Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து
இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து
இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து ,இலங்கையிலிருந்து பாகிஸ்தான் லாகூர் செல்லும் விமான பயணங்கள் திடீரென தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானத்துறை அறிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் திடீர் யுத்தம் ஒன்று தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறான நிலையில் எவ்வேளையும் விமானங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படலாம் என்கின்ற வகையில் ,தற்போது இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையில் மூண்டுள்ள இந்த திடீர் யுத்தம் காரணமாக ,அங்கு செல்லும் மக்களுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக இவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து, இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மசூதி உள்ளிட்ட வீடுகள் கட்டடங்கள் இடிந்து அழிந்தன. மேலும் 26க்கு மேற்பட்டவர்கள் பலியாகியம் 46க்கு மேற்பட்டவர்கள் காயாமடைந்தனர் .
இதனை அடுத்து குறித்த விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் பயன்படுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தினால், இந்த தற்காலிக இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையில் இருந்து லாகூர் செல்ல விருந்த பயணிகள் தத்தளித்து வருகின்றனர்.
மறு அறிவித்தல் வரை இந்த விமான சேவைகள் நிறுத்தி செய்யப்பட்டிருக்கும் வரை தெரிவிக்கப்படுகிறது.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

பாரிய விபத்து 12பேர் காயம்
பாரிய விபத்து 12பேர் காயம்
பாரிய விபத்து 12பேர் காயம் அக்குருஷ பிரதான வீதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் வான் மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தை ஏற்பட்ட பொழுதுவேனில் பயணித்த 12 பேர் காயம் அடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேரூந்தில் பயணித்தவர்கள் முல்லட்டியான பகுதியைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
சாரதியின் அலட்சியப் போக்கின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.
காயம் அடைந்தவர்கள் யாவரும் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்படி லொறி வான் விபத்து தொடர்பான விசாரணைகளை தற்பொழுது இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற வீதியில் இந்த வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அதை கண்காணிக்க முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை திணறி வருவதுடன், மக்கள் வாகனங்களில் பயணம் செல்லவே அச்சம் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

விரைவில் மின் கட்டணத்தில் திருத்தம்
விரைவில் மின் கட்டணத்தில் திருத்தம்
மிக விரைவில் இலங்கையில் மின் கட்டணத்தில் திருத்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில்,
அது தொடர்பான பிரேரணையை மே மாதத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுடம் சமர்ப்பிக்க வேண்டுமென அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையைப் பெற்ற பிறகு, 3 முதல் 6 வாரங்களுக்குள் இது தொடர்பில் ஆராய்ந்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதன் தீர்மானத்தை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் தொடர்புடைய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடமும் யோசனைகள் கேட்கப்படும்.
மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது, அதன்படி, எதிர்வரும் காலப்பகுதியில் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இருப்பினும், இலங்கை மின்சார சபை இதுவரை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் பொருத்தமான பிரேரணையை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடத்திற்கான முதலாவது மின் கட்டண திருத்தம் ஜனவரி 17 ஆம் திகதி இடம்பெற்றதோடு, அப்போது மின் கட்டணங்களை 20 சதவீதம் குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த வாரம் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார், அதாவது,
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே அடுத்த கட்ட கடன் தொகை வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதை ஏன் அரசாங்கம் நாட்டு மக்களிடமிருந்து மறைத்தது என ழுப்பினார்.
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மட்டுமே அடுத்த நிதியை வழங்குவதாக நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனை தொடர்பில் அரசாங்கம் எதுவும் கூறவில்லை.
மின் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால் நிதி வழங்க மாட்டோம் என்று நாணய நிதியம் கூறியுள்ளதாக அரசாங்கம் வெளிப்படுத்தியதா? இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா? அவர்கள் இதை வெளிப்படுத்தவில்லை.
ஆனாலும் ஜனாதிபதி தனியார் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில்,
2025 ஜூன் மாதத்தில் நடைபெறும் மின்சார கட்டண திருத்தத்தின் போது, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வு கடந்த டிசம்பர் மாத மின் கட்டணத்தை விட அதிகமாக இருக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் மின் விலை திருத்தத்தின்படி இந்த விலை திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மின்சார சபையின் 220 பில்லியன் கடன் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதி மின்சார கட்டணத்தல் சேர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா இல்லை குறைக்கப்படுமா, மின்சார சபை என்ன முடிவு எடுக்கும் என மக்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.
லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன
லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன
லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன லண்டன் குடும்பம் ஒன்று திருகோணமலையில் ஒரு ஏமாற்று கொள்ளைக்கார குடும்பத்திடம் சிக்கியுள்ளனர். இக் குடும்பத்திற்கு நடந்தது என்ன?
திருகோணமலையிலுள்ள சுலக்சனா (பெயர் மாற்றம்) ஒன்லைன் zoom tuition கிளாஸ் எடுக்க முன்வந்ததன் மூலம் லண்டன் குடும்பம் அறிமுகம் ஆனது.
அதன் மூலம் அறிமுகம் ஆன பின் ஸ்ரீலங்கா வந்த போது இவர்களது வீட்டிற்கு சென்று தங்கினர்.
திட்டமிட்ட சுலக்சனா அவரது அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் இந்த லண்டன் குடும்பத்திடம் 10 இலக்சம் ரூபாயினை கேட்டுவாங்கியுள்ளனர்,
10 லட்சம் பணம் வாங்கி பின்பு தருவதாய் ஏமாற்றி குடும்பம் ஆக மோசடி செய்தது. பின்பு மொத்த குடும்பமும் wats up இல் லண்டன் நம்பரை Block செய்துள்ளதாக லண்டன் குடும்பம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த லண்டன் குடும்பம் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்திருக்கின்றனர்.
ஆனால் பொலிசார் கருத்தில் எடுப்பதில்லை என மட்டக்களப்பு இரகசியம் உள் பெட்டிக்கு தெரியப்படுத்தி உள்ளனர். இருந்தபோதிலும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.
இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கவனமாய் செயட்படவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.
இந்த குடும்பம் பலரை இவ்வாறு இலக்கு வைத்து செயற்பட்டு வருகிறது என தற்போது தெரியவந்துள்ளது.
முன்பு பிரான்ஸ் இல் இருந்து வந்த ஒரு குடும்பத்தினரிடமும் மேற்படி முறையில் பணம் வாங்கிய குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ள நிலையில், தற்போது லண்டன் குடும்பம் ஏமாறியுள்ளது.
பொலிசார் மோசடி குடும்பத்திற்கு சார்பாக செயற்பட்டு வருகின்றனர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக முகநூல் பக்க செய்திகள் படங்களோடு செய்திகள் வெளியிட்டுள்ளன.
வாக்குகளால் வலுச் சேர்த்த மக்களுக்கு நன்றி
வாக்குகளால் வலுச் சேர்த்த மக்களுக்கு நன்றி
வாக்குகளை வழங்கி மக்கள் தமக்கான பலத்தை தெரிவுசெய்திருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் சிறிதரன்.
நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில், தமிழ்த் தேசியப் பயணத்தை ஏற்று, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு தலைவணங்குகிறேன்,
என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று சபைகளிலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பு,
கட்சியின் மாவட்டப் பணிமனையில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மைய தேர்தல்களைக் காட்டிலும், இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எமது மக்கள் வாக்குகளால் வலுச்சேர்த்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் எமது கட்சிக்கு வாக்களித்து, கரைச்சி, பச்சிலைப்பள்ளி,
பூநகரி ஆகிய சபைகளில் நாம் ஆட்சியமைக்க காரணமாக இருந்த மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட வேட்பாளர்கள், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலும்,
புனித திரேசாள் தேவாலயத்திலும் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையால் ஒழுங்கமைக்கப்பட்ட மத வழிபாட்டு ஆராதனைகளிலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. பச்சிளைப்பள்ளி பிரதேச சபை,
கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும்
பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும்,
பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரனின் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .
சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள். கரைச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.
வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.
தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.
இலங்கை தமிழரசு கட்சி இல்லாமல்போகும் என நினைத்தோருக்கு இந்த மக்களின் வாக்குப்பதிவு ஒரு நெத்தியடி.
வாக்குப் பதிவுகளால் மக்கள் தமக்கான ஒரு அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்தி வலுச் சேர்த்துள்ளார்கள், வாக்களித்த மக்களுக்கு நன்றிகள்.
