லண்டனில்கடைகள் சுற்றிவளைப்பு 920 பேர் கைது
Posted in உலக செய்திகள்

லண்டனில்கடைகள் சுற்றிவளைப்பு 920 பேர் கைது

லண்டனில்கடைகள் சுற்றிவளைப்பு 920 பேர் கைது

லண்டனில்கடைகள் சுற்றிவளைப்பு 920 பேர் கைது ஆயிரக்கணக்கான முடிதிருத்தும் கடைகள் மற்றும் வேப் கடைகள் சோதனையில் 900 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரிட்டனின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த நடவடிக்கை

பிரிட்டனின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த நடவடிக்கை, 920 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்வதற்கும், சட்டவிரோத வருமானத்தில் £10.7 மில்லியன் பறிமுதல் செய்வதற்கும் வழிவகுத்தது.

தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) முன்னோடியில்லாத வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தது, இதில்

அக்டோபர் முழுவதும் 2,734 நிறுவனங்கள் சோதனை செய்யப்பட்டன.

நாடு தழுவிய தேடலில் குறிவைக்கப்பட்ட வணிகங்களில் மினி-மார்ட்கள், வேப் சில்லறை விற்பனையாளர்கள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் டேக்அவே உணவகங்கள் ஆகியவை அடங்கும்.

மெட்ரோபொலிட்டன் காவல்துறை, போலீஸ் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் போலீஸ் சேவை உட்பட, யுனைடெட் கிங்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு காவல்துறையும் ஆபரேஷன் மெஷினைஸில் பங்கேற்றன.

காவல்துறையும் ஆபரேஷன் மெஷினைஸில் பங்கேற்றன

3.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சட்டவிரோத புகையிலை ஏய்ப்பு, 500,000 பவுண்டுகளுக்கு மேல் ரொக்கம் மற்றும் 70 கிலோகிராம் கஞ்சா உள்ளிட்ட ஏராளமான கடத்தல் பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேற்கு யார்க்ஷயர் அதிகாரிகள் ஒரு நகைக் கடை மூலம் செயல்படும் ஒரு முதலீட்டு மோசடி திட்டத்தை கண்டுபிடித்தனர், £2 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.

இந்தக் கொள்ளையில் தங்கக் கட்டிகள், £500,000 மதிப்புள்ள மோதிரம் மற்றும் முப்பது ஆடம்பர கைக்கடிகாரங்கள் அடங்கும், அவற்றில் படேக் பிலிப் கடிகாரங்கள் அடங்கும்.

£1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அடமானம் வைக்கப்படாத சொத்தை வைத்திருக்கும் ஒரு வழக்கறிஞர், பணமோசடி நடவடிக்கையுடன்

தொடர்புடைய £800,000 பணம் செலுத்துவதற்கு அங்கீகரித்ததாகக் கூறப்படுகிறது.

பிளைமவுத்தில் உள்ள வர்த்தக தரநிலை அதிகாரிகள், குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் போலி லாபுபு பொம்மைகளைக்

கண்டுபிடித்தனர், பிரிக்கக்கூடிய கண்கள் கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன.

பிரிக்ஸ்டனில் உள்ள பெருநகர காவல்துறை குழுக்கள் ஒரே தெருவில் வேப்ஸ், மொபைல் போன் பாகங்கள் மற்றும் வாசனை திரவியங்களை விற்கும் ஆறு கடைகளை ஒரே நேரத்தில் சோதனை செய்தன.

தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏராளமான போலி ஆப்பிள் தயாரிப்புகளை அடையாளம் கண்டுள்ளனர், அனைத்தும் அவற்றின் பேக்கேஜிங்கில் ஒரே மாதிரியான வரிசை எண்களைக் கொண்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் டான் ஜார்விஸ் கூறினார்: “குற்றவாளிகள் இந்த போலி கடைகளை கடுமையான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், பணமோசடி மற்றும்

சட்டவிரோத வேலைக்கான முன்னோடிகளாகப் பயன்படுத்துகின்றனர், இது பிரிட்டிஷ் ஹை ஸ்ட்ரீட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

ஜோதிட நிலையம் சுற்றிவளைப்பு இந்தியர்கள் மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஜோதிட நிலையம் சுற்றிவளைப்பு இந்தியர்கள் மூவர் கைது

ஜோதிட நிலையம் சுற்றிவளைப்பு இந்தியர்கள் மூவர் கைது

ஜோதிட நிலையம் சுற்றிவளைப்பு இந்தியர்கள் மூவர் கைது ,சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த இந்தியர்கள் நடத்திய சட்டவிரோத ஜோதிட நிலையம்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று சுற்றி வளைக்கப்பட்டதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை தும்பளை வீதியில் இந்த சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயங்கி வந்துள்ளது.

இந் நிலையத்தினை இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த மூவரே நடாத்தி வந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக தும்பளை பிரிதேச கிராம அலுவர் பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து, நேற்று பருத்தித்துறை நகர பிதா நேரில் சென்று அவதானித்து மேற்படி இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனாலும், தொடர்ந்தும் ஜோதிட நிலையம் இயங்கி வந்ததை அடுத்து நகரபிதா வின்சன் டீ டக்ளஸ் போல் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்தியப்

பிரஜைகளன் கடவுச் சீட்டை பரிசோதனை செய்த போது , அவர்கள் மூவரும் சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் வந்துள்ளமை தெரியவத்தது.

இதனையடுத்து மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்

மேற்குகரையில் சுற்றிவளைப்பு பலர் கைது
Posted in உலக செய்திகள்

சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது

சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது

சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது ,மேற்கு கரையில் சுற்றி வளைப்பு நூற்றுக்கு மேற்பட்ட ஒரு கைது என அறிவித்துள்ளது .

பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் இராணுவம் திடீரென நடத்திய சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் பொழுது, நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது .

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்ட அடிப்படையில் பயங்கரவாத ராணுவத்தை வைத்து பயங்கரத்தை செய்து கொண்டிருக்கின்ற, இஸ்ரேல் ராணுவத்தின் இனப்படுகொலைகள் உலக அரங்கில் மக்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி வருகிறது.

பலஸ்தீனம் மேற்கு கரையில் இஸ்ரேல் அடாவடி

அவர் நிலையில் பலஸ்தீனம் மேற்கு கரையில் அப்பாவி , பொதுமக்களை சுற்றி வளைத்து மந்தைகள் போல கட்டி இழுத்துச் செல்கின்ற ,காட்சிகள் ஒளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

தொடருமிந்த அராஜக நடவடிக்கையும் ஆக்கிரமிப்பு அடக்குமுறை, இனவாதமாக அப்பாவி பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வருகின்றனர்.

இந்த மண்ணில் சுதந்திரமாக எம்மால் வாழ முடியவில்லை எதிரி ராணுவம் எம்மலை அடக்கி ஆளுகிறான் என அந்த மக்கள் அழுகின்றனர் .

இவ்வாறு தொடர்ந்து பரந்து விருந்து செல்கின்ற இந்த நடவடிக்கைகள் உடைத்து எறியப்பட வேண்டிய ,ஒரு காலத்தினுடைய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.

அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்

ஆகவேதான் இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டு அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டுமென பாலஸ்தீனம் மண்ணின், மேற்கு கரை மக்கள் தமது கருத்துக்களை மன்றாடுதருடன் கேட்டு வருகிறார்கள்.

24 ஆயிரத்தை கடந்த சுற்றிவளைப்புக்கள்
Posted in இலங்கை செய்திகள்

24 ஆயிரத்தை கடந்த சுற்றிவளைப்புக்கள்

24 ஆயிரத்தை கடந்த சுற்றிவளைப்புக்கள்

24 ஆயிரத்தை கடந்த சுற்றிவளைப்புக்கள் ,2024 ஆம் ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகார சபை 24,761 சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்துள்ளது.

