Posted in Uncategorized

பறிபோன உக்கிரேன் பாம்பு தீவு – புகுந்த ரசிய இராணுவம்

பறிபோன உக்கிரேன் பாம்பு தீவு – புகுந்த ரசிய இராணுவம்

உக்கிரேன் கட்டு பாட்டில் உள்ள பாம்பு தீவு ரசிய கடல் படையின் கட்டு பாட்டுக்குள்

சென்றுள்ளதாக ரசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

ரசியாவின் மிதக்கும் கப்பல்கள் மேற்கொண்ட தாக்குதலில் அங்கு தரித்து நின்ற

உக்கிரேன் இராணுவத்தால் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் அங்கிருந்து அவர்கள்


பின்வாங்கி சென்ற நிலையில் அவை ரசிய இராணுவத்தின் கட்டு பாட்டில் சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

    ரசியா தாக்குதல் ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் நேட்டோ

    ரசியா தாக்குதல் ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் நேட்டோ

    ரசியா இராணுவம் உக்கிரேனுக்குள் நுழைந்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் மீது ரசியா

    போரை தொடுக்கலாம் என்ற நிலையில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் குவிக்க பட்டு வருகின்றன

    இவ்விதம் அமெரிக்கா தனது இராணுவத்தின் விசேட பிரிவு ஒன்றை ரொமேனியா,போலந்து உள்ளிட்ட பகுதியில் குவித்து வருகிறது

    தாம் ஐரோப்பா மீது தாக்குதலை தொடுக்கவில்லை என புட்டீன் அறிவித்திருந்த

    நிலையில் நேட்டோ தனது படைகளை குவித்து வருகின்றமை மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது

      Posted in உலக செய்திகள்

      வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

      வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

      ரசியா இராணுவம் உக்கிரேன் தலைநகர் வடக்கு பகுதி வழியாக ஆட்டிலறி மற்றும் ஏவுகணைகள் வசம் நுழைந்துள்ளது

      இந்த இராணுவம் நுழைத்துள்ளதால் அடுத்து வரும் நாட்களுக்குள் தலைநகர் ரசியா படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர்வு கூற படுகிது

      இராணுவ தாக்குதல்

      தாம் இராணுவத்தின் இலக்குகளை மட்டும் குறிவைத்து தாக்கி வருவதாகவும் ,அப்பாவி

      மக்கள் மீது அல்ல என ரசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து வருகிறது ,இதனையே புட்டீன் அவர்களும் தெரிவித்துள்ளார்

      அகதிகள்

      இராணுவம் மேற்கொள்ளும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் ஓசையினால் சிறார் உள்ளிட்ட மக்கள் பீதியடைந்து வருகின்றனர் ,மேலு ஒரு லட்சத்திற்கு அதிகமான

      மக்கள் உக்கிரேன் எல்லையோர நாடுகளான போலந்து ,ரோமானிய போன்ற நாடுகளுக்கு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்

      விமானங்கள் இரத்து

      இந்த தாக்குதல்கள் வெடித்துள்ளதால் ,மக்கள் பயணிகள் விமானங்கள் யாவும் உக்கிரேன் மேலாக பறப்பதற்கு தடை விதிக்க பட்டுள்ளது

      வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

      இதனால் வான்வழி பயணங்கள் முடக்க பட்டுள்ளன

      குளிர் நிலை

      ஆளை கொள்ளும் சினோ பொழிந்து வருவதால் ,மக்கள் பதுங்கு குழிக்குள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது ,சிறார் உள்ளிட்டவர்கள் பதுங்கு குழிகளுக்குள் வசித்த வண்ணம் உள்ளனர்

      பெரும் சிரமத்தின் மத்தியில் அந்த மக்கள் அங்கும் கண்ணீருடன் வசித்த வண்ணம்

      உள்ளனர் ,மேலும் ரயில்வே நிலையங்களில் ,நில கீழ் சுரங்க வழியிலும் மக்கள் தமது இருப்பிடங்களாக மாற்றி வசித்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன

      கண்டனங்கள்

      ரசியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலதும் கண்டித்துள்ளன ,தற்போது ஜெர்மனி மற்றும்

      பெல்ஜியம் என்பனவும் கண்டித்துள்ளதும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடியுள்ள பொழுதும் தீர்வு ஏதும் எட்டப்படாத நிலை காண படுகிறது

      உக்கிரேன் மாதான போர் உலா ஒழுங்கு வீதியில் பெயரம் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது

      ரஷியா தனது இலக்கு நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது ,வரும் நாட்களில் புதிய அத்தியாயம் எழுத படும் என எதிர் பார்க்கலாம்

        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

        தாய்வானுக்குள் நுளைந்து மிரட்டி சென்ற 8 சீனா போர் விமானங்கள்

        தாய்வான் நட்டு வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சீனாவின் எட்டு போர் விமானங்கள் மிரட்டி சென்றுள்ளன- அதிகரித்துள்ள போர் பதட்டம்

        சீனா அத்துமீறல்

        ,தாய்வான் தனது நாட்டி ஒரு பகுதி எனசீனா தொடர்ந்து கூறி வரும் நிலையில் ,இரு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகல் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

        இராணுவ நடவடிக்கை

        சீனா எவ்வேளையும் இராணுவ படையெடுப்பை நடத்த கூடும் என்ற எதிர் பார்ப்பு வலுத்து வரும் நிலையில் சீனாவின் இந்த வான்வழி அத்துமீறல் நுழைவு இடம்பெற்றுள்ளது

        ஒரே தாடையில் எட்டு விமானங்கள் திடீரென நுழைந்தமை ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,

        அமெரிக்கா ஏவுகணைகள்

        சீனாவின் இந்த அத்துமீறல் நடவடிக்கைக்கு அமெரிக்கா விழுந்தடித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

        ,அமெரிக்காவின் முக்கிய ஏவுகணைகள் இங்கே குவிக்க பட்டுள்ள நிலையில் சீனா கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது

        அதன் வெளிப்பாடே இந்த அத்துமீறல் நுழைவு மிரட்டல் என நம்ப படுகிறது

        Posted in Uncategorized

        ஜப்பான் கடலுக்குள் நுழந்த சீனா போர் கப்பல்கள்

        ஜப்பான் நாட்டு செங்கு தீவு பகுதிக்குள் சீனாவின் இரண்டு மிகக்கும் போர் கப்பல்கல் நுழைந்து சென்றுள்ளன ,

        சீனா நுழைவு

        இந்த சீனாவின் அத்துமீறல்நுழைவை அடுத்து சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளது

        போர் பதட்டம்

        சீனாவின் இந்த அத்துமீறல்நடவடிகை நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது ,

        ஜப்பானின் சில தீவு கூட்டங்கள் தமது என்றே சீனா தொடர்ந்து கூறி வருகிறது ,அவ்விதமான சர்ச்சைக்குரிய பகுதிக்குள்ளே இந்த ஊடுருவல் இடம்பெற்றுள்ளது

        எச்சரிக்கை

        நாம் எப்போதும் எங்கேயும் நுழைவோம் என்பதைஇந்த நடவடிக்கை மூலம் ஜப்பானுக்கு சீனா கூறியுள்ளதை அவதானிக்க முடிகிறது

        Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

        ஈரான்,ரசியா,சீனா கூட்டு போர் ஒத்திகை – அடங்குமா அமெரிக்கா ,இஸ்ரேல்

        ஈரான் மீது தொடர் வலிந்து தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,முக்கிய தளபதிகள் ,மற்றும் முக்கிய அணு உற்பத்தி மூலைகளையும் கூட அது கொலை செய்து வருகிறது ,

        இஸ்ரேல் படுகொலை

        தமது நாட்டுக்குள் புகுந்து தமது முக்கியமானவர்களை இஸ்ரேல் படுகொலை புரிந்து வருவது ஈரானை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது

        இதற்கு பதிலடி வழங்க வேண்டும் என்ற நிலையில் ஈரான் துடிக்கிறது ,அதற்கு அமைவாக இஸ்ரேலை சுற்றி பெரும்

        வலைப் பின்னலை உருவாக்கி வருகிறது ,இதனை நன்கறிந்த இஸ்ரேல் அவர்கள் முந்திட முன்னர் தாம் தாக்குதலை தொடுத்துவிட வேண்டும் என எண்ணுகிறது

        போர் ஒத்திகை

        தொடரும் பதட்டங்கள் மத்தியில் ஈரான்,சீனா,ரஷியா இணைந்து இந்தியா ஓசன் பகுதியில் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,

        மேலதிக படைகள் மற்றும் கப்பல்கள் ,விமானங்களை ரசியா,ஈரான்,அனுப்பியுள்ளனர்

        இதனால் மீளவும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,கொடிய நோயினால் மக்கள் மரணித்த வண்ணம் இருக்க வல்லரசுகளின்

        கொலை வெறி தாக்குதல்களும் ,பழிவாங்கும் படலமும் ,போர்வெறியும் இவ் வேளையும் தொடரத்தான் செய்கிறது

        வெல்ல போவது யார் ..?

        இந்த போர் ஒத்திகை மூலம் இஸ்ரேல் ,அமெரிக்கா அடங்குமா ..? இஸ்ரேல் வலிந்து தாக்குதல்கள் நிறுத்த படுமா ..? இதில் வெல்ல போவது யார் ..?கேள்வியோடே நகர்கிறது போர் பதட்டம் .

        Posted in உலக செய்திகள்

        மத்திய கிழக்கில் போர் பதட்டம் – எகிறிய ஒயில் விலை

        போர் பதட்டம்- உலக சந்தையில் எகிறியது ஒயில் விலை -வியாபாரமாகும் போர் ,கதறும் அப்பாவி மக்கள்,முற்றுகையில் சிக்கிய உலகம்

        வியாபார போர்

        மத்திய கிழக்கு நாட்டில் கவுதிய இராணுவம் மற்றும் கிளர்ச்சி படைகள், பல் நாட்டு இராணுவ நெருக்கடிகள் அச்சறுத்தல்

        காரணமாக, ஓயிலின் விலை பரல் ஒன்றுக்கு 63,09ஆக அதிகரித்து காணப்பட்டது ,இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்த விலையே உச்சம் தொட்டுள்ளது

        வியாபார போர்

        போர் பதட்டத்தை ஏற்படுத்தி அதன் ஊடக பல பில்லியன் டாலர்களில் எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் பணத்தை

        சம்பாதித்து கொடுக்கின்றன ,இந்த பதட்டத்தை ஏற்படுத்துவதில் முதல் கில்லாடி உலக சண்டியர் அமெரிக்கா தான்

        ஈரான் புதிய ஏவுகணை சோதனை -கொதிக்கும் இஸ்ரேல்

        திருமணத்திற்கு முன் பெண்கள் செய்யும் அந்த விடயம்

        வெளித் தோற்றத்திற்கு மக்கள் நலன் உதவி என பேச பட்டாலும் ,உள்ளகத்தே இந்த பொருளாதார தனி நலன் சார்ந்த நிலையிலேயே அமெரிக்கா கணக்கிட்டு நகர்ந்து செல்கிறது

        பாதிக்கும் அப்பாவி மக்கள்

        இந்த வியாரிகள் நடத்தும் போரால் , அப்பாவி மக்கள் முதுகின் மேலே விலைவாசிகள் கட்டி விட படுகின்றன ,மறுபுறத்தே போர்

        இனவெறி என்ற வாடையை கிளறி விட்டு அதில் பல்லு குத்தி மனக்கும் நிலையில் இந்த வல்லாதிக்க பேரினவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்

        அதன் சுழற்சியின் முற்றுகை வடிவமே இந்த வள சுரண்டல் ஆக உருமாற்றம் பெற்றுள்ளன

        Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

        இஸ்ரேல் தாக்குதல் -வெடித்து சிதறிய ஈரான்,சிரியா ஏவுகணை முகாம்கள்

        ஈரானை இலக்குவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் – இராணுவ முகாம்கள் தகர்த்து அழிப்பு ,வெடித்து சிதறிய ஏவுகணைகள் ,ஆயுத வண்டிகள்

        தாக்குதல்

        சிரியா நாட்டில் தளம் அமைத்து அந்த நாட்டின் அரச இராணுவத்திற்கு நேரடியாக உதவி புரிந்து வரும் ஈரான் இராணுவ

        தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது

        அவ்வாறு தலைநகரை அண்மித்த பகுதியில் இயங்கி வந்த மிக பெரும் இராணுவ முகமக்கள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

        சிரியா இராணுவத்தின் வான் காப்பு இராணுவத்தினர் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய பொழுதும் ,அதன் இலக்கில்

        இருந்து தவறிய ஏவுகணைகள் குறித்த சில முகாம்கள் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளன ,இதன் போது அங்கு பெரும் வெடி சத்தங்கள்

        கேட்டதாவும் இதனால ஈரான்,சிரியா இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது

        சிரியா இராணுவம் மறுப்பு

        இஸ்ரேல் இராணுவத்தினர் ஏவிய ஏவுகணைகளில் அதிகமானவை சுட்டு வீழ்த்த பட்டுள்ளன, எனினும் ஒரு சில தவறி வீழ்ந்து

        வெடித்துள்ளன ,எனினும் இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என சொல்வதெல்லாம் உண்மை என்ற நிலையில் சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

        இரகசிய ஏவுகணை கையளிப்பு

        சுமார் பதின்மூவாயிரம் ஏவுகணைகளை ரசியாவிடம் இருந்து சிரியா வாங்கி குவிந்திருந்த நிலையிலும் ,அதே சம அளவான

        ஏவுகணைகளை ஈரான் வழங்கி இருந்த நிலையிலும் இஸ்ரல் ஏவுகணைகள் அச்சுறுத்தல் குறித்த இரண்டு நாட்டு இராணுவத்திற்கும் ஏற்பட்டுள்ளது

        ஹிஸ்புல்லா

        ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா மற்றும் ஈரானிய ஆதரவு கிளர்ச்சி படைகளிற்கும் ஈரான் ஏவுகணைகளை தாரளமாக

        வழங்கியுள்ளது ,ஹிஸ்புல்லாவிடம் சுமார் ஒரு லட்சம் ஏவுகணைகளை ஈரான் வழங்கியுள்ளது ,

        இஸ்ரேல் மீது ஈரான் உருவாக்கிய மூன்று நாட்டு கிளர்ச்சி படைகள் மற்றும் இராணுவ அமைப்புக்கள் சமவேளை தாக்குதல்களை

        தொடுக்கலாம் என்ற நிலையில் அவர்கள் முந்திட முன்னர் இஸ்ரேல் இந்த தொடர் வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது

        இதன் மூலம் விரிவு படுத்தப்படவுள்ள பெரும் தாக்குதல்களை சிதறடித்து அதில் இருந்து தமது நாட்டை தற்காத்து கொள்ளலாம்

        என இஸ்ரேல் கணக்கு போட்டுள்ளது ,இது எதுவரை சாதகமாக அமையும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

        Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி

        பிரிட்டனுக்குள் நுழைந்து தப்பி சென்ற – ரசியா போர் கப்பல்

        பிரிட்டனுக்குள் நுழைந்து தப்பி சென்ற – ரசியா போர் கப்பல்

        ரஷியா நாட்டின் போர் கப்பல் ஒன்று பிரான்ஸ் கடலை கடந்து லண்டன் ஆங்கில கால்வாய் பகுதியில் நுழைந்து தப்பி

        சென்றுள்ளதாக பிரிட்டன் ராயல் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

        ரசியாவின் இந்த கடற்படை நடமாட்டத்தை கண்டு பிடித்த நிலையில்

        தற்பொழுது ஆங்கில கால்வாயை சுற்றி ரோந்து ,மற்றும் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

