Posted in Uncategorized

பெற்றோர்களிடம் இருந்து 2,127 பிள்ளைகளை பிரித்த டிரம்ப் -வெளியான அதிர்ச்சி தகவல்

பெற்றோர்களிடம் இருந்து 2,127 பிள்ளைகளை பிரித்த டிரம்ப் -வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் இனவாதியுமான டிரம்ப் ஆட்சியில் ,அமெரிக்காவிற்குள்

நுழைந்த அகதிகள் ,குடியேற்ற வாசிகளின் பிள்ளைகளை ,பெற்றோர்களுடன் பிரித்து மகிழ்ந்து வந்துள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இவ்விதம் பெற்றோர்களை விட்டு சுமார் 2,127 பேர் பிரித்து வைக்க பட்ட செய்தி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

    Posted in Uncategorized

    இலங்கையில் மிரட்டும் கொரனோ – ஒரே நாளில் 50 பேர் மரணம்

    இலங்கையில் மிரட்டும் கொரனோ – ஒரே நாளில் 50 பேர் மரணம்

    இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி


    கடந்த தினம் ஒரே நாளில் ஐம்பது பேர் மரணமாகியுள்ளனர்

    இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1,844 பேர் பலியாகியுள்ளனர் ,நோயினை கட்டு படுத்த

    முடியாது இலங்கை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      படகை அடித்து உடைத்த திமிங்கலம் – வாலிபன் காயம்

      படகை அடித்து உடைத்த திமிங்கலம் – வாலிபன் காயம்

      அவுஸ்ரேலியா NSW தெற்கு கடல் பகுதியில் படகில் பயணித்து கொண்டிருந்தனர் ,.அப்பொழுது திடீரென

      அந்த கடல் பகுதியில் தோன்றிய இராட்ஷத திமிங்கலம் ஒன்று அந்த படகை அடித்து நொறுக்கியது

      ,இதில் அந்த படகு பலத்த சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த 18 வயது வாலிபன் படுகாயமடைந்துள்ளார்

      காயங்களுக்கு உள்ளான வாலிபன் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

        Posted in Uncategorized

        கொலம்பியாவில் 58 மக்களை சுட்டு கொன்ற பொலிஸ் – இராணுவம்

        கொலம்பியாவில் 58 மக்களை சுட்டு கொன்ற பொலிஸ் – இராணுவம்

        கொலம்பியாவில் அரச இராணுவம் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின்

        பொழுது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி 58 மக்கள் பலியாகியுள்ளனர்

        அரசின் இந்த வன்முறை ,படுகொலை தாக்குதலுக்கு மனித உரிமை மையம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

        தமது ஆட்சியை தக்க வைத்து கொள்ள ,அரச மேற்கொள்ளும் இராணுவ ,வன்முறை தாக்குதலினால் அங்கு இயல்பு வாழ்வு சீர்குலைத்துள்ளது குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          கொழும்பில் புதிய தடுப்பு முகாம் – கோட்டா ஆட்டம் ஆரம்பம்

          கொழும்பில் புதிய தடுப்பு முகாம் – கோட்டா ஆட்டம் ஆரம்பம்

          இலங்கையில் தமிழின படுகொலையாளியும் ஆளும் ஜனாதிபதியாக விளங்கும் கோட்டபாய
          ,கொழும்பில் இயங்கும் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு கடடடத்தில் ,பயங்கரவாத தடை

          சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அனுமதி வழங்க பட்டுள்ளது

          கோட்டாவின் இந்த அவசர நடவடிக்கை ஏன் என்ற சந்தேகம் ஏழுந்துள்ளதுடன் ,தமிழாக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

            Posted in Uncategorized

            பலஸ்தீனத்தில் 4000 பேர் காயம் – 34 பேர் சுட்டுக்கொலை

            பலஸ்தீனத்தில் 4000 பேர் காயம் – 34 பேர் சுட்டுக்கொலை

            பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய அகோர தாக்குதலில் சிக்கி ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 4,000 பேர் காயமடைந்துள்ளனர் ,

            மேலும் ,இஸ்ரேல் இராணுவத்தின் வெறி தன துப்பாக்கி சூட்டு தாக்குதலில் மட்டும் 34 பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்

