கடந்த ஆண்டில் மொத்தம் 312177 மோட்டார் வாகனங்கள் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

கடந்த ஆண்டில் மொத்தம் 312177 மோட்டார் வாகனங்கள் பதிவு

கடந்த ஆண்டில் மொத்தம் 312177 மோட்டார் வாகனங்கள் பதிவு

கடந்த ஆண்டில் மொத்தம் 312177 மோட்டார் வாகனங்கள் பதிவு 2025 ஆம் ஆண்டில் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மோட்டார் சைக்கிள் பதிவுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

கடந்த ஆண்டில் மொத்தம்

வெனிசுலா விவகாரம் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் கேள்வி
வெனிசுலா விவகாரம் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் கேள்வி

கடந்த ஆண்டில் மொத்தம் 312,177 மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்கள்

ஆகும், அவை மொத்தத்தில் 223,228 ஆகும் என்று JB Securities (Pvt) Ltd தெரிவித்துள்ளது.

நவம்பர் 2023 முதல் நவம்பர் 2025 வரையிலான வாகனப் பதிவுகள் குறித்த நிறுவனத்தின் பகுப்பாய்வு, 2024 உடன் ஒப்பிடும்போது 2025 இல் பதிவுகளில்

குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியது. கடந்த ஆண்டு, 22,381 மோட்டார் கார்கள் பதிவு செய்யப்பட்டன, இது 2024 இல் வெறும் 823 வாகனங்களாக இருந்தது.

பிரீமியம், ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனப் பிரிவுகளின் வளர்ச்சியையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 985

பிரீமியம் பயணிகள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன, அதே நேரத்தில் 16,071 ஹைப்ரிட் வாகனங்கள் மற்றும் 36,501 மின்சார வாகனங்கள் ஆண்டு முழுவதும் பதிவு செய்யப்பட்டன.

முச்சக்கர வண்டிகள்

முச்சக்கர வண்டிகள் வியத்தகு உயர்வைக் கண்டன, 2024 இல் 8 ஆக இருந்த நிலையில், 2025 இல் 13,768 பதிவு செய்யப்பட்டன, மேலும் பேருந்து பதிவுகள் 2024 இல் 121 இலிருந்து 2025 இல் 722 ஆக அதிகரித்தன.

வாகனப் பதிவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பு, அதிகரித்து வரும் நுகர்வோர் தேவை மற்றும் இலங்கையில் கலப்பின மற்றும் மின்சார வாகனங்களின் வளர்ந்து

வரும் தத்தெடுப்பு இரண்டையும் பிரதிபலிக்கிறது என்று ஜேபி செக்யூரிட்டீஸ் குறிப்பிட்டது

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்
Posted in இலங்கை செய்திகள்

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் ,மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (11) மதியம், கல்கிஸ்ஸ பகுதியில் லொறி சாரதி முந்திச் செல்ல முயன்ற போது, லொறியின் இடது பக்கத்தின் நடுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது.

இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லொறியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் விழுந்து நசுங்கிப் போயுள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ ஸ்ரீ தர்மானந்த மாவத்தையைச் சேர்ந்த 75 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி யாகியுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.

வாகரைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு நண்பர்கள் கிண்ணியாவுக்கு சென்று ஓட்டமாவடி பகுதியில் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, விபத்தில் சீக்கி இருவர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி வேகமாக மோட்டார் சைக்கிளை இவர்கள் ஒட்டி சென்றதன் காரணத்தினால் ,இந்த விபத்தில் அவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் முஸ்லிம் வாலிபர்கள் என தெரிய வருகிறது.

19 வயதுடைய இரு இளைஞர்களும் இந்த வீதி விபத்தில் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த இரண்டு வாலிபர்களும் கூடிய சடலங்கள் ஜனசகா வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு,

பின்னர் சடல பரிசோதனைக்காக நள்ளிரவு 2 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்கள் ,நாள்தோறும் 7க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான புள்ளி விவரங்கள் தெரிவித்திருந்தது.

அதிகரித்து செல்லும் வீதி விபத்திற்கு காரணம் யார் ,ஆளும் அரசு காவல்துறை என்ன செய்து கொண்டுள்ளார்கள் ..?அப்படி என்றால் யார் மீது பிழை..?

இவ்வாறு கேள்வி மேல் கேள்விகளாக தொடுக்கப்படுகிற பொழுதும் ஆளுகின்ற அரசு அதிகாரங்கள் பதில் சொல்ல மறுத்து வருகின்றமே மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும்.

சோமாலிய தலைநகரில் மோட்டார் தாக்குதல் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர்
Posted in உலக செய்திகள்

சோமாலிய தலைநகரில் மோட்டார் தாக்குதல் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர்

சோமாலிய தலைநகரில் மோட்டார் தாக்குதல் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர்

சோமாலிய தலைநகரில் மோட்டார் தாக்குதல் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர் ,சனிக்கிழமை சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் இரண்டு குடியிருப்புப் பகுதிகளில் மோட்டார் குண்டுகள் தாக்கியதில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அனடோலுவுடன் தொலைபேசியில் பேசிய அருகிலுள்ள ஷிபிஸ் மாவட்டத்தின் பாதுகாப்பு அதிகாரி அலி அகமது, வார்தா நபாடா மற்றும் போந்தேர் மாவட்டங்கள் தாக்கப்பட்டதாகவும், குறைந்தது ஆறு பேர் காயமடைந்ததாகவும் கூறினார்.

