இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்
Posted in இலங்கை செய்திகள்

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்துக்கு அருகே கடற்கரையில் இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதாக

வனத்துறையினருக்கு புதன்கிழமை (11) காலை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடற்கரைக்கு சென்று பார்த்தபோது 18 அடி நீளமும் 2 டொன்

எடையும் கொண்ட அரிய வகை இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து வனத்துறையினர் கரை ஒதுங்கிய திமிங்கல உடலை ஜே.சி.பி உதவியுடன் மீட்டு கால்நடை மருத்துவரை கொண்டு சென்று இறந்த

திமிங்கலத்தை உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் கடற்கரை மணலில் புதைக்கப்பட்டுள்ளது.

இறந்த திமிங்கலம் நீல திமிங்கல வகையை சேர்ந்தது. இந்த வகை திமிங்கலங்கள் 118 அடி நீளம் வரை வளரக்கூடியது.

ஆனால் தற்போது இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் நீலத்திமிங்கலத்தின் குட்டியாக இருக்கலாம் எனவும் இது 18 அடி இருப்பதாகவும் , பெரிய கப்பல் அல்லது கடலுக்கு அடியில் உள்ள பாறை

போன்றவற்றாலும் மோதி அடிபட்டு, இறந்து உடல் அலைகளால் அடித்து வரப்பட்டிருக்கலாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

கடற்கரையில் 40 அடி நீள திமிங்கலம் செத்து கரை ஒதுங்கியது

கடற்கரையில் 40 அடி நீள திமிங்கலம் செத்து கரை ஒதுங்கியது

வசாய் கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய 40 அடி நீள திமிங்கலத்தின் உடல் மாதிாிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

வசாய் கடற்கரையில் 40 அடி நீள திமிங்கலம் செத்து கரை ஒதுங்கியது
செத்து கரை ஒதுங்கிய 40 அடி நீள திமிங்கலம்
வசாய்:

பால்கர் மாவட்டம் வசாய் மேற்கு மார்டெஸ் கடற்கரையில் நேற்றுமுன்தினம் திமிங்கலம் ஒன்று செத்து கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சியினர் மற்றும் மீன்வளத்துறை

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் 30 டன் எடையுள்ள 40 அடி நீளமுள்ள திமிங்கலம் எனவும், கடலில் உயிரிழந்து பல நாட்கள் ஆனதால் உடல் அழுகிய நிலையில்

காணப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த திமிங்கலத்தின் உடல் மாதிாிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

    Posted in Uncategorized உலக செய்திகள்

    திமிங்கலம் அருகில் மனிதர் – வைரலாகும் காணொளி

    திமிங்கலம் அருகில் மனிதர் – வைரலாகும் காணொளி

    அவுஸ்ரேலியாவின் கடல் பகுதியில் மனிதர் ஒருவர் நீச்சலில் ஈடுபட்டார் ,அப்பொழுது அவரது

    அருகில் திமிங்கலம் ஒன்று தன் குட்டியுடன் நெருங்கியது ,மேற்படி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

    அச்சம் இன்றி மிக அருகில் மனிதர் நடமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

      Posted in Uncategorized

      படகை அடித்து உடைத்த திமிங்கலம் – வாலிபன் காயம்

      படகை அடித்து உடைத்த திமிங்கலம் – வாலிபன் காயம்

      அவுஸ்ரேலியா NSW தெற்கு கடல் பகுதியில் படகில் பயணித்து கொண்டிருந்தனர் ,.அப்பொழுது திடீரென

      அந்த கடல் பகுதியில் தோன்றிய இராட்ஷத திமிங்கலம் ஒன்று அந்த படகை அடித்து நொறுக்கியது

      ,இதில் அந்த படகு பலத்த சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த 18 வயது வாலிபன் படுகாயமடைந்துள்ளார்

      காயங்களுக்கு உள்ளான வாலிபன் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்