          ஆண்டு தோறும் பிரிட்டன் கடல் பகுதிக்குள் ரசியாவின் நீர்மூழ்கிகள் ,

          விமானங்கள் கப்பல்கள் நுழைந்து உளவு பார்த்து செல்வது வழமையான ஒன்றாக உள்ளது

          போர் ஒன்று ஆரம்பிக்க பட்டால் , அவ்வேளை எவ்வாறு இந்த நாடுகளை

          தாக்கிட வேண்டும் எனவும் ,அவ்வாறான கால பகுதியில் எந்த கடல் பகுதி தமக்கு

          சாதகமான களத்தை ஏற்படுத்தும் என்பதை இப்பொழுது முதலே ரசியா படைகள் திரட்டிய வண்ணம் உள்ளன .

          ஐரோப்பிய கடல் பகுதிகள் எங்கும் ரசியாவின் ஊடுருவல் அதிகரித்து

          செல்வதனை ,அண்மைய கால ,அத்துமீறல் செயல் பாடுகள் மூலம் அவதானிக்க முடிகிறது ,இந்த சம்பவம் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

          பிரிட்டனுக்குள் நுழைந்து
          பிரிட்டனுக்குள் நுழைந்து
              Posted in உலக செய்திகள்

              எண்ணெய் டாங்கர் மூலம் குண்டு தாக்குதல் 46 பேர் பலி

              சிரியாவில் எண்ணெய் டாங்கர் மூலம் குண்டு தாக்குதல் 46 பேர் பலி

              சிரியாவில் எரிபொருள் டாங்கர் மூலம் நடத்த பட்ட குண்டு தாக்குதலில்

              சிக்கி 46 பேர் பலியாகினர் ,11 சிறார்கள் உள்ளிட்ட ஐம்பது பேர் படு காயமடைந்துள்ளனர்

              துருக்கிய ஆதரவு படைகள் ,கட்டு பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள

              ,குருதீஸ் போராளிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது .

              கடந்த ஆண்டு மட்டும் குருதீஸ் போராளிகள் பத்தாயிரம் பேர் பலியாகி

              இருந்தனர் .ஐ எஸ் அமைப்புக்கு எதிராக நீண்ட நெடுங்காலம் நீடித்த போரிலே அவர்கள் பலியாகினர் .

              விடுதலை புலிகள் போல பலத்த இழப்பை சந்தித்த பொழுதும் அவர்களினால்

              தொடர்ந்து தமது தாயக கோட்பாட்டை நிலை நிறுத்த முடியவிலை என்பது குறிப்பிட தக்கது

              சிரியாவில் எண்ணெய்
              சிரியாவில் எண்ணெய்
                Posted in உளவு செய்திகள்

                ரஷியா விமானங்களை கண்டால் உடனே சுட்டு வீழ்த்துங்கள் – அமெரிக்கா உத்தரவு

                ரஷியா விமானங்களை கண்டால் உடனே சுட்டு வீழ்த்துங்கள் – அமெரிக்கா உத்தரவு

                அமெரிக்காவின் விமானங்களை ரசியாவின் மிகையொலி விமானங்கள் பின் தொடர்ந்து மிரட்டி சென்றன .


                கடந்த சில வாரங்களில் மூன்று முறை இவ் விதமான அத்து மீறல் செயல் பாடுகள் வானில் இடம் பெற்றுள்ளன.

                  இதனை அடுத்து தற்போது அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் இவ்வாறு ரசியா விமானங்கள் பின்

                  தொடர்ந்தால் எச்சரிக்கை விடுக்காது உடனே சுட்டு வீழ்த்துங்கள் என அதிரடி கட்டளையை பிறப்பித்துள்ளது

                  இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

                  இது போலவே ஈரானின் வேக தாக்குதல் படகுகளை கண்ணுற்றால் உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்

                  இவ்வாறான கருத்து பகிர்வுகளினால் நாடுகளுக்கு இடையில் அமைதியின்றி ,பதட்டம் அதிகரித்துள்ளது ,தற்பொழுது அமெரிக்காவை விட ரசியாவே ஆயுத பலத்தில் மேம்பட்டு உள்ளது ,

                  ரசியாவின் நவீன ரக ஆயுதங்களை அமெரிக்காவின் ரேடார்களுக்குள் சிக்காதவை ,ஏவுகணைகள் மூலம் கூட இவற்றை சுட்டு வீழ்த்த முடியாதவை

                    அவ்வாறான பலமுடன் இருக்கும் ரஸ்சியாவுடன் அமெரிக்கா மோதிட முனைவது பெரும் இடரை ஏற்படுத்தும் என அடித்து கூறலாம் .

                    இவ்வாறான போர் பதட்டத்தை உருவாக்கி அதன் ஊடாக தமது ஆயுதங்களை விற்பதில் அமெரிக்கா கில்லாடி தான் ,வாய் மிரட்டலில் காலத்தை ஒட்டி செல்கிறது அமெரிக்கா ,

                    இதனை வட கொரியாவுக்கு நடந்த நிகழ்வுகளை வைத்து பார்த்தே திடமாக அமெரிக்காவின் சித்து விளையாட்டுக்களை கணித்து கொள்ள முடியும் .

                    தானே முதல்வன் என ஆடிய அமெரிக்கா வாலை சுருட்டி கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது ,நம்பர் வன் என ஆடியவரின் பல்லை

                      பிடுங்கிட சில நாடுகள் துடித்த வண்ணம் உள்ளது என்பதை அண்மைய கால ஆயுத சோதனைகள் திடமாக இடித்துரைக்கின்றன

                      ரஷியா விமானங்களை
                      ரஷியா விமானங்களை

                      .

                      Posted in உளவு செய்திகள்

                      சிரியாவுக்குள் நுழைந்த 2,710 துருக்கிய இராணுவ வாகனங்கள் -பதட்டமாகும் களமுனை

                      சிரியாவுக்குள் நுழைந்த 2,710 துருக்கிய இராணுவ வாகனங்கள் -பதட்டமாகும் களமுனை

                      துருக்கிய இராணுவம் தமது நாட்டின் எல்லை கடந்து சிரியாவின் Iskenderun பகுதிக்குள்


                      நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்துடன் 2,710 இராணுவ வண்டிகளுடன் நுழைந்துள்ளது .

                      ஏவுகணை டாங்கிகள் , கவச வாகனங்கள் ,பீரங்கிகள் சகிதம் துருக்கிய படைகள் தொடர்ந்து சிரியாவின் பகுதிகள் நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளன

                      எவ் வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

                      அவ்வப் போது ஏவுகணை ,பீரங்கி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                      இந்த படை நகர்வுக்கு சிரியா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

                      சிரியாவுக்குள் நுழைந்த
                      சிரியாவுக்குள் நுழைந்த
                        Posted in உளவு செய்திகள்

                        துருக்கி மீது போர் தொடுக்க -சிரியாவில் குவிக்க படும் ரஷியா இராணுவம்

                        துருக்கி மீது போர் தொடுக்க -சிரியாவில் குவிக்க படும் ரஷியா இராணுவம்

                        சிரியாவின் எல்லை கடந்து துருக்கிய படைகள் பெருமளவு ஆயுத தள பாடங்களுடன் குவிக்க பட்டுள்ளன .

                        இட்லி பகுதியில் எப்பொழுதும் போர் வெடிக்கலாம் என்ற பதட்டம் தொடர்கிறது ,.

