில் நடந்த அத்தனை நிகழ்வும் அதில் இருக்கும், அது தவிர அதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளும் அதில் பதிய பெற்றிருக்கும் ,
கணவர் ஏன் இந்த படுகொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது கேள்வியை எழுப்பியுள்ளது ,குடும்ப சண்டை காரணமாக இது இடம்பெற்றுள்ளதாம்
கணவரின் கொலை வெறி செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தகியுள்ளது


பிரிட்டனில் கொரனோவால் அதிகம் பலியாகும் சோமாலிய மக்கள்
பிரிட்டனில் கொரனோவால் அதிகம் பலியாகும் சோமாலிய மக்கள்
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சோமாலிய நாட்டை
சேர்ந்தவர்கள் அதிகம் பலியாகி வருவதாக அந்த மக்கள் சபை தெரிவித்துள்ளது
நாள் தோறும் மருத்துவ மனையில் தமது மக்கள் இறப்பதை அறிவித்த வண்ணமே உள்ளனர்
பிரிட்டனில் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி அதிகமாக தமது மக்களே பலியாகி வருகின்றனர் எனவும் இதுவரை
அறுநூறு பேர் வரை பலியாகியுள்ளதாக மாறுபட்ட தகவல்களும் சமூக வலைத்தளங்களில்வெளியாகி வருகின்றன
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அதிகம் பலியாகி வருகின்றனர், குறிப்பாக நியூ யார்க் பகுதியில் இந்த கறுப்பின மக்கள் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது
அகதிகளாக வந்து இந்த நாடுகளில் தங்கி உள்ள இந்த மக்கள் இறப்பு விகிதம் பல சந்தேகங்களையும் கிளப்பி வருகிறது ,

லண்டன் Ilford. இல் இரு சிறார்கள் வெட்டி கொலை
லண்டன் Ilford. இல் இரு சிறார்கள் வெட்டி கொலை
கிழக்கு லண்டன் பகுதியான Ilford. பகுதியில் ஒரு வயது மற்றும் மூன்று
வயது சிறுவர்கள் கத்தியால் ,குத்தி ,வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளனர்
இரத்த வெள்ளத்தில் மிதந்த இரு சிசுக்கள் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
இதுவரை இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
இந்த கொலையினை புரிந்த நாப்பது வயது நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளனர்
குற்ற பதடுப்பு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர் ,
கொரனோ பேராபத்து வேளையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது











