Posted in Uncategorized

பூங்காவில் புதிய வகை கொரோனா தொற்றால் சிங்கம் பாதிப்பு

பூங்காவில் புதிய வகை கொரோனா தொற்றால் சிங்கம் பாதிப்பு

கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய வகை கொரோனா தொற்றால் சிங்கம் பாதிப்பு
சிங்கம்

சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் மனிதர்களிடையே வேகமாக பரவ தொடங்கியது. விலங்குகளையும் விட்டு வைக்காமல் முதலில் அமெரிக்கா

நியூயார்க் சிட்டியில் உள்ள டிரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் புலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே மாதம் முதல் முறையாக

ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தால் சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ந்தேதி பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு தொடர் இருமல் இருப்பது ஊழியர்கள் மூலம் தெரியவந்தது. அதன் பின்னர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் அன்றைய தினமே உடல் சோர்வுடன்

காணப்பட்ட சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பரிசோதனை முடிவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 வயது உடைய நீலா என்ற பெண் சிங்கம் இறந்துவிட்டது.

கவிதா (23), புவனா (19) என்ற 2 பெண் சிங்கங்களின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்… வண்டலூர் உயிரியல் பூங்காவில் மனித குரங்கு குட்டி ஈன்றது

இதற்கிடையே பூங்காவில் உள்ள 4 வங்கப்புலிகள் மற்றும் 3 சிங்கங்களின் சளி மாதிரிகள் எடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய

நிறுவனத்திற்கு மருத்துவ குழுவினர் அனுப்பி வைத்தனர். இதில் 19 வயது உடைய ராகவ் என்ற ஆண் சிங்கம் சார்ஸ் கோவிட்-2, டிஸ்டெம்பர் என்ற புதிய வகை கொரோனா தொற்றால்

பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் அந்த சிங்கத்தை தனிமைப்படுத்தி தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த புதிய வகை தொற்று பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு பரவாமல் இருப்பதற்காக பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த புதிய வகை சார்ஸ் கோவிட்-2 டிஸ்டெம்பர் தொற்று வயது முதிர்ந்த விலங்குகளை விட, இளம் வயதுடைய விலங்குகளை அதிக அளவில்

தாக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு இந்த புதிய வகை தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் குழுவினர் பூங்கா நிர்வாகத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

    Posted in Uncategorized

    பயணக்கட்டுப்பாடு-நீடிப்பு – மக்கள் அவதி

    பயணக்கட்டுப்பாடு-நீடிப்பு – மக்கள் அவதி

    நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணி

    வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று(12) தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள

    பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று(10) அறிவிக்கப்பட்டது.

    எனினும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை

    பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.

      Posted in Uncategorized

      ஆற்றுக்குள் பாய்ந்த லொறி – சாரதி மரணம்

      ஆற்றுக்குள் பாய்ந்த லொறி – சாரதி மரணம்

      பிபிலவில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விக்டோரியா நீர்த்தேக்கத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

      குறித்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

      கண்டி மற்றும் தெல்தெணிய பொலிஸின் சுழியோடிகளின் உதவியுடன் சாரதியின் சடலம் மற்றும் லொறி மீட்கப்பட்டுள்ளது.

      விபத்து இடம்பெறும் போது லொறியில் சுமார் 1,600 கோழிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

        Posted in Uncategorized

        பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் – ரவுடிகள் அட்டகாசம்

        பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் – ரவுடிகள் அட்டகாசம்

        வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு இளைஞர் குழுவொன்று தப்பிச் சென்றுள்ளனர்.

        முருகனூர் பகுதியில் இன்று (12) காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிதம்பரபுரம் பகுதியிலிருந்து வவுனியா இராசேந்திரகுளம்

        ஆடைத்தொழிற்சாலை நோக்கி ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்திற்கு முருகனூர் விவசாய பண்ணைக் அருகே முகங்களை மறைந்தவாறு நின்ற இளைஞர் குழுவினர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

        கல்வீச்சு தாக்குதலையடுத்து பேரூந்தினை சாரதி நிறுத்திய போது பேரூந்தினுள் புகுந்த அவ் இளைஞர் குழுவினர் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

          Posted in Uncategorized

          இலங்கையில் எரிபொருட்கள் விலை அதிகரிப்பு – 20 ரூபாவால் எகிறும் பெட்ரோல்

          இலங்கையில் எரிபொருட்கள் விலை அதிகரிப்பு – 20 ரூபாவால் எகிறும் பெட்ரோல்

          இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசினால் எரிபொருட்கள் விலை திடிரென அதிகரிக்க படுகிறது


          இன்று நள்ளிரவு முதல் உயர்ரத்த படும் இந்த எரி பொருட்கள் விலையால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்

          பெற்றோல் லிட்டருக்கு 20 ரூபாவால்; அதிகரிக்க படுகிறது ,அதேபோல டீசல் 7 ரூபாவில் அதிகரிக்க படுகிறது

          கொரனோ காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு திணறி வரும் நிலையில் இந்த விலை ஏற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

            Posted in Uncategorized

            தொடரும் காவல்துறை வேட்டை -1,027 பேர் கைது

            தொடரும் காவல்துறை வேட்டை -1,027 பேர் கைது

            இலக்கையில் தன்மை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் சுமார் 1,027 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


            கைதான அனைவரும் முகக்கவசம் மற்றும் மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              இலங்கையில் குற்றப் பிரிவிற்கு முதலாவது பெண் பொலிஸ் அதிகாரி

              இலங்கையில் குற்றப் பிரிவிற்கு முதலாவது பெண் பொலிஸ் அதிகாரி

              இலங்கை வரலாற்றில் முதன் முதலாக குற்ற தடுப்பு பிரிவிற்கு SSP Imesha Muthumala நியமிக்க பட்டுள்ளார்

              ஏனைய நிலைகளில் பெண்கள் உள்ள பொழுதும் ,இந்த நிலைக்கு இப்பொழுதே இவர் நியமிக்க பட்டுள்ளது ,காவல்துறை வரலாற்றில் பெரும் சாதனையாக பார்க்க படுகிறது

              Posted in Uncategorized

              இலங்கையில் ஒரே நாளில் 101 பேர் மரணம் – மிரட்டும் கொரனோ

              இலங்கையில் ஒரே நாளில் 101 பேர் மரணம் – மிரட்டும் கொரனோ

              இலங்கையில் இன்று ஒரே நாளில் நூற்றி ஒரு பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இலங்கையில்

              பலியானவர்களில் இன்றே அதிக அளவான மக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது


              இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 2114 ஆக இடம்பிடித்துள்ளது

                Posted in Uncategorized

                இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

                இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

                இலங்கையில் அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (பி.டி.ஏ) .ரத்து செய்யக் கோரும் தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

                இலங்கை மீதான தீர்மானம் ஆதரவாக 628 வாக்குகள், எதிராக 15 மற்றும் 40 நாடுகள், வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

                மனித உரிமை நிலைமை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் மூன்று தீர்மானங்களை

                நிறைவேற்றியது. ஸ்பெயின் / மொராக்கோ எல்லையிலும், ரஷ்யாவிலும், இலங்கையிலும் மனித உரிமை நிலைமைகள் குறித்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

                மிக சமீபத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையின் ஆபத்தான சரிவு குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள

                Posted in Uncategorized

                கடிதம் மூலம் மருந்துகளை அனுப்பும் – யாழ்ப்பாண மருத்துவமனை

                கடிதம் மூலம் மருந்துகளை அனுப்பும் – யாழ்ப்பாண மருத்துவமனை

                யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                நாட்டில் தற்போது நிலவும் கொரோனா நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                இதுதொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

                யாழ்ப்பாண  மருத்துவமனை
                  Posted in Uncategorized

                  பியர் அருந்தும் சிறுவன் – மடக்கிய பொலிஸ்

                  பியர் அருந்தும் சிறுவன் – மடக்கிய பொலிஸ்

                  சமூக வலைத்தளத்தில் சிறுவன் பியர் அருந்தும் காட்சிகள் அடங்கிய காணொளி வெளியான நிலையில் அது தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

                  பேலியகொட, நுகே வீதியை சேர்ந்த 04 வயது சிறுவன, குறித்த வீடியோவில் உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

                  இதனையடுத்து, குறித்த வீடியோவை எடுத்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

                  அத்துடன், கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபரை நீதிமன்றில் இன்று(11) முன்னிலைப்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.

