கோபா குழுவின் தலைவர் ராஜினாமா
Posted in இலங்கை செய்திகள்

கோபா குழுவின் தலைவர் ராஜினாமா

கோபா குழுவின் தலைவர் ராஜினாமா

கோபா குழுவின் தலைவர் ராஜினாமா அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்றத்தில் (06) இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார்.

அரசாங்கக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு வழி வகுக்கும் வகையில் இந்த முடிவு

எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் குறிப்பிட்டார்.

வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

வெடிபொருட்களுடன் ஒருவர் கைது ரக்வானை, மெதகங்கொட பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை

உடவலவை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து சுமார் 3 கிலோ கிராம் கோர்டைட், 9 கிலோ கிராமுக்கு மேற்பட்ட அம்மோனியா, 15 வோட்டர் ஜெல்

என்ற வெடி மருந்து, 28 டெட்டனேட்டர்கள் மற்றும் 22 அடி நீளமான நூல் ஆகியவை மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்

கைது செய்யப்பட்ட நபர் ரக்வானை பகுதியை சேர்ந்த 78 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மஹிந்தானந்த
Posted in இலங்கை செய்திகள்

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மஹிந்தானந்த

சிறைத்தண்டனை அனுபவிக்கும் மஹிந்தானந்த

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மஹிந்தானந்த ,சிறைத்தண்டனை அனுபவிக்கும் வரும் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில் .

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணி

ஆவணங்களை அழைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டது.

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது சதோச நிறுவனம் மூலம் 14,000 கேரம் பலகைகள் மற்றும் 11,000 தாம் பலகைகளை

இறக்குமதி செய்து, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர்

விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டி தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ மற்றும்

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி

ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று அழைக்கப்பட்டது.

இதன்போது பட்டியலிடப்பட்ட ஆவணங்கள் அல்லது அவற்றின் அசல் நகல்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தால், இன்றிலிருந்து

ஒரு வாரத்திற்குள் அவற்றை நீதிமன்றப் பதிவாளரிடம் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சஷீந்திர ராஜபக்ஷ கைது
Posted in இலங்கை செய்திகள்

சஷீந்திர ராஜபக்ஷ கைது

சஷீந்திர ராஜபக்ஷ கைது

சஷீந்திர ராஜபக்ஷ கைது ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம்

மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, செவனகல கிரியிப்பன் வெவ பகுதியில் உள்ள காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் உட்பட பல

சொத்துக்கள் 09.05.2022 அன்று நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்தன.

மேற்படி சொத்துக்கான இழப்பீட்டின் போது, அந்த காணி இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமானது என

அடையாளப்படுத்தப்பட்டதால் இழப்பீடு மறுக்கப்பட்ட போதிலும், அதற்கு மாறாக, இழப்பீட்டு அலுவலகத்தில்

இணைக்கப்பட்ட சில அரசு அதிகாரிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்ததாக சஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊழல் செய்தல் மற்றும் சதி

அத்துடன் இந்த இழப்பீட்டை பெற்றதன் மூலம் ஊழல் செய்தல் மற்றும் சதி செய்தலுடன், இந்த சொத்துக்கள் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமானது

என்பதால், மகாவலி அதிகாரசபையின் சொத்துக்கள் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கைதான சஷீந்திர ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனை
Posted in இலங்கை செய்திகள்

விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனை

விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனை

விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனை ,விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விளையாட்டை மக்கள் மயமாக்குவதற்காக

விளையாட்டை மக்கள்மயமாக்குவதற்காக, விளையாட்டுத் துறையில் மனித வளத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்வது விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் முதன்மைக் கருமமாகும்.