            நெதன்யாகுவின் இந்த போர்க் குற்ற மனித படு கொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில்

            விசாரணையை துரித படுத்த நடவடிகை மேற்கொள்ள படவுள்ளதாக பலஸ்தீன தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது

              Posted in Uncategorized

              மக்களிடம் பணம் பறித்த சிங்கள இராணுவத்தினர் கைது

              மக்களிடம் பணம் பறித்த சிங்கள இராணுவத்தினர் கைது

              கற்பிட்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரிடம் இருந்து மிரட்டி பணம் பறித்த

              குற்றச்சாட்டில் மூன்று விமானப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

              இதன்போது, சந்தேகநபர்களால் ஒரு இலட்சம் ரூபாய் பணம் இவ்வாறு மிரட்டி பெறப்பட்டுள்ளதாக

              பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

                Posted in Uncategorized

                முல்லைத்தீவு வீதிகளில் இராணுவத்தினர் பொலிசார்

                முல்லைத்தீவு வீதிகளில் இராணுவத்தினர் பொலிசார்

                பயணக்கட்டுப்பாடு தொடர்ந்துவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வீதிகளில் இராணுவத்தினர்

                பொலிசார் மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் பயணத்திற்கான அனுமதியினை பரிசோதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

                இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து முல்லைத்தீவு மாவட்டம் விடுவிக்கப்பட்டுள்ளது.

                கடந்த 17ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா கொத்தணி

                உருவாகியதைத் தொடர்ந்து மாவட்டத்தில் 11 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

                இந்நிலையில் இன்று (07) காலை தனிமைப்படுத்தப்பட்ட 11 கிராமசேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

                அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்

                பிரிவில் 9 கிராமங்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் இரண்டு கிராமங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன

                  Posted in Uncategorized

                  2 மாத குழந்தைக்கு கொரனோ – கண்ணீரில் குடும்பம்

                  இலங்கை

                  2 மாத குழந்தைக்கு கொரனோ – கண்ணீரில் குடும்பம்

                  கிளிநொச்சி – கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராமத்தில், 2 மாத சிசுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

                  நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருந்தே, இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                  குறித்த சிசுவின் தந்தை கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில்

                  பணியாற்றுபவர் என்றும், அவருக்கு அண்மையில் தொற்றுறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

                  இதைத் தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் இரண்டு மாதக் சிசுக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில், சிசவுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதுடன், தாய்க்கு தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டது.

                  இருந்த போதும், அவருக்கு இருக்கும் அறிகுறிகள், தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதனால், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                  Posted in Uncategorized

                  பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேரெதிர் மோதல் 40 பேர் பலி – 100 பேர் காயம்

                  பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேரெதிர் மோதல் 40 பேர் பலி – 100 பேர் காயம்

                  பாகிஸ்தானில் இரு பயணிகள் ரயில் நேரெதிர் மோதி சிதறியதில் ,அதில் பயணித்த நாற்பது பேர்

                  மரணமாகினர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

                  இந்த விபத்து தொடர்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                    Posted in Uncategorized

                    இலங்கை இராணுவ விமானம் அவசரமாக தரை இறக்கம் – தப்பிய விமானிகள்

                    இலங்கை இராணுவ விமானம் அவசரமாக தரை இறக்கம் – தப்பிய விமானிகள்

                    இலங்கை அரச இராணுவத்தினர் பயன் படுத்தி வரும் புலிகள் பயன்படுத்திய இலகு ரக விமானம் போன்ற ஒன்று அவசரமாக தரை இறக்க பட்டுள்ளது

                    இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விமானம் திருகோணமலை ,நிலாவெளி

                    விமான படைத்தளத்தில் தரை இறக்க பட்டுள்ளது ,எனினும் விமானிகள் எதுவித காயங்களும் இன்றி தப்பித்துள்ளனர்

                      Posted in Uncategorized

                      யாழில் சுடலைக்குள் பிணங்களில் நகை கொள்ளையடித்த திருடர்கள்

                      யாழில் சுடலைக்குள் பிணங்களில் நகை கொள்ளையடித்த திருடர்கள்

                      யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் உள்ள சுடலைக்குள் புகுந்த இரண்டு திருடர்கள்

                      அங்கு புதைக்க பட்ட கல்லறைகளை உடைத்து ,அதற்குள் புதைக்க பட்ட சடலங்களில் உள்ள நகைகளை திருட முயன்று வந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                      இரவு வேளைகளில் சுடலைக்குள் புகும் இவர்கள் அங்கு பிணங்களுக்கு அணிவிக்க பட்ட தங்க

                      நகைகளை திருட முயன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in Uncategorized

                      காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்

                      காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்

                      இலங்கையில் சிங்கள காவல்துறையால் தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற குற்ற

                      சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டு அழைத்து செல்ல பட்டார்

                      அவ்வேளை அவர் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்துள்ளார் ,அதில் அவர்

                      மரணமாகியுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        Posted in Uncategorized

                        நடமாடும் விதிகளை மீறி வாகனங்கள் செலுத்தின – தனிமை படுத்த படுவார் எச்சரிக்கை

                        நடமாடும் விதிகளை மீறி வாகனங்கள் செலுத்தின – தனிமை படுத்த படுவார் எச்சரிக்கை

                        இலங்கையில் நடமாடும் தனிமை படுத்தல் விதிகளை மீறி வாகனங்கள் செலுத்தி சென்றால்

                        அவர்கள் தனிமை படுத்தி வைக்க படுவார்கள் என போலீசார் எச்சரிக்கி விடுத்துள்ளனர்

                        மக்கள் முகக்கவசம் இன்றியும் ,மாகாண எல்லைகளை தாண்டியும் பயணித்து வருகின்றனர்

                        இதனை அடுத்தே மேற்படி அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

                          Posted in Uncategorized

                          இராணுவம் – போராளிகள் சண்டை 165 கிளர்ச்சி படைகள் மரணம்

                          இராணுவம் – போராளிகள் சண்டை 165 கிளர்ச்சி படைகள் மரணம்

                          ஆப்கானிஸ்தானில் அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் ,அரச இராணுவத்தினர் நாற்பது பேர் பலியாகியுள்ளனர்

                          மேலும் 165 தலிபான்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது

                          ஆனால் தாலிபான்களோ அரச இராணுவத்தில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் பலி என தெரிவித்துள்ளனர்

                          குறித்த நாட்டை விட்டு அமெரிக்கா படைகள் விலகி வரும் நிலையில் அங்கு தலிபான்கள் தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            அல்ஜீஸ்ரா ஊடக நபரையோ அடித்து இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்

                            அல்ஜீஸ்ரா ஊடக நபரையோ அடித்து இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்

                            பலஸ்தீன சர்ச்சைக்குரிய மேற்குக் கரை பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த அல்யஸீரா ஊடக நபர்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் அடித்து இழுத்து சென்றுள்ளனர்

                            இராணுவ ,போலீசாரின் , இந்த அடாவடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,பலஸ்தீனம் பகுதியில் இஸ்ரேல்

                            மேற்கொண்டு வந்த தாக்குதல்களை அல்யஸீரா ஒளிபரப்பி வந்தது ,அதனால் சீற்றம் உற்ற இஸ்ரேலிய இராணுவம் அதன் ஊடக கட்டிடத்தை குண்டு வீசி அழித்தது .

                            அதனை அடுத்து இஸ்ரேலுக்கும்.அல்யசீராவுக்கும் இடையில் முறுகல் முற்றியது ,அதனை அடுத்து இந்த ஊடக நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

                            இது ஒரு பகிரங்க மிரட்டலாக பார்க்க படுகிறது ,இவ்வாறு கைது செய்வதன் ஊடக அதன்

                            செய்தியாளர்கள் பயந்து அதன் செய்தி பகுதியில் இருந்து தப்பி ஓடி விடுவார்கள் என இஸ்ரேல் மொசாட் விளையாடி பார்க்கறது என்பதே கள நிலவரமாக உள்ளது

                              Posted in Uncategorized

                              கிளறப்படும் மகிந்த இன அழிப்பு – அமெரிக்காவிடம் கெஞ்சும் இலங்கை

                              கிளறப்படும் மகிந்த இன அழிப்பு – அமெரிக்காவிடம் கெஞ்சும் இலங்கை

                              இலங்கை அரசு இவ்வாறு சடைந்து வெளியிட்டுள்ளது ,அதாவது தங்கள் இன படுகொலை புரியவில்லை புலிகளே செய்தார்கள் ள் என்பது தான் அது

                              காங்கிரஸின் பெண் உறுப்பினரான டெபொரா ரோஸ் (ஜனநாயகக் கட்சி / வட கரோலினா) அவர்களால் 2021 மே 18ஆந் திகதி கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான எச். ஆர்.இ.எஸ். 413

                              என்ற தீர்மானத்தை தொடர வேண்டாம் என அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அவர்களினூடாக இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

                              அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுத் தலைவரான பிரதிநிதி கிரெகரி மீக்ஸ் (ஜனநாயகக் கட்சி / நியூயோர்க்) மற்றும் தரவரிசை உறுப்பினரான பிரதிநிதி மைக்கேல்

                              மெக்கவுல் (குடியரசுக் கட்சி / டெக்சாஸ்) ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொடர்பாடலில், தவறான, பக்கச்சார்பான மற்றும் ஆதாரமற்ற வகையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களைக்

                              கொண்டுள்ளதும், தீர்மானத்தின் நோக்கம் குறித்து கடுமையான சந்தேகத்தை எழுப்புவதுமான இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்களை இலங்கை கடுமையாக எதிர்க்கின்றது’ என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

                              தீர்மானத்தின் பாரபட்சமற்ற தன்மையை ஒவ்வொரு பந்தியிலும் விரிவாக பகுப்பாய்வு செய்யும் வகையில் இந்தத் தொடர்பாடல் அமைந்திருந்தது.

                              1997ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட மற்றும் 2008ஆம் ஆண்டு முதல் எஃப்.பி.ஐ யால் ‘உலகின் மிக ஆபத்தான மற்றும் கொடிய தீவிரவாதிகளின் மத்தியிலான’ ஒரு ‘சுதந்திர ஆயுத அமைப்பாக’ பெயரிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை சமப்படுத்தும்

                              வகையில் முன்மொழியப்பட்டுள்ள இந்தத் தீர்மானமானது, அதன் தோற்றம் மற்றும் நோக்கத்தை அம்பலப்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானமானது, ‘பாரம்பரிய தமிழ் தாயகங்கள்’ பற்றிய குறிப்புக்களின் மூலமாக, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அதே வேளை,

                              இலங்கையின் அரசுக்கான தன்மையையும் கூட கேள்விக்குள்ளாக்குகின்றது. இது நிறுவப்பட்ட வரலாற்று உண்மைகளையும், இன்றைய யதார்த்தங்களையும் தவறாக சித்தரிப்பதுடன்

                              மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் ஆதரவாளர்களின் இறுதி இலக்கான இலங்கையை சிதைக்கும் நோக்கத்தை ஆதரிப்பதற்கும் பங்களிப்புச் செய்கின்றது.

                              தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் முன்னணி அமைப்புக்கள் மற்றும் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் பற்றிய அமெரிக்காவின் சொந்த பாதுகாப்புக் கவலைகள் பற்றிய தீர்மானத்தின் அறியாமையானது, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அமெரிக்காவிலும், உலகெங்கிலும் உள்ள அதன் பல முன்னணி அமைப்புக்களின் கூர்மையான கூறுகளுக்கு உத்வேகம் அளிக்கும்.

                              ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் உட்பட இலங்கையின் நிலையானதொரு பாதுகாப்புப் பங்காளியாக’ அமெரிக்கா விளங்குவதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், ‘ஜனநாயக

                              மற்றும் குடியரசுக் கட்சியின் நிர்வாகங்கள் முழுவதும், குறித்த ஐக்கிய அமெரிக்கக் கொள்கைக்கு மாறுபட்டதாக உள்ள இந்தத் தீர்மானம், அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக ஆயுதமேந்திய செயல்களை சபை ஆதரிக்கின்றது என்ற தவறான முடிவுக்கு வழிவகுக்கும். இது

                              ஜனநாயக விழுமியங்களில் வேரூன்றியிருக்கும் அமெரிக்க நிர்வாகத்தின் சொந்த வெளியுறவுக் கொள்கையின் அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அதே வேளை, இலங்கைக்கும்

                              அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை எதிர்மறையாகப் பாதிக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

                              தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக போராடிய இலங்கை அரசாங்கம், அனைத்து இலங்கையர்களையும் பாதுகாத்து, விடுவிப்பதற்காக இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து அல்லது பிறந்த இடம்

                              ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தனது பிரஜைகளைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு சார்ந்த கடமைகளுடன் ஒத்துப்போகின்றது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மே 2009 இல் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும்,

                              மோதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பி, அபிவிருத்தி செய்யவும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த 300,000 பேரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், மறுவாழ்வு

                              அளிக்கப்பட்டு, சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட 596 சிறுவர் படையினரைக் கொண்ட 12,000 க்கும் மேற்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் உட்பட பலருக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார வாய்ப்புக்களையும் இந்தத் தொடர்பாடல் கோடிட்டுக் காட்டியது.

                              மோதல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வடக்கு மக்களின் உரிமைகளையும், ஜனநாயக சுதந்திரங்களையும் உறுதி செய்வதற்காக, 2013ஆம் ஆண்டில் வட மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டதாக நினைவு கூரப்பட்டுள்ளது. 2017 முதல், ஒருபோதும் நிறைவேற்றப்படாத

                              மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தத்தைத் தேவைப்படுத்தும் ஒரு தீர்ப்பின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் தேர்தல்களை ஒத்திவைப்பதை ஆதரித்தன.

                              ஏறக்குறைய 3 ஆண்டுகளாக, மனித உரிமைகள் சபை அல்லது மேற்கத்தேய நாடுகள், வட மாகாணம் உட்பட மாகாண சபைகளின் தேர்தல்கள் தாமதமடைவது குறித்த பிரச்சினையை எடுத்துக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில்

                              பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்றக் குழுவை நியமிப்பதற்கான முன்முயற்சியை எடுத்து வரும் ஒரு நேரத்தில், இது ஒரு முக்கிய பிரச்சினையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

                              2015 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் புலனாய்வு ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை உட்பட இந்தத் தீர்மானத்தில் மேற்கோள் காட்டப்பட்ட இலங்கை பற்றிய அறிக்கைகள், ‘மேசையளவில் மதிப்பாய்வு செய்யப்பட்ட’ தகவல்கள், நிகழ்வுகள் பற்றிய

                              வெறும் வெளிப்படை நிலையான விவரிப்பாகவே அமைவதுடன், இந்த ஆவணங்கள் ஆதாரங்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டன. மாறாக, ஏனையவற்றுக்கு இடையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, ‘பரணகம ஆணைக்குழு’, ஐ.நா.

                              மற்றும் யு.என்.டி.பி, யுனிசெப் மற்றும் ஐ.சி.ஆர்.சி. உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் அறிக்கைகள், மற்றும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின் பிரபு நேஸ்பி வழங்கிய தகவல்கள் ஆகிய சரிபார்க்கப்பட்ட பல சான்றுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சட்டவியலாளர்கள்

                              உள்ளிட்ட நிபுணர்களின் கருத்துக்கள், மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அனுப்பப்பி வைக்கப்பட்ட கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் இராணுவ

                              இணைப்பாளரான கேர்னல் அன்டன் காஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான லெப்டினன்ட் கேர்னல் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோரின் அறிக்கைகள் இந்த விவரிப்புக்கு சவால் விடுக்கின்றன.

                              அக்டோபர் 2015 இல் ஐ.நா. தீர்மானம் 30/1 இற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கி, அரசியலமைப்பிற்கு முரணான வகையிலான வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறையை இலங்கை ஆரம்பிக்கும் என்ற

                              உறுதிப்பாட்டை முந்தைய அரசாங்கம் வழங்கியிருந்த போதும், 5 ஆண்டுகளாக ஐ.நா. மற்றும் அமெரிக்கா மற்றும் இந்தத் தீர்மானத்தின் ஏனைய ஆதரவாளர்கள் அந்த வாக்குறுதிகளை முந்தைய அரசாங்கம் நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை எந்த வகையிலும் கொடுக்கவில்லை.

                              எழுப்பப்பட்டுள்ள விடயங்களை நிவர்த்தி செய்வதற்காக தற்போதைய அரசாங்கம் நம்பகமான, வெளிப்படையான உள்நாட்டு செயன்முறையை வழங்கும் வகையில், ஜனவரி 2021 இல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நிறுவி, அதன் மூலம் 2021 மார்ச் 04ஆந் திகதி ‘விசாரணை

                              செய்வதற்காக எழுதப்பட்ட பிரதிநிதித்துவங்கள் அல்லது தகவல்கள் அல்லது மேற்கூறியவற்றுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு பொருளையும் சமர்ப்பிப்பதற்கு எந்தவொரு நபர், நபர்கள்

                              அல்லது அமைப்புக்களும் ஆணைக்குழுவிற்கு வருகை தருவதற்காக அழைப்பு விடுக்கப்பட் டுள்ள’ இந்த நேரத்தில் ஒரு ‘சர்வதேசப் பொறிமுறையை’ கோருவது மிகவும் மோசமானது. ஆணைக்குழு

                              ஏப்ரல் முதல் விசாரணைகளை நடாத்தி வருவதுடன், சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

                              வெளிநாட்டு அமைச்சு
                              கொழும்பு

                                Posted in Uncategorized

                                10 லட்சம் சீனாவின் Sinopharm ஊசிகள் இலங்கை வந்தன

                                10 லட்சம் சீனாவின் Sinopharm ஊசிகள் இலங்கை வந்தன

                                இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் முகமாக சீனாவில் இருந்து

                                இலங்கைக்கு சுமார் பத்து லட்சம் Sinopharm vaccines ஊசிகள் வந்தடைந்துள்ளன

                                இவ்வாறு வந்தடைந்த ஊசிகள் விரைவில் மக்களுக்கு செலுத்த படும் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                                Posted in Uncategorized

                                வெள்ளத்தில் மூழ்கி 14 பேர் மரணம் – தொடரும் மீட்பு

                                வெள்ளத்தில் மூழ்கி 14 பேர் மரணம் – தொடரும் மீட்பு

                                களனி கங்கை களுகங்கை, ஜின் கங்கை, மகா ஓயா மற்றும் அத்தனகல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்ததினால் தாழ்நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

                                வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை கடற்படையினர் வள்ளங்கள் மூலம் மீட்டுவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்தார்.

                                கடற்படையின் 23 வள்ளங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் இராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதாகவும் பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

                                இதேவேளை ஆறுகளை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்கும் படி நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது விசேடமாக களனி கங்கையை அண்டி வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என திணைக்களம் கேட்டுள்ளது.

                                சீரற்ற காலநிலையின் காரணமாக , நாட்டின் 10 மாவட்டங்களில் 84 பிரதேச செயலக பிரிவுகளில் 60 ஆயிரத்து 674 குடும்பங்களைச் சேர்ந்த ,இரண்டு இலட்சத்து 45ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                                கேகாலை மாவட்டத்தில் ஜந்து பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் ,புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும்,கொழும்பு மாவட்டத்தில் ஒருவரும் ,கம்பாஹா மாவட்டத்தில் இருவரும்

                                ,களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் ,காலி மாவட்டத்தில் ஒருவருமாக மொத்தம் 14 பேர்

                                உயிரிழந்திருப்பதுடன் இருவர் காயமடைந்திருப்பதுடன் இருவர் காணாமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                மூவாயிரத்து 520 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 658 பேர் தற்காலிக பாதகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

                                14 வீடுகள் முழுமையாகவும் 817 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.


                                  Posted in Uncategorized

                                  சீனாவில் கத்தி குத்து 5 பேர் பலி – 15 பேர் காயம்

                                  சீனாவில் கத்தி குத்து 5 பேர் பலி – 15 பேர் காயம்

                                  சீனாவின் கிழக்கு பகுதியில் மர்ம நபர் ஒருவர் திடீர் கத்தி குத்து தாக்குதலை
                                  நடத்தியுள்ளார் .இதில் ஐவர் பலியாகியுள்ளனர்

                                  மேலும் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் ,இந்த தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை

                                  காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது