Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 23 பேர் சுட்டு கொலை

இலங்கையில் 23 பேர் சுட்டு கொலை

இலங்கையில் கடந்த இறுமாதங்களில் மட்டும் 23 பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .

இலங்கையில் சட்டவிரோத ஆயுத பாவனைகள் தடுக்க பட்டுள்ள பொழுதும் இவ்வாறு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இந்த துப்பாககி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவதான குற்ற சட்டு மக்கள் மத்தியில் முன் வைக்க படுகிறது.

மிகவும் துணிகர சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இதுவரை இந்த ஆயுத தரிகள் கைது செய்யப்படாது உள்ளமை குறிப்பிட தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை வரும் கோட்டபாயவுக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் முடிவு

    இலங்கை வரும் கோட்டபாயவுக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் முடிவு

    இலங்கையில் மக்கள் புரட்சி காரணமாக நாட்டை விட்டு ஓடிய கேட்டபாயாவை கைது செய்ய கோரி
    மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    எதிர் வரும் வாரம் இலங்கை வரும் கோட்டபாயவுக்கு எதிராக மக்கள் போரட்டம் மீளவும் பெரிதாக இடம் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    ராஜபாக்ஸ குடும்பம் கைதுசெய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த படவேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.

    ஆனால் அதனை இதுவரை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்திடவில்லை.

    ரணில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் மீளவும் வெடித்து பறக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

      காஸ் சிலிண்டர்
      Posted in இலங்கை செய்திகள்

      சமையல் எரிவாயு விலை குறைப்பு

      சமையல் எரிவாயு விலை குறைப்பு

      சமையல் எரிவாயு விலை, நாளை (08) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.


      புதிய விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் ஒப்புதலுக்காக திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மாலை புதிய விலை குறித்து அறிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

      விலை திருத்தத்தின் போது எரிவாயு சிலிண்டர்களின் விலையில் குறைவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

      நுகர்வோர் விவகார அதிகாரசபை, திறைசேரி மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி, புதிய விலை திருத்தம் செய்யப்படுகிறது.

      சமையல் எரிவாயு விலை குறைப்பு

      அந்த சூத்திரத்தின் அடிப்படையிலேயே நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கும் வரும் வகையில் விலை திருத்தத்தை மேற்கொள்வோம் என்று முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

      தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “லிட்ரோ நிறுவனத்தை நான் பொறுப்பேற்ற போது 14 மில்லிய ரூபாய் இழப்பு ஏற்பட்டது. எனினும், தற்போது லிட்ரோ நியாயமான இலாபத்தை ஈட்டுகிறது.

      “கடந்த 22 நாட்களில் 2.87 மில்லியன் 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை லிட்ரோ லங்கா வழங்க முடிந்தது” என்றார்.

        முல்லைத்தீவில் இளம் பெண்ணை காணவில்லை தேடும் குடும்பம்
        Posted in இலங்கை செய்திகள்

        முல்லைத்தீவில் இளம் பெண்ணை காணவில்லை தேடும் குடும்பம்

        முல்லைத்தீவில் இளம் பெண்ணை காணவில்லை தேடும் குடும்பம்

        முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திருமுறிகண்டி, வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

        22 வயதுடைய சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.2022 முதல் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையில், அவர் கடைசியாக சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார்.

        யுவதியை கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

        தொலைபேசி இலக்கம் – 076 0777615 மற்றும் 074 0961230

          Posted in இலங்கை செய்திகள்

          ரணில் சஜித் மீள இணைய முடிவு

          ரணில் சஜித் மீள இணைய முடிவு

          இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சி இரு அணிகளாக உடைந்து சிதைந்த நிலையில் மீளவும் இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளன.

          பலவீன பட்டுள்ள கட்சியை மீளவும் ஒன்றிணைந்து அதன் ஊடக தனது பலத்தை நிரூபிக்க ரணில் முயன்று வருகிறார்.

          எம்பிகளுடன் உள்ள சஜித் அணியினரை பலமிழக்க வைக்கும் நகர்வில் தந்திர ஆட்டத்தை ரணில் ஆரம்பித்துள்ளார்.

          இந்த ஆடுகளத்தில் சஜித்தை தோல்வியடைய வைப்பதே ரணில் நோக்காக உள்ளது.

          அவ்வாறு சஜித் ரணிலுடன் இணைந்து அமைச்சு பொறுப்புக்களை பெற்று கொண்டால் கட்சி இரண்டாக உடைந்து பலவீன படும் என எதிர்பார்க்க படுகிறது.

            Posted in இலங்கை செய்திகள்

            கணவன் மண்டையை உடைத்த மனைவி

            கணவன் மண்டையை உடைத்த மனைவி

            யாழ் உரும்பிராய் கிழக்கில் மகளை கண்டித்த தந்தையை, தாய் தாக்கியதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

            குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது..

            மகள் தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதாக தந்தை கண்டித்துள்ளதுடன், மகளிடமிருந்த தொலைபேசியை வாங்கிய தந்தை அதிலிருக்கும் விடயங்களை பார்வையிட்டுள்ளார்.

            இதனால் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் மகளின் முன்னால் தந்தையை தாக்கிய தாய் மண்டையை உடைத்துள்ளார்.

            இதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கை வரும் கோட்டபாயா மகிந்தா தகவல்

              இலங்கை வரும் கோட்டபாயா மகிந்தா தகவல்

              இலங்கை முன்னால் ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓடினார் .

              இவ்வாறான சூழலில் இலங்கைக்கு 11 ஆம் திகதி மீள் திரும்புகிறார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

              ஊடக நபர் ஒருவர் தொடுத்துள்ள கேள்வி ஒன்றுக்கே இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

              எனினும் கோட்டபாய இலங்கைக்கு மீள் வருவது தொடர்பாக எதுவும் தெரியாது என மகிந்த தெரிவித்துள்ளார்.

              மேலும் கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கும் கருத்தில் உண்மை இல்லை எனவும் மருத்துவ
              தேவைக்கு சிங்கப்பூர் சென்றுள்ளதாக மகிந் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

                Posted in இலங்கை செய்திகள்

                பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

                பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

                இலங்கை ; நாளை ஆரம்பமாகவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை ,திங்கள் ,செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

                தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அடுத்த வாரம்

                வியாழக்கிழமை 11ஆம் திகதி அரசாங்க விடுமுறை என்பதினால் கல்வியமைச்சு இவ்வாறு தீர்மானித்துள்ளது.

                வெள்ளிக்கிழமையன்று மாணவர்களுக்கு வீட்டை அடிப்படையாகக்கொண்ட கல்வி நடவடிக்கையை முனனெடுத்தல் அல்லது இணைய வழி மூலமான

                கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

                பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

                ஆசிரியர்கள் அனைவரும் ஆகக் குறைந்தது வாரத்தில் 03 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

                எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சேவை அசௌகரியங்கள் காரணமாக நகர்ப்புற பாடசாலைகளில் 3 தினங்களுக்கு மாத்திரம் கல்வி

                நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

                இருப்பினும் இவ்வாறான ,பாதிப்புகள் இல்லாத நாட்டின் சில மாவட்டங்களில் வாரத்தின் ஐந்து தினங்களிலும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

                இதேவேளை வட மாகாண அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                வட மாகாண பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் (8)
                வாரத்தின் ஐந்து நாட்களும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

                  சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

                  சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயஅமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

                  இதற்கமைவாக நெல்கொள்வனவுச் சபை விவசாயிகளிடமிருந்து ,ஒரு கிலோ நாடு நெல் 120விற்கும், சம்பா ஒரு கிலோ 125 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோவை 130 ரூபாவிற்கும் கொள்வனவு
                  செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    வி.உருத்திரகுமாரன் பேசுகின்றார் ! Social Mediaş Live Show

                    வி.உருத்திரகுமாரன் பேசுகின்றார் ! Social Mediaş Live Show

                    வி.உருத்திரகுமாரன் பேசுகின்றார் !