                        ரசியா மற்றும் சிரியா படைகளது இராணுவ விமானங்கள் மற்றும் கனரக ஆட்டி

                        லொறிகள் ,ஏவுகணைகள்,துருப்புக்கள் என்பன இட்லியை அண்மித்த பகுதியில் பெருமளவு குவிக்க பட்டுள்ளன

                        துருக்கியின் அத்து மீறிய நுழைவுக்கு பெருமடியாக இந்த பெரும் போரை தொடுக்க சிரியா ரசியா படைகள் தயாராகி வருகின்றன

                        வரும் மணித்தியாலங்களில் எவ்வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கலாம்

                        எனவும் இது துருக்கிய படைகளிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் என அடித்து கூறலாம்

                        வலிந்து தாக்குதலை மேற்கொள்ளும் முகமாக துருக்கிய இராணுவத்தினர்

                        படை குவிப்பை நடத்தின , அதன் விளைவே இந்த போர் வெடித்து பறக்க போகிறது என கூறலாம்

                        பொல்லு கொடுத்து அடி வாங்கிய கதையாக துருக்கியின் நிலை வரும் காலங்களில் மாற போகிறது ,

                        துருக்கிக்கு அமெரிக்கா ,இஸ்ரேல் ஆதரவாக உள்ளன ,சிரியாவுக்கு ரஷியா ,ஈரான் ஆதரவாக உள்ளன

                        அப்படி என்றால் உலக போர் இங்கு ஆரம்பிக்க பட போகிறது அல்லது

                        அதற்கான ஓத்திகை இங்கே பார்க்க படுகிறது என்பதை கணித்து கொள்ளலாம்

                        துருக்கி மீது போர்
                        துருக்கி மீது போர்
                        Posted in பிரித்தானிய செய்தி

                        பிரிட்டனுக்குள் நுழைந்து பறந்து சென்ற ரசியா போர் விமானங்கள் – அதிர்ச்சியில் லண்டன்

                        பிரிட்டனுக்குள் நுழைந்து பறந்து சென்ற ரசியா போர் விமானங்கள் – அதிர்ச்சியில் லண்டன்

                        ரசியாவின் RAF jets விமானங்களை ஆறு பிரிட்டன் ஸ்கொட்லாந்து வான் பார்ப்புக்குள் நுழைந்து பறந்து சென்றுள்ளன ,
                        இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது

                        பிரிட்டன் வான் பரப்புக்குள் அது மீறி நுழைந்த மேற்படி விமானங்கள் உளவு தகவலை திரட்டி சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,.

                        பிரிட்டனுக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் ,மற்றும் விமானங்கள் மூலம் ரசியா தொடர்ந்து ஊடுருவி செல்வது வழமையான ஒன்றாக மாறியுள்ளது

                        தனது கடும் அதி திருப்தியை பிரிட்டன் வெளியிட்டும் அதனை ரசியா செவிமடுப்பதாக தெரியவில்லை ,இவ்வாறு அது மீறி

                        நுழையும் ரசியாவின் திட்டம் பிரிட்டன் மீது பெரும் தாக்குதல் ஒன்று மூண்டால் அவ்வேளை என்ன செய்ய போகிறது என்பதற்கு

                        இது ஒரு எடுத்து கட்டு நடவடிக்கையாக உள்ளது என கருத படுகிறது .

                        வல்லரசு நாடுகளின் உளவு விளையாட்டில் இவை எல்லாம் சாதாரண ஒன்றாக பார்க்க முடியாது என பிரிட்டன் கருதுகிறது

                        பிரிட்டனுக்குள் நுழைந்து
                        https://www.youtube.com/watch?v=ia4XPkDKB7A
                        Posted in இலங்கை செய்திகள்

                        சவுதியில் உள்ள இலங்கையர் பாதுகாப்பாக இருக்க அவசர எச்சரிக்கை

                        சவுதியில் உள்ள இலங்கையர் பாதுகாப்பாக இருக்க அவசர எச்சரிக்கை

                        சவூதி நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை இலங்கை நாடு விடுத்துள்ளது .

                        பொது இடங்களில் தேவையற்று செல்ல வேண்டாம் எனவும் தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது .


                        மத்தியகிழக்கு பகுதியில் ஈரானால் ,அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தை அடுத்து இந்த அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

                        எனவே சவுதியில் உள்ள தமிழர்களே இதனை கவனத்தில் எடுத்து உங்கள் உயிர்களை பாதுகாத்து கொள்ளுங்கள்