மாம்பழம் விற்ற பட்டதாரி ஆளுநர் செயலகம் பரபரப்பு
Posted in இலங்கை செய்திகள்

மாம்பழம் விற்றபட்டதாரி ஆளுநர்செயலகம் பரபரப்பு

மாம்பழம் விற்றபட்டதாரி ஆளுநர்செயலகம் பரபரப்பு

மாம்பழம் விற்றபட்டதாரி ஆளுநர்செயலகம் பரபரப்பு பட்டதாரி ஒருவர் ஆளுநர் செயலகம் முன்பாக மாம்பழ விற்பனையில் ஈடுபட்டதால் அங்கு அசெளகரிய சூழ்நிலை ஏற்பட்டு வளாகம் பரபரப்பாகியுள்ளது.

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரி ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்பாக நேற்று (26)

தனது பட்டத்தை மாம்பழக் கூடையில் வைத்துக்கொண்டு மாம்பழ வியாபாரத்தில் ஈடுபட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் பட்டத்தை முடித்துக்கொண்ட அவர், தனக்கு இதுவரையில் எந்தத் தொழிலும் கிடைக்கவில்லை என்றும்,

க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தர படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு இலங்கை அரசு தொழில் வழங்கி வருகின்றன. ஆனால் பல்கலைக்கழகம் சென்று பட்டம்பெற்ற எங்களுக்கு

எந்தத் தொழிலையும் வழங்க முன்வரவில்லை. இது எந்த விதத்தில் நியாயம் என்று நான் கேட்கிறேன்.

க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தர படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு அரச தொழில் மிக சுலபமாக கிடைக்கின்றன. அவ்வாறனவர்களுக்கு தொழில் வழங்கும் செயற்பாட்டில் அதிக முக்கியத்துவத்தை அரசு கொடுப்பதாக சொல்லியிருந்தால்,

நாங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று ஏன் பட்டம்பெறவேண்டும்? எங்களின் பணத்தையும், ஐந்து வருடங்களையும் அநியாயமாக செலவு செய்திருக்கமாட்டோம்.

பட்டம் வைத்திருக்கும் நாங்கள் மாம்பழம் மற்றும் மீன் வியாபாரிகளாக தொழில் செய்யவேண்டிய நிலைமைக்கு இன்று ஆளாகியுள்ளோம்.

ஆனால் க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தரம் கற்றவர்களுக்கு அரச தொழில் மிக சுலபமாகக் கிடைத்து தொழிலை செய்பவர்களாக இருக்கின்ற நிலைமையே எமது நாட்டில் உள்ளது.

இதை பார்க்கும் போது பெரும் மன உளைச்சலை எங்களுக்கு ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசே எங்களின் பட்டத்திற்கு தொழில் தரவேண்டும். அல்லது எங்களின் பட்டத்தை மீளப்பெற வேண்டும் என்றே நான் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று அந்த பட்டதாரி தெரிவித்தார்.