பாராளுமன்றில் கேள்வி கேட்பேன் மனோ ஆவேசம்
பாராளுமன்றில் கேள்வி கேட்பேன் மனோ ஆவேசம்
பாராளுமன்றில் கேள்வி கேட்பேன், பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டு, குற்றவாளிகளை கூண்டுமுன் நிறுத்தி தக்க தண்டனை வாங்கி கொடுத்த அவசியம் என மனோ கணேசன் ஆவேசம் அடைந்துள்ளார்.
பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் எனவும்,
இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள,
தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவியொருவர் அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்,
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் பதிவானது. இச்சம்பவம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 16 வயதான இளம் தமிழ் மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பான விபரங்கள்
எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றன’ என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு அம்மாணவி முதலில் தென் கொழும்பின் பிரபல மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயின்றபோது கடந்த வருட இறுதியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவம்,
அதுகுறித்து கல்வி வலயம், பாடசாலை, பொலிஸ், நீதிமன்ற விசாரணை விபரங்களையும் தான் பெற்றுக்கொண்டிருப்பதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.
அதேவேளை, ‘இத்துயர சம்பவத்தால் பிள்ளையை இழந்து வாடும் பெற்றோருக்கு பிள்ளையை மீண்டும் பெற்றுக்கொடுக்கமுடியாது. அது மிகப்பெரும் துயரம்.
காலம் தான் அவர்களுக்கு ஆறுதலளிக்கவேண்டும்’ எனவும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று 18 வயதை அடையாத அம்மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவரது அகால மரணத்துக்குக் காரணமான சகல நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனவும்,
இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவரது கருத்தைத் தொடர்ந்து குறித்த மாணவியின் பகுதியில் வசிக்கும் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டு இதற்கு ஒரு தீர்வு எடுத்தால் தான் இவ்வாறான மாணவ மாணவிகள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் தமது கல்வி கற்கை நெறிகளில் தம்மை ஈடுபடுத்திகொள்ள முடியும்.
மாறாக இலங்கையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகளை உடனடியாக இந்த அரசு கண்டறிந்து அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம்.
மனோ கணேசனின் பாராளுமன்ற கேள்விக்கு கல்வி அமைச்சு என்ன நடவடிக்கை எடுப்பார்கள், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனைகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என தெரிவித்திருக்கின்றனர்.
தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை
தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை
தேர்தல் முடிவுகள், அதாவது நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.
இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை.
எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி தெற்கில் வெற்றி பெற்றிருந்தாலும், பல சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெறத்தவறியிருக்கிறது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அலி சப்ரி, அப்பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
‘ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என நீங்கள் கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.
நீங்கள் கூறும் விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதன் ஊடாக வீதிகளில் இருக்கும் மக்களால் உணரக்கூடிய மாற்றத்தை உருவாக்குங்கள்.
சாதாரண மக்கள் மெச்சக்கூடியவகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு, செயற்திறன்மிக்க பொதுநிர்வாகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை நிலைநிறுத்துங்கள்.
காலவோட்டத்தில் மக்கள் கடந்தகாலத்தைப் பற்றிய பேச்சுக்களில் ஆர்வம் இழப்பார்கள்.
அவர்கள் கடந்தகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை என்பதனாலேயே தற்போதைய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
அன்றேல் இதுவும் வெறுமனே ‘நல்லாட்சி அரசாங்கம் – 2’ ஆக மாறிவிடும்.
இந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கையாகும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ 18 மாதங்களில் பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை.
எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும்.
நாமனைவரும் தேர்தல்களில் அரசியல் செய்வோம். இருப்பினும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையிலேயே இத் தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை தான். ஏனெனில் வடக்கு கிழக்கு பகுதிகளில் கூட NPP அதிக வாக்குகளைப் பெற்று அனைத்து இடங்களிலும் தமது ஆட்சி தான் நிலைநிறுத்தப்படும் என,
கொக்கரித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அநேகமான தேர்தல் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி வென்றமை, அரசுக்கு ஒரு அபாய எச்சரிக்கை என தெரிகின்றது.
பொறுத்திருந்து பார்க்கலாம், எதிர்கால அரசியல் மாற்றம் பெறுமா, இத் தேர்தல் முடிவினால் அரசுக்கு மக்கள் கூறியது என்ன என அரசு புரிந்துகொள்வார்களா..
ஆட்சியிலும், அரசின் நடவடிக்கையிலும் ஏதாவது மாற்றம் வருமா இல்லையேல் அடுத்த ஐந்தாண்டு காலத்தின் பின் மக்கள் இன்னுமொரு மாற்றத்தை எதிர்பார்த்து தேர்தலுக்காக காத்திருக்க வேண்டும்.