மதராசா ஆசிரியர் மற்றும் ஒரு வயதான பெண்மணி ஆகிய இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

“உண்மையான இலக்கு எங்களுக்குத் தெரியாது, ஆனால் ஜனாதிபதி மாளிகை வார்தா நபாடாவில் அமைந்துள்ளது, இது பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.

சோமாலிய பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைந்து இயக்கக் கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், தாக்குதலில் எந்த வகையான மோட்டார் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மோட்டார் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழு அல்-ஷபாப் கடந்த காலங்களில் இதேபோன்ற தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியது.

சோமாலியா பல ஆண்டுகளாக பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது, முக்கிய அச்சுறுத்தல்கள் அல்-ஷபாப் மற்றும் ISIS பயங்கரவாத குழுக்களிடமிருந்து வெளிப்படுகின்றன.

அல்-ஷபாப் 16 ஆண்டுகளுக்கும் மேலாக சோமாலிய அரசாங்கத்திற்கு எதிராகப் போரை நடத்தி வருகிறது, மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு

மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு

மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு,பல மோட்டார் சைக்கிளை திருடி விற்று வந்த திருடன் ஒருவன் போலீசாரின் சிறப்பு குழுவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இவரால் திருடப்பட்ட 4-க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவர்களுடன் போதை வஸ்து பயன்படுத்தி விற்பனையில் ஈடுபட்ட வந்த பொழுதே போலீசாரின் சிறப்பு குழுவினால் இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

மேற்கொண்ட விசாரணையில் அவர் மோட்டார் சைக்கிளை திருடி குற்றவாளிகள் மற்றும் போதை போல் கடத்தல் கடத்தலுக்கு விட்டு வந்துள்ளது அந்த செயலுடன் செயல்பட்டு வந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு இந்த திருட்டில் ஈடுபட்டிருந்தவர் 28 வயதுடைய இளம் வாலிபர் எனவும் இவரால் எவ்வாறு இந்த மோட்டார் சைக்கிள் திருடப்படுகிறது என்ற வித்தையும் போலீசாருக்கு கற்றுக் கொடுத்தார்.

வீடியோ

இலங்கையில் நாடாளாவிய ரீதியில் நாளுக்கு நாள் பல மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு வருகின்ற அவ்வாறான திருடர்களில் ஒருவரை இப்பொழுது வசமாக மாட்டி.

அவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள் எவ்வாறு திருடப்படுகின்றன என்கின்ற வித்தையை காட்டிக் கொடுத்துள்ளார்.

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் உடுவில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ,காணி ஒன்றில் .மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ,அந்த காணியில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ள சம்பவம், யாழ்ப்பாணா மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாண பகுதியில் இவ்வாறான தொடர் வண்டிகள் கடத்தப்படுவது, டயர்கள் குத்தப்படுவது ,மற்றும் அதன் நபர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

நடத்தப்படுவது, மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்படுகின்றது சம்பவங்கள் தொடராக இடம் பெற்று வருகின்றன.

யாழ்ப்பாண போலீசார்புலன் விசாரணை

இந்த காணியில் இந்த மோட்டார் சைக்கிள் எவ்வாறு எரிக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்கள் உடனடியாக தெரியவில்லை .

சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக, தற்பொழுது யாழ்ப்பாண போலீசார் தமது புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

யாழ்ப்பாணம் இலங்கையினுடைய கட்டுப்பாட்டுக்கு சென்றதன் பின்னர் ,சமீப காலமாக அங்கு தொடர்பான பல்வேறுப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .

மோட்டார் சைக்கிள் எரிப்பது கடத்துவது கொள்ளையடிப்பது, மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவது பேருந்துகள் மீது கற்கல் தாக்குவது என்ற விடயங்கள் அதிகரித்து காணப்படுகிறது .

மற்றும் வாகன விபத்தில் மக்கள் பலியாகி சம்பவங்கள் என்பன அதிகரித்து காணப்படுகின்றன .

அவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் ,இடம்பெற்ற இந்த மோட்டார் சைக்கிள் எரிப்பு சம்பவம் ,அந்த மக்கள் மத்தியில் ஒருவித பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிட்டல் முறையில் மோட்டார் வாகன பதிவு
Posted in இலங்கை செய்திகள்

டிஜிட்டல் முறையில் மோட்டார் வாகன பதிவு

டிஜிட்டல் முறையில் மோட்டார் வாகன பதிவு

இன்று முதல் டிஜிட்டல் முறைமைக்கமைய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஊடாக வழங்கப்படும் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சகல கிளைகள் ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்காக டிஜிட்டல் முறைமையின் கீழ் பதிவு செய்து நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்

மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு

மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு

தென்மராட்சி – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஞாயிற்றுக் கிழமை (08) காலை தனது கால்நடைகளை கொண்டு சென்ற பெண் ஒருவரால் குறித்த ஆயுதங்கள் வயல் பகுதியில் பற்றையோரமாக இருப்பது தெரியவந்துள்ளது.

மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு

இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ஆயுதங்களை பார்வையிட்டதுடன் அவ்விடத்தில் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவினை பெற்று குறித்த ஆயுதங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.