Posted in Uncategorized

கொரோனா பாதித்த மாமனாரை தோளில் சுமந்து மருத்துவமனை சென்ற மருமகள்

கொரோனா பாதித்த மாமனாரை தோளில் சுமந்து மருத்துவமனை சென்ற மருமகள்

அசாமில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய மாநில அரசு வட்டியில்லா கடனுதவி வழங்குகிறது.

கொரோனா பாதித்த மாமனாரை தோளில் சுமந்து மருத்துவமனை சென்ற மருமகள் – குவியும் பாராட்டு
மாமனாரை தோளில் சுமந்து சென்ற மருமகள்

அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வருபவர் துலேஷ்வர் தாஸ் (75). இவரது மகன் சூரஜ். திருமணமாகி மனைவி நிகாரிகாவை வீட்டில் விட்டு விட்டு வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் மாமனாரை, நிகாரிகா கவனித்து வந்தார்.

இதற்கிடையே துலேஷ்வர் தாசுக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் மாமனாரை எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்று நிகாரிகா யோசித்தார்.

தாமதித்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அவர் சிறிதும் தாமதிக்காமல் கொரோனா பாதித்த தன் மாமனாரை தோளில் சுமந்து, கிடைத்த வாகனம் மூலம் அருகில் இருந்த

மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில், மாமனாரை தோளில் சுமந்து வந்ததால் நிகாரிகாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கும் தொற்று உறுதியானது. அவரை வீட்டுத் தனிமையில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

தனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று தன்னலம் பாராமல் மாமனாரை தோளில் சுமந்து சென்று பொறுப்புடன் செயல்பட்ட நிகாரிகாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

    Posted in Uncategorized

    விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் பட நடிகைகள் கைது

    விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் பட நடிகைகள் கைது

    தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    மும்பையில் தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது – வெளியான அதிர்ச்சி தகவல்


    விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நடிகைகளை போலீசார் மீட்டு அழைத்து வந்த போது எடுத்த புகைப்படம்


    தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போலி

    வாடிக்கையாளரை அனுப்பி சோதனை நடத்தினா். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் அங்கு இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தமிழ், தென்னிந்திய படங்களில் நடித்த நடிகைகள் என்பது தெரிவந்தது.

    முதலில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மராட்டிய விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அவர்கள் கைது

    செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 2 நடிகைகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களை போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது எடுத்த புகைப்படம்


    நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களை போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது எடுத்த புகைப்படம்

    இந்த நடிகைகள் கொரோனாவால் தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்து உள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி விபசார கும்பல் இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

    அதே நேரத்தில் நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஹசினா மேமன், ஸ்வீட்டி என 2 பெண்கள் மற்றும் விபசார தரகரான விஷால் என்ற சுனில்குமார் உத்தம்சந்த் ஜெயின்

    ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

      Posted in Uncategorized உலக செய்திகள்

      அவுஸ்ரேலியாவில் வீட்டுக்குள் புகுந்த கார் -இடிந்த வீடு

      அவுஸ்ரேலியாவில் வீட்டுக்குள் புகுந்த கார் -இடிந்த வீடு

      அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னி பகுதியில் கடந்த தினம் இரவு 11 மணியளவில் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது

      இதன்பொழுது அந்த வீடு பலத்த சேதமடைந்த்துள்ளது

      சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் அந்த காரை மீட்டு சென்றனர்

        Posted in Uncategorized

        டிரம்ப் பேஸ்புக் கணக்கு இரு வருடங்களுக்கு தடை – அதிரடி அறிவிப்பு

        டிரம்ப் பேஸ்புக் கணக்கு இரு வருடங்களுக்கு தடை – அதிரடி அறிவிப்பு

        அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் பேஸ்புக் கணக்கை இரண்டு வருடங்களுக்கு தடை செய்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது

        டிரம்ப் தொடர்நது பொய்யான ,செய்திகளை பரப்பி வருவதனால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளதாம்