அர்ச்சுனாவை அடித்துக் கொல்வேன் ஊசிவேட்பாளர்
அர்ச்சுனாவை அடித்துக் கொல்வேன் ஊசிவேட்பாளர்
அர்ச்சுனாவை அடித்துக் கொல்வேன் ஊசிவேட்பாளர் ,வன்னி மைந்தன் tiktok நேரலையில் பங்கேற்று தனது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்த முன்னாள் ஊசி கட்சி வேட்பாளர் தனக்கு நடந்த அநீதிக தொடர்பாக பேசினார்.
அப்பொழுது பேசும்பொழுது திட்டமிட்டு தமது வெற்றியை அர்ச்சுனாவே தோற்கடித்த ,அவரது கட்சியின் தலைவர் அர்ச்சனாவை காரணம் எனவும் தனது கட்சிக்காரரை தானே தோற்கடித்த முதலாவது இழிநிலை தலைவராக இவர் உள்ளார் என அவர் சொல்கிறார்.
இவர்களை நாங்கள் என்ன செய்யலாம் என்பதை தமிழ் மக்களே கொஞ்சம் காதில் போட்டுக் கொள்ளுங்கள்.
பெண்களை அவதூறாக பேசி கொச்சைப்படுத்தி அவர்கள் மானபங்கப்படுத்துகின்ற நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவரது அடியார்களும் ஈடுபட்டு வருவதாக அவர் பகிரங்க கூட்டம் சுமத்தினார்.
பெண்களை விபச்சாரி என்று சொல்கிற அர்ச்சுனா இராமநாதன் எப்படி தமிழ் மக்களுடைய பிரதிநிதியாகவும் தமிழ் மக்களை வழிநடத்தக்கூடிய ஒருவராகவும் இருப்பார் என அவர் கேள்விகளை தொடுத்தார்.
செருப்பு கழட்டி அடித்திருக்க வேண்டும் இவ்வாறு பேசியதற்கு என அவர் இப்பொழுது ஓங்கி உரைத்தார்.
பெண்களை மிகவும் கொச்சையாகவும் கேவலமாகவும் பேசுகின்ற அர்ச்சனா இராமநாதனை விட்டு வைக்கக் கூடாது என அவர் உறுமினார் .
உள்ளுராட்சி தேர்தலில் படுதோல்வியை அர்ச்சுனா சந்தித்ததற்கு பிற்பாடு முதன்முதலாக பயணித்து வன்னிமைந்தன் டிக்கெட் போட்டியிட்ட வனேஸ்வரி
என்கின்ற ஊசி கட்சியினுடைய வேட்பாளர் அவர்களே இவ்வாறு தனது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்தார்.
தற்போது அர்ச்சுனா இராமநாதன் பித்தலாட்டங்கள் அம்பலமாகியுள்ளது குறிப்பிட தக்கது .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி
யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி
யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
அதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை,
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை,
பருத்தித்துறை பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் கைப்பற்றியுள்ளது.
அத்துடன் காரைநகர் பிரதேச சபையை சுயேட்சைக் குழுவும், ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கைப்பற்றியுள்ளன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 88,443 வாக்குகள் – 135 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 56,615 வாக்குகள் – 81 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 51,046 வாக்குகள் – 79 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 35,647 வாக்குகள் – 46 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 18,011 வாக்குகள் – 32 உறுப்பினர்கள்
தமிழ் மக்கள் கூட்டணி – 11,893 வாக்குகள் – 15 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 4,103 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 3,397 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
சுயேட்சைக்குழு இலக்கம் 1 – 2,402 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
சுயேட்சைக்குழு இலக்கம் 2 – 3,973 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்.
அதிக எதிர்பார்ப்போடு மக்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்தவண்ணம் இருந்தாலும், அநேகமானவர்கள் போட்டியிட்டதால் எந்தக் கட்சியினர் யாழை கைப்பாற்றுவார்கள் என்ற கேள்விதான் மேலோங்கியிருந்தது.
இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சி 135 ஆசனங்களைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்தை தன்வசப்படுத்தியது மாபெரும் வெற்றி என்பதை விட வேறெதுவும் இல்லை.
எட்டப்ப கூட்டங்களால் தேர்தல் காலங்களில் மக்களின் எண்ணக்கருக்களை திசை திருப்பி ஏனைய கட்சிகள் தமிழர் பகுதிகளில் தமிழ் மக்களின் வாக்குகளை தம் வசமாக்க பொய்யுரைகளை பரப்பி வந்தனர்.
இருப்பினும், மக்கள் தமக்கான உரிமையை தம் இனத்தினைக் காப்பாற்ற இலங்கைத் தமிழரசு கட்சிக்கு வாக்களித்து வென்று காட்டியுள்ளமை பெருமைக்குரிய விடயமே.
முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத் தீவில் நான்கு பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகிய 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,364 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 6,306 வாக்குகளைப் பெற்று 7 உறுப்பினர்களையும்,
புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 10,816 வாக்குகளைப் பெற்று 11 உறுப்பினர்களையும் துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,594 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.
மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.
வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.
தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.
கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.
இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.
எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு
கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு
கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும்,
பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.
மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரனின் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .
சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள். கரைச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.
வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.
தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.
கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.
இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.
எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி
புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி
புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி , பகதாரா சாதனை படைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பெரிய சுபா தேர்தலில் இடம்பெற்ற முடிவுகள் பலியாக இருக்கின்றன, என்ற தேர்தல் முடிவுகளில் மகத்தான வெற்றிய இலங்கை தமிழர் அரசு கட்சியை பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கை தமிழர் கட்சி ,11 ஆசனங்கள், அகில இலங்கைத் தமிழர் கட்சி 01 ஆசனம் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 02வசனங்கள், ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம் , தேசிய மக்கள் சக்தி 04 ஆசனங்கள் ,ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி 01 ஆசனம் ,சுயேச்சை குழு 02 ஆசனம் .
இவை முல்லைத்தீவு மாவட்டம் புது குடியிருப்பு பகுதியின் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கிறது.
வடக்கு பகுதியில் இலங்கை தமிழர் கட்சி மகத்தான சாதனையை பெற்று .எதிரிகளுக்கு சாட்டை அடியை கொடுத்து இருக்கிறார்கள். இது வரலாற்று சிறப்புமிகு சம்பமாக பார்க்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நாளில் எங்கள் இனத்தை ஆண்டு விடலாம் என .கங்கணம் கட்டிய அனுர ஆட்சிக்கு ,சாட்டை எடுத்து வேட்டையை நடத்தி ஓட விடப்பட்டிருக்கிறது எங்களுடைய தமிழினம்.
இந்த வாக்குகளை வாரி வழங்கிய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் ,பாராட்டுக்களையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை
கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை
கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை , என தேர்தல் வாக்குச்சாவடிகளில் காத்திருந்த ஊடகவியலாளர்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன .
இன்று உள்ளூர் ஆட்சி சபை தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருந்த பொழுது ,அந்த இடங்களில் வந்து இவர்கள் வாக்குகளை அளிக்க வருபவர்களின் எதிர்பார்க்கப்பட்ட பொழுதும் அவர்கள் வரவில்லை.
பலத்த தோல்வியை தழுவி மக்கள் மனதில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் ,தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழலில் மகிந்தா குடும்பம் சிக்கி தவித்து வருகிறது.
தமிழன் அழிந்த த அதே நாளில் தமிழர்களை கொன்று குவித்த அதே மாசத்தில் இப்பொழுது வாக்களிக்க முடியாத மகா துயரில் மகாவம்சத்தின் புத்திரர்களான, இந்த மூன்று ஜனாதிபதிகளான கோட்டா மைத்திரி மகிந்தா காணப்பட்டுள்ளது துயரமான ஒன்றுதான்.
முள்ளிவாய்க்கால் மே தினத்தில் ,அந்த மக்கள் கதற கதற கொன்று ஏப்பம் இட்டு ஆடிய இந்த கொலையாளிகள் என்று ,எதுவும் முடியாத திரட்டி கொண்டிருக்கிறார்கள்.
மே மாதம் என்பது தவறக்கூடிய கண்ணீர் மாதம் என்பதையும் அந்த மக்களைக் கொன்று குவித்த கயவர்களை ,கண்ணீர் சிந்தும் நிலையாக மாறியுள்ளதையே இந்த துயர் தோய்ந்த வாழ்வை கொடுத்ததிலிருந்து அறிய முடிகிறது .
ஆகவே கர்மா என்பது இவர்களை விடாத துரத்தும் என்பதற்கும் ,இவர்களால் வெல்ல முடியாது என்பதற்கும் இந்த சம்பவங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
ஆகவே தான் நாங்கள் சொல்கிறோம் மஹிந்தா குடும்பம் மேலும் இரண்டிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் முத்து முழுதாக அழிந்து விடும் அபாயம் காணப்படுகிறது .
முள்ளி வாய்க்கால் மக்கள் சாபம் இவர்களை துரத்தும் என்பதாகவே பார்க்கப்படுகிறது.தேர்தலில் மூன்று ஜனாதிபதிகளும் வாக்களிக்க முடியாதது கவலைதான்.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

முல்லை மாந்தையில் வீடு வெற்றி
முல்லை மாந்தையில் வீடு வெற்றி
முல்லை மாந்தையில் வீடு வெற்றி முல்லை தீவு மாந்தை கிழக்கு பகுதியில் இலங்கை தமிழர் கட்சி மகத்தான வெற்றியைச் சூடி இருக்கின்றது.
இந்தப் பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் ,இலங்கை தமிழர் கட்சி நான்கு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது . மூன்றாம் இடத்தில் சைக்கிள் கட்சி காணப்படுகிறது.
மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெட்டி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.
தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள் .
கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.
இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.
எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இலங்கை தமிழரசு கட்சியை இந்த வெற்றியை உலகத் தமிழர்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் .
நாங்களும் பண்ணும் டிக் டாக் நேரலையில் இப்போது இந்த தேர்தல் வெற்றி பெறவில்லை அறிவித்துக் கொண்டிருக்கிற வேலைகள் பார்க்க எமது வன்னி மைந்தன் பகுதியில் பார்க்கலாம் .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது
கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது
கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது மிகப்பெரும் வரலாற்று சாதனையாக இலங்கை தமிழரசு கட்சி வீடு வென்று வெற்றியை சூட்டியுள்ளது .
மே மாதத்தில் இடம்பெற்ற தமிழின படுகொலை நாளில் எங்கள் மக்களை அடகு வைத்து விடலாம் என எண்ணிக்கொண்டிருந்த சிங்கள பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது .
எங்களது மக்கள் மகத்தான வெற்றியை வீட்டு சின்னம் இலங்கை தமிழர் கட்சிக்கு சூடி வெற்றிவாகை தந்துள்ளார்கள்.
எங்கள் மண்ணும் மக்களும் , தன்மானமும் தமிழருடைய ஓர்மமும் தொட்டு நிலத்தை வேற்று ஆணவ அதிகாரத்தை அடக்கி ஒடுக்கி இருக்கிறார்கள் என்பதை இந்த வெற்றி கோடிட்டு காட்டுகிறது.
இலங்கைத் தமிழரசக் கட்சி மிகப் பெரும் சாதனையை படைத்த நிலைநாட்டியுள்ளது.

அதன் அடிப்படையில் கரைச்சியில் 21 கதிரையில் 20ஆசனம் வீட்டுக்கு கிடைத்துள்ளது .
பூநகரியில் 11 ஆசனங்களில் 10 ஆசனம் வீடு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது .
பள்ளியில் 8 ஆசனங்களில் 6 ஆசனம் வீட்டுக்கு மிகப்பெரும் சாதனையை கிளிநொச்சி கோட்டையை சுருட்டி இருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறுதரும் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .
சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.
குளிர்ச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

வீடுவசம் கரைச்சியில் 20 ஆசனங்கள்
வீடுவசம் கரைச்சியில் 20 ஆசனங்கள்
வீடுவசம் கரைச்சியில் 20 ஆசனங்கள் பெற்றுள்ளதாக கரிச்சை வேட்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துலாளர்கள் .
பலமான தேர்தல் போட்டி இடம்பெற்ற நிலையில் தற்போது இலங்கை தமிழரசு கட்சி வரலாறு காணாத மகத்தான வெற்றியை பெற்று மிக பெரும் சாதனையை பிடித்துள்ளது ..
தமிழ் தேசியம் இன்னும் இறந்து விடவில்லை என்பதை இந்த வாக்கு பதிவுகள் காட்டி நிற்கின்றன .
ஸ்ரீதரன் கோட்டை பலமான வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது .
இது தமிழருக்கு கிடைக்க பெற்ற மிக பெரும் சாதனையாக உள்ளது அதே போன்று பூநகரி பகுதியும் இலங்கை தமிழரசு கட்சியிடம் வீழ்ந்துள்ளது .
