மண்சரிவு – மூவரைக்காணவில்லை
மண்சரிவு மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்த்தினால் இரத்தினபுரி மாவட்டத்தில் மூவர் காணமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 4.00 மணிக்கு இதுதொடர்பான தகவல் பதிவானதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி எல்லே விகாரைக்கு அருகாமையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்பதினால் இவ்வாறான அனர்த்தங்கள் தொடர்பில் பொது மக்கள்
அவதானத்துடன் செயல்பட வேணடும் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.






