Tag: பொலிசார்
தாக்குதல் பொலிசார் மீது
தாக்குதல் பொலிசார் மீது
தாக்குதல் பொலிசார் மீது 5சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகம் அவர்களை தாம் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்த போலீசார் மீது போதைவஸ்து நோக்கி துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் பாடத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது எடுத்தேன் குறித்த சந்தேகம் அவர் பெருவழிப் போலீசார்னார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள் மீது அவர்களை தேடிச் சென்ற காவலதுசாரியினர் மீது தாக்குதல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
போத வஸ்து பாவனைகள் எமது நாட்டிலே அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதான சந்தேகம் அவர்கள் போலீசார் விசாரணை அடுத்து தற்பொழுது நீதிமன்றத்தில் பாரம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இதற்கு முன்னரும் இவ்வாறு போலீசார் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
மேற்படி சம்பவம் இலங்கை உள்ள செய்திகளும் தலைப்புச் செய்திகள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிட தக்கது .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

11 பொலிசார் திடீரென இடமாற்றம்
11 பொலிசார் திடீரென இடமாற்றம்.
11 பொலிசார் திடீரென இடமாற்றம்,இலங்கையில் பொலிஸ் அதிகாரிகள் 11 பேர் உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்ஸ் எய்யப்பட்டுள்ளனர் .
இலங்கை காவல்துறை தலைமையகத்தின் உடனடி உத்தரவிற்கு அமைவாக இந்த 11 போலீஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .
பணிக்காலத்தில் இவர்களுக்கு இவாறான இடமாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன .
அவ்வாறான பணியிடை மாற்றமாகவே ஸ்ஸ்ஸ் பி அதிகாரிகள் தரத்திலான 11 பேருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்கிறது காவல்துறை தலைமையகம் .
ஆளுகின்ற ஆட்சியில் பாரியளவு இடமாற்றங்கள் நகர்த்த பட்ட வண்ணம் உள்ளன .
இவ்விதமான இடமாற்றங்கள் ஊடாக புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது தான் கேள்விக்குறியாகவுள்ளது .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால்
பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால்
பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால் ,யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.<
யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

ஆட்டிறைச்சி மாயம் 4பொலிசார் பணிநீக்கம்
ஆட்டிறைச்சி மாயம் 4பொலிசார் பணிநீக்கம்
ஆட்டிறைச்சி மாயம் 4பொலிசார் பணிநீக்கம் ,பொலிஸ் நிலைய குளிரூட்டியில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல் போன சம்பத்தினை அடுத்து 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு அட்டாளைச்சேனை பகுதி வீடு ஒன்றில் அறுக்கப்பட்ட ஆடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு முறைப்பாடு கடந்த வெள்ளிக்கிழமை(26) அன்று வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் விலங்குகள் அறுக்கும் தொழுவத்தில் அறுக்கப்படாமல் அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 4 ஆடுகளை அறுத்த கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
பின்னர் குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார்.
அவரது சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி தனது குறித்த ஆட்டினை தனது வீட்டு நிகழ்வு ஒன்றிக்கு அறுத்திருந்தாகவும் குற்றத்தினை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கின் சான்றுப் பொருளான ஆட்டிறைச்சி பொலிஸ் நிலையத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றிடம் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் மாயமான இறைச்சி
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு குறித்த சான்றுப் பொருளை பார்வையிட நீதிவான் சென்ற வேளையில் ஆட்டிறைச்சி மூட்டையில் கட்டி பெக்கோ இயந்திரத்தில் புதைப்பதற்க தயாராக வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.
குறித்த சான்றுப் பொருள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே கூறிய பொலிஸார் திடீரென பெக்கோ இயந்திரத்தில் வைத்திருப்பது பாரிய சந்தேகத்தை நீதிவானுக்கு ஏற்படுத்தி இருந்தது.
யாரும் எதிர்பாராத வண்ணம் நீதவான் பெக்கோவில் இருந்த ஆட்டிறைச்சி மூட்டையைப் பிரிக்குமாறு பணித்திருந்தார். அதன்போது குறித்த ஆட்டின் பின்னங்கால் மற்றும் சதைகள் யாவும் மாயமாக மறைந்திருந்தன.
குறித்த ஆட்டிறைச்சியின் பின்னங்கால்கள் கூட தொலைந்து போயிருந்தன. இது பற்றி வினவியபோது ஆட்டிறைச்சியை சில பகுதிகளை தேடுதலுக்குச் சென்ற பொலிஸார் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கடந்த வெள்ளிக் கிழமையன்று விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதன் அடிப்படையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆட்டிறைச்சியைக் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு எதிராக அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணை
மேற்கொண்டு அதனடிப்படையில் குறித்த ஆட்டிறைச்சியை கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடனடி இடமாற்றம் வழங்கபட்டுள்ளது.
இதன் போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பொலிஸ் நிலையத்திற்கும் ஏனைய இரண்டு
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நிந்தவூருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

ஏழு பொலிசார் அமெரிக்காவில் காயம்
ஏழு பொலிசார் அமெரிக்காவில் காயம்
ஏழு பொலிசார் அமெரிக்காவில் காயம் ,சந்தேகத்திற்கிடமான காரை துரத்தி சென்ற பொலிசார் கார் விபத்தில் சிக்கியதில் ஏழு போலீசார் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
காயமடைந்த போலீசாரை மீட்க பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
மேலும் இவர்கள் பயணித்த காவல்துறை காரும் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .
துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்களை தூரத்தில் சென்ற பொழுதே மேற்படி விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க படுகிறது .
விபத்து தொடர்பிலான விசாரணைகள்
மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் நாள்தோறும் பலர் பலியாகியும் ,காயமடைந்து வருகின்றனர் .
இவ்வாறு தற்போது தேர்தலில் போட்டியிட்ட அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதும் துப்பாக்கி சூடு நடத்த பட்டது .
ஆனால் அதில் இருந்து மயிரிழையில் டிரம்ப் தப்பினார் .அதனை அடுத்து தற்போது இந்த விபத்து ஏற்படுத்த பட்டுள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை

- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்பு

- உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்
பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்
பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல் ,மக்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கோட்டை புகையிரத நிலையம் அருகில் இடம்பெற்றுள்ளது .
மக்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்
மக்கள் ஆசிரியர்கள் இனைந்து நடத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை கலைக்க ,பொலிசார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
கண்ணீர் புகை தாக்குதல் நாடத்திய அதேவேளை நீரை பீச்சி அடித்து மக்களை துரத்தியுள்ளனர் .
இலங்கை ஜனநாய நாட்டில் தமது உரிமனை மறுப்பை தட்டிக்கேட்டு போராடி வரும் மக்களை,ஆளும் அரணில் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கி வருவதை மேற்படி விடயம் எடுத்து காட்டுகிறது .
காலிமுக திடலில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்
காலிமுக திடலில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் நடத்திய போராடடத்தின் பொழுது,அந்த மக்களை இராணுவம் காவல்துறையை ஏவி ரணில் விக்கிரமசிங்க தடுத்தார் .
இதன் பொழுது பல மக்கள் பொலிசாரின் தடியடிக்கு இரையாகினர் .
பல மக்கள் சொல்லென்னா துயரை அனுபவித்து சிறையில் தள்ள பட்டனர் .
அவ்வாறன சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் மீளவும் அதே பாணியிலான தாக்குதலை ,கோட்டை புகையிர நிலையம் அருகில் பொலிசார் நடத்தியுள்ளனர் .
கண்ணீரோடு போராடிய மக்களுக்கு ,கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தி விரட்டியுள்ள சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது
பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது
பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது செய்யப்பட்டனர் ,கடந்த 24மணித்தியாலத்தில் யுக்திய நடவடிக்கையில் பொலிசாரால் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
இந்த யுக்திய நடவடிக்கை பொலீசாருடன் சிக்கிய நபர்கள் பல்வேறு பேட் குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்களாக காண படுகின்றனர் .
அதிக அளவான நபர்கள் போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளதாக யுக்தியை நடவடிக்கை பொலிசார் தெரிவித்துள்ளனர் .
தமிழர் பகுதியில் அத்து மீறி வீட்டை உடைத்து உட்புகுந்த இளைஞர்களுக்கு ஆதரவாக பொலிசார் செயற்பட்டதால் இரவிரவாக போராட்டம் நடத்திய குடும்பம்
தமிழர் பகுதியில் அத்து மீறி வீட்டை உடைத்து உட்புகுந்த இளைஞர்களுக்கு ஆதரவாக பொலிசார் செயற்பட்டதால் இரவிரவாக போராட்டம் நடத்திய குடும்பம்
வவுனியாவில் அத்து மீறி வீட்டை உடைத்து இளைஞர் குழு ஒன்று தங்கியிருந்த நிலையில், வவுனியா பொலிசார் குறித்த வீட்டின் சாவியை உடைத்தவர்களிடமே வழங்கியமையால் அங்கு வாடகைக்கு குடியிருந்தோர் நீதி கோரி வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இரவிரவாக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
நேற்று (14.07) இரவு 9.45 முதல் இன்று (15.07) அதிகாலை 1.30 மணி வரை இடம்பெற்ற இப் போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் உள்ள உணவகம் அருகில் உள்ள ஒழுங்கையில் ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்று நீண்டகாலமாக ஆலய உடன்படிக்கைக்கு அமைவாக அருளம்மா செல்வநாயகம் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் குறித்த காணியில் வீடமைத்து குடியிருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு அருளம்மா மரணமடைந்த நிலையில் குறித்த வீட்டினை அவரது மூத்த ஆண் மகன் பராமரித்து வந்துள்ளதுடன், அவர் குறித்த வீட்டில் பிறிதொரு குடும்பத்தை வாடகைக்கு குடியமர்த்தி விட்டு தற்போது வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்றார்.
தமிழர் பகுதியில் அத்து மீறி வீட்டை உடைத்து உட்புகுந்த இளைஞர்களுக்கு ஆதரவாக பொலிசார் செயற்பட்டதால் இரவிரவாக போராட்டம் நடத்திய குடும்பம்
இந்நிலையில், குறித்த வீட்டு உரிமையாளரான அருளம்மா அவர்களின் வெளிநாட்டில் வசிக்கும் மகள் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிற்கு வந்து வாடகைக்கு இருந்தோர், குறித்த வீட்டில் இல்லாத சமயம் வீட்டை உடைத்து உட்புகுந்து அங்கு சில நபர்களுடன் நின்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வாடகைக்கு குடியிருந்தோர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், வாடகைக்கு இருந்தோரிடம் வீட்டை ஒப்படைக்குமாறும், சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சனையை நீதிமன்றத்தின் ஊடாக தீர்க்குமாறும் கூறியுள்ளனர். இதன் பின் வாடகைக்கு குடியிருந்தோர் அதில் தங்கியிருந்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்த வந்த அருளம்மாவின் மகள் வெளிநாடு சென்ற பின் நேற்று (14.07) மதியம் வவுனியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரான ரசிக்கா பிரியதர்சினி அவர்களின் இணைப்பாளர் உள்ளடங்கிய குழு வாகனம் ஒன்றிலும், மோட்டர் சைக்கிளிலும் சென்று குறித்த வீட்டை உடைத்து அங்கு தங்கியிருந்துள்ளனர்.
வாடைக்கு இருந்தோர் வெளியே சென்று வீடு திரும்பி அங்கு சென்ற போது அவர்களை உள் நுழைய தடுத்த இளைஞர் குழு அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் பொலிசார் முறைப்பாட்டை பதிவு செய்யாததுடன், நீதிமன்றுக்கு போகுமாறு அசண்டையீனமாக செயற்பட்டுள்ளனர்.
இதனால் பாதிப்படைந்தவர் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு தனது நிலையை கொண்டு வந்துள்ளார். அவரது உத்தரவுக்கமைய வவுனியா பொலிசார் முறைப்பாட்டை பதிவு செய்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
எனினும், இதன்போது வீட்டை உடைத்து உட்புகுந்தவர்களிடம் வெளிநாட்டிற்கு சென்றுள்ள மகள் சட்டத்தரணி ஊடாக வழங்கிய ஆவணம் இருப்பதாக கூறி வீட்டு சாவியை கொடுத்து விட்டு திங்கள் கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதாக கூறி இரு தரப்பையும் அனுப்பியுள்ளனர்.

அத்து மீறி வீட்டை உடைத்து உள் நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது, அவர்களிடமே வீட்டு சாவியை கொடுப்பது எந்தவகையில் நியாயம் எனத் தெரிவித்தும் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறு வீட்டில் வாடகைக்கு குடியிருந்த கணவன், மனைவி ஆகியோர் இரவு 9.45 இற்கு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக வீதியோரத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். அங்கு வந்த வவுனியா பொலிசார் அவர்களை வெளியேற்ற முயற்சித்ததுடன், விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இருப்பினும் தனது வீட்டு சாவியை தரும் வரை செல்ல மாட்டேன் எனக் கூறி அவர்கள் தொடர்ந்தும் போராட்த்தில் ஈடுபட்ட நிலையில் அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியசகர் குறித்த குடும்பத்தை தமது வளாகத்திற்குள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இன்று (15.07) மாலை குறித்த பிரச்சனையை நீதியான முறையில் விசாரணை செய்து தீர்வைப் தருவதாக அவர்களிடம் தெரிவித்திருந்தார்.
அவரது வாக்குறுதியையடுத்து குறித்த குடும்பத்தினர் அதிகாலை 1.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு சென்றிருந்தனர். குறித்த போராட்டமானது மூன்றரை மணித்தியாலயத்திற்கு மேலாக இரவிரவாக இடம்பெற்றிருந்தது.
இதேவேளை, குறித்த காணிக்குரிய ஆலய உடன்படிக்கை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மீள புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் அருளம்மாவின் மரணத்தின் பின் அவ் ஆவணம் புதுப்பிக்கப்படவில்லை என்பதுடன், அவரது மகனின் பராமரிப்பின் கீழே குறித்த வீடு இருந்து வந்துள்ளதுடன் வாடகைக்கு குடியிருந்தோரே அருளம்மாவின் பெயரில் 15 வருடங்களாக ஆலயத்திற்கான நில குத்தகைப் பணத்தை செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையிலேயே மீள புதுப்பிக்கப்படாத அருளம்மாவின் பேரில் இருந்த பழைய ஆவணத்தை வைத்து சட்டத்தரணி ஒருவரின் துணையுடன் அவரது மகள் பிறிதொரு நபருக்கு குத்தகை உடன்படிக்கையை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாடுகள் கடத்தல் சம்பவத்திற்கு துணைபோகும் பொலிசார்: வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
மாடுகள் கடத்தல் சம்பவத்திற்கு துணைபோகும் பொலிசார்: வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவாக மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாகவும் இதற்கு நெளுக்குளம் பொலசம்பவம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று கலந்துரையாடப்பட்டதுடன் நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன்,
குறித்த பகுதியில் அதிகளவாக மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அத்துடன் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே அவரை இடமாற்றி ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
மாடுகள் கடத்தல் சம்பவத்திற்கு துணைபோகும் பொலிசார்: வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
அதற்கு பதில் அளித்த மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், மாடுகள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றையதினம் (12.06) கைதுசெய்யப்பட்ட இருவரை நீதிமன்றில் ஆயர்படுத்தியுள்ளோம்.
அத்துடன், இச்சம்பங்கள் தொடர்பாக தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுக்கு விரோதமாக செயற்பட்டிருந்தால், அது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்தார்.
அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று
அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று
இன்று முதல் அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவிக்கையில், வாகனங்களை மட்டுப்படுத்துதல், அபராதம் கட்டுவதற்கான சீட்டுக்களை விநியோகித்தல், மதுபோதையில் வாகன ஓட்டுனர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை என்பன மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
நாடு தற்சமயம் வழமையான நிலைக்குத் திரும்பியுள்ளது. இன்றில் இருந்து பெருமளவிலான வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். வேலைக்காக செல்வோரின் எண்ணிக்கையும்
இன்றில் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை
ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி, இரவு வேளையிலும் நடமாடுபவர்களை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இப்பிரதேசத்தில் இரவு வேளைகளில் சோதனை சாவடிகளை ஏற்படுத்தி; வாகனங்களையும் நபர்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.
இதற்கமைவாக நேற்று (28) இரவு முழுவதும் அட்டன் மல்லிகைப்பூ சந்தி சோதனை சாவடியில் விசேட சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. இதன் போது உரிய ஆவணமின்றி அத்தியவசிய தேவைகளுக்காக சென்றவர்கள் கடுமையாக எச்சகரிக்கப்பட்டனர்.
முல்லைத்தீவு வீதிகளில் இராணுவத்தினர் பொலிசார்
முல்லைத்தீவு வீதிகளில் இராணுவத்தினர் பொலிசார்
பயணக்கட்டுப்பாடு தொடர்ந்துவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வீதிகளில் இராணுவத்தினர்
பொலிசார் மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் பயணத்திற்கான அனுமதியினை பரிசோதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து முல்லைத்தீவு மாவட்டம் விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா கொத்தணி
உருவாகியதைத் தொடர்ந்து மாவட்டத்தில் 11 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று (07) காலை தனிமைப்படுத்தப்பட்ட 11 கிராமசேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்
பிரிவில் 9 கிராமங்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் இரண்டு கிராமங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன
பயணக் கட்டுப்பாடு விதிகளை கண்காணிப்பதில் 22 ஆயிரம் பொலிசார்
பயணக் கட்டுப்பாடு விதிகளை கண்காணிப்பதில் 22 ஆயிரம் பொலிசார்
இன்று (21) இரவு 11 மணி தொடக்கம் நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவிருக்கிறது.
பயணக்கட்டுப்பாடு அமுலிலிருக்கும் காலப்பகுதியில் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுபற்றி கண்காணிப்பதற்கு சுமார் 22 ஆயிரம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை பயன்படுத்தி அல்லது ஏனைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து
வெளியேறுவதற்கு எந்தவித அனுமதியுமில்லையென பொலிசார் அறிவித்துள்ளனர்.
இருப்பினும் அத்தியாசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த பயணக்கட்டுப்பாடு தடை அல்ல என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண ,அரசாங்க
தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் அனைத்து பகுதிகளிலுமுள்ள மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி உண்டு. இதேபோன்று எவருக்காவது அத்தியாசிய
மருந்துவகைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அருகிலுள்ள மருந்தகத்திற்குச் சென்று அதனை பெற்றுக்கொள்வதற்காக செல்ல முடியும்.
அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும். குறிப்பாக பேக்கரி தயாரிப்புக்கள் உணவுப்பொருட்கள் காய்கறி பழங்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்கள் அடங்கலான நடமாடும் வாகன
விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண கூறினார்.
பொலிசார் பாய்ச்சல் – 145 பேர் அதிரடி கைது
இலங்கை
பொலிசார் பாய்ச்சல் – 145 பேர் அதிரடி கைது
இலங்கையில் கொரனோ விதிகளை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் 145 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதான பலருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட சுமாரானவர்கள் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
பொலிஸாரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்து மக்கள் தொடர்ந்து உலாவி வருகின்றனர் ,இந்த
நோயின் தாக்குதல் தொடர்பான தெளிதல் இல்லாததே இதற்கு கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது


