மிக பெரும் வெற்றியை விளங்கி தமிழரசு கட்சி பெற்று சாதனை படைத்து நிற்கிறது .மக்கள் மிகவும் ஆர்வத்துடன் சென்று வாக்குகளை வழங்கினார்கள் .
மேலதிக செய்திகள் எம்து வன்னி மைந்தான் டிக் டாக் நேரலையில் உடனுக்குடன் மக்களே அங்கே வருக செய்தியை கேளுங்கள் .
மகத்தான வெற்றி மிக பெரும் சதானை
ஊசிக் கட்சி படு தோல்வி
ஊசிக் கட்சி படு தோல்வி
ஊசிக் கட்சி படு தோல்வி யை தழுவியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது யாழ் செய்திகள் தெறிவிக்கின்றன .
யாழ் மாவட்டத்தின் 17 பிரதேச சபையில் இடம்பெற்ற இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் பலத்த போட்டி நிலவியது .
தற்போது மூன்று தொகுதிகளில் ஊசி கட்சி போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது .
இதன் அடிப்படையில் மூன்று பகுதியிலும் பட்டு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தங்கத்தை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
அனுரா உடைய ஆட்சி அதிகாரத்தை வெல்ல வைப்பதே அவருடைய நோக்காம கொண்டது .
அதனை மையமாக வைத்தே தேர்தல் பரப்புரைகள் செயல்பாடுகள் பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன.
அதேபோன்று திட்டமிட்டபடி இப்பொழுது படுதோல்வியை சந்தித்து அர்ச்சுனா இராமநாதன் அனுரா கட்சியை வெல்ல வைத்திருக்கிறார்.
களமுனையில் இருந்து வருகின்ற தகவல் அடிப்படையில் ஊசி கட்சியை படுதோல்வி சந்தித்ததாகவும் அதை எண்ணி அர்ச்சுனா இராமநாதன் இப்பொழுது அதிக மதுபோதையில் காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறான செய்திகள் அவர்களது நட்பு வட்டாரங்கள் ஊடாக செய்திகள் கசிவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன .
- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலி

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பாகிஸ்தான் காவல் நிலையம் மீதான தாக்குதலில் 11 அதிகாரிகள் மற்றும் 15 தாக்குதல் நடத்தியவர்கள் பலி

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு
மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு
மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு சம்பவம் இன்று வாக்களிக்க சென்ற பொழுது இடம் பெற்றுள்ளதாக காவல்துறையிடம் முறைப்பாடு முடப்பாடி செய்யப்பட்டுள்ளது.
இன்று 243 வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற உள்ளுராட்சி சபை தேர்தல் பரபரப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் மான் கட்சி சார்பில் போட்டியிட்ட, கணேச பிள்ளை பாலச்சந்திரன் அவர்களது சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மர்ம நபர்கள் இவரது சங்கிலியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றதாக போலீசாரின் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சங்கிலி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் வேட்பாளருக்கே பாதுகாப்பு இல்லா நிலை காணப்படுகின்ற பொழுது ,சாதாரண அப்பாவி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி இதனூடாக எழுப்பப்படுகிறது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வேட்பாளர் ஊர்க்காவல்துறை போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த திருட்டு சம்பவம் விசாரிக்கப்பட்டு திருடர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்களா, அல்லது தப்பி விடப்படுவார்களா என்பதே இப்பொழுது உள்ள கேள்வியாகும் .
மான்காட்சி வேட்பாளருக்கு வந்த சோதனை மரண சோதனதான் . தேர்தலில் நின்றது மகா தப்பு என்பதை இப்பொழுது தான் ஐயா உணர்ந்திருப்பார் போல் உள்ளது .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

யாழில் 3519 வேட்பாளர்கள் போட்டி
யாழில் 3519 வேட்பாளர்கள் போட்டி
யாழில் 3519 வேட்பாளர்கள் போட்டி யிட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, 3519 வேட்பாளர்கள் போட்டியிட்டதாக தெரிய வருகிறது.
இதற்காக யாழ்ப்பாணத்தில் 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன .
இந்த தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நான்கு லட்சத்தி 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று இடம்பெற்ற இந்த தேர்தலில் பல கட்சியைச் சேர்ந்தவர் போட்டியிட்டார்கள் .
