ஈரானைத் தண்டியுங்கள் சவூதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம்
Posted in உலக செய்திகள்

ஈரானைத் தண்டியுங்கள் சவூதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம்

ஈரானைத் தண்டியுங்கள் சவூதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம்

ஈரானைத் தண்டியுங்கள் சவூதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் ஈரானைத் தண்டியுங்கள்’: அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு ஆதரவளிப்பதற்கு சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் நெருங்கி வருகின்றன

இந்த மாதத் தொடக்கத்தில், அமெரிக்கப் போர்

இந்த மாதத் தொடக்கத்தில், அமெரிக்கப் போர் துறையின் மூத்த அதிகாரியான எல்பிரிட்ஜ் கோல்பி, சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர்

காலித் பின் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடினார். இவர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சகோதரரும், முதன்மை ஆலோசகரும் ஆவார்.

வளைகுடாவில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வந்தன, மேலும் அமெரிக்காவிற்கு விரிவாக்கப்பட்ட அணுகல்

மற்றும் வான்வழிப் பயண அனுமதிகள் தேவைப்பட்டன. மேற்கு சவூதி அரேபியாவில் உள்ள தாயிஃப் நகரில் அமைந்துள்ள கிங் ஃபஹத் விமானத்

தளத்தை அமெரிக்கர்களுக்காகத் திறக்க சவூதி அரேபியா ஒப்பு

தளத்தை அமெரிக்கர்களுக்காகத் திறக்க சவூதி அரேபியா ஒப்புக்கொண்டதாக, இவ்விவகாரத்தை நன்கு அறிந்த பல அமெரிக்க மற்றும் மேற்கத்திய அதிகாரிகள் மிடில் ஈஸ்ட் ஐயிடம் தெரிவித்தனர்.

தொடர்ச்சியான ஈரானியத் தாக்குதல்களுக்கு உள்ளான பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தை விட, ஈரானிய ஷாஹத் ஆளில்லா விமானங்களிலிருந்து

இந்தத் தளம் தொலைவில் இருப்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறம்படக் கட்டுப்பாட்டில்

கொண்டுவந்ததிலிருந்து ஒரு முக்கிய தளவாட மையமாக மாறியுள்ள செங்கடல் துறைமுகமான ஜித்தாவுக்கு அருகாமையில் தாயிஃப் அமைந்துள்ளது.

தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் MEE-யிடம் கூறுகையில், டிரம்ப் நிர்வாகம் ஈரானுக்கு எதிராக ஒரு நீண்டகாலப்

போருக்குத் தயாராகி வந்தால், அமெரிக்க ஆயுதப் படைகளைத் தக்கவைப்பதில் ஜெட்டா முக்கியப் பங்கு வகிக்கக்கூடும்.

கிழக்கு ஆசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான அமெரிக்கத் தரைப்படை வீரர்கள் அப்பகுதிக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

சவூதி அரேபியா தனது தளங்களுக்கான அணுகலை விரிவுபடுத்தும் முடிவு, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு அந்த இராச்சியமும்

மற்றும் சில வளைகுடா நாடுகளும் பதிலளிக்கும் விதத்தில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் கூறுகின்றனர்.

சவூதி கவுதி மோதல் நான்கு சவூதி படைகள் மரணம்
Posted in உலக செய்திகள்

சவூதி கவுதி மோதல் நான்கு சவூதி படைகள் மரணம்

சவூதி கவுதி மோதல் நான்கு சவூதி படைகள் மரணம்

சவுதியை படைகளை குறிவைத்து கவுதிய ஏமன் படைகள் நடத்திய தாக்குதலில் ,நான்கு சவூதி இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .

ஏமன் சவூதி அரேபியா நாட்டின் எல்லையில் நடத்த பட்ட ,உளவு விமான தாக்குதலில் இந்த உயிர்பலி இடம்பெற்றுள்ளது .

சவூதி கவுதி மோதல் நான்கு சவூதி படைகள் மரணம்

பாரிய வலிந்து தாக்குதலை சவூதி அரேபியா ஏமன் கவுதிய படைகள் மீது ,
நடத்தி வந்த நிலையில் ,அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதல்களை நடத்தியது .

அதிலே இந்த இழப்பு சவூதி இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

more video click here

சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த பெண்
Posted in இலங்கை செய்திகள்

சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த பெண்

சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த பெண்

பொருளாதாரச் சிக்கல் காரணமாக, பணமின்றி தவிக்கும் பல பெண்கள் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்கின்றனர்.

இவ்வாறு சவூதி அரேபியாவிற்கு வீட்டுச் சேவைக்காகச் சென்ற இந்நாட்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உணவுக்கு பதிலாக ஐந்து இரும்பு கொங்கிரீட் ஆணிகள் மற்றும் துணி உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் இரும்பு ஸ்பிரிங் ஒன்றை விழுங்கி, வயிற்றில் ஆணியுடன் இலங்கைக்கு வந்துள்ள சம்பவமொன்று மாத்தளை எல்கடுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

சவூதி அரேபியாவின் தைட் பிரதேசத்தில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த, மாத்தளை எல்கடுவ தேயிலைத் தோட்டத்தில் வசித்து வந்த எம்.எஸ் தியாகா செல்வி என்ற 21 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு ஆணிகளை விழுங்கியுள்ளார்.

சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த பெண்

சவூதி வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரின் நேரடித் தலையீட்டினால் சில தினங்களுக்கு முன்னர் தூதரகத்தின் ஊடாக குறித்த பெண்ணை இலங்கைக்கு அழைத்துவர முடிந்தது.

தனது மகளுக்கு நடந்த கொடுமை தொடர்பில் அவரது தாயார் தியாகு குமாரியும் வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் ஊடாக வீட்டு வேலைக்காக சென்றதாகவும், அங்கு உணவின்றி கடும் அழுத்தத்திற்கு உள்ளான போது, ​​தனது தாயாரிடம் தொலைபேசியில் தெரிவித்ததை தொடர்ந்து அது குறித்து வௌிநாட்டு முகவர் நிறுவனத்திற்கு தெரிவித்ததால் கோபமடைந்த வீட்டு உரிமையாளர்களான மகளும் தாயும் சேர்ந்து தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், 5 கொங்கிரீட் ஆணிகளை விழுங்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

உணவுக்கு பதிலாக இரும்பு ஆணியை விழுங்க மறுத்ததால் தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், தாங்க முடியாமல் ஆணியை விழுங்கியதாகவும் கூறியுள்ளார்.

பின்னர், துணிகளை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் வெள்ளை இரும்பினால் செய்யப்பட்ட ஸ்பிரிங்கினை விழுங்கியதாகவும், அது தனது தொண்டையில் சிக்கியதாகவும் அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

பல நாட்களுக்குப் பிறகு வயிறு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வரத் தொடங்கியபோது, ​​வீட்டு உரிமையாளர்கள் உள்ளூர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக செல்வி கூறினார்.

எனினும், அங்கிருந்த வைத்தியர்கள் பெண்ணின் வயிற்றில் ஐந்து இரும்பு ஆணிகளைப் பார்த்ததாகவும், அதற்கு சிகிச்சை அளிக்க முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த பெண்

பின்னர் அந்நாட்டு பொலிசார் வந்து அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உள்ளூர் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் முன்வந்து பொலிஸாரின் ஊடாக தூதரக அலுவலகத்திற்கு அறிவித்து அவரை சவூதி வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வந்து கண்டி வைத்தியசாலையில் பரிசோதித்த போது தனது வயிற்றில் மேலும் இரண்டு ஆணிகள் இருப்பது எக்ஸ்ரேயில் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவர்களால் ஒரு ஆணி எடுக்கப்பட்டதாகவும், மற்றொரு ஆணி தனது வயிற்றின் பின்புறத்தில் இருப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் உரிய முறையில் பதிலளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளுடன் வத்தேகம பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்ததாக தாய் குறிப்பிட்டுள்ளார்.

கணவனை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழும் தனது மகள், குழந்தையின் எதிர்காலத்திற்காக வெளிநாடு சென்றதாக கண்ணீருடன் தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் வேறு எவருக்கும் நடக்க இடமளிக்க வேண்டாம் எனவும் அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in உலக செய்திகள்

சவுதி கோர தாக்குதல் ஏமனில் 3 பேர் மரணம் பலர் காயம்

சவுதி கோர தாக்குதல் ஏமனில் 3 பேர் மரணம் பலர் காயம்

சவூதி நாட்டு இராணுவம் ஏமன் பகுதியில் நடத்திய தாக்குதல்களில் சிக்கி மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் பத்தொன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏமன் சவுதிக்கு இடையில் தொடர்ந்து உக்கிர போர் வெடித்த வண்ணம் உள்ளது.

ஈரான் ஆதரவு இராணுவம் சவூதி நாட்டு மற்றும் இராணுவத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் .