                  இலங்கையின் சட்டத்துக்கு அமைய சிறுவர்களுக்கு மதுபானம், புகைத்தல் பொருட்கள் உள்ளிட்டவைற்றை பெற்றுக்கொடுப்பது, வழங்குவது பாரிய குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

                    Posted in Uncategorized

                    இஸ்ரேல் வீசிய குண்டின் மேலே ஏறி விளையாடும் சிறுவர்கள் photo in

                    இஸ்ரேல் வீசிய குண்டின் மேலே ஏறி விளையாடும் சிறுவர்கள்

                    பலஸ்தீனத்தில் இஸ்ரேல் வீசிய எறிகணைகள் மற்றும் பெரும் ஏவுகணைகள் என்பன வீழ்ந்து

                    வெடித்தன ,இதில் பலநூறு குண்டுகள் வெடிக்காத நிலையில் உள்ளது ,இவ்வாறான குண்டுகள் மீது சிறுவர்கள் ஏறி விளையாடும் பயங்கர காட்சிகள் வெளியாகியுள்ளன

                    இஸ்ரேல் வீசிய இந்த குண்டின் எடை சுமார் ஆயிரம் கிலோ ஆகும் ,அவ்வாறான பெரும் அழிவை தரக்கூடிய இந்த குண்டின் மீதே .சிறுவர்கள் ஏறி விளையாடுகின்றனர்

                    நாம் போராளிகள் முகாம்கள்மீதே குண்டை வீசினோம் என இஸ்ரேல் கூறியது ,இப்பொழுது புரிந்ததா .இவர்கள் இலங்கையின் மச்சான் தான் என்பது

                    ஏன் தெரியுமா..? இலங்கையும் போர்க்காலத்தில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிலையில் ,இவர்கள் போலவே பேசியது இங்கே குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    ஆப்காணில் வெடித்த குண்டு -16 -பேர் மரணம் -70 பேர் காயம்

                    ஆப்காணில் வெடித்த குண்டு -16 -பேர் மரணம் -70 பேர் காயம்

                    ஆப்கானிஸ்தான் நாட்டில் இராணுவ நிலைக்கு அருகில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில்

                    சிக்கி பதினாறு பேர் பலியாகியுள்ளனர்

                    மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,அமெரிக்கா இராணுவம் அங்கிருந்து விலகி வரும் நிலையில் தலிபான்கள் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      வீழ்ந்து எரியும் இராணுவ விமானம் -வீடியோ

                      வீழ்ந்து எரியும் இராணுவ விமானம் -வீடியோ

                      மியான்மர் நாட்டில் இராணுவத்தினரை காவிய படி பயணித்த இராணுவ விமானம் ஒன்று திடீரென

                      வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர்

                      மேற்படி விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                      click here video


                      https://www.youtube.com/watch?v=VfgfdUXNCnw

                      https://www.youtube.com/watch?v=VfgfdUXNCnw
                      Posted in Uncategorized

                      இலங்கையில் கொரானாவுக்கு 67 பேர் பலி

                      இலங்கையில் கொரானாவுக்கு 67 பேர் பலி

                      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 67 பேர் பலியாகியுள்ளனர்

                      நாள் தோறும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாது – மரண வீட்டில் சாணக்கியன்

                        அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாது – மரண வீட்டில் சாணக்கியன்

                        கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், குறித்த நபரின் பாணந்துறை வீட்டிற்கு தமிழ்

                        தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் நேற்று (09) சென்றிருந்தனர்.

                        உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உறவினர்களுடன் பிரதேச மக்களையும் சந்தித்து இருவரும் ஆறுதல் கூறியிருந்தனர்.