243 சுயாட்சி குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3519 பேர் களத்தில் இறங்கியதே மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இத்தனை ஆயிரம் பேர் வேட்ப்பாளராக இம்முறை களமிறங்கிய போதும் , இவர்கள் எங்கு இருந்தார்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி மட்டும் இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.
ஆக அரசியல் களம் ஒரு சாக்கடையாக மாறி உள்ளது. இந்த வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பு காண்பிப்பதே இவை எடுத்துக்காட்டுகிறது.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

பண கொள்ளை சிக்கிய அர்ச்சுனா
பண கொள்ளை சிக்கிய அர்ச்சுனா
பண கொள்ளை சிக்கிய அர்ச்சுனா ராமநாதன் பாராளுமன்ற உறுப்பினர் நிலை பரிதாபமாக உள்ளது.
கடந்த பத்து மாதங்களாக தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளை செய்யப்போவதாக தெரிவித்து வந்தார் .
தானே தமிழருடைய மீட்பராக கூறிக்கொண்டு இந்த மக்கள் இடங்களுக்குள் நுழைந்த அர்ச்சுனா இராமநாதன் என்ற வைத்தியர் ,தற்பொழுது அடித்த பண கொள்ளை தொடர்பான விடயங்கள் அம்பலமாகி இருக்கிறது.
மக்களுக்கு உதவுகிறேன் என வெள்ள நிவாரணத்துக்கு வாங்கிய 12 லட்சம், மருத்துவ முகாம் அமைப்பதற்காக வாங்கப்பட்ட 35 லட்சம், பாராளுமன்ற தேர்தலில் ஊடாக பெறப்பட்டதாக சொல்லப்பட்ட 46 லட்சம்.
அதைவிட மேலதிகமாக அனுப்பிய காசுக்கு மேல் என்பன 90 கோடிகளுக்கு மேல் கொள்ளையடித்து ஏப்பம் விட்டதாக குற்றம் சுமத்த படும் அர்ச்சனா, இப்பொழுது வசமாக சிக்கினார்.

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்திலிருந்து, அதன் பின்னர் ஏற மறுத்து பாராளுமன்ற தேர்தல் ஒதுங்கிய அர்ச்சனா ,அதன்பின்னர் இந்த உள்ளூராட்சி தேர்தல் வரை இரண்டு தளங்களை தனக்து பண தேவைக்கு சாதகமாக பயன்படுத்தினார்.
அதில் அவர்கள் அனுப்பிய பணத்தை வாங்கிவிட்டு தான் பெற்றுக் கொள்ளவில்லை என நாடகமாடினார்.

அந்தக் கபட நாடகத்தை ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்டிய நிலையில் ,அர்ஜுன இராமநாதன் மானங்கெட்டு மக்கள் முன்னால் அவமானப்பட்டு நிற்கின்றார்.
பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் என்பது இதுதான் போலும் வசமாக அர்ச்சனா எம் பீ சீக்கினார் .
தொடர்ந்தும் ஒரு மக்களை ஏமாற்றுகின்ற பொழுது ஒரு நாள் அந்த மக்களினால் விரட்டப்படுவேன் என்பதை கூட மறந்து ,தான் தோன்றித்தனமாக ஆடிய அர்ச்சுனா ராமநாதன் நிலவரம் இப்பொழுது பரிதாபகரமாக உள்ளது.
கேள்விகள் எதற்கும் பதில் இல்லாமல் திணறியதும், ஆதாரங்களுடன் பணத்திருட்டை அம்பலப்படுத்தியதும் ,மக்கள் முன்னால் இப்பொழுது திருடன் பட்டத்துடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறார்.
அர்ச்சுனா இராமநாதன் மற்றும் அவரது சகோதரர் ரகுடாம் ஆகியோரே மிக பெரும் பணக்கொள்கையில் ஈடுபட்டார்கள்.
என்பதாக மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வந்த நிலையில், இப்போது அர்ச்சனா பணம் பெற்றுக்கொண்ட ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டதை அடுத்து சிக்கியுள்ளார் .
இதுதான் மக்கள் தண்டனை தீர்ப்பாக இன்று வழங்க பட்டுள்ளது .அர்ச்சுனா எம்பி பண கொள்ளையன் என்பது அம்பலமாகியுள்ளது .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது









