போதுமான விளையாட்டு வசதிகள் இல்லாத இளம் தலைமுறையினர், வயது வந்தோர், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளுக்காக விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும்

நோக்கத்துடன், பாடசாலைக் கட்டமைப்புகள், பொது விளையாட்டு அரங்குகள் மற்றும் இளைஞர் கழகங்களுக்காக மூன்று திட்டங்களை அமுல்படுத்த விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குதல்

அதன்படி, விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குதல், கிராமிய பாடசாலைகள் மற்றும் இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், மற்றும் இனங்காணப்பட்ட

விளையாட்டு பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் ஆகிய திட்டங்களை 2025-2027 காலப்பகுதியில் விளையாட்டு

அபிவிருத்தி திணைக்களம் மூலம் அமுல்படுத்துவதற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை
Posted in இலங்கை செய்திகள்

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை ,தற்போது தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு செயலாளர், ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்னா தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு சீனா நன்கொடை அளிக்கும் அதிகாரப்பூர்வ விழாவில் பங்கேற்று பாதுகாப்பு செயலாளர் இதனை தெரிவித்தார்.

பாதாள உலகம் ஒருபோதும் தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது அல்ல என்றும், அது பொது பாதுகாப்பு அமைச்சினால்

கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.

“தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லை. இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இங்கு வர முடிந்ததுதானே.

பாதாள உலகம் தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது அல்ல. இது பொது பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

தேசிய பாதுகாப்புக்கும் பொலிஸாருக்கும் தேவையான ஆதரவை நாங்கள் வழங்குகிறோம். தேசிய பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை.

பாதாள உலகம் குழப்பத்தில் உள்ளது. பாதாள உலகம் குழப்பத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் பாதாள உலகம் அரசியல் பாதுகாப்பை இழந்துவிட்டது.

அதனால்தான் பாதாள உலகம் குழப்பத்தில் உள்ளது. பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

பொது பாதுகாப்பு அமைச்சு வேலைத்திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. அதற்கு சட்ட கட்டமைப்பிற்குள் நாங்கள் கட்டுப்பாடுகளை வழங்குகிறோம்.”

கேள்வி – நாள் தோறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாவது பாதாள உலகத்திற்கு அரசியல் பாதுகாப்பு இல்லாததால்தானா?

“ஆமாம், அதுவும் ஒரு காரணம்தான். பாதாள உலகத்திற்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

அதுதான் அவர்களுக்குத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுகின்றன. அப்படித்தான்.”

தேசபந்து பதவி நீக்குவதற்கான விவாதம்ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

தேசபந்து பதவி நீக்குவதற்கான விவாதம்ஆரம்பம்

தேசபந்து பதவி நீக்குவதற்கான விவாதம்ஆரம்பம்

தேசபந்து பதவி நீக்குவதற்கான விவாதம்ஆரம்பம் ,தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம் ஆரம்பம்.

பொலிஸ்மா அதிபர் பதவி

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து ஆளுங்கட்சி பாராளுமன்ற

உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர், அதாவது 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பதன் மூலம் நிறைவேற்ற முடியும்.

சபாநாயகர் அறிவித்த பின்னர்

பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த பின்னர், பொலிஸ்மா அதிபர் பதவிக்கான பெயரை ஜனாதிபதி அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைப்பார்.

குரங்கினால் மின்சார தடை
Posted in இலங்கை செய்திகள்

குரங்கினால் மின்சார தடை

குரங்கினால் மின்சார தடை

குரங்கினால் மின்சார தடை ,இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில் குரங்கு மோதியதால் 2025 பெப்ரவரி 09 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை தொடர்பான

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணை இன்று (05) காலை ஆரம்பமானது.

கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இந்த விசாரணையில், இலங்கை மின்சார சபையின் பதில் பொது மேலாளர்

சிரேஷ்ட அதிகாரிகள்

மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இன்று காலை வாக்குமூலங்களை வழங்கினர்.

பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில் ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக, 2025 பெப்ரவரி 09 ஆம் திகதி நாடு முழுவதும் திடீரென மின் தடை ஏற்பட்டது.

அப்போது, எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயக்கொடி, மின்மாற்றி அமைப்பில் குரங்கு மோதியதால் மின் தடை ஏற்பட்டதாகக் கூறினார்.

இலங்கை மின்சார சபை

எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் அறிக்கைகளில் திருப்தியடையாததால், பொது பயன்பாட்டு ஆணைக்குழு மறு விசாரணை நடத்த முடிவு செய்தது.

அதன்படி, இந்த பகிரங்க விசாரணை இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான நிலையில், மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ளது.

காற்றாலை மின்திட்டம் விசேட கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

காற்றாலை மின்திட்டம் விசேட கலந்துரையாடல்

காற்றாலை மின்திட்டம் விசேட கலந்துரையாடல்

காற்றாலை மின்திட்டம் விசேட கலந்துரையாடல் ,மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் 07 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர்கள் தலைமையில் விசேட

கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று (05) பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தேன்.

காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது குறித்து மன்னார் மாவட்டத்தில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கும்

ஜனாதிபதியை சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாட வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு அவரிடம் கோரி இருந்தேன்.

என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க இணைந்து இதற்கு பொறுப்பான அமைச்சரை சந்தித்து உரையாடினோம்.

குறித்த உரையாடலின் பலனாக எதிர்வரும் 7 ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முக்கிய பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் தலைமையில் பாராளுமன்ற

வளாகத்தில் குறித்த கூட்டம் இடம்பெற உள்ளது. ஜனாதிபதியும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது.

குறித்த கலந்துரையாடல் இடம்பெறும் வரை எவ்வித நகர்வும் முன்னெடுக்கப்படாது என உரிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் இறுதி முடிவை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

சர்ச்சையாகியுள்ள இஸ்ரேலிய பிரஜைகள்
Posted in இலங்கை செய்திகள்

சர்ச்சையாகியுள்ள இஸ்ரேலிய பிரஜைகள்

சர்ச்சையாகியுள்ள இஸ்ரேலிய பிரஜைகள்

சர்ச்சையாகியுள்ள இஸ்ரேலிய பிரஜைகள் ,சர்ச்சையாகியுள்ள இஸ்ரேலிய பிரஜைகள் – அமைச்சர் விளக்கம்

இஸ்ரேலிய நாட்டினருக்கு இலவச விசாக்களை வழங்க வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வௌியாகி வருகின்றன.

இது தொடர்பில் இன்று (05) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, வெளியுறவு, வெளிநாட்டு

வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தலையீட்டுடன் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் அவர்கள் நாட்டிற்கு கொண்டு வரும் டொலர்

வருமானத்தின் அடிப்படையில் தொடர்புடைய நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

“நாம் எந்த நாட்டையும் வேறு கோணத்தில் பார்த்ததில்லை. நீங்கள் பார்த்தால், இவற்றில் வெவ்வேறு நாடுகள் உள்ளன. இந்த நாடுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை நாம் பெறும் டொலர் வருமானம் மற்றும்

வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகும். அந்தப் பட்டியலில் நாடுகளைப் பற்றி மிகவும் தெளிவாக உள்ளது.” என்றார்.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் காலத்தில் இஸ்ரேலில் இருந்து வரும் விமானங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து

இஸ்ரேலிய விமானங்கள் நாட்டிற்கு வரவில்லை என்றும் கூறிய அமைச்சர், ஒருவேளை இந்த ஆண்டின் பிற்பகுதியில் இஸ்ரேலிய விமானங்கள்

நாட்டிற்குத் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அறுகம்பை​ பகுதியில் இஸ்ரேலியர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது அவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்பதற்காக மட்டுமே என்று

கூறிய அமைச்சர், அதற்காக பொலிஸர் மற்றும் முப்படையினரும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அவர்கள் கூடும் இடங்கள் இருந்தால், அரசாங்கம் அவர்களை பொதுவான சுற்றுலாப் பயணிகளாகக் கருதி அவர்களுக்குப் பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது.

சுற்றுலாப் பயணிகள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ எங்கும் கூடினால், அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதால் இது சிறப்புப் பாதுகாப்பு அல்ல.

இங்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டினருக்கும், அவர்களின் நாட்டைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்பை வழங்குவதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் இன்று எழுப்பிய கேள்வி
Posted in இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் இன்று எழுப்பிய கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் இன்று எழுப்பிய கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் இன்று எழுப்பிய கேள்வி ,நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் இன்று (05) எழுப்பிய கேள்வி.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இலக்கம் 2-11/25/01 மூலம், 2025 மே 23 க்கு முன்பு தாபிக்கப்பட்ட சகல இளைஞர் கழகங்களின் சட்டப்பூர்வத்தன்மையையும் இரத்துச் செய்து,

புதிய இளைஞர் கழகங்களை தாபித்தல்

புதிய இளைஞர் கழகங்களை தாபித்தல் அல்லது மறுசீரமைத்தல் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சகல இளைஞர் கழகங்களும் அரசியல்மயமாக்கலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, அரசியல் நலன்களின் அடிப்படையில் இளைஞர் கழகங்களுக்கு நிறைவேற்று தர உத்தியோகத்தர்களை நியமிக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இளைஞர் கழக அமைப்பினது இறையாண்மை மற்றும் ஜனநாயக செயல்பாட்டை ஆபத்தில் ஆழ்த்தி, புதிய கட்டளைகள் மூலம் தமது அரசியல் கூட்டாளிகளுக்கு நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியாக இது

தெரிகிறது. எனவே, இது தொடர்பாக அரசாங்கம் இந்த சபையில் விளக்கத்தை வழங்க வேண்டும் என்பதை நான் இங்கு வலியுறுத்துகிறேன்.

இதன்பிரகாரம், பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

  1. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் இலக்கம் 2-11/25/01 இன் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் கீழ், புதிய இளைஞர் கழகங்களை தாபித்தல் அல்லது மறுசீரமைத்தல் நடவடிக்கைகளின் போது இளைஞர் கழகங்கள் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?
  2. அவ்வாறில்லையெனில், நாட்டில் காணப்படும் பல இளைஞர் கழகங்களில் (களுத்துறை, பொலன்னறுவை, பதுளை, கேகாலை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, கொழும்பு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில்) நிறைவேற்று தர உத்தியோகத்தர் பதவிகளுக்கு தனது அரசியல் கூட்டாளிகளை மட்டுமே நியமிக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருவதானது அரசாங்கம் இளைஞர் கழகங்களை அரசியல்மயமாக்குவதைக் குறிக்காதா?
  3. அல்லது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் 2025.05.16 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட கடிதத்தின் மூலம் 2025.05.23 க்கு முன்னர் தாபிக்கப்பட்ட சகல இளைஞர் கழகங்களின் சட்டபூர்வமான தன்மையையும் இரத்துச் செய்து, புதிய இளைஞர் கழங்களைத் தாபித்தல் அல்லது மறுசீரமைத்தல் நடவடிக்கையில் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் யாது?
  4. சகல இளைஞர் கழகங்களுக்கும் பொருந்தக்கூடிய நிலையியற் கட்டளைத் தொகுப்பை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்வைத்துள்ளதா? அந்த நிலையியற் கட்டளைகள் இந்தச் சபையில் சமர்ப்பிக்கப்படுமா?

  1. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் முன்வைக்கப்பட்டுள்எ புதிய நிலையியற் கட்டளைகள் மூலம் இளைஞர் கழகத்தில் நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர் பதவியை வகிப்பதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் செயற்பாட்டு உறுப்பினராக
  2. இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதா? இது வெறுமனே தமது அரசியல் கூட்டாளிகளை இளைஞர் கழகங்களின் நிறைவேற்று தர பதவிகளுக்கு நியமிப்பதற்கு எடுத்த செயல்முறையல்லவா? இளைஞர் கழக யாப்பை மீறும் செயலாக இதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?

கிராம சேவைப் பிரிவுகளிலிருந்து மேல் நோக்கி மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் கால் பதிக்க இளைஞர்களுக்கு களமமைத்த இந்த இளைஞர் கழங்கள் கட்சி சார்பின்றி செயல்பட்டன. எந்த இளைஞரும் இதில் இணைந்து

கொள்ளும் நிலை காணப்பட்டது. கட்சி பேதங்கள் இல்லாமல் செயல்பட சிறந்த தீர்வு இளைஞர் சம்மேளனங்களும் இளைஞர் பாராளுமன்றத்தையும் ஒன்றிணைத்து அரசாங்கம் 150 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கினாலும், 450

மில்லியன் ரூபா மதிப்பு

மில்லியன் ரூபா மதிப்புள்ள திட்டமாக இது மாற்றப்பட்டது. கிராமத்துக்கு ஒரு கோடி திட்டத்தின் கீழ் 4500 இலட்சம் ஒதுக்கப்பட்டாலும், 9000 இலட்சம்

மதிப்புள்ள சேவைகள் இதன் மூலம் ஆற்றப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

பேருந்து சேவைகள் நிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து சேவைகள் நிறுத்தம்

பேருந்து சேவைகள் நிறுத்தம்

பேருந்து சேவைகள் நிறுத்தம் ,கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

தனியார் பேருந்து

கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளுக்கு சில

இடங்களில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு

கம்பஹா தனியார் பேருந்து

முன்னெடுக்கப்படுவதாக கம்பஹா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

மலசலகூட குழியில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மலசலகூட குழியில் சடலம் மீட்பு

மலசலகூட குழியில் சடலம் மீட்பு

மலசலகூட குழியில் சடலம் மீட்பு ,பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிருவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (3) மாலை 05.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிறுவனின் தந்தை வீடமைப்பு பணியில்

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சிறுவனின் தந்தை வீடமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை சிறுவன் கை கழுவுவதற்காக

வீட்டின் பின்புறத்திற்கு சென்ற போது, அங்கு நீர் நிரம்பி காணப்பட்ட குழியில் தவறிவிழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகனை காணவில்லை

தனது மகனை காணவில்லையென சிறுவனின் தந்தை இரண்டு முறைக்கு மேல் கூக்குரல் ஏழுப்பியும் மகன் வாரததை தொடர்ந்து, தந்தை வீட்டின் பின்புறமாக சென்று பார்த்த போது சிறுவனின் பாதணிகள் இரண்டும் மிந்து

கொண்டு இருந்ததாகவும் அதன் பிறகு சிறுவனை மீட்டெடுத்து டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் மரணித்திருந்ததாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிவ் தமிழ் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்று வந்த லியோ பெற்ரீக் எலன் சசன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக

மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா

கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இந்த தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தமகன் யோஷித வழக்கு ஒத்திவைப்பு

மஹிந்தமகன் யோஷித வழக்கு ஒத்திவைப்பு

மஹிந்தமகன் யோஷித வழக்கு ஒத்திவைப்பு ,பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக

வழக்கு விசாரணை

தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை ஒக்டோபர் 22 ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வழக்கு இன்று (4) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப்

எனினும், இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன இன்று விடுமுறையில் உள்ளதால், வழக்கை ஒக்டோபர் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 மற்றும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முறைகேடாக ஈட்டிய 59 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மூன்று தனியார் வங்கிக்

கணக்குகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக குறித்த

பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபாரால் மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்
Posted in இலங்கை செய்திகள் வன்னி மைந்தன் உதவி

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்


கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல் ,மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் காந்தன்
வன்னி மைந்தன் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள 100 மிதிவண்டி

திட்டத்தின் அடிப்படையில் 45 ஆவது முதல் 49வது மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

5 மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மிதிவண்டிகளை லண்டனில் உள்ளயெயா என அழைக்கப்படும் காந்தன் அவர்கள் வழங்கி வைத்துள்ளார் .

அவர் வழங்கிய ஒரு லட்சத்து 35 ஆயிரம் நிதி பங்களிப்பில் இந்த ஐந்து மிதிவண்டிகள். தலா ஒன்று 27 ஆயிரம் ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் புண்ணியமூர்த்தி

இந்த நிகழ்வை முன்னெடுத்து ஒருங்கிணைத்த முன்னாள் அதிபர் புண்ணியமூர்த்தி அவர்களுக்கும், பாடசாலை இந்நாள் அதிபருக்கும் , பாடசாலை மாணவர்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து நமக்கு தோளோடு தோள் கொடுத்து உதவி புரிகின்ற அணைத்து உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாடசாலைக்கு இந்த ஐந்து மிதிவண்டிகளை வழங்கிய அண்ணன் காந்தன் அவர்களுக்கு மீளவும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி அண்ணா.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

எம்பிக்களின் ஓய்வூதியம் இரத்து
Posted in இலங்கை செய்திகள்

எம்பிக்களின் ஓய்வூதியம் இரத்து

எம்பிக்களின் ஓய்வூதியம் இரத்து

எம்பிக்களின் ஓய்வூதியம் இரத்து ,பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான திட்டம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் குறைப்பது தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற

உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் வசந்த சமரசிங்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் திட்டம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க நேற்று (02) தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அரசியலில் முழுநேர ஈடுபாட்டால் தான் வேலையை இழந்துள்ளதாகவும், இந்த சூழ்நிலையில் தனது ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால்,

தான் வாழ்வதற்கான வருமானம் இல்லாமல் போகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அத்தகைய திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதை நிறைவேற்றுபவர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி, அவர் தனது பேஸ்புக் கணக்கில் அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக அனுராதபுரம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க,

அரசியல் செய்வது வாழ்வதற்காக அல்ல

“அரசியல் செய்வது வாழ்வதற்காக அல்ல என்றும், நமக்கு ஒரு நாடு வேண்டும் என்பதை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும், பொதுத் தேர்தலுக்கு முன்பும் சொன்னோம். உலகில் வேறு எங்கும் இங்குள்ள சலுகைகள் இல்லை.

ஜனாதிபதிகள் ஓய்வு பெறும்போது அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு மக்களிடம் ஏன் விடப்படுகிறது. அவர்களால் அந்த சுமையை தாங்க முடியவில்லை.

நம் நாட்டில் இன்னும் மக்கள் கடுமையாக கஷ்டப்படும் பகுதிகள் உள்ளன. மக்கள் பணத்திலிருந்து இவ்வாறான பயன்பாடுகளை நிறுத்துவோம்.

நாங்கள் ஜனாதிபதிகளின் சலுகைகளையும் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களையும் மாற்றுகிறோம். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தையும் இரத்து செய்வோம்.

சொந்தமாக சட்டமூலங்களை உருவாக்கி மக்கள் மீது சுமையை சுமத்துவது நியாயமில்லை. தேர்தலுக்கு முன்பே நாங்கள் அதைச் சொன்னோம், அதைச் செயல்படுத்துவோம்.

அரசியலை அவர்களின் வாழ்வாதாரமாக மாற்றுவார்களானால், அது நாங்கள் நிராகரித்த ஒரு முறைமையாகும்.

அதற்காக யாரும் தற்கொலை செய்துகொள்ள தேவையில்லை. அது இல்லாமல் வாழ முடியவில்லை என்றால் அஸ்வெசுமவுக்கு விண்ணப்பித்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்”

கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை
Posted in இலங்கை செய்திகள்

கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை

கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை

கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை ,புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை என்றும், கல்வி மற்றும் தொழிற் துறைகளில் உயர் கல்வியைத் தொடர

பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்

பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாண கிறிஸ்தவ இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று (2) நடைபெற்ற வட மாகாண கற்றறிவாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடனான

சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

பாரம்பரிய கல்வி முறை

பாரம்பரிய கல்வி முறைக்குப் பதிலாக, பிள்ளைகள் கல்வி மற்றும் தொழிற் துறைகள் ஆகிய இரண்டு துறைகளிலும் உயர் கல்வியைத் தொடர உதவும்

வகையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மூலம் வரலாறு, சமயம் மற்றும் அழகியல் ஆகிய பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிலர் இன்னும் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.

இந்த தவறான கூற்றுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை. வரலாறு, அழகியல் அல்லது சமயம் ஆகிய பாடங்கள் எந்த வகையிலும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படவில்லை.