                    ‘சமூகவலைத்தள வழி மக்கள் அரங்கம்’

                    இன்று (07-08-2022 ஞாயிற்றுக்கிழமை) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கவுள்ளார்.

                    Facebook @TGTEMedia / Youube : TGTE Media https://youtu.be/F5U3MNq-n1Yஆகிய சமூகவலைத்தள பக்கங்கள் ஊடாக இணைந்து கொண்டு பொதுமக்கள் கேள்விகளை முன்வைக்க முடியும்.

                    நியூ யோர்க் நேரம் காலை 11மணி ஐரோப்பிய நேரம் மாலை 5மணி சிறிலங்கா நேரம் இரவு 8:30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

                    இந்நிகழ்வினை tgte.tv வலைக்காட்சியூடாக நேரடியாக காணலாம்.

                    நன்றி

                      இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை
                      Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

                      இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை

                      இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை

                      இலங்கை -சீனாவின் உளவுத்துறைக் கப்பல் இலங்கையில் நிலை கொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

                      ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பந்தோட்டை துறைமுகத்தில் ‘யுவான் வாங் – 5’ எனும் சீனக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு, செயற்கைக்கோள் குறித்தான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்க பட்டுள்ளது .

                      இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது இந்தியாவின் நலனுக்கு ஒருபோதும் ஏற்புடையது அல்ல என்று சீமானை குறிப்பிட்டுள்ளார் .


                      இதற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால
                      அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டுமெனவும் சீமான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் ஒருவர் சுட்டு கொலை எகிறும் ம் துப்பாக்கி கலாச்சாரம்

                      இலங்கையில் ஒருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்

                      இலங்கை கம்பாக பகுதியில் நபர் ஒருவர் அருமை ஆயுத தரிகளினால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .

                      இவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்ட நபரது சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஐயாவுக்கு உட்படுத்த பட்டுள்ளது.

                      இலங்கையில் சமீப காலங்களாக அதிக அளவான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 13 பேர் கைது

                        அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 13 பேர் கைது

                        இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த அகதிகள் படகு
                        மடக்கி பிடிக்க பட்டுள்ளது .

                        குறித்த படகில் 13 பேர் பயணித்துள்ளனர் .தொடராக அவுஸ்ரேலியாவுக்கு
                        படகு மூலம் இலங்கையர்கள் சென்ற வண்ணம் உள்ளனர் .

                        அவ்வாறு செல்கின்ற அகதிகளை மீளவும் இலங்கைக்கு அவுஸ்ரேலியா நாடு கடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு

                          வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு

                          இலங்கை வத்தளை பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

                          வத்தளை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் இந்த ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது.

                          மீட்டக்க பட்ட ஆணின் சடலம் நாற்பது வயது இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர் .

                          இலங்கையில் சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                            மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                            வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

                            அனர்த்தங்கள் நிகழுமாயின் அதுபற்றி துரித தொலை பேசி இலக்கத்தின் ஊடாக நிலையத்திற்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

                            துரித தொலைபேசி இலக்கம் 117 என்பதாகும்.

                            10 மாவட்டங்களைச் சேரந்;த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக .
                            அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

                              மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல் மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் காண்பிக்கப்படும் மேதகு திரைப்படக் காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ளது. இதற்கான முழுமையான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். "Methagu" is a Biopic of Tamil National Leader and his leadership for the legitimate struggle of Eelam Tamils against chauvinistic oppression. The movie is based on the available source of evidence. தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெற்ற தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து "மேதகு" என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்து கடந்த வருடம் (OTT) தளத்தில் (25.05.2021) வெளியாகியாகியது. அதே நேரத்தில் தமிழ்நாடு திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகளும், தமிழ் உணர்வாளர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் ”மேதகு" திரைப்படத்திற்கு தமது வாழ்த்துகளையும் நல்லத்தரவினையும் வழங்கி சிறப்பித்திருந்தனர். இவ்வேளையில் அத்திரைக்காவியத்தின் பாகம் 2 எதிர்வரும் 19ம் திகதி முதல் உலகம் முழுவதும் வெளியாகின்றது. உங்களுக்கு தெரிந்தவர்களுடன், தெரிந்த குழுமங்களில் பகிர்ந்து பல தடைகளைத் தாண்டி வரும் மேதகு 2 போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்குவோம். The movie METHAGU, which is set to be the starting point of Theera's history, was released on June 25 last year. Methagu-2 will be released on wide screens, worldwide from August 19th onwards. Congratulations and love to the crew. You can hide the story but You can't hide the history. எதிர்வரும் ஓகஸ்ட் 19, 20, 21ஆம் திகதிகளில் ஒஸ்ரேலிய நகரங்களில் மேதகு 2 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. முற்கூட்டிய ஆசன பதிவுகளுக்கு www.eventboss.com என்ற இணைய தளம் ஊடாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். இணையதளம் ஊடாக பதிவு செய்யமுடியாதவர்கள், செயற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு ரிக்கற்றுக்களை பெற்றுக்கொள்ளலாம். மெல்பேர்ன் காட்சிகள் Dandenong - VIC 20 Aug 2022 Saturday 6.45pm -- Epping - VIC 21 Aug 2022 Sunday 6pm Contact: 0433 002 619, 0414 185 348, 0406 429 107 Sunshine நகர திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும் Tickets: Adult $20, Kid (under 12) $10 எனைய ஒஸ்ரேலிய நகரங்களின் மேதகு 2 திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணையத்தளம் ஊடாக அறிந்துகொள்ளவும் https://www.tccau.com/2022/08/Methagu-2.html
                              Posted in இலங்கை செய்திகள்

                              மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்

                              மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்

                              அவுஸ்ரேலியா ; மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் காண்பிக்கப்படும் மேதகு திரைப்படக் காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ளது. இதற்கான

                              முழுமையான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
                              “Methagu” is a Biopic of Tamil National Leader and his leadership for the legitimate struggle of

                              Eelam Tamils against chauvinistic oppression. The movie is based on the available source of evidence.

                              தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெற்ற தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத்

                              தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்து கடந்த வருடம் (OTT) தளத்தில் (25.05.2021)

                              மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்

                              வெளியாகியாகியது. அதே நேரத்தில் தமிழ்நாடு திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகளும், தமிழ் உணர்வாளர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் ”மேதகு” திரைப்படத்திற்கு தமது வாழ்த்துகளையும்

                              நல்லத்தரவினையும் வழங்கி சிறப்பித்திருந்தனர். இவ்வேளையில் அத்திரைக்காவியத்தின் பாகம் 2 எதிர்வரும் 19ம் திகதி முதல் உலகம் முழுவதும் வெளியாகின்றது.


                              உங்களுக்கு தெரிந்தவர்களுடன், தெரிந்த குழுமங்களில் பகிர்ந்து பல தடைகளைத் தாண்டி வரும் மேதகு 2 போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.


                              The movie METHAGU, which is set to be the starting point of Theera’s history, was released on June 25 last year. Methagu-2 will be released on wide screens, worldwide from August 19th onwards. Congratulations and love to the crew. You can hide the story but You can’t hide the history.

                              எதிர்வரும் ஓகஸ்ட் 19, 20, 21ஆம் திகதிகளில் ஒஸ்ரேலிய நகரங்களில் மேதகு 2 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. முற்கூட்டிய ஆசன பதிவுகளுக்கு

                              www.eventboss.com என்ற இணைய தளம் ஊடாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். இணையதளம் ஊடாக பதிவு செய்யமுடியாதவர்கள்,

                              செயற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு ரிக்கற்றுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

                              மெல்பேர்ன் காட்சிகள்
                              Dandenong – VIC

                              20 Aug 2022 Saturday 6.45pm

                              Epping – VIC
                              21 Aug 2022 Sunday 6pm
                              Contact: 0433 002 619, 0414 185 348, 0406 429 107
                              Sunshine நகர திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்

                              Tickets: Adult $20, Kid (under 12) $10
                              எனைய ஒஸ்ரேலிய நகரங்களின் மேதகு 2 திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணையத்தளம் ஊடாக அறிந்துகொள்ளவும்
                              https://www.tccau.com/2022/08/Methagu-2.html

                                Posted in இலங்கை செய்திகள்

                                ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்

                                ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்

                                ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

                                நாம் இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள், அந்தப்

                                பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்கு போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

                                இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.

                                அதற்கு இளைஞர்களின் அர்ப்பணிப்பு அவசியம்.

                                ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பல தரப்பினருக்கும் இடையில் இன்று (05) ஜனாதிபதி

                                அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

                                ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்

                                ஜனநாயக விரோத அரசியலையும் வன்முறையையும் தாம் எதிர்ப்பதாகவும், ஒடுக்குமுறைக்காகவே செயற்படுபவர்கள், பல்கலைக்கழக செயற்பாட்டின்

                                ஊடாக பகிடிவதையை நிறுத்தி சிறந்த சமூக ஜனநாயகத்துக்காக முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

                                இன்று நமது பல்கலைக்கழகக் கட்டமைப்பு சீர்குலைந்து இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பகிடிவதை ஆகும். வேலைநிறுத்தங்கள் எல்லா காலத்திலும் தொடர்ந்தன.

                                வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலம் மத்தியஸ்த நிலைக்கு வந்து

                                கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

                                அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறு கூறிய ஜனாதிபதி அவர்கள், அக்குழுவிற்கு

                                அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.

                                இளைஞர்களின் தேவைகளுக்காக அரச அனுசரணையுடன் செயற்படுத்துவதற்கு, கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தை மற்றும் பல்வேறு இடங்களை முன்மொழிய தான் விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில்

                                விக்கிரமசிங்க அவர்கள், அது தொடர்பில் முறையான ஆலோசனைகளை பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்களிப்புடன் தயாரித்து கையளிக்குமாறும் தெரிவித்தார்.

                                அந்தச் செயற்பாட்டில், கல்விக்கான நூலகங்கள், அரசியல் கல்விக்கான வசதிகள், இசை, கலை, நாடகம் போன்ற இளைஞர்களின் திறன்கள் மற்றும்

                                தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மத்திய நிலையமாக அது உருவாக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                                ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்

                                அவசரகால நிலையை முடிந்தவரை விரைவில் நீக்குவது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கு முக்கியமாக

                                இருப்பதைப்போன்று, தற்போதுள்ள நிலைமைகள் காரணமாக நாட்டின் நிர்வாகத்திலும் அதன் தாக்கம் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

                                தற்போது LGBT சமூகம் தொடர்பில் அவசரகாலச் சட்டம் காரணமாக பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமக்கு

                                தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நீக்குவதற்கு தேவையான சட்டப் பின்னணியை தயார் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

                                மேலும், பொதுமக்கள் சபைகளை ஸ்தாபிப்பது தொடர்பில் ஏற்கனவே பல தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகள் தமக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக

                                சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அடுத்த வாரம் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

                                ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்தவர்களின் கோரிக்கையானது, அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள

                                ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்ட விரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கைது செய்வதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதாகும்.

                                தற்போது எந்த தவறும் செய்யாது தளத்தில் இருக்கின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்படுவதால் அங்கிருந்து வெளியே செல்ல பயப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

                                இப்போராட்டத்தின் மிகவும் கடினமான பகுதி தற்போது ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சிந்தனைகளிலும் புரட்சி ஏற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

                                இளம் தலைமுறையினர் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், அரசியலமைப்பு ரீதியில் சாதகமான பலனைப் பெறுவதே தமது எதிர்பார்ப்பு

                                எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் உட்பட நாட்டை முறையான மற்றும் ஸ்திரமான நிலைக்கு

                                கொண்டு வர விரைவான சீர்திருத்த செயல்முறையை நிறுவ வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

                                நாட்டின் முன்னேற்றத்தை விரும்புவோரின் ஆர்ப்பாட்டத்தின் முன்னேற்றம் கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் செய்துகொள்ளப்படுகின்ற இணக்கப்பாடுகளில் அடங்கியுள்ளதாகவும், அதற்காக ஜனநாயக

                                நடவடிக்கைகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

                                போராட்டத்தின் மூலம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல பெரிய வெற்றிகளை இளைஞர்கள் பெற்றுத் தந்தது தங்களது தலைமுறையின்

                                தனிச்சிறப்பு என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் போற்றும் மக்களால் இந்தப் போராட்டம் மதிக்கப்படுதாகவும்,


                                அதன் காரணமாகவே நமது நாடு உலகின் கவனத்தைப் பெற்றதாகவும் அவர்கள் கூறினர்.

                                  கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா

                                  கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா

                                  கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா நேற்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

                                  கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த எஸ்.நவநீதன் மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக பணிப்பாளராக


                                  கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு (திருமதி) எஸ்.சரணியா நியமிக்கப்பட்டுள்ளார்.

                                  இவர், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பதில் உதவிப் பணிப்பாளராகவும்,


                                  கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மேலதிக


                                  ஆணையாளராகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

                                  பைஷல் இஸ்மாயில் –

                                    அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்

                                    அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்

                                    இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மீள இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

                                    அவுஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரி ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆசை படும் இலங்கையர்கள் அந்த நாட்டில் விசா பெறும் விதிகளை தெரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர்.

                                    அவுஸ்ரேலியா சென்றால் உடனே வேலை செய்திடலாம் என இலங்கையர்கள் எண்ணுகின்றனர் .

                                    வேலை செய்ய வேண்டுமெனின் அங்கு விசா வேண்டும் விசா இலலது எப்படி வேலை செய்ய முடியும் ..?

                                    இவ்வாறான கேள்விகளுக்கு விடையை தெரிந்து கொண்டவர்கள் வெளிநாட்டு வாழ்க்கையை வேண்டாம் என ஒதுங்கி விடுகின்றனர் .

                                    ஆனால் இலங்கையில் இருந்து வெளி நாட்டு வாழ்க்கையில் மோகம் கொண்டுள்ளவர்கள் பல லட்சங்களை செலுத்தி அவுஸ்ரேலியா வந்தும் மீள் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டு விடுகின்றனர்.

                                    வெளிநாடுகளில் வாள்பவர்கள் பலர் சோற்றுக்கு வழியில்லாமல் திண்டாடிய வண்ணம் உள்ளனர் .

                                    அவ்வாறான நிகழ்வுகளை தெரிந்து கொள்ளாது வெளிநாட்டு மோகத்தில் ஆபத்தான கடல்வழியாக இலங்கை செல்லும் மக்களுக்கு அவுஸ்ரேலியா சாட்டை அடி வழங்கியுள்ளது.

                                    இவ்வாறு தொடர்ந்து இலங்கைக்கு மக்களை நாடுகடத்த வருகின்ற பொழுதும் சிலரது போலியான ஆசை வார்த்தைகளை நம்பி இவ்விதம் மக்கள் சென்று வருவது கவலை தருகிறது.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது

                                      யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது

                                      யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட

                                      குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது நேற்று (04) ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர்.

                                      புங்குடுதீவு 09 ஆம் வட்டாரத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி

                                      ஒன்றினால் துண்டித்து, நாயின் முகத்தினை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர்.

                                      தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.

                                      யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது

                                      இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

                                      அதன் அடிப்படையில் சம்பவத்தை காணொளி எடுத்தவர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் எனும் குற்றத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

                                      அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் ,


                                      அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.