Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஒருவர் சுட்டுக் கொலை – உருவெடுக்கும் கலாச்சாரம்
ஒருவர் சுட்டுக் கொலை – உருவெடுக்கும் கலாச்சாரம்
இலங்கை பெலியத்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு
தாக்குதலில் சிக்கி 42 வயதுடைய நபர் ஒருவர் பலியாகியுள்ளார்
ஒருவாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கி சூட்டு தாக்குதல் இதுவாக அமைய பெற்றுள்ளது
இலங்கையில் ஆயுதங்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு இருபது வருட சிறை
தண்டனை வழங்க படும் என்பது விதியாக உள்ள நிலையிலும் இவ்விதமான சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட்ட தக்கது
விடுதியில் தங்கிய பளை மாணவி -சடலமாக மீட்பு
விடுதியில் தங்கிய பளை மாணவி -சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக
மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.
உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
கலைப்பீட இரண்டாம் வருட மாணவி என தெரியவந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் சீமெந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ஆக அதிகரிப்பு
இலங்கையில் சீமெந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ஆக அதிகரிப்பு
இலங்கையில் சீமந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ளது
,தற்போது ஒரு பய் மூவாயிரம் ரூபாவுக்கு விற்க படுகிறது
நாள் தோறும் இலங்கையில் பொருள்களின் விலைகள் அதிகரிக்க பட்டு வருவதால் மக்கள் மேலும்
கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது
எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது
இலங்கை ரம்புகளை பகுதியில் எண்ணெய் பவுசருக்கு தீவைத்த இருபத்தி எட்டு வயது
நபர் ஒருவர் உளவுத்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர் தீவிர விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்
இந்தியவிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை
இந்தியவிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்கால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக
நாடுகளிடம் ஓடி ஓடி இலங்கை கடனை வாங்கி குவிகிறது
தற்போது ஐநூறு மில்லியன் டொலரினை இலங்கைக்கு இந்தியா மேலும் கடனாக வழங்க உள்ளது
இந்த டொலர் கடன் ஒயில் இறக்குமதிக்கு பயன் படுத்த படும் என இலங்கை
நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்
இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு
இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு
இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் இயங்கி வந்த
முப்பது வீதமான உணவகங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன
மேலும் இந்த தட்டுப் பாடு தொடர்ந்தால் பேக்கரி உற்பத்தியிலும் பாதிக்க படும் நிலை
ஏற்படும் என தெரிவிக்க படுகிறது
இந்த உணவகங்கள் மூடப்பட்டதால் அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக
சுட்டி காட்ட பட்டுள்ளது
இலங்கைக்கு சீனா அவசர உதவிகளை வழங்கும் – சீனா உறுதி
இலங்கைக்கு சீனா அவசர உதவிகளை வழங்கும் – சீனா உறுதி
இலங்கைக்கு கடனை அள்ளி வழங்கி மத்திய வங்கியை இலங்கை வரலாற்றில் முதன்
முதலாக கறுப்பு பட்டியலில் சீனா இணைத்தது
தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலையில் இலங்கைக்கு சீனா மேலும் உதவிகளை வழங்கும் என தெரிவித்துள்ளது
சீனாவின் இந்த உதவி திட்டம் இலங்கைக்கு மேலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை
ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும்-மனோ கணேசன்
ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும் என்ற கருத்து ஆபத்தானது
- மனோ கணேசன்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என்ற கருத்து அரங்குக்கு மெல்ல வருகிறது. இது ஆபத்தானது. கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை. அரசியலமைப்பை திருத்துகிறோம் என்ற போர்வையில், இன்றைய அரசியலமைப்பின் கீழ் இருக்கும் இந்த குறைந்தபட்ச உரிமைகள் மீது, எவரும் கை வைத்தால், அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி உயிரை கொடுத்து போராடும்.
வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு
மொத்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
அரசில் இருந்து விலகி விட்டதாக கூறும் இரத்தின தேரர் “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும்,
அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என, கட்சி தலைவர்கள் கூட்ட்டத்தில் கூறினார்.
அவரை இறுக்கமாக இடைமறித்து “எந்த அரசியலமைப்பு திருத்தம் வந்தாலும், விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைந்தபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கைவைக்க நாம் விட மாட்டோம்.” என்று நான் பதில் சொன்னேன்.
இந்த நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் கூட்டணியின் சகோதர பங்காளி கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஆகியவையும் உறுதியாக இருக்கின்றமையை அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த பிக்கு எம்பியின் இந்நிலைப்பாடு அங்கு வேறு சிலரின் மனதுகளுக்குள்ளும் ஒளிந்து இருப்பது எனக்கு தெரியும். கடந்த சில தினங்களாக நடைபெறும் கட்சி தலைவர்கள் கலந்துரையாடல்களில், இந்த கருத்து நேரடியாகவும், மறைமுகமாகவும், பல பெரும்பான்மை கட்சி அரசியல் கட்சி தலைவர்களால், பிரதிநிதிகளால் கூறப்பட்டது.