        டிரம்புக்கே இந்த நிலை எனின் சாதாரண மக்களின் நிலையை எண்ணி பாருங்கள்

          Posted in Uncategorized

          தீக்குளித்து இளம் பெண் தற்கொலை – கண்ணீரில் குடும்பம்

          தீக்குளித்து இளம் பெண் தற்கொலை – கண்ணீரில் குடும்பம்

          இலங்கை கல்கிஸ்ஸை பகுதியில் கடந்த தினம் இருபத்தி நான்கு வயதுடைய இளம் பெண் ஒருவர்

          மண் எண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துள்ளார்

          இவரது இந்த தற்கொலைக்குரிய கரணம் உடனடியாக தெரியவில்லை போலீசார்

          விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

            Posted in Uncategorized

            இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை

            இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை

            உணவு களங்சியப்படுத்தலைப் பாதுகாப்பதாக தெரிவித்து ஆட்சிபீடமேறிய அரசாங்கம், இரசாயன உர இறக்குமதியை முறையற்ற விதத்தில் நிறுத்தியுள்ளதென தெரிவித்த ஐக்கிய

            மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசீம், இதனால் இன்னும் சில மாதங்களில் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றார்.

            கொழும்பில் நேற்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த

            போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், உரத்தை நிறுத்தி உணவு களஞ்சியப்படுத்தலை இந்த அரசாங்கம் காட்டிக்​கொடுத்துவிட்டது என்றார்.

            “உணவு மாத்திரமல்ல இதுவரை எரிபொருள் களஞ்சியப்படுத்தலை எரிபொருள் கூட்டுதாபனமே முகாமைத்துவம் செய்து வந்தது. ஆனால், இப்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு

            வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து எரிபொருள் களுங்சியப்படுத்தலிலும் நெருக்கடி, அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

            சுகாதார பாதுகாப்பும் இல்லாமல் போயுள்ளது. மறுபுறம் நிதி முகாமைத்துவமும் சீரழிந்து இறுதியில் பங்களாதேஷிடம் கடன் வாங்கியுள்ளது எனத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கத்தின்

            மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில், இந்த அரசாங்கம் பதவி விலகுவதே சிறந்தது என்றார்.

              Posted in Uncategorized

              பிணத்துடன் சென்ற வாகனம் கவிழந்தது – பொலிஸ் அதிகாரி மரணம்

              பிணத்துடன் சென்ற வாகனம் கவிழந்தது – பொலிஸ் அதிகாரி மரணம்

              ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (05)  காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்

              ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப- பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

              ஹட்டனிலிருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக, கொரோனா சடலம் கொண்டுச் சென்ற வாகனத்துக்கு

              பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர், கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

              இந்த கொரோனா சடலம் ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்படவிருந்தது.

              உப- பொலிஸ் பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம், வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

              விபத்தில், உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதி, சடலத்துடன் சென்ற உறவினர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

              வாகனம் வலுக்கி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவித்த ஹட்டன், வட்டவளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்

                Posted in Uncategorized

                கொரானாவுக்கு முல்லைத்தீவில் ஒருவர் மரணம்

                கொரானாவுக்கு முல்லைத்தீவில் ஒருவர் மரணம்

                இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி முல்லைத்தீவில் ஒருவர்

                பலியாகியுள்ளார் .பலியானவர் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது


                இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1656 பேர் பலியாகியுள்ளனர்

                  Posted in Uncategorized

                  கிளர்ச்சி படைகள் வெறியாட்டம் – 57 மக்கள் படு கொலை

                  கிளர்ச்சி படைகள் வெறியாட்டம் – 57 மக்கள் படு கொலை

                  கொங்கோவில் நீடித்து வரும் உள்நாட்டு போரில் சிக்கி பல்லாயிரம் மகக்ள் பலியாகியுள்ளனர் .

                  அரச இராணுவத்திற்கும் ,போராளிகளுக்கும் இடையில் ஏற்பட்டு வரும் மோதல்கள் சிக்கி அப்பாவி மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                  57 மக்கள் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

                  ,இவ்வாறு இறந்தவர்கள் அனைவரும் காணாமல் போனதாக அவ்வேளை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரனோ –

                    ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரனோ –

                    இலங்கை தலவாக்கலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்ட நிலையில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                    இலங்கையில் பரவி வரும் இரண்டாம் அலை கொரனோ தாக்குதலில் நாள் தோறும் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது

                    நோயினை கட்டுப்படுத்த முடியாது அரசு திணறி வருவதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                      Posted in Uncategorized

                      கோட்டாவுடன் பிரிட்டன் திடீர் பேச்சு – உள்ளே பேசியது என்ன ..?

                      கோட்டாவுடன் பிரிட்டன் திடீர் பேச்சு – உள்ளே பேசியது என்ன ..?

                      இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், சாரா ஹல்டன் (Sarah Hulton) அவர்களுக்கும்

                      ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று, இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

                      கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு

                      வழங்கக்கூடிய ஒத்துழைப்பு பற்றி கருத்துத் தெரிவித்தார். வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துவரும் முயற்சிக்கு, பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் அவதானம் செலுத்தினார்.

                      2030ஆம் ஆண்டாகும்போது, இந்நாட்டு வலுசக்தி உற்பத்தியில் 80சத வீதத்தை மீள்பிறப்பாக்க வலுசக்தி மூலம் பெற்றுக்கொள்வதற்கு, அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு

                      அவசியமான தொழிநுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும் சூரிய சக்தியை களஞ்சியப்படுத்தல் மற்றும் பரிமாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவும், சாரா ஹல்டன் அவர்கள், இணக்கம் தெரிவித்தார்.

                      சேதனப் பசளைப் பயன்பாட்டின் மூலம் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்தத் தீர்மானத்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாராட்டினார். 20.8சத வீதமான “வன

                      ஒதுக்கீட்டை” 30சத வீதம் வரை உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கு அவசியமான அறிவு மற்றும் பொறிமுறைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு, உயர்ஸ்தானிகர் தனது அவதானத்தைச் செலுத்தினார்.

                      “எக்ஸ் – பிரஸ் பர்ள்” கப்பல் மூலம் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்வதற்கு, பிரித்தானியாவின் தொழிநுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

                      ஜெனிவா முன்மொழிவு தொடர்பாகவும் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், காணிப்

                      பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட ஏனைய விடயங்கள் பற்றி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைத் தெளிவுபடுத்தினார்.

                      பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் அன்ரூ பிரைஸ் (Andrew

                      Price), ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

                        Posted in Uncategorized

                        எரிந்த கப்பல் -கடலில் மிதந்த கொண்டெனருக்குள் இருந்தது என்ன தெரியுமா ..?

                        கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களிலிருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் நேற்று

                        கரையிலிருந்து அகற்றப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

                        மேலும், பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சிறிய பிளாஸ்டிக் பந்துகள் போன்ற இந்த பொருட்கள் இப்போது பாதுகாப்பாக எடுத்து சேமித்து

                        ilவைக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                        இதேவேளை, கடற்படையினரால் தொடர்ந்தும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                          Posted in Uncategorized

                          செத்து வீழ்ந்த பறவைகள் -நடந்தது என்ன ..?

                          செத்து வீழ்ந்த பறவைகள் -நடந்தது என்ன ..?

                          southern NSW பகுதியில் பறவைகள் உட் கொண்ட உணவில் விஷம் கலக்க பட்டு இருந்தமை கண்டு பிடிக்க பட்டுள்ளது

                          அதனை உட்கொண்ட அனைத்து பறவைகளும் இறந்துள்ளன

                          உணவில் விஷம் கலந்தது எப்படி என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                          Posted in Uncategorized

                          சிவப்பு பட்டியலில் இலங்கை-பிரித்தானியா அறிவிப்பு

                          சிவப்பு பட்டியலில் இலங்கை-பிரித்தானியா அறிவிப்பு

                          கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது.

                          ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட் – டொபாகோ ஆகிய 07 நாடுகளே இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

                          எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                          இதேவேளை, சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் பிரித்தானிய பிரஜைகள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

                            Posted in Uncategorized

                            கொழும்பில் விஷேட கண்காணிப்பு நடவடிக்கை

                            கொழும்பில் விஷேட கண்காணிப்பு நடவடிக்கை

                            அத்தியசிய சேவைகளுக்காக இன்றைய தினம் வருகை தருபவர்கள் உண்மையாக சேவை நிலையங்களில் இருக்கின்றனரா என்பது தொடர்பில் கண்காணிக்க விஷேட வேலைத்திட்டம்

                            ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

                            அதற்காக 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

                            கொழும்பிற்குள் நுழையும் இடங்களில் பெற்றுக் கொள்ளும் தகவலின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                            இதேவேளை அத்தியவசிய தேவைகளுக்காக பயணிக்கும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              Posted in Uncategorized

                              மண்சரிவு – மூவரைக்காணவில்லை

                              மண்சரிவு – மூவரைக்காணவில்லை

                              மண்சரிவு மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்த்தினால் இரத்தினபுரி மாவட்டத்தில் மூவர் காணமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

                              இன்று அதிகாலை 4.00 மணிக்கு இதுதொடர்பான தகவல் பதிவானதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

                              இரத்தினபுரி எல்லே விகாரைக்கு அருகாமையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்பதினால் இவ்வாறான அனர்த்தங்கள் தொடர்பில் பொது மக்கள்

                              அவதானத்துடன் செயல்பட வேணடும் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.

                              Posted in Uncategorized

                              போலீசார் மீது துப்பாக்கி சூடு – மூவர் காயம்

                              போலீசார் மீது துப்பாக்கி சூடு – மூவர் காயம்

                              அமெரிக்கா வசிங்கடனில் கட்டடம் ஒன்றுக்குள் மர்ம நபர் திடீர் துப்பாக்கி சூடு நடத்தினார்

                              இதனை அறிந்து பறந்து வந்த போலீசார் மீது அவர் மேலும் தாக்குதலை தொடுத்தார் ,இதில் மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                              அமெரிக்காவில்,தொடராக இவ்விதமான தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள்

                                வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள்

                                ஆப்கான் தலைநகர் காபூலில் மறைத்து வைக்க பட்ட குண்டு வெடித்ததில் ,எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்

                                குறித்த குண்டானது ,மினிபஸ் மீது வெடித்து சிதறியதில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது

                                தலிபான் மாற்றும் அரச இராணுவத்தினருக்கு இடையில் கடும் சண்டை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

                                  Posted in Uncategorized

                                  யாழில் பெண்களை தாக்கி திருடர்கள் கொள்ளை – பீதியில் மக்கள்

                                  யாழில் பெண்களை தாக்கி திருடர்கள் கொள்ளை – பீதியில் மக்கள்

                                  இன்று அதிகாலை யாழ்ப்பாணம் சுன்னாகம், கந்தரோடை பகுதியில் திருடர்கள் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்

                                  இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நல்லவர் படுகாயமடைந்துள்ளனர்


                                  மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                  திருட்டில் ஈடுபட்டவர்கள் கத்திகள் ,வாள்கள்,மற்றும் முகங்களை மூடியவாறு திருட்டில் ஈடுபட்டதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்

                                    Posted in Uncategorized

                                    தர்மபுரத்தில் கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு

                                    தர்மபுரத்தில் கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு

                                    இலங்கை தர்மபுரம் ,குமாரசாமிபுரம் கிராமத்தில் 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் கிணற்றிக் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்

                                    இவர் தற்கொலை புரிந்தாரா ,அல்லது படு கொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்

                                    சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது