டெங்கொழிக்க எங்களின் பங்கு
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

டெங்கொழிக்க எங்களின் பங்கு

டெங்கொழிக்க எங்களின் பங்கு

சிரட்டை பேணி கோம்பைகளை
நீர் தேங்காமல் வை!
குறட்டை விட்டுத் தூங்க வீட்டைக்
கூட்டிப் பெருக்கனும் உன் கை!

பொலித்தீன் பைகள் யோக்கற் கப்பும்
சூழலுக்கு கேடு!
பொழுது சாய்ந்து தூங்கும்போதும்
நுளம்பு வலை போடு!

அரட்டையடிச்சு அலட்சியமா யிருந்தா
அழிச்சிடும் நுளம்பு!
விரட்டியடிக்க செயற்படனு மென்று
வீட்டார்க்கு விளம்பு!

கிடைத்தற்கரிய உயரிய பிறப்பு
மானிடப் பிறப்பு!
இடத்தை தூய்மைப் படுத்தாவிட்டால்
கிடைப்பதே இறப்பு!

தேங்கும் நீர் தங்கி நின்றால்
டெங்கு ஊதும் சங்கு!
எங்கும் சுத்தம் பேணும் நலனே
எங்களின் பங்கு❗

-பிறேமா(எழில்)-

நீயே உனக்கு துணை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

நீயே உனக்கு துணை

நீயே உனக்கு துணை

உள்ளம் வலிக்கும் போதினில
உன்னை செதுக்கி விடு
உதாசீனம் செய்யும் போதினில
ஊமையாய் இருந்து விடு

காலம் மலரும் போதினில
கபடங்கள் உடைத்து விடு
கபடம் இல்லா கண்ணியத்தை
கரை ஏற்றி வைத்து விடு

தோல்விகள் சூடும் வேளையில
சோரா இருந்து விடு
தவறை திருத்தி எழுந்திடும்
தகைமைகள் வளர்த்து விடு

பக்குவம் தேறும் பண்பயிலை
பகைமையிலும் காட்டி விடு
கடின மொழியை எறிந்தே
காதலை வளர்த்து விடு

உன்னை மட்டும் நம்பியே
உலகை பார்த்து விடு
உயிர் உள்ளவரை உனக்கு நீயே
உரிமம் புரிந்து விடு

வலிகள் தாங்கி எழுந்தால் தான்
வாழ்வு சீராகும்
வையம் ஆண்டிட இந்த
வலிகளே துணையாகும் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-12-2023

மனிதம் ஒன்று வீழ்ந்தது
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மனிதம் ஒன்று வீழ்ந்தது

மனிதம் ஒன்று வீழ்ந்தது

எழுந்து நடந்த பெரியவன் -இவன்
எதுகை மோனையில் உயர்ந்தவன்
அழுது திரிந்த மக்களுக்கு
அழைத்து உணவு தந்தவன்

சிகரம் உயரம் இருந்தவன்
சில்லறைக்கும் உதவியவன்
சிந்தனை உயர்வு கொண்டவன் -எதிர்க்கட்சி
சிம்மாசனத்திலும் அமர்ந்தவன்

படைக்க முடியா சாதனையை
படைத்து காட்டி நிமிர்ந்தவன்
அடக்க முடியா அன்பினை -ஈழ
அண்ணன் மீது கொட்டியவன்

எதற்கும் அஞ்சா நடப்பவன்
எதையும் எதிர் கொள்பவன்
அந்த மலை வீழ்ந்தது
ஆழ வலி தந்தது .

வன்னி மைந்தன் ( ஜெகன் )

ஆக்கம் 29-12-2023

28-10-2023 நடிகர் விஜகாந்த மரணித்த பொழுது கண்கள் கலங்கிய வேளையில்
அவருக்கு இதனை சமர்ப்பணம் செய்கிறேன்

போர் மகளே வாழ்க
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

போர் மகளே வாழ்க

போர் மகளே வாழ்க

களபூமி வேங்கைக்கும்
காலனி சலங்கைக்கும்
ஓட்டம் நடக்கிறது
ஓர்மம் வெடிக்கிறது

வெற்றி பெற்றுவிட
வேகம் பிடிக்கிறது
அப்பப்பா பிள்ளையின்
அகரம் தெரிகிறது

கரை நகர் மண்ணின்
கல கலப்பு தெரிகிறது
பிடிபட்ட பந்தும்
பிடியாணை கேட்கிறது

அடித்தெறிந்த மட்டையும்
அவமான படுகிறது
கோபத்தின் உச்சத்தில்
கொள்கை வெடிக்கிறது

சிகரம் ஏறிய
சிந்தைக்கு வாழ்த்து
பெருமை தேடிய
பெரு மகளே வாழ்த்து ..!

அன்புடன் – வன்னி மைந்தன்

ஈழம் காரைநகர் களபூமியை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் என்ற ஈழத்தமிழச்சி இங்கிலாந்து கிர்க்கெற் அணியில் இடம் பிடித்துள்ளார்.இவர் பொன்னாவளை களபூமியைச் சேர்ந்த தாமோரி ஆறுமுகத்தின் மகன் சபாரத்தினத்தின் பூட்டப் பிள்ளை என்பதும் குறிப்பிடதக்கது.
நல் வாழ்த்துகள் அமுருதா.

ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்


ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்

ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம் ,
சிக்கலில் ஆளும் அரசு

குஞ்சப்பு பேச்சில
குலுங்கி சிரிக்கிற
மக்கள் கருத்தில
மனம் குளிருது

வீடியோ

மழைக்காலத் துன்பங்கள்
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

மழைக்காலத் துன்பங்கள்

மழைக்காலத் துன்பங்கள்

தட்டத் தட்டத் தீப்பெட்டியும்
தானா உதிர்ந்து பிய்யுது
சட்டைத் துணிகள் காயாமல்
தண்ணி தண்ணியா வடியுது

கொட்டும் பெரும்மழையால
கூரை பிஞ்சு ஒழுகுது
சட்டி பானை வைத்தாலும்
சருவம் நிரம்பி வழியுது

சொட்டு இடமும் மீதமின்றி
சேறாய் வழுக்கி விழுத்துது
குட்டி நாய்கள் ஆடுமாடு
குளிரும் கூடி அழுகுது

அட்டைப்பூச்சி மட்டைத்தேள்
அணிவகுத்து வருகுது
மட்டை ஓலை தேங்காயும்
மண்டையில விழுகுது

வெட்டி வெட்டி விட்டாலும்
வெள்ளம் வீட்டுக்க பெருகுது
விட்டு விட்டு இடுப்பு நாரி
விறைச்சுக் கால்கள் நோகுது

நட்டுவைச்ச பயிரெல்லாம்
நாசமாத் தான் புதையுது
விட்டுவிடாத இயற்கையால
வாழ்வாதாரம் சிதையுது

கஸ்ரபட்ட எங்களுக்கு
ஏன்தான் இப்படி நடக்குது
கட்டையில போகுமட்டும், இந்தக்
கட்டமாத் தானே இருக்குது !

-பிறேமா(எழில்)-

இறுதிவரை இவனே துணை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இறுதிவரை இவனே துணை

இறுதிவரை இவனே துணை

கருணை கொள்வான் கடவுளை நம்பு
காலை மாலை அவனை வணங்கு
நெஞ்சின் நெருடல் வருடி எறிவான்
நேசம் ஊட்டி மகிழ்வை தருவான்

சொல்லும் செயலும் அவனே தருவான்
சொன்னதை செய்யும் அருளும் புரிவான்
தனிமை விலக்கி தாயாய் மலர்வான்
தகமை அளித்து உலகை தருவான்

கண்ணின் ஒளியாய் அவனே இருப்பான்
கடினம் இலகு இரண்டும் தருவான்
தெளிந்து நிமிர தெளிதல் புரிவான்
தெவிட்டா திருக்க தேடுதல் அளிப்பான்

மலர்ந்த அகமது மன்றில் தருவான்
மலரும் சேவை முதலே இடுவான்
மடியும் வரையில் இவனை நினைப்பாய்
மனதில் நின்மதி பெற்று வாழ்வாய் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-12-2023

எதிரி நீ புரிந்து விடு
Posted in எதிரி நியூஸ் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எதிரி நீ புரிந்து விடு

எதிரி நீ புரிந்து விடு

விதி வந்து விளையாடும் போதினில
விதிகள் அவ்வேளை தெரிவதில்லை
சதி வந்து ஒன்றாக கூடையில
சகதி அவ்வேளை புரிவதில்லை

வலி வாங்கி வாழ்வு கசக்கையில
வழி சொன்னார் வாய்கள் சிரிப்பதில்லை
நம்பிட மறுக்கும் சிந்தையால
நாம் சொல்லும் பேறு புரிவதில்லை

செய்யும் முன் ஒன்றை தெரிந்து கொண்டால்
செய் வினை கூட பலிப்பதில்லை
திட்டங்கள் போட்டு நடப்பவரை
திருந்திடின் ஏற்பின் குற்றம் என்பேன்

எப்படி குழிகள் வெட்டினாலும்
எகிறி பாயும் சிந்தை கொண்டால்
வெட்டிய குழியில் அவரை தள்ளு
வெற்றியின் நாயகன் நீயே என்பேன்

எழும் போது பல இடர்கள் வரும்
எதிரிகள் படை சூழ்ந்து வரும்
நகர்வை அறிந்து நகர்ந்து விட்டால்
நாடக மேடை உடைந்து விழும் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 15-12-2023

என் தோழிக்கு இன்று பிறந்த நாள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என் தோழிக்கு இன்று பிறந்த நாள்

என் தோழிக்கு இன்று பிறந்த நாள்

அன்புக்கும் பண்புக்கும் முதலானவள்
அற நெறி போதனை தாயானவள்
வில்லுக்கும் அம்புக்கும் இலக்கானவள்
விடுதலை வேட்கையின் கூரானவள்

சொல்லுக்கும் மொழிக்கும் உயிரானவள்
சொன்னதை செய்கின்ற பொருளானவள்
கல்விக்கு ஆசானாய் மலர்கின்றவள்
கார்த்திகை தீபமாய் எரிகின்றவள்

நெஞ்சுக்கு நெருக்கமாய் நிற்கின்றவள்
நேயத்தை பாடி நடக்கின்றவள்
அன்றெங்கள் பள்ளியில் கற்றவள்
ஆருயிர் தோழியானவள்

இடரா இன்றும் தொடர்பவள்
இதயம் மகிழ மொழிபவள்
அகவை உந்தன் நாளிலே
ஆர தொழுது வாழ்த்துகிறேன் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 10-12-2023

என்னோடு கல்வி கற்று ஆசிரியராக பணிபுரியும் தோழி சத்திய கலா அகவை நாளில் அவரை எண்ணி வடித்த வாழ்த்து பா ..!

என்னை கூட்டி போ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை கூட்டி போ

என்னை கூட்டி போ

சின்ன சின்ன ஆசை வந்து
சீக்கிரம் நெஞ்சில் முட்டுறதே
கொஞ்சி பேச நினைக்கையிலே
கோபம் கொண்டு துரத்துறியே

வஞ்சி உந்தன் பேரழகை
வழியில் நிண்டு தரிசிக்கிறேன்
கொஞ்சம் இரக்கம் காட்டாயா
கொள்கை கொஞ்சம் மாற்றாயா

அழைத்தால் பேச மறுக்கிறாய்
அருகில் வந்தால் முறைக்கிறாய்
என்ன செய்தால் இரங்கிடுவாய்
எடுத்து கொஞ்சம் சொல்லாயா

ஆண்டு ஒன்று கழிகையில
அகவை ஒன்று கழிகிறதே
பொல்லு ஊன்றும் காலமதில்
பொக்கை வாயு வேண்டாமே

வீடு வந்த வேளையில
விழியால் பேசி நின்றவளே
அழைத்து போக மாட்டாயா
ஆகமத்தை முடிக்காயா ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-12-2023

வீடியோ

கலங்காதே மனமே
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கலங்காதே மனமே

கலங்காதே மனமே

ஊரு விட்டு ஊரு வந்தா
உன்னை மறப்பேனா
உள்ளமதில் நின்றாய்
உன்னை எறிவேனா

கண்ணுக்குள்ள நீ இருந்து
காட்சிகளை தினம் கொட்ட
கண்ணு மறந்து தூங்குமா
காதலது தாங்குமா

விண்ணும் மண்ணும் உள்ளவரை
விடயங்களை மறப்பேனா
விரதமதை முடித்து வைத்த
விருந்தோம்பல் மறப்பேனா

எந்தனது நெஞ்சுக்குள்ள
என்றும் நீ ஆலயமே
என்றும் உன்னை மறவேனே
ஏன் மனமே கலங்காதே

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023

இதயம் உன்னை தேடுதே
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இதயம் உன்னை தேடுதே

இதயம் உன்னை தேடுதே

உன்னை எண்ணி பார்க்கையில
உள்ளம் கலங்குமடி
ஊரின் வாசம் தேடையில
உன் நினைவு துரத்துமடி

சின்ன வயதில் நீ இருந்து
சீண்டிய நினைவு பொழியுமடி
அச்சம் இல்லா நீ பொழிந்த
அன்பை தேடுமடி

எதையும் அறியா எனை ஏற்ற
எண்ணம் பிடிக்குதடி – அதை
எண்ணி எண்ணி பார்க்கையில
என் மனம் வியக்குதடி

கள்ளம் இல்லா பேச்சழகும்
கனிந்த மொழி பண்பழகும்
இன்றும் நினைவில் இனிக்குதடி
இதயம் உன்னை தேடுதடி

தரிசா தரை கிடந்தாலும்
தாமரை குளம் போதுமடி
வருடம் பல ஆனாலும்
வளமாய் வயல் செழிக்குமடி

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023

எமது வைபர் குழுவில் VIDEO காட்சிகள் பார்க்க விரும்புவார்கள் இணைக

பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கொள்கை நாட்டி நடந்தவன்
கொடி நாட்டி தேசம் ஆண்டவன்
வல்வை ஊரில் பிறந்தவன்
வையம் வியந்திட வைத்தவன்

பெரும் சமராடி வென்றவன்
பெரும் தலைவனாகி நின்றவன்
நஞ்சு உடல் தரித்தவன்
நய வஞ்சகத்தால் வீழ்ந்தவன்

ஈழம் கனவய் கொண்டவன்
ஈகம் தந்தே உயர்ந்தவன்
போரில் வெல்ல பயந்தவன்
பொறுக்கி ஒன்றால் வீழ்ந்தவன்

ஆளும் காலம் இல்லை தான்
ஆறா வலிகள் நெஞ்சில் தான்
அகவை உந்தன் நாளிலே
அண்ணா உன்னை வாழ்த்துகிறோம் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-11-2023

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்தவன்
காலத்தினால் எமக்காக
பரிசளிக்கப்பட்டவன்
காலத்தினையே வென்ற
கரிகாலன் அவன் – பாரில்
காண்போர் எல்லோரும் போற்றும் எங்கள் தலைவன் அவன்!

ஈழத் தாயவளின் மானக் காத்த
தானைத் தலைவன் – உய(யி)ர்
ஈகத்திலே பாரியையும் விஞ்சிய
வள்ளல் அவன்
ஈழ மண் மீதுள்ள பாசத்தினால்
ஈகத்துக்கே உதாரணமானவன்
ஈனர்கள் கண்டு அரண்டோடும் வேங்கைப் புலியும் அவன்!

கடாரம் வென்ற சோழனின் வழி வந்தவன்
காட்டாற்று வெள்ளம் போல
எதிரியைக் கலங்கடித்தவன் – தமிழர் உள்ளத்திலே
கங்கை சூடிய பெருமானுக்கு
நிகரானவன்
கலங்கா நெஞ்சம் கொண்ட எங்கள் அண்ணன் அவன்!

உள்ளத்தில் என்றும் குழந்தையைப் போலானவன்
உயர் உள்ளத்தினால் உலகத்தையே வியக்க வைத்தவன்
உறுதியே உகந்து வந்து அவன் உளத்திலே
உறைய வைத்தவன் -உலகின்
உன்னத மொழி தமிழ் என்பதை உலகிற்கே புரிய வைத்தவன் அவன் !

-நிலாதமிழ்
26.11.2023

மாவீரர்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

மாவீரர்

மாவீரர்

கார்த்திகையில் சுடர்ந்து கனன்றெரியும் கனலிகளே
கார்த்திகையின் நாயகர்களே
உமை நினைந்துருகி
கார்த்திகைப் பூவெடுத்து
கார்த்திகை 27 இல்
உம் பாதந் தொழுதிடுவோம்!

விழித்திரையில் நீர் வழிந்திட
எம் மி(ம)னத்தின் குறைகளை சொல்லிக் கதறிட
மொழியுரை ஏதுமற்று
நடைப் பிணமாக
உமைத் தேடி
நிரை நிரையாக வந்து
விம்மி யழுதிடுவோம்!

கல்லாக இருந்து எமைக் காக்கும் கடவுளர் போல்
தில்லாக நின்று
எமை யழித்த படையழித்து
ஈழவளின் மானம் காத்து
கார்த்திகைக்கு பெருமை சேர்த்த
உமை கணமும்
நினைந்து ருகிடுவோம்!

இளமைக் காலக் கனவுகளைத் துறந்து
எமதினத்தின்
வருங்கால சந்ததிக்காக
ஈழத்தின் யாகத் தீயில்
ஆகுதியாகிய உமை
நிதமும்
போற்றித் துதித்திடுவோம்!

ஈழத்தின் தலைமகனின் கனமறிந்து தோள் கொடுத்து
காலத்தின் தேவையை
ஈடேற்றி
ஞாலத்தில் வரலாறாகிய
தீரர்களே
உம் கனவை ஈடேற்ற எமக்கு வல்லமை
தாருமென்று இறைந்துருகி
நெய் விளக்கேற்றிடுவோம்!

நிலாதமிழ்.17.11.2023.

கண்ணீர் அஞ்சலி
Posted in கவிதைகள் முக்கிய செய்திகள்

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

அன்பினாலே எங்களை அரவணைத்தவன்
அன்றாடம் எமக்கு உதவி நின்றவன்
உடன் பிறந்தார் போலெம்மை அரவணைத்தவன்
உதட்டினிலே பொய்யில்லா பேசிநின்றவன்

வயல் விதைக்க வந்து நின்று
வளம் தந்தவன்
வாலிபத்தில் எங்களுக்கு
துணை நின்றவன்

அறத்தினாலே எங்களை ஆர்ப்பரித்தவன்
அந்தோபார் இன்றெம்மை அழவைத்தவன்
வீதியிலே போகையில வீழ்ந்து போனவன்
விபத்தினிலே விதியிடை மாண்டுபோனவன்

காலையிலே வந்த சேதி
கண்ணீர் தந்தது
கை தொழுதேன் கண்ணீர் மல்க
கண்ணீர் அஞ்சலி

முரசுமோட்டையை சேர்ந்த சேற்றுக்கண்டி
தோழர் ரூபன் அவர்கள் 14-11-2023 கனடாவில் விபத்தில் மரணமான செய்தியறிந்த பொழுது …

இவரது விபத்து செய்திகள் ,வீடியோ பார்க்க இதில் அழுத்துக

வந்து விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வந்து விடு

வந்து விடு

நித்தம் உனக்கு முத்தமிட்டு
நீண்டுறங்க ஆசை
நீ எனக்கு உரித்தானால்
நித்தமிட ஆசை

பத்து திங்கள் ஆக்கி வைத்து
பார்த்துவிட ஆசை
பார் காணும் இரவெல்லாம்
பகலாக்க ஆசை

நெஞ்சுக்குள்ள நீ துடிக்க
நித்தம் என்ன செய்வேன்
காத்திருப்பு போது மடி
கண் மணியே வாடி

போர்வைக்குள்ள நீ இருந்தா – உலக
போரெல்லாம் தோற்குமடி
வேர்வைக்குள்ள நீ குளிக்க
வேண்டுதலும் தீருமடி ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-11-2023

இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்

இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்

கத்தி வாய் அழுதாலும்
கை கட்டி நின்றாலும்
பொத்தி வாய் இருந்தாலும்
பொறுக்கலையே பொறுக்கலையே

சத்தி வாய் வயிறோடும்
சாகாத வாயதோடும்
நீள துயர் தோய்ந்து
நீளம் எது போவதுவோ

துடிக்காத இதயமும்
துயர் அறியா பேனையும்
இருந்தென்ன வாழ்ந்தென்ன
இருந்தென்ன வாழ்ந்தென்ன

உலக சட்டத்தின்
உவமானம் இதுவென்றால்
தமிழனுக்கு அவமானம்
தலை குனிகிறேன்

நிறையாத வயிறோடு
நீளம் நடக்கின்ற
கண்ணீர் துளிகளின்
கால் தடம் பாராய்

சொந்த நிலம் பறித்து
சோகத்தை நீயளிக்க
வெந்து நான் பார்க்கவோ
வேதனை சேர்க்கவோ

என் துயரை நீ பார்த்து
ஏளனமாய் சிரி
உன் துயரை நான் பார்த்து
உனக்காய் அழுவேன்

அடங்காத குணத்தோடு
அகிலத்தை ஆள்கின்ற
விளங்காத வாய்களின்
விலாசம் இதுவோ ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 7-11-2023

பலஸ்தீன யுத்தம் அல் அசாத் புயல்; நடவடிக்கையின் பின்னர் அழிக்கப்டும் மக்கள் கண்டு

இன்றைய பாலஸ்தீனம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இன்றைய பாலஸ்தீனம்

இன்றைய பாலஸ்தீனம் ..

மூச்சு விட முடியாது
முண்டியடிக்கும் கூட்டம்
காற்று வரும் திசையறிந்து
கை காட்டி நிற்கிறது

வீச்சு வலை வீசி இஸ்ரேல்
விதமாய் உயிர் குடிக்கிறது
காத்துவிட மாட்டாயா
கரங்கள் தொழுகிறது

பேச்சு இழந்து போக வா
பெரும் கூட்டம் திரள்கிறது
பேர் பெற்ற வல்லரசின்
பெருமை நன்றே தெரிகிறது

வாலாட்டி திரிவதுவோ
வாழ்க்கை சிரிக்கிறது
கோலேற்றி வாழ்ந்து விட
கொள்கை துடிக்கிறது

நாள் ஒன்று கழிகையிலே
நாடி சோர்கிறது
நான் இறந்து போவேனோ
நம்பிக்கை இழக்கிறது

இப்படித்தான் ஊர்கிறது
இன்றைய பாலஸ்தீனம்
இறந்தாலும் அழுது விட
இங்கு இன்னும் தடை தான் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-11-2023

பலஸ்தீன யுத்தம் அல் அசாத் புயல்; நடவடிக்கையின் பின்னர் அழிக்கப்டும் மக்கள் கண்டு

வீடியோ

நாங்கள் மலர்ந்துவிட்டோம்
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

மலர்களே❗
சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
கார்த்திகை மாத
காவிய தேவருக்காய் மலர்ந்துவிட்டோம்.
வான்மழை பெய்யும்
கானகம் எங்கும் கலந்துவிட்டோம்.

மங்கையரே❗
எம்மை மன்னித்துக்கொள்ளுங்கள்.
வாசம் வீசும் உங்கள் கூந்தல்களில்
வந்து குடிகொள்ளப் போவதில்லை.
தேசம்மீட்க உயிர்துறந்த
தெய்வங்களை துயிலெழுப்ப போகிறோம்.

சாமிகளே❗
கொஞ்சம் சகித்துக்கொள்ளுங்கள்.
பக்தர்கள் பூத்தட்டுகளில்
காத்திருக்கப் போவதில்லை.
உத்தம வேள்வியில் நீராடியவர்களின்
உடல்களைத் தழுவப்போகிறோம்.

தேனீக்களே❗
உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள்.
மகரந்த சேர்க்கைக்கு மலரவில்லை.
மாவீரரின் விடுதலை
வேட்கைக்காகவே மலர்ந்துள்ளோம்.

மகிழ்ச்சிக்காக மலரவில்லை.
இனத்தின் எழிச்சிக்காக மலர்ந்துள்ளோம்.
ஆசைக்காக மலரவில்லை.
புனிதர் நாளின்
பூசைக்காக மலர்ந்துள்ளோம்.

காய்ந்து விழும்
காலத்துக்காக மலரவில்லை.
கல்லறையில் விழும் கண்ணீரை ஏந்துவதற்காக மலர்ந்துள்ளோம்❗

-பிறேமா(எழில்)-