Posted in இலங்கை செய்திகள்

முடங்கிய யாழ்ப்பாணம் – மக்கள் ஏமாற்றம்

முடங்கிய யாழ்ப்பாணம் – மக்கள் ஏமாற்றம்

அரசுக்கு எதிராக தமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் தொழில்

சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன


இவ்விதம் யாழ்ப்பாணம் தற்போது இயல்பு நிலை இழந்து முடங்கியுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை

    அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு


    அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த நீதிமன்ற தடை பிறப்பிக்க பட்டுள்ளது


    இதனால் அவர் எவ்வித போராட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாது என தெரிவிக்க படுகிறது

    இந்து சுமந்திரன் ஏற்பாட்டில் உள்ளாக ரீதியா செயல் படுத்த பட்ட நகர்வாக பார்க்க படுகிறது

    அரசியலில் இதெல்லாம் சகயமப்பா

      Posted in இலங்கை செய்திகள்

      1000 தொழில் சங்கங்கள் இணைந்து மகிந்தா ,கோட்டாவுக்கு எதிராக போராட்டம்

      1000 தொழில் சங்கங்கள் இணைந்து மகிந்தா ,கோட்டாவுக்கு எதிராக போராட்டம்

      இலங்கையில் லயம் கோட்டா மகிந்த அரசுக்கு எதிராக ஆயிரம் தொழில் சங்கங்கள்

      இணைந்து இன்று மாபெரும் போரட்டம் ஒன்றை நாடத்துகின்றன

      இந்த ஒன்றிணைந்த எதிர்ப்பினால் ஆளும் அரசு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது

      ,மக்களின் இந்த எதிர்ப்புக்கு பொறுப் பேற்று பதவி விலகிட தொடர்ந்து சகோதர்கள் மறுத்து வருகின்றமை
      குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        என்னை பதவி விலகும்படி கோட்டா கோரவில்லை – மகிந்தா

        என்னை பதவி விலகும்படி கோட்டா கோரவில்லை – மகிந்தா

        இலங்கையின் பிரதமர் மகிந்த ஜனாதிபதி லோட்டா பாயா தன்னை பதவி விலகும் படி கோரவில்லை
        என தெரிவித்துளளார்

        அவ்விதம் அவர் கோரினால் அதற்கு தான் தலை வணங்க தயராக உள்ளதாக தெரிவித்துள்ளார்

        இரு சகோதர்களையும் பதவி விலகும்படி கோரி மக்கள் போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையின் புதிய பிரதமராக கருஜெயசூரிய – பிக்குகள் நகர்வு

          இலங்கையின் புதிய பிரதமராக கருஜெயசூரிய – பிக்குகள் நகர்வு

          இலங்கையில் புதிய ஆட்சி அமைக்க பட்டு அதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய நபர் கருஜெயசூரிய


          பிரதமராக நியமிக்க பிக்குகள் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்

          இவர்களின் இந்த முடிவினை ஏற்று இவர் பதவி வகிப்பார் என எதிர் பார்க்க படுகிறது

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் ஒரு டொலர் 350 ஐ எட்டியது

            இலங்கையில் ஒரு டொலர் 350 ஐ எட்டியது

            இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக தற்போது ஒரு டாலரின்

            இலங்கை ரூபா 350 எட்டியுள்ளது


            மேலும் இது அதிகரிக்கும் என சுட்டி காட்ட பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு

              வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு

              இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது ,


              வவுனியா – குருமண்காடு, யாழ் வீதி, இறம்பைக்குளம், கோவில்குளம் பகுதியில்

              நகைகள் திருடர்கள் கத்தி முனையில்


              நகைகளை திருடி செல்வதாக தெரிவிக்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022. photo

                மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022.

                பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் ஒருமாதகாலமாக சாகும்வரை

                உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத்தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 34-வது ஆண்டுநினைவுநாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள்

                நினைவுநாளும் கடந்த 24-04-2022 ஞாயிற்றுக்கிழமையன்று மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருந்தது.


                அன்றையதினம் மாலை 6.00மணியளவில் வானமுதம் வானொலி அறிவிப்பாளர் சிறீறஞ்சன் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத்தேசியக் கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு. ரவிகிருஸ்ணா அவர்கள்

                ஏற்றிவைக்க தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு தயாநிதி அவர்கள் ஏற்றிவைத்தார்.


                தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களது திருவுருவப்படத்திற்கு செல்வி தமிழினி தவச்செல்வம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியதையடுத்து மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களது திருவுருவப்படங்களுக்கு அவர்களது உரித்துடையவர்கள், நண்பர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஈகைச்சுடர்களேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கமும், அகவணக்கமும் இடம்பெற்றது.
                நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களின் கடந்தகால செயற்பாடுகளை நினைவுமீட்டி நினைவுரையினை மருத்துவர் சதீஸ் நாகராஜா அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து அண்மையில் தாயகத்தில் அமரத்துவமடைந்த தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ்

                அவர்களின் நினைவுகளைச்சுமந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் வெளியிடப்பட்ட இரங்கல் அறிக்கையினை செயற்பாட்டாளர் திரு. ரகு அவர்கள் வாசித்தார்.


                தொடர்ந்து ஓவியர் புகழேந்தி அவர்கள் எழுதிய “நான் கண்ட தமிழீழம் முள்ளிவாய்க்காலுக்கு முன்பும் பின்பும்” என்ற நூலின் அறிமுகஉரையை

                செயற்பாட்டாளர் திரு.வசந்தன் அவர்கள் நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை மருத்துவர் சதீஸ் நாகராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்.


                தொடர்ந்து அன்னை பூபதி ஞாபகர்த்தமாக ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கிடையில் நடைபெறும் பொதுஅறிவுப்போட்டி நடைபெற்றது. பொது அறிவுப்போட்டியை பாரதிதமிழ்ப்பள்ளி வளாக முதல்வர்களில் ஒருவரான திரு

                சத்தியன் அவர்கள் நெறிப்படுத்தினார். பொதுஅறிவுப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் சேரன், சோழன், பாண்டியன் அணிகளாக பிரிந்து பங்காற்றியதில், பாண்டியன் அணியினர் வெற்றிபெற்றனர். போட்டியில் பங்கெடுத்த 3 அணிகளைச்

                சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும், மாமனிதர்களின் குடும்ப உறுப்பினர்களினால் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் பங்கெடுத்த பார்வையாளர்களுக்கிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கிய 3

                உறவுகளுக்கு, அண்மையில் வெளியிடப்பட்ட தமிழ்தேசியசெயற்பாட்டாளர் சண்முகம் சபேசனின் ”காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்” புத்தகங்கள் பரிசல்களாக

                வழங்கப்பட்டதுடன், மெல்பேர்ன் இளையோர் ஒருவர் வரைந்த பூபதி அம்மாவின் வரைபடமும், மண்டப நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

                இறுதியாக, வரயிருக்கும் சமூகநிகழ்வுகளின் அறிவிப்புகளின் பின், தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு, உறுதிமொழியுடன் இரவு 8.05மணியளவில் 2022-ம் ஆண்டிற்கான தமிழீழ நாட்டுப்பற்றாளர்நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.

                நாட்டுப்பற்றாளர் நினைவுநாள்
                  Posted in இலங்கை செய்திகள்

                  28ம் திகதி அரச எதிர்ப்பு வேலை நிறுத்தத்தில் தோட்டத்தொழிலாளர்கள் கலந்துக்கொள்ள வேண்டும்!-மனோ கணேசன்

                  28ம் திகதி அரச எதிர்ப்பு வேலை நிறுத்தத்தில் தோட்டத்தொழிலாளர்கள் கலந்துக்கொள்ள வேண்டும்!

                  • தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்பு
                    28ம் திகதி நாடு தழுவிய நடைபெறவுள்ள ராஜபக்ச அரச எதிர்ப்பு கூட்டு தொழிற்சங்க வேலை நிறுத்தத்தில் மலையக தோட்டத்தொழிலாள உடன்பிறப்புகள் முழுமையாக கலந்துக்கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.
                    தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதிதலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் கொழும்பிலும், பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன் மலையகத்திலும் நடத்திய விசேட ஊடக சந்திப்புகளில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

                  இதுபற்றி மனோ கணேசன் எம்பி கூறியுள்ளதாவது,

                  ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அனைத்து ராஜபக்ச அரசியல்வாதிகளும் தத்தம் பதவிகளை இராஜினாமா செய்து வீட்டுக்கு போக

                  வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு தழுவிய உழைக்கும் மக்கள் நடத்தும் போராட்டத்தில், மலைநாட்டு தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட உழைக்கும் மக்களும் கலந்துக்கொள்ள வேண்டும்.

                  வேறு எவரையும் விட எமக்கே இதற்கான முழு உரிமை இருக்கிறது. “கோதா-கோ-ஹோம்” என்று இன்று சொல்லப்பட்டாலும் நாம் அன்றே “கோதா-டோன்ட்-கம்” என்று சொன்னவர்கள். அதாவது, “கோதா-வீட்டுக்கு-போங்கள்” என்று இன்று

                  சொல்லப்பட்டாலும், நாம் அன்றே “கோதா-வர-வேண்டாம்” என்று சொன்னவர்கள். ஆகவே இன்று முழு நாடும் எமது கோசத்தையே எதிரொலிக்கின்றது.