                        இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாணக்கியன், ´´இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் ஒரு விதமாகவும், பொலிஸார் ஒரு விதமாகவும், உறவினர்கள் ஒரு விதமாகவும் தெரிவிக்கின்றனர்.

                        எனவே இது தொடர்பில் பாராபட்சமற்ற நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இங்கு தமிழரா, முஸ்லிமா, சிங்களவரா என்பதல்ல விடயம். இதுபோன்ற அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாதென்பதற்காகவே நாம் இங்கு வருகை தந்துள்ளோம்.´´ எனக் குறிப்பிட்டுள்ளார்.

                        இந்த விடயம் தொடர்பில் இரா. சாணக்கியன் நேற்று முன்தினம் பாராளுமன்றத்திலும் கருத்து

                        வெளியிட்டிருந்ததுடன், நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

                        இதேவேளை, இதற்கு முன்னர் இதுபோன்ற மற்றுமோர் சம்பவம் மட்டக்களப்பு பகுதியிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

                        Posted in Uncategorized

                        வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் -சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

                        வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் -சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

                        வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கிய நபரை தேடி விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

                        குறித்த பொது சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

                        முகக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரிடம் விசாரணையில்

                        ஈடுபட்ட போது குறித்த நபரால் பொது சுகாதார பரிசோதகர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

                        25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு பொது சுகாதார பரிசோதகரை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

                        அதன்படி, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக வவுனியா பொலிஸாரினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

                        Posted in Uncategorized

                        வெடித்த குண்டு – சிதறிய இராணுவ உடல்கள்

                        வெடித்த குண்டு – சிதறிய இராணுவ உடல்கள்

                        கிழக்கு சிரியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ரசியா இராணுவத்தினரை இலக்கு வைத்த

                        நடத்த பட்ட தாக்குதலில் பல இராணுவத்தின் படுகாயமடைந்துள்ளனர் ,இதில் சிலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                        எனினும் முழுமையான சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை

                          Posted in Uncategorized

                          தற்காலிக கொரனோ மருத்துவமனை திறப்பு

                          தற்காலிக கொரனோ மருத்துவமனை திறப்பு

                          கடற்படையினரால் கம்பஹா, வெரௌவத்தை பகுதியில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை

                          அளிக்கும் 650 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

                          நாட்டில் வியாபித்துள்ள கொவிட்-19 பரவல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு உந்து சக்தி அளிக்கும் வகையில் இயங்கு

                          நிலையில் இல்லாத தொழிற்சாலையினை இடைநிலை சிகிச்சை நிலையமாக கடற்படை மாற்றி அமைந்துள்ளது.

                          சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடற்படை வீரர்களின் உடல் உழைப்பினை கொண்டு முதற்கட்ட பணிகள் பூர்த்தி ஆக்கப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சர்

                          கௌரவ பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இந்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

                          கடற்படையின் உத்தேச திட்டத்திற்கு அமைய இந்த தொழிற்சாலை, எதிர்காலத்தில் சுமார் 2000

                          படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையமாக விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                            Posted in Uncategorized

                            முதலை இழுத்து சென்ற மனிதரை – பாய்ந்து காப்பாற்றிய பிக்கு

                            முதலை இழுத்து சென்ற மனிதரை – பாய்ந்து காப்பாற்றிய பிக்கு

                            கடந்த திங்கள் கிழமை Diyamailagaswewa, Kahatagasdigiliya அருவிக்குள் குளித்து கொண்டிருந்த

                            எழுபது வயது முதியவர் ஒருவரை நீரடியால் பதுங்கி வந்த முதலை இழுத்து சென்றுள்ளது

                            இதனை கண்ணுற்ற முப்பது வயதுடைய இளம் பிக்கு ஒருவர் நீருக்குள் பாய்ந்து அந்த முதியவரை

                            காப்பாற்றியுள்ளார் ,இவரது இந்த துணிவும் ,அறம் சார்ந்த செயலும் தற்போது சமூக வலைத்தளத்தில்
                            வைரலாகி வருவதுடன் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன