Posted in Uncategorized

கொழும்பில் விஷேட கண்காணிப்பு நடவடிக்கை

கொழும்பில் விஷேட கண்காணிப்பு நடவடிக்கை

அத்தியசிய சேவைகளுக்காக இன்றைய தினம் வருகை தருபவர்கள் உண்மையாக சேவை நிலையங்களில் இருக்கின்றனரா என்பது தொடர்பில் கண்காணிக்க விஷேட வேலைத்திட்டம்

ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதற்காக 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்குள் நுழையும் இடங்களில் பெற்றுக் கொள்ளும் தகவலின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அத்தியவசிய தேவைகளுக்காக பயணிக்கும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.