இந்த தாக்குதல்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

    Posted in உளவு செய்திகள்

    ஏமன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவூதி

    ஏமன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவூதி

    ஏமன் நாட்டுக்கு பெட்ரோல் ஏற்றி வந்து கொண்டிருந்த கப்பல் ஒன்றை சவூதி நாட்டு இராணுவத்தினரால் சிறை பிடிக்க பட்டுள்ளது.

    ஏமன் மற்றும் சவுதிக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களின் உச்சமாக 31,000 தொன் பெட்ரோல் ஏற்றி வந்த எண்ணெய் கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது.

    சவுதியினால் இந்த கப்பலுடன் ஐந்து கப்பல்கள் இதுவரை சிறை பிடிக்க பட்டுள்ளன .

    இந்த ஏமன் நாட்டு எண்ணெய் கப்பல் சிறை பிடிக்க பட்டதற்கு பதிலடியாக
    சவூதி மீது ஏமன் புரட்சி படைகள் தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

      Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

      சவுதியில் 81 பேர் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேற்றம்

      .

      சவுதியில் 81 பேர் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேற்றம்

      சவுதியில் , கொலை ,கொள்ளை தீவிரவாதம் உள்ளிட்ட குற்ற சத்துக்களில் குற்றம் சுமத்த பட்ட 81 பேருக்கு ஒரேநாளில் மரண தண்டனை விதிக்க பட்டுள்ளது

      மக்கள் பார்க்க அனைவரும் கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளனர்

      மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

        Posted in உலக செய்திகள்

        Yemen நாட்டின் மீது -சவுதி விமானங்கள் 48 தடவை அகோர தாக்குதல்

        Yemen நாட்டின் மீது -சவுதி விமானங்கள் 48 தடவை அகோர தாக்குதல்

        எமன் நாட்டின் நான்குகிற்கு மேற்பட்ட பகுதியில் சவுதி நாட்டு போர் விமானங்கள் அகோர வான் தாக்குதலை நடத்தியுள்ளன .

        சுமார் இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 48 வான் தாக்குதலை நடத்தியுள்ளனர் ,

        இதில் ஏற்பட்ட உயிரிழப்பு
        தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

        எண்ணெய் கிடங்குகள் மீதும் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளதாகவும்

        மாறுபட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன ,ஏமான் நாட்டின் படைகளிற்கு ஈரான் நாடு பின்புல உதவிகளை வழங்கி வருகின்றமை தெரிந்ததே

        Yemen நாட்டின் மீது
        Yemen நாட்டின் மீது
        Posted in இலங்கை செய்திகள்

        சவுதியில் உள்ள இலங்கையர் பாதுகாப்பாக இருக்க அவசர எச்சரிக்கை

        சவுதியில் உள்ள இலங்கையர் பாதுகாப்பாக இருக்க அவசர எச்சரிக்கை

        சவூதி நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை இலங்கை நாடு விடுத்துள்ளது .

        பொது இடங்களில் தேவையற்று செல்ல வேண்டாம் எனவும் தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது .


        மத்தியகிழக்கு பகுதியில் ஈரானால் ,அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தை அடுத்து இந்த அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

        எனவே சவுதியில் உள்ள தமிழர்களே இதனை கவனத்தில் எடுத்து உங்கள் உயிர்களை பாதுகாத்து கொள்ளுங்கள்

        Posted in முக்கிய செய்திகள்

        துபாய், சவூதி , , இஸ்ரேல்,உள்ளிட்ட நான்கு நாடுகளை தாக்குவோம் -ஈரான்

        துபாய், சவூதி , , இஸ்ரேல்,உள்ளிட்ட நான்கு நாடுகளை தாக்குவோம் -ஈரான்

        ஈரானிய இராணுவ தளபதி அமெரிக்கா பயங்கரவாத இராணுவத்தால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில் ,அவர்களுக்கு துணை நின்று உதவி புரியும் நாடுகளான

        ஹைஃபா, துபாய், சவூதி , , இஸ்ரேல்,நாடுகளின் இலக்குகள் மீது தாக்கல் நடத்துவோம் என ஈரான் புரட்சி காவல் படை அதிரடியாக அறிவித்துள்ளது .

        இதனை அடுத்து தற்பொழுது பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு

        விமான தளங்களில் இராணுவத்தினர் தங்கியுள்ள கட்டங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது .

        மேலும் இதன் தாக்குதல் எங்கெல்லாம் நடக்கும் என தெரியாத நிலையில் ,ஈரான் வான் பரப்பை அண்மித்து அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனவாம்

        தற்போது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் ,ஈரானுடன் தங்கள் பேச தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

        என்ன பேச போகின்றன ..?ஈரானுடன் ..?

        துபாய் சவூதி இஸ்ரேல்