இதன்போது 23,953 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் முடிக்கப்பட்ட வழக்குகளுக்கு நீதவான் நீதிமன்றங்கங்களால் 207 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தாக்கல் செய்யப்படாத சோதனைகளுக்கு உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்புக்களின் போது, ​​அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களின் விபரங்களைக் குறிப்பிடாதது, தகவல்களை மாற்றுவது, குறிக்கப்பட்ட

விலையை மாற்றுவது மற்றும் வேறு விலையைக் குறிப்பிடுவது, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை, மின் சாதனங்களுக்கு உத்தரவாதக் காலத்தை வழங்காதது, இருப்புகளை மறைத்து வைத்திருத்தல், உரிய

பற்றுச்சீட்டு வழங்காமை உள்ளிட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தை மீறிய வர்த்தகர்கள் தொடர்பாக இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன

அத்துடன் உணவு, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் பொருட்களை உள்ளடக்கி இந்த சோதனைகள் நடத்தப்பட்டதுடன், இதில் அதிக

எண்ணிக்கையிலான சோதனைகள் அரிசி (3114 சோதனைகள்), பாண் (1624 சோதனைகள்) மற்றும் பிஸ்கட் (1086 சோதனைகள்) ஆகியன தொடர்பில் நடத்தப்பட்டன.

இந்த சோதனைகளின் போது, ​​பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள், மருந்து கடைகள், தைத்த ஆடைகள் வர்த்தக நிலையங்கள், கையடக்க தொலைபேசி

மற்றும் மின் சாதன கடைகள், கட்டுமானப் பொருட்கள் கடைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் கடைகள் ஆகியவை பிரதானமாக சோதனை செய்யப்பட்டன.

இந்த சோதனைகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டதுடன், அதிக சோதனைகளை நடத்திய மாவட்டங்களில் முக்கியமாக குருநாகல்,

கம்பஹா, கண்டி, கேகாலை, புத்தளம், அனுராதபுரம், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை ஆகியவை அடங்கியுள்ளதுடன், அந்த ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆண்டு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் குருநாகல் மாவட்டத்திலேயே கடந்த ஆண்டில் 2282 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டில் நுகர்வோர் அளித்த முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கவும், நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களை சோதனை செய்யவும், உளவாளிகள் மூலம் வர்த்தகர்கள் செய்த தவறுகளைக் கண்டறிந்து, சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி தயாரித்த இடம் சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி தயாரித்த இடம் சுற்றிவளைப்பு

துப்பாக்கி தயாரித்த இடம் சுற்றிவளைப்பு

துப்பாக்கி தயாரித்த இடம் சுற்றிவளைப்பு ,மாத்தறையில் உள்ள சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையமொன்றில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பின் போது 63 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அகங்கமவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட

இரண்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சோதனையின் போது, ​​உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 9 மிமீ துப்பாக்கியின் ஐந்து தோட்டாக்கள், ஒரு வெல்டிங் இயந்திரம் மற்றும் பல்வேறு உபகரணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இரண்டு துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது, அதன் பின்னர் மாத்தறை

பொலிஸார் கொள்வனவு செய்தவர்களை கண்டுபிடித்து ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47 மற்றும் 54 வயதுடைய அஹங்கம பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு ,எரிபொருள் சமையல் எரிவாயு மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதனை பெற்றுக் கொள்கின்ற வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி செல்வதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து.

எதிர்வரும் நாட்களில் பல்வேறுபட்ட பகுதிகளில் திடீர் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அனைத்து வர்த்தக நிலையங்களையும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

மக்களுக்கான வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளவும் அவர்களது சிறந்த முறையில் மலிந்த விலையில் பொருட்களை வாங்கி அவர்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை ஏற்படுத்தப்படும் என காவல்துறையினர் இப்படி அறிவித்திருக்கின்றனர்.

ஒரே பொருள் நாளுக்கு நாள் பல்வேறுபட்ட விளைகளில் விற்பனையாகி வருகின்றது .

இதனால் கடை முதலாளிகள் கொள்ளை லாபங்களை பெற்று கொளுத்துபருத்து வாழ்கின்றனர் என்ற குற்றச்சாட்டு மக்களினால் முன்வைக்கப்பட்ட வருகின்றது.

அதனை அடுத்து தற்பொழுது மக்கள் நலன் கருதி போலீசார் விசேட சுற்றி வலைப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் ,

வரும் நாட்களில் பல்வேறுபட்ட மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசினால் அறிவிக்கப்பட்ட விளைவுகளுக்கு ஏற்றவாறு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் ,

அதற்கு மேலாக விற்பனை செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதுடன் அந்த கடை முதலாளிகள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல்

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல்

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல் ,இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகள் தொடர்பான சோதனை நடவடிக்கை உள்ளாக்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

யுத்திய நடவடிக்கை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட சமூக விரோத செயல்பாட்டுகளை கலையும் நடவடிக்கையான இந்த யுக்தி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனை எடுத்து தற்பொழுது கொழும்பினுடைய பல பகுதிகள் மீதும் தாங்கள் இந்த தேர்தல்களை விரைவாக மேற்கொள்ள உள்ளதாகவும் ,

அதன் பொழுது பல பட்டாலியன் படைகளை இணைத்து இந்த தேடுதல் முடுக்கிவிடப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் .

சமூக விரோத செயல்பாடுகள் தடுக்கும் பொலிஸ்

இந்த தேர்தலின் ஊடாகவே சமூக விரோத செயல்பாடுகள் போதை வஸ்துக்கள் மற்றும் வேற இதர சமூக சட்டவிரவாத செயல்கள் தடுப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்த முடியும் என காவல்துறையினர் நம்பிக்கை விடுத்துள்ளனர் .

மேற்கொள்ளும் இந்த யுக்திய நடவடிக்கை ஊடாக இலங்கையில் பாரிய கைது பாரிய குற்ற செயல்களும் தடுக்கப்பட்டு இருந்தன.

அதனை அடுத்து இந்த யுக்தியை நடவடிக்கைகள் யுக்தியின் ஊடாகவே பாரிய அளிப்பு நடவடிக்கை மேற்கொண்டு நாட்டை சரியான முறையில் வழிகாட்டி செல்வதற்கு இந்த தேர்தல்கள் உகந்த முறையில் உதவும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

அதனை அடுத்து இலங்கையினுடைய தலைநகர் பாதுகாப்பான நகரமாக உல்லாச பயணிகளுக்கு காண்பதற்கான நடவடிக்கை ஒன்றாக இந்த தேர்தல் நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளதாக தெரிவித்துள்ளனர் .

போலீசார் விடுத்துள்ள இந்த அதிரடி அறிவிப்பை அடுத்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற தேச விரோத கும்பல்கள் இப்போது ஓடி பதுங்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர் .

இந்த தேச விரோத கும்பலினால் போத வஸ்துக்கள் கடத்தல்கள் படுகொலைகள் காணாமல் ஆக்கப்படுத்தல் மற்றும் சொல்லென்னா துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது .

அதனை அடுத்த இந்த தேச விரோத கும்பல்களை இலக்கு வைத்து தற்பொழுது போலீசார் புதிய படையணியின் ஊடாக களமுனையில் தாக்குதல் வீரியங்களை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் இந்த தேச விரோத சமூக விரோத கும்பல் இருப்பதாக போலீசார் குற்றம் சுமத்தி வருகின்ற நிலையிலே ,

இந்த யுக்திய போலீஸ் விசேட சுற்றிவழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

எதிர்வரும் நாட்களில் இலங்கை தலைநகர் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் தேடுதல் நடைபெற போவதற்கான முன்னறிவிப்பாக இது காணப்படுகின்றது.

யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு

யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு

யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு ,யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டி வந்த நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்

பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்டது .

இந்த சுற்றிவளைப்பில் நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும், உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர் ஒருவரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன

இதேவேளை அந்த இடத்தில் இருந்து விலங்குகளை இறைச்சியாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருடப்படும் மாடுகள் இங்கே வைத்து வெட்டி இறைச்சி விற்பனைக்கு எடுத்து செல்ல பட்டதாக தெரிவிக்க படுகிறது .

இதனை அடுத்து யாழ்ப்பாண போலீசார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர் .

இஸ்ரேல் விமானம் சுற்றிவளைப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் சுற்றிவளைப்பு

இஸ்ரேல் விமானம் சுற்றிவளைப்பு

இஸ்ரேல் பயணிகள் விமானம் பலஸ்தீன போராட்ட காரர்களினால்
சுற்றிவளைப்பு ,விமான நிலையத்தில் பதட்டம்

வீடியோ

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

போதைப் பொருள் விருந்து சுற்றிவளைப்பு

போதைப் பொருள் விருந்து சுற்றிவளைப்பு

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப் பொருள் விருந்து நடைபெற்ற இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் 12 பேரை கைது செய்துள்ளனர்.

அவிசாவளை களனி ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த போதை பொருள் விருந்து நேற்றிரவு நடைபெற்றதுள்ளது.

முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போதைப் பொருள் விருந்து ஹோட்டல் ஒன்றில் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹோட்டலில் சுற்றிவளைப்பை மேற்கொள்ள காட்டு வழியாக பொலிஸார் சென்ற போது வீதியில் ஆங்காங்கே மரக்கட்டைகள் போடப்பட்டு தடைகள்

ஏற்படுத்தப்பட்டிருந்தாகவும் பொலிஸாரின் வருகையை கண்காணிக்க சில நபர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் விருந்து சுற்றிவளைப்பு

ஹோட்டலுக்குள் நடப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாதபடி வாழை இலைகளை பயன்படுத்தி மறைக்கப்பட்டிருந்தன.

ஒருவரிடம் தலா 3,500 ரூபாவை அறவிட்டு இந்த போதைப் பொருள் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் கஹதுடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஏனையவர்கள் பலாங்கொடை, பன்னிப்பிட்டிய மற்றும் அவிசாவளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களுடன் 11 கஞ்சா சுருட்டுக்கள், 20 கிராம் ஐஸ் போதைப் பொருள், 24 டின் பியர்கள், 13 பியர் போத்தல்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட 20 மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

No posts found.
தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு
Posted in உலக செய்திகள்

தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு

தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு

தெற்கு லண்டன் Streatham High Road பகுதியில் மிக இரகசியமாக வளர்த்து வரப்பட்ட கஞ்சா
பண்ணை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .

போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதி சுற்றி வளைக்க பட்டது .

திருட்டு மின்சாரம் பெற்று,இந்த கஞ்சா செடிகள் வளர்க்க பட்டு வந்துள்ளன .

தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு

அதனால் என்னவோ குறித்த பகுதி நீண்ட நாட்களாக ,காவல்துறையினர்
கண்ணில் தென் படவில்லை .ஆனால் இப்பொழுது வசமாக சிக்கியது கஞ்சா கும்பல் .

குறித்த பகுதியானது முன்னர் காவல்நிலையமாக பயன்படுத்த பட்ட பகுதிக்கு, அருகில் அமைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இங்கு மீட்க பட்ட கஞ்சாவின் பெறுமதி லட்சம் பவுண்டுகளுக்கு மேல் என எதிர்பார்க்க படுகிறது .

கைதானவர்கள் காவல்துறையினர் விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .

இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு பலர் கைது

கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு பலர் கைது

கிளிநொச்சி பகுதியில் பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

இவர்கள் யாவரும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியமை ,திருட்டில் ஈடுபட்டமை ,மக்களை அச்சுறுத்தியமை ,வீடுகளை உடைத்தமை போன்ற குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்ட நிலையில் கைது செய்ய பட்டுள்ளனர் ,

சுருங்க கூறின் ஆறு ரவுடிகள் கைது செய்ய பட்டுள்ளனர் .

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு இளம் பெண்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு இளம் பெண்கள் கைது

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு இளம் பெண்கள் கைது

இலங்கை கல்கிசை பகுதியில் ஆயூள் வேத மருத்துவ நிலையம் என்ற பெயரில், இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று, காவல்துறையினரால் சுற்றி வளைக்க பட்டது .

இதன் போது அங்கு விபச்சாரத்தில் ல் ஈடுபட்டு கொண்டிருந்த இளம் பெண்கள் ,உள்ளிட்ட மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர் .

காவல் துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ள பட்டுள்ளது என்கிறது பொலிஸ் .

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டன் பேர்மிங்கத்தில் பாட்டி – 150 பேரை மடக்கிய பொலிஸ் – video

பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் உள்ள நைட் கிளப் ஒண்றில் மிக இரகசியமாக நடத்த பட்ட பாட்டி ஒன்று பொலிஸாரின் திடீர் முற்றுகைக்கு உள்ளானது

காட்டி கொடுத்த உளவு விமானம்

காவல்துறையினரின் ஆள் இல்ல டிரோன் ரக உளவு விமானம் அங்கு அதிக நபர்கள் கூடி நிற்பதை காட்டி கொடுத்தது ,உடனே உஷாரான போலீசார் ஆயுதங்களுடன் சுற்றிவளைத்தனர் ,

பொலிசார் மீது தாக்குதல்

இவர்களை கண்ணுற்ற குழுவினர் பெலிட் ,மற்றும் பியர் போத்தல்கள் கொண்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் சில போலீசார் படுகாயமடைந்தனர்

தண்டம்

நிகழ்கால கொரனோ தடையை மீறி இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளது

,மேலும் இதனை ஒழுங்கு செய்தவருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள் மற்றும் ,அந்த நைட்கிளப் உரிமையாளருக்கும் பத்து ஆயிரம் வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

உள்ளே யாருக்கும் தெரியாது மறைந்திருப்பதாக நினைப்பவர்களே யாக்கிறதை ,தலைக்கு மேலே ஆள் இல்லா உளவு விமானம் பறக்கிறது

அயல் வீடு சென்றவர் சிக்கினார்

அயல் வீடு ஒன்றுக்கு சென்றவரையும் மேற்படி ரக விமானம் காட்டி கொடுத்துள்ளது ,உளவு விமானத்தை கண்டு ஓட்டம் பிடித்துள்ளார்

எனினும் அவரை பின்தொடர்ந்த போலீசார் அவருக்கும் தண்டம் வழங்கியுள்ளனர்

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டன் கடலில் போதைவஸ்து படகை துரத்தி பிடித்த கடற்படை – 2.6 தொன் மீட்பு

    பிரிட்டன் கடற்பரப்பில் சந்தேகித்திற்கு இடமான முறையில் சென்று கொண்டிருந்த மீன் பிடி படகு ஒன்றை கடற்படையினர் வழிமறித்தனர் ,அப்போது அந்த படகு அவர்கள் முற்றுகையில்

    இருந்து தப்பிக்க முயற்சித்தது ,சந்தேகம் அடைந்த அவர்கள் அதனை துரத்தி பிடித்தனர் ,

    சுற்றைவளைக்க பட்ட படகில் இருந்து சுமார் 11 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான போதைவஸ்து மீட்க பட்டது

    கடந்த பத்து மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,6 தொன்

    எடையுள்ள போதைவஸ்து மீட்க பட்டுள்ளதாக ராயல் கடற்படை அறிவித்துள்ளது

    இந்த ஆண்டில் சிக்கிய மிக பெரும் போதைவஸ்து கடத்தல் இதுவாக பதிவு பெற்றுள்ளது