இதுபற்றிய பேச்சு, நேற்று நடந்த கட்சி தலைவர் கூட்டத்தில் மீண்டும் வந்தது. நான் மீண்டும் சொன்னேன். “விகிதாசார தேர்தல் முறைமை, மாகாணசபைகளை அகற்றித்தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்ற முடியுமென்றால்,
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டாம். 20ம் திருத்தத்தை முழுமையாக அகற்றி 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவோம். அதில் ஜனாதிபதி படுபலவீனமாகி விடுவார்.”
“அதை விடுத்து, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கை வைத்தால், அதற்கு எதிராக நான் என் உயிரை கொடுத்தாவது போராடுவேன்.” என்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான்
கூறியுள்ளேன். மேலும் இருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதை விடுத்து, மேலும் புதிய பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என சபாநாயகரிடம் நான் கூறினேன்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இதுபற்றிய தன் கருத்தை நேற்று முதல்நாள் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மிக தெளிவாக அறிவித்தார். “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டும் என நாம் சொன்னாலும்,
விகிதாசார தேர்தல் முறைமையையும், 13ம் திருத்தத்தையும் மாற்ற நாம் உடன்பட மாட்டோம். இவை தொடர்பாக எங்கள் பங்காளி கட்சிகளுக்கு நாம்
உறுதியளித்துள்ளோம்.” என்று சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பாக கூறினார். இது ஒரு தேசிய கட்சி/கூட்டணி ஒன்றின் தலைவரின் மிக முற்போக்கான நிலைப்பாடாகும்.
13ம் திருத்தம் தொடர்பில் தமக்கு அக்கறை இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் எம்பி என்னிடம் கூறியுள்ளார்.
ஆனால், விகிதாசார தேர்தல் முறைமையும், ஏதோ ஒருவகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் தொடர வேண்டுமென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் மேலும் கூறியுள்ளார்.
13ம் திருத்தம் மூலமான மாகாணசபைகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல, முழு நாட்டிலும் ஒன்பது மாகாணங்களிலும், குறிப்பாக மத்திய, மேல்,
சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் உள்ளன. ஆகவே அதுபற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் நியாயமான நிலைபாட்டை வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் புரிந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியாக கலந்துக்கொள்ளும் நண்பர் சுமந்திரன் எம்பி, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் ஆகியவை தொடர்பில் எமது நிலைப்பாடுகளுடன் உடன்படுவதாக
கூறுகிறார். ஆனால், அவரது சில கருத்துகள், “விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம்” ஆகியவற்றை தேசிய தளத்தில் தேவையற்ற சிக்கல்களில் கொண்டு போய் மாட்டி விடுமோ என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. ஆகவே இத்தகைய
தேவையற்ற முரண்பாடுகளை தவிர்த்து கொள்ளும் நோக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது இன்றைய தெளிவான நிலைப்பாடுகளை அறிவிக்க கோருகிறேன்.
வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு மொத்த தமிழ், முஸ்லிம்
கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம்.
யாழில் போலீஸ் தடுப்பில் இருந்த வாலிபனுக்கு கழுத்தில் வெட்டு
யாழில் போலீஸ் தடுப்பில் இருந்த வாலிபனுக்கு கழுத்தில் வெட்டு
யாழ்ப்பாணம் போலீஸ் பகுதியில் தடுப்பில் வைத்திருந்த வாலிபர் ஒருவர் தான்
மறைத்து வைத்திருந்த பிளேட்டினை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார்
இதனால் அவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது
முல்லையில் கோட்டாவுக்கு எதிராக போராட்டம்
முல்லையில் கோட்டாவுக்கு எதிராக போராட்டம்
இலங்கை முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆளும்
கோட்டாவுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்
நிகழ்கால பொருளாதார நெருக்கடி மற்றும் தமிழர்கள் உரிமையை மைய படுத்தி இந்த
போராட்டம் முன்னெடுக்க படுகிறது
ஒருவர் குத்தி கொலை – தொடரும் படு கொலைகள்
ஒருவர் குத்தி கொலை – தொடரும் படு கொலைகள்
இலங்கை கம்மதாகம பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறில் சிக்கி
ஒருவர் குத்தி கொலை
செய்ய பட்டுள்ளார்
கொலையாளி கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
கஞ்சா விற்ற பெண்கள் கைது
கஞ்சா விற்ற பெண்கள் கைது
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கஞ்சா மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட
இரு பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர்
மகிந்த ஆடசியின் பின்னர் இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்து
சென்றமை குறிப்பிட தக்கது
மிருசுவில் ரயில் மோதி மரணம் – மக்கள் கொதிப்பு போராட்டம் -பதுங்கிய தமிழ் எம்பி -வீடியோ
மிருசுவில் ரயில் மோதி மரணம் – மக்கள் கொதிப்பு போராட்டம் -பதுங்கிய தமிழ் எம்பி -வீடியோ
யாழ்ப்பாணம் மிருசில் அரச வைத்தியாசாலை அருகே ரயில் மோதி சிறுமி
பலியாகியும் தந்தை மற்றும் சிறுவன் ஆகியோர் மிக ஆபத்தான நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலியில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இந்த சம்பவத்துடன் இருவர் இதே இடத்தில பலி கியுள்ளனர்
குறித்த பகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் இது தொடர்பாக
எவ்வித அக்கறையும் இல்லாது வசித்து வருவதால் ,பெரும் உயிராபத்தை தடுக்க கோரி மக்கள் டயர்களை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த போரில் குதித்துள்ளனர்
தமிழ் பாராளும்னர் உறுப்பினர் தனது பகுதியில் மக்களை காக்க தவறி வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
ஒருவர் வெட்டி கொலை – எங்கே செல்கிறது இலங்கை
ஒருவர் வெட்டி கொலை – எங்கே செல்கிறது இலங்கை
இலங்கை பதுளை பகுதியில் நபர் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் இந்த கொலைக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
கொலையாளி தப்பி ஓடிய வண்ணம் உள்ளார் ,இவரை கைது செய்யும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி – வெடித்தத்த்து சர்ச்சை
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி – வெடித்தத்த்து சர்ச்சை
இலங்கையில் வாழும் மக்கள் விரும்பினால் இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம். அதனூடாக இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார
நெருக்கடிகளுக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் டுவிட்டர் பதிவிட்டுள்ளதாகவும், தென்னிந்திய
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி – வெடித்தத்த்து சர்ச்சை
பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என இலங்கைக்கான இந்திய
உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது முற்றிலும் தவறானதும், போலியான செய்தியாகும். இவ்வாறான அவதூறை ஏற்படுத்தும் செயற்பாடுகளினூடாக இரு நாடுகளுக்குமிடையே காணப்படும்
உறவுகளில் பாதிப்பு
ஏற்படாது எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் -பொலிஸ்மா அதிபர்
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.
றம்புக்கனை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ்
அதிகாரிகள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்
யாழில் விபத்து: மூவர் மரணம்
யாழில் விபத்து: மூவர் மரணம்
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் புகையிரதமும் பட்டா ரக வாகனமும் மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் என்பவரும் , அவரது இரு பிள்ளைகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணித்த புகையிரதத்துடன் , கொடிகாமம் மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையில் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது.
பட்டா ரக வாகனத்தில் பயணித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை வந்துகொண்டிருந்த குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் அலவ்வ பகுதியில் கூலர் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் கூலர் ரக வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் அலவ்வ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
கொரனோ தொற்றுக்கு உள்ளான பசில் – பராளுமன்றம் வந்தார்
கொரனோ தொற்றுக்கு உள்ளான பசில் – பராளுமன்றம் வந்தார்
இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸா
கொரனோ சோதனை செய்து கொண்ட பின்னர் பாராளுமன்றம் வருகை தந்துள்ளார் ,
இவரது வருகையை அடுத்து இவருக்கு எதிராக கோஷங்கள் பாரளுமன்றில்
வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரம்புகளையில் இராணுவம் குவிப்பு -தொடரும் பதட்டம்
ரம்புகளையில் இராணுவம் குவிப்பு -தொடரும் பதட்டம்
ரம்புகளையில் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை சிங்கள படைகள் சுட்டு கொன்றன
,அவ்வாறான அந்த பகுதியில் தற்போது சிங்கள இராணுவத்தின் விசேட இராணுவ
படைகள் குவிக்க பட்டு மக்கள் அச்சுறுத்த பட்டு வருகின்றனர்
மக்களோ அரச படைகள் மற்றும் அரசுக்கு எதிராக ஆக்கிரோஷமாக போராடி வருகின்றனர் ,
இலங்கையில் கொண்டனர் சரக்கு வரி 65 வீதத்தால் அதிகரிப்பு
இலங்கையில் கொண்டனர் சரக்கு வரி 65 வீதத்தால் அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொண்டேனர்
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பிலான வரி அறுபத்தி ஐந்து வீதம் இன்று
நடைமுறைக்கும் வரும் நிலையில் அதிகரிக்க பட்டுள்ளது
இந்த சேவை வரி காரணமாக பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
பொருள்களின் விலைகளும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ,
மீளவும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது