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ்

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ், மாணவர் சமூகத்தின் மீது சுமையை ஏற்படுத்தும் கல்விக்கு பதிலாக, பிள்ளைகளுக்கு அழுத்தம் இல்லாமல் கற்றுக்கொள்ளவும்,

அவர்கள் விரும்பும் பாடங்களை மேலும் கற்பதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தொழிலை தேர்வுசெய்யவும் சரியான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

தொழிற்கல்வியை பாடசாலைக் கல்வியினுள் கொண்டு வந்து, மாணவர்கள் கல்வித்துறை அல்லது தொழிற்கல்வி ஆகிய இரண்டு பாடப்

பிரிவுகளிலிருந்தும் தங்களுக்கு மிகவும் பொருத்தமான துறையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

தற்போதைய கல்வி சீர்திருத்தம் ஏற்கனவே தயாரித்து முடிக்கப்பட்ட இறுதி சீர்திருத்தம் அல்ல.

வல்லுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்

பாடங்கள் தொடர்பான வல்லுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் நேர்மறையான பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைக் கருத்தில்

கொண்டு, தேவையானவற்றை இணைத்து, தேவையற்றவற்றை நீக்கி, படிப்படியாக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் இது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

ஒருவர் கோரமாக வெட்டி படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் கோரமாக வெட்டி படுகொலை

ஒருவர் கோரமாக வெட்டி படுகொலை

ஒருவர் கோரமாக வெட்டி படுகொலை ,முதுகட்டுவ கடற்கரையில் இருதரப்பு கடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதம் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பலியாகி உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவள் மாராவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய அடையாளம் காணப்பட்டுள்ளது.

படுகொலைகளும் வன்முறை சம்பவங்களும்

இலங்கையில் தற்பொழுது சமீப காலங்களாக பல வெட்டுப் படுகொலைகளும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகிறது ,

மக்களுக்கிடையில் இடம் பெற்று வருகிற குரோத மனப்பான்மை காலமாகவே இந்த படுகொலைகள் இடம்பெற்று வருவதாக சமூகநல ஆர்வலர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன .

அதன் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட நபர் தொடர்பான பல விடயங்கள் வெளிவந்துள்ள நிலையிலும் ,

படுகொலை படுகொலையை மேற்கொண்ட நபர் தற்பொழுது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட கோபம்

ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட கோபம் காரணமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதனால் ஒருவருடைய வாழ்வியல் இன்று சிறைக்குள்

கழிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது மன வேதனைக்கு உள்ளான முடியுமாக காணப்படுகிறது.

ஒருநிமிட கோபம் பாவத்தை தேடும் என்பது இதுவாக காணப்படுகிறது என்பது தான் மிக முக்கியமான விடயமாக இருப்பதாக மக்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள் மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

சுவிசில் விளக்கேற்றல் நிகழ்வு படுதோல்வி
Posted in இலங்கை செய்திகள்

சுவிசில் விளக்கேற்றல் நிகழ்வு படுதோல்வி

சுவிசில் விளக்கேற்றல் நிகழ்வு படுதோல்வி

சுவிசில் விளக்கேற்றல் நிகழ்வு படுதோல்வி யில் அடைந்துள்ளதை அங்கிருந்தவரும் காணொளிகள் காண்பிக்கின்றன.

50,000 மக்கள் வருவார்கள் என எதிர்பார்த்து குவிக்கப்பட்ட கதிரைகளில், 50 பேரும் இல்லாமல் பரிதவித்த நிலை கண்டு வெட்கி தலை குனிந்து போனது ஏற்பாட்டு குழு.

தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வீர மரணம் அடைந்து விட்டதாக ,16 வருடங்களுக்கு பின்னர் விளக்கேற்ற வேண்டும் என வந்தவர்கள் இன்று வெட்கி தலை குனிந்த நிலை கண்டு உலகம் தமிழ் சிரிக்கிறது .

தமிழர் தேச இனத்தையும் , தமிழர் விடுதலையையும், தமிழ் இனத்தையும் கட்டிக்காத்த எங்களது கரிகால தலைவன் இறந்துவிட்டதாக, காட்டிக் கொடுத்த கயவர் கும்பல் அறிவித்தது.

மக்கள் மத்தியில் சலசலப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திய தலைவர் வீரவணக்க நிகழ்வு

அந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சலசலப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திய நிலையில் ,இன்று மூக்குடைப்பட்டு போய் இருக்கிறது இங்கே முன்னே வந்து கூறிய சிங்கள கூலிகள்.

இலங்கை சிங்கள உளவுத்துறையால் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வு பிசுபிசுத்து போனது.

நாங்கள் மேற்கொண்ட பரப்புரை காரணமாகவும் அதற்கு எதிராக பல தமிழர்கள் மேற்கொண்ட நிகழ்ச்சி நிரல் இன்று காணாமல் போய் உள்ளதை காண்பிக்கிறது .

ஆஸ்திரேலியா மற்றும் சுவிஸ் நாடுகளில் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு படு தோல்வி

ஆஸ்திரேலியா மற்றும் சுவிஸ் நாடுகளில் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு நடத்த வந்த விருமாண்டி கூட்டங்கள் ,இன்று கோமணத்துடன் ஓட வேண்டிய நிலையில் தலை குனிந்து நிற்பதை இந்த காட்சிகளை பார்த்த பின்னர் ஆவது தெரிந்து கொள்ளுங்கள்.

பல படையணிகள் என மலர் வளையம் வைக்கப்பட்டிருந்தது தான் சிரிப்பை ஏற்படுத்தியது. .

இந்த படையணிகளுடைய தளபதிகளில் யார் என்பதுதான் கேள்வியாகிறது.

ஆக மொத்தம் அலங்கோலமாய் போய் இருக்கிறது இந்த சிங்கு சா கைக கூலிகள் இந்த விளக்கேற்றல் நிகழ்வு.

வன்னி மைந்தன் டக் டாக் தளத்தில் இன்று இதுதான் பேசப்போகிறோம் லண்டன் நேரம் 5:00 மணிக்கு இணைந்து கொள்ளுங்கள் மக்களே .

ஆஸ்திரேலியா வீரவணக்க நிகழ்வு தோல்வி
Posted in இலங்கை செய்திகள்

ஆஸ்திரேலியா வீரவணக்க நிகழ்வு தோல்வி

ஆஸ்திரேலியா வீரவணக்க நிகழ்வு தோல்வி

ஆஸ்திரேலியா வீரவணக்கு நிகழ்வு தோல்வி அடைந்துள்ளதாக அங்கு திரண்ட மக்கள் கூட்டம் தெரிவித்துள்ளனர்.

திரளான மக்கள் கூட்டம் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தமிழருடைய மண்டபத்துக்கு முன்பாக திரண்ட பெரும் திரளான மக்கள் கூட்டம் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதனை அறிந்த கார்களில் வந்தவர் மண்டபத்துக்குள் நுழைய முடியாதபடி மக்கள் தடுத்தனர்.

தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.

தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக சிங்கள கூலிக் குழு ஒன்று வீரவணக்க நிகழ்வை நடத்த முற்பட்டது.

முகமூடிகள் தரித்து மக்கள் முன் தோன்ற மறுத்தவர்கள்

முகமூடிகள் தரித்து மக்கள் முன் தோன்ற மறுத்தவர்கள் ,தலைவர் இறந்துவிட்டார் என உரிமை கூற முற்பட்டதை அடுத்து ,மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரும் முறுகல் இடம்பெற்றுள்ளது .

அடையாளம் தெரியாத சிங்கள கூலிகளாகவும் இந்திய கூலிகளுக்கும் செயல்படும் கூலிகளே தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என இந்த வீரவணக்க நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதனைக் கண்டித்து தலைவர் மீதும் தமிழீழ மண் மீதும் தமிழீழ மக்கள் மீதும் பாசம் கொண்ட அறத்தமிழர்கள் திரண்டு எழுந்து தமது எதிர்ப்பை காட்டினர்.

இதனால் அந்த நிகழ்வு தோற்றுப் போனதை கீழே உள்ள காட்சிகள் ஊடாக நீங்கள் காணலாம்.

தலைவரையும் தமிழீழ மண்ணையும் நேசிக்கிற மானத் தமிழர்கள் இப்படித்தான் கிளெர்ந்தெழுவார்கள் என்பது சிங்கள கூலிகளுக்கும் வாடகை வாய்களுக்கும் இது ஒரு சாட்டை அடியாக காணப்படுகிறது.

இன்று மதியம் லண்டநேரம் ஐந்து மணிக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் இதுதான் பேச்சு.