                  எனவே 28ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் முழு அளவில் கலந்துக்கொண்டு அமைதியாக எமது எதிர்ப்பை

                  எடுத்துக்காட்டுமாறு தோட்டத்தொழிலாள உடன்பிறப்புகளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அழைக்கின்றோம்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் காஸ் சிலிண்டர் விலை4,860

                    இலங்கையில் காஸ் சிலிண்டர் விலை4,860

                    இலங்கையில் Litro gas ஒன்றின் விலை 4,860 ரூபாவாக விலை அதிகரிக்க பட்டுள்ளது


                    நாள் தோறும் அதிகாரித்து செல்ல படும் பொருட்களின் விலையினை அடுத்து மக்கள்
                    கொதித்து போயுள்ளனர்

                    தொடர்ந்து நாடெங்கும் போராட்டங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,

                    ஆனால் அதனை செவி மடுக்காது மகிந்தா குடும்பம் ஆட்சியில் உள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      காலி முகத்திடலில் தொடரும் ஓயாத அலைகள் – திணறும் கோட்டா

                      காலி முகத்திடலில் தொடரும் ஓயாத அலைகள் – திணறும் கோட்டா

                      இலங்கையில் தொடரும் அரசுக்கு எதிரான போராடடம் இன்று 19 தாவது நாளை

                      எட்டியுள்ள நிலையில் கோட்டா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்

                      மக்களின் பொருளாதார நெருக்கடியை தணிக்கவும் ,அவர்க்ளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து


                      விலகிடவும் மறுத்து வரும் அரசுக்கு எதிரான அவ நம்பிக்கை தீர்மானம் சபைக்கு

                      வரவுள்ள நிலையில் இடைக்கால கூட்டாட்சி அரசுக்கு தாம் தயார் என கோட்டா அறிவித்துள்ளார்

                      கட்சிகளும் ,மக்களும் இவர்களை விலகு என தொடந்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கைக்கு இத்தாலி 125 மில்லியன் கடனுதவி

                        இலங்கைக்கு இத்தாலி 125 மில்லியன் கடனுதவி

                        இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,அதனை நிவர்த்தி

                        செய்யும் அவசர உதவி கடனாக 125 மில்லியன் டலரை இத்தாலி இலங்கைக்கு வழங்கியுள்ளது

                        இவ்வாறான செயல் பாடு தற்காலத்திற்கு உதவியாக உள்ளதாக இலங்கை தெரிவித்து

                        வருகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          கத்தி முனையில் மனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவர் – இரு பெண்கள் காயம்

                          கத்தி முனையில் மனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவர் – இரு பெண்கள் காயம்

                          இலங்கை Webada in Weliweriya பகுதியில் கடலுக்கு சென்று திரும்பிய மனைவியை கத்தி

                          முனையில் கடத்திய கணவன் அவரை வெட்டி கொன்றார் ,மேலும் அவரது சகோதரி

                          ,மற்றும் நண்பி ஆகியோர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                          குறித்த சம்பவம் தொட்ரபிள் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                            Posted in இலங்கை செய்திகள்

                            ஊசலாடும் கோட்டா ஆட்சி – வரும் வாரம் ஆட்சி கவிழ்ப்பு

                            ஊசலாடும் கோட்டா ஆட்சி – வரும் வாரம் ஆட்சி கவிழ்ப்பு

                            அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை 11 அரசியல் கட்சிகள்

                            மற்றும் 42 சுயேச்சை எம்.பி.க்கள் இணைந்து இந்த வாரம் பாராளுமன்றத்தில்

                            சமர்ப்பிக்கவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

                            ஏற்கனவே 125 எம்பிக்கள் என்சிஎம்முக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

                            “இதன் விளைவாக, அரசாங்கம் NCM ஆல் தோற்கடிக்கப்பட்டால், SLPP MP ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார், மேலும் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும்.

                            வரைவு NCM SJB, JVP மற்றும் SLPP க்கு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் அவர்கள்


                            ஏற்கனவே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளனர், ”என்று அவர் கூறினார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              இந்தியாவுக்குள் அகதியாக நுழைந்த இலங்கை தமிழர்கள்

                              இந்தியாவுக்குள் அகதியாக நுழைந்த இலங்கை தமிழர்கள்

                              இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்கால பொருளாதார நெருக்கடி காரணமாக

                              இலங்கையில் இருந்து படகுமூலம் பதின் ஐந்து தமிழர்கள் இந்தியா சென்றடைந்துள்ளனர்

                              நாள் தோறும் இவ்விதம் இந்தியா செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து

                              வருகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in இலங்கை செய்திகள்

                              யாழ்ப்பாணம் பறந்த அமெரிக்கா தூதர்

                              யாழ்ப்பாணம் பறந்த அமெரிக்கா தூதர்

                              இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஐீலி சுங் யாழ்ப்பாணம் சென்று நல்லூரில்

                              தரிசனத்தை மேற்கொண்டார் ,பின்னர் மக்களை சந்தித்து கலந்து உரையாடியதாக

                              தெரிவிக்க படுகிறது


                              இவரது இந்த திடீர் பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              ஆசிரியர்கள் போராட்டம் – பாடசாலைகள் பூட்டு

                              நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஷ்கரிப்பு

                              போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

                              நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி,

                              அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்,


                              இன்று (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                சிறிலங்காவில் தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு !

                                சிறிலங்காவில் தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு !

                                சிறிலங்காவில் எவ்வகை மாற்றம் நிகழ்தாலும் தமிழர் தேசத்தின் மீதான அபகரிப்பு நீங்காது என்பதனையே மூதூர் சம்பவம் வெளிக்காட்டுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.


                                ஈழத்தமிழர்களின் பண்டைய அடையாளங்களில் ஒன்றாக திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில் உள்ள இராஜவந்தான் மலையில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்

                                அழிக்கப்பட்டு வருவதோடு பௌத்த சின்னங்களை நிறுவுவதற்கான வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

                                நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 23) தமிழ்மக்கள் மற்றும் சைவ குருமார்கள் பண்டைய வழிபாட்டு தளத்திற்கு சென்ற போது, பௌத்த பிக்கு ஒருவர் காவல்துறையினர் மற்றும்

                                புலனாய்வாளர்கள் சகதிம் அவர்களை தடுத்து நிறுத்தி அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

                                இச்சம்பவம் தொடர்பில் கருத்தினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு,

                                சிறிலங்காவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு, ஆட்சி மாற்றம், அமைச்சரவை மாற்றம், அரசியலமைப்பு மாற்றம், 21ம் திருத்தச்சட்டம் என பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

                                தமிழர் தாயக மக்களையும் தென்னிலங்கை போராட்டத்தோடு பயணிக்குமாறு அழைப்புக்கள் விடுக்கப்பட்ட போதும், தமிழ்மக்கள் மௌனமான முறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

                                இந் நிலையில் மூதூர் சம்பவமானது, பொருளாதார நெருக்கடியினால் சிக்குண்டுள்ள தென்னிலங்கை, அதில் இருந்து மீளுவதற்கு பல மாற்றங்களை முன்வைத்திருந்தாலும், அதன் அரச இயந்திரம் (கட்டமைப்பு) தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு, அபகரிப்பு ஓயாது என்பதiயே வெளிக்காட்டுகின்றது.

                                தொல்பொருள் செயலணி, வனஜீவராசிகள் இலக்கா என தனது பல்வேறு திணைக்களங்கள் ஊடாக தமிழர் தாயகத்தின் மீதான பௌத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இதற்கு துணையாக தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கின்ற இராணுவமே இருக்கின்றது.

                                பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள சிங்கள தேசம், இதற்கு முதன்மைக்
                                காரணமாக உள்ள தனது இராணுவச் செலவீனங்கள் பற்றி மூடிமறைத்து,


                                தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தை கட்டிக்காத்து, தொடர்ந்தும் தமிழர் தேசத்தின்
                                மீதான ஆக்கிரமிப்பையும், கட்டமைப்புசார் இனஅழிப்பையும் மேற்கொள்ளவே என்பது மூதூர்
                                சம்பவத்தின் ஊடாக மீண்டும் வெளிப்படுகின்றது என தெரவிக்கப்பட்டுள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

                                  கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

                                  இலங்கை வெல்லம்பிட்டிய காவல்துறை பகுதியில் இரு பேக்கரி ஊழியர்களுக்கு

                                  இடையில் இடம்பெற்ற சண்டையை அடுத்து ஒருவர் குத்தி படுகொலை செய்ய பட்டுளளார்

                                  குற்றவாளி கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார் ,பகைமை காரணமாக இந்த கொலை


                                  இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    ஜனாதிபதி செயலகத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு

                                    ஜனாதிபதி செயலகத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு

                                    இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து வீதி இறங்கி போராடி வருகின்றனர்

                                    இவர்களின் இந்த போராட்டங்களுக்கு மதிப்பளித்து பதவி விலகிட ஆளும் ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்

                                    இவ்வாறான நிலையில்மக்கள் தன்னெழுச்சி வெடித்து பறக்கும் வேளையில் ,காலிமுக திடலை சுற்றி பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

                                    அப்பகுதியில் பணி புரியும் பணியாளர்கள் வாகனங்கள் யாவும் தீவிர சோதனைக்கு உள்ளாக்க பட்ட பின்னர் அனுமதிக்க படுகின்றனர்

                                    இது மேலும் மக்களை சீற்றம் உற வைத்துள்ளது