Category: கவிதைகள்
கவிதைகள்,காதல் கவிதைகள்,சோக கவிதைகள் ,வன்னி மைந்தன் கவிதை ,புரட்சி கவி
டெங்கொழிக்க எங்களின் பங்கு
டெங்கொழிக்க எங்களின் பங்கு
சிரட்டை பேணி கோம்பைகளை
நீர் தேங்காமல் வை!
குறட்டை விட்டுத் தூங்க வீட்டைக்
கூட்டிப் பெருக்கனும் உன் கை!
பொலித்தீன் பைகள் யோக்கற் கப்பும்
சூழலுக்கு கேடு!
பொழுது சாய்ந்து தூங்கும்போதும்
நுளம்பு வலை போடு!
அரட்டையடிச்சு அலட்சியமா யிருந்தா
அழிச்சிடும் நுளம்பு!
விரட்டியடிக்க செயற்படனு மென்று
வீட்டார்க்கு விளம்பு!
கிடைத்தற்கரிய உயரிய பிறப்பு
மானிடப் பிறப்பு!
இடத்தை தூய்மைப் படுத்தாவிட்டால்
கிடைப்பதே இறப்பு!
தேங்கும் நீர் தங்கி நின்றால்
டெங்கு ஊதும் சங்கு!
எங்கும் சுத்தம் பேணும் நலனே
எங்களின் பங்கு❗
-பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.

- சேரன் குளிர்களி

- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

- பாதுகாப்பு வலயமென்று

- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

- தனியாகப் போறவளே

- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

- டெங்கொழிக்க எங்களின் பங்கு

- மழைக்காலத் துன்பங்கள்

- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

- இளைஞரில்லா இலங்கை

- தியாகத்துக்கான காவடி தமிழர்

நீயே உனக்கு துணை
நீயே உனக்கு துணை
உள்ளம் வலிக்கும் போதினில
உன்னை செதுக்கி விடு
உதாசீனம் செய்யும் போதினில
ஊமையாய் இருந்து விடு
காலம் மலரும் போதினில
கபடங்கள் உடைத்து விடு
கபடம் இல்லா கண்ணியத்தை
கரை ஏற்றி வைத்து விடு
தோல்விகள் சூடும் வேளையில
சோரா இருந்து விடு
தவறை திருத்தி எழுந்திடும்
தகைமைகள் வளர்த்து விடு
பக்குவம் தேறும் பண்பயிலை
பகைமையிலும் காட்டி விடு
கடின மொழியை எறிந்தே
காதலை வளர்த்து விடு
உன்னை மட்டும் நம்பியே
உலகை பார்த்து விடு
உயிர் உள்ளவரை உனக்கு நீயே
உரிமம் புரிந்து விடு
வலிகள் தாங்கி எழுந்தால் தான்
வாழ்வு சீராகும்
வையம் ஆண்டிட இந்த
வலிகளே துணையாகும் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-12-2023
மனிதம் ஒன்று வீழ்ந்தது
மனிதம் ஒன்று வீழ்ந்தது
எழுந்து நடந்த பெரியவன் -இவன்
எதுகை மோனையில் உயர்ந்தவன்
அழுது திரிந்த மக்களுக்கு
அழைத்து உணவு தந்தவன்
சிகரம் உயரம் இருந்தவன்
சில்லறைக்கும் உதவியவன்
சிந்தனை உயர்வு கொண்டவன் -எதிர்க்கட்சி
சிம்மாசனத்திலும் அமர்ந்தவன்
படைக்க முடியா சாதனையை
படைத்து காட்டி நிமிர்ந்தவன்
அடக்க முடியா அன்பினை -ஈழ
அண்ணன் மீது கொட்டியவன்
எதற்கும் அஞ்சா நடப்பவன்
எதையும் எதிர் கொள்பவன்
அந்த மலை வீழ்ந்தது
ஆழ வலி தந்தது .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-12-2023
28-10-2023 நடிகர் விஜகாந்த மரணித்த பொழுது கண்கள் கலங்கிய வேளையில்
அவருக்கு இதனை சமர்ப்பணம் செய்கிறேன்
போர் மகளே வாழ்க
போர் மகளே வாழ்க
களபூமி வேங்கைக்கும்
காலனி சலங்கைக்கும்
ஓட்டம் நடக்கிறது
ஓர்மம் வெடிக்கிறது
வெற்றி பெற்றுவிட
வேகம் பிடிக்கிறது
அப்பப்பா பிள்ளையின்
அகரம் தெரிகிறது
கரை நகர் மண்ணின்
கல கலப்பு தெரிகிறது
பிடிபட்ட பந்தும்
பிடியாணை கேட்கிறது
அடித்தெறிந்த மட்டையும்
அவமான படுகிறது
கோபத்தின் உச்சத்தில்
கொள்கை வெடிக்கிறது
சிகரம் ஏறிய
சிந்தைக்கு வாழ்த்து
பெருமை தேடிய
பெரு மகளே வாழ்த்து ..!
அன்புடன் – வன்னி மைந்தன்
ஈழம் காரைநகர் களபூமியை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் என்ற ஈழத்தமிழச்சி இங்கிலாந்து கிர்க்கெற் அணியில் இடம் பிடித்துள்ளார்.இவர் பொன்னாவளை களபூமியைச் சேர்ந்த தாமோரி ஆறுமுகத்தின் மகன் சபாரத்தினத்தின் பூட்டப் பிள்ளை என்பதும் குறிப்பிடதக்கது.
நல் வாழ்த்துகள் அமுருதா.
ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்
ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்
ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம் ,
சிக்கலில் ஆளும் அரசு
குஞ்சப்பு பேச்சில
குலுங்கி சிரிக்கிற
மக்கள் கருத்தில
மனம் குளிருது
மழைக்காலத் துன்பங்கள்
மழைக்காலத் துன்பங்கள்
தட்டத் தட்டத் தீப்பெட்டியும்
தானா உதிர்ந்து பிய்யுது
சட்டைத் துணிகள் காயாமல்
தண்ணி தண்ணியா வடியுது
கொட்டும் பெரும்மழையால
கூரை பிஞ்சு ஒழுகுது
சட்டி பானை வைத்தாலும்
சருவம் நிரம்பி வழியுது
சொட்டு இடமும் மீதமின்றி
சேறாய் வழுக்கி விழுத்துது
குட்டி நாய்கள் ஆடுமாடு
குளிரும் கூடி அழுகுது
அட்டைப்பூச்சி மட்டைத்தேள்
அணிவகுத்து வருகுது
மட்டை ஓலை தேங்காயும்
மண்டையில விழுகுது
வெட்டி வெட்டி விட்டாலும்
வெள்ளம் வீட்டுக்க பெருகுது
விட்டு விட்டு இடுப்பு நாரி
விறைச்சுக் கால்கள் நோகுது
நட்டுவைச்ச பயிரெல்லாம்
நாசமாத் தான் புதையுது
விட்டுவிடாத இயற்கையால
வாழ்வாதாரம் சிதையுது
கஸ்ரபட்ட எங்களுக்கு
ஏன்தான் இப்படி நடக்குது
கட்டையில போகுமட்டும், இந்தக்
கட்டமாத் தானே இருக்குது !
-பிறேமா(எழில்)-
- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை

- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்

- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை

- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு

- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன

- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்

- நெதர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்தில் வெடிப்பு

- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் சம்மன்

- போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஜனாதிபதி பணிப்பு

- ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

- ஆலோசனை கூட்டத்திற்கு முன் விஜய்யுடன் ஆனந்த் பேச்சு

- வியட்நாம் ஜனாதிபதி இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை

- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

இறுதிவரை இவனே துணை
இறுதிவரை இவனே துணை
கருணை கொள்வான் கடவுளை நம்பு
காலை மாலை அவனை வணங்கு
நெஞ்சின் நெருடல் வருடி எறிவான்
நேசம் ஊட்டி மகிழ்வை தருவான்
சொல்லும் செயலும் அவனே தருவான்
சொன்னதை செய்யும் அருளும் புரிவான்
தனிமை விலக்கி தாயாய் மலர்வான்
தகமை அளித்து உலகை தருவான்
கண்ணின் ஒளியாய் அவனே இருப்பான்
கடினம் இலகு இரண்டும் தருவான்
தெளிந்து நிமிர தெளிதல் புரிவான்
தெவிட்டா திருக்க தேடுதல் அளிப்பான்
மலர்ந்த அகமது மன்றில் தருவான்
மலரும் சேவை முதலே இடுவான்
மடியும் வரையில் இவனை நினைப்பாய்
மனதில் நின்மதி பெற்று வாழ்வாய் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-12-2023
எதிரி நீ புரிந்து விடு
எதிரி நீ புரிந்து விடு
விதி வந்து விளையாடும் போதினில
விதிகள் அவ்வேளை தெரிவதில்லை
சதி வந்து ஒன்றாக கூடையில
சகதி அவ்வேளை புரிவதில்லை
வலி வாங்கி வாழ்வு கசக்கையில
வழி சொன்னார் வாய்கள் சிரிப்பதில்லை
நம்பிட மறுக்கும் சிந்தையால
நாம் சொல்லும் பேறு புரிவதில்லை
செய்யும் முன் ஒன்றை தெரிந்து கொண்டால்
செய் வினை கூட பலிப்பதில்லை
திட்டங்கள் போட்டு நடப்பவரை
திருந்திடின் ஏற்பின் குற்றம் என்பேன்
எப்படி குழிகள் வெட்டினாலும்
எகிறி பாயும் சிந்தை கொண்டால்
வெட்டிய குழியில் அவரை தள்ளு
வெற்றியின் நாயகன் நீயே என்பேன்
எழும் போது பல இடர்கள் வரும்
எதிரிகள் படை சூழ்ந்து வரும்
நகர்வை அறிந்து நகர்ந்து விட்டால்
நாடக மேடை உடைந்து விழும் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 15-12-2023
என் தோழிக்கு இன்று பிறந்த நாள்
என் தோழிக்கு இன்று பிறந்த நாள்
அன்புக்கும் பண்புக்கும் முதலானவள்
அற நெறி போதனை தாயானவள்
வில்லுக்கும் அம்புக்கும் இலக்கானவள்
விடுதலை வேட்கையின் கூரானவள்
சொல்லுக்கும் மொழிக்கும் உயிரானவள்
சொன்னதை செய்கின்ற பொருளானவள்
கல்விக்கு ஆசானாய் மலர்கின்றவள்
கார்த்திகை தீபமாய் எரிகின்றவள்
நெஞ்சுக்கு நெருக்கமாய் நிற்கின்றவள்
நேயத்தை பாடி நடக்கின்றவள்
அன்றெங்கள் பள்ளியில் கற்றவள்
ஆருயிர் தோழியானவள்
இடரா இன்றும் தொடர்பவள்
இதயம் மகிழ மொழிபவள்
அகவை உந்தன் நாளிலே
ஆர தொழுது வாழ்த்துகிறேன் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 10-12-2023
என்னோடு கல்வி கற்று ஆசிரியராக பணிபுரியும் தோழி சத்திய கலா அகவை நாளில் அவரை எண்ணி வடித்த வாழ்த்து பா ..!
என்னை கூட்டி போ
என்னை கூட்டி போ
சின்ன சின்ன ஆசை வந்து
சீக்கிரம் நெஞ்சில் முட்டுறதே
கொஞ்சி பேச நினைக்கையிலே
கோபம் கொண்டு துரத்துறியே
வஞ்சி உந்தன் பேரழகை
வழியில் நிண்டு தரிசிக்கிறேன்
கொஞ்சம் இரக்கம் காட்டாயா
கொள்கை கொஞ்சம் மாற்றாயா
அழைத்தால் பேச மறுக்கிறாய்
அருகில் வந்தால் முறைக்கிறாய்
என்ன செய்தால் இரங்கிடுவாய்
எடுத்து கொஞ்சம் சொல்லாயா
ஆண்டு ஒன்று கழிகையில
அகவை ஒன்று கழிகிறதே
பொல்லு ஊன்றும் காலமதில்
பொக்கை வாயு வேண்டாமே
வீடு வந்த வேளையில
விழியால் பேசி நின்றவளே
அழைத்து போக மாட்டாயா
ஆகமத்தை முடிக்காயா ..?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-12-2023
கலங்காதே மனமே
கலங்காதே மனமே
ஊரு விட்டு ஊரு வந்தா
உன்னை மறப்பேனா
உள்ளமதில் நின்றாய்
உன்னை எறிவேனா
கண்ணுக்குள்ள நீ இருந்து
காட்சிகளை தினம் கொட்ட
கண்ணு மறந்து தூங்குமா
காதலது தாங்குமா
விண்ணும் மண்ணும் உள்ளவரை
விடயங்களை மறப்பேனா
விரதமதை முடித்து வைத்த
விருந்தோம்பல் மறப்பேனா
எந்தனது நெஞ்சுக்குள்ள
என்றும் நீ ஆலயமே
என்றும் உன்னை மறவேனே
ஏன் மனமே கலங்காதே
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

இதயம் உன்னை தேடுதே
இதயம் உன்னை தேடுதே
உன்னை எண்ணி பார்க்கையில
உள்ளம் கலங்குமடி
ஊரின் வாசம் தேடையில
உன் நினைவு துரத்துமடி
சின்ன வயதில் நீ இருந்து
சீண்டிய நினைவு பொழியுமடி
அச்சம் இல்லா நீ பொழிந்த
அன்பை தேடுமடி
எதையும் அறியா எனை ஏற்ற
எண்ணம் பிடிக்குதடி – அதை
எண்ணி எண்ணி பார்க்கையில
என் மனம் வியக்குதடி
கள்ளம் இல்லா பேச்சழகும்
கனிந்த மொழி பண்பழகும்
இன்றும் நினைவில் இனிக்குதடி
இதயம் உன்னை தேடுதடி
தரிசா தரை கிடந்தாலும்
தாமரை குளம் போதுமடி
வருடம் பல ஆனாலும்
வளமாய் வயல் செழிக்குமடி
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023
எமது வைபர் குழுவில் VIDEO காட்சிகள் பார்க்க விரும்புவார்கள் இணைக
- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை
- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்
- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது
- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை
- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு
- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன
- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்
பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கொள்கை நாட்டி நடந்தவன்
கொடி நாட்டி தேசம் ஆண்டவன்
வல்வை ஊரில் பிறந்தவன்
வையம் வியந்திட வைத்தவன்
பெரும் சமராடி வென்றவன்
பெரும் தலைவனாகி நின்றவன்
நஞ்சு உடல் தரித்தவன்
நய வஞ்சகத்தால் வீழ்ந்தவன்
ஈழம் கனவய் கொண்டவன்
ஈகம் தந்தே உயர்ந்தவன்
போரில் வெல்ல பயந்தவன்
பொறுக்கி ஒன்றால் வீழ்ந்தவன்
ஆளும் காலம் இல்லை தான்
ஆறா வலிகள் நெஞ்சில் தான்
அகவை உந்தன் நாளிலே
அண்ணா உன்னை வாழ்த்துகிறோம் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-11-2023
கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்
கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்
கார்த்திகையில் எமக்காக அவதரித்தவன்
காலத்தினால் எமக்காக
பரிசளிக்கப்பட்டவன்
காலத்தினையே வென்ற
கரிகாலன் அவன் – பாரில்
காண்போர் எல்லோரும் போற்றும் எங்கள் தலைவன் அவன்!
ஈழத் தாயவளின் மானக் காத்த
தானைத் தலைவன் – உய(யி)ர்
ஈகத்திலே பாரியையும் விஞ்சிய
வள்ளல் அவன்
ஈழ மண் மீதுள்ள பாசத்தினால்
ஈகத்துக்கே உதாரணமானவன்
ஈனர்கள் கண்டு அரண்டோடும் வேங்கைப் புலியும் அவன்!
கடாரம் வென்ற சோழனின் வழி வந்தவன்
காட்டாற்று வெள்ளம் போல
எதிரியைக் கலங்கடித்தவன் – தமிழர் உள்ளத்திலே
கங்கை சூடிய பெருமானுக்கு
நிகரானவன்
கலங்கா நெஞ்சம் கொண்ட எங்கள் அண்ணன் அவன்!
உள்ளத்தில் என்றும் குழந்தையைப் போலானவன்
உயர் உள்ளத்தினால் உலகத்தையே வியக்க வைத்தவன்
உறுதியே உகந்து வந்து அவன் உளத்திலே
உறைய வைத்தவன் -உலகின்
உன்னத மொழி தமிழ் என்பதை உலகிற்கே புரிய வைத்தவன் அவன் !
-நிலாதமிழ்
26.11.2023
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

மாவீரர்
மாவீரர்
கார்த்திகையில் சுடர்ந்து கனன்றெரியும் கனலிகளே
கார்த்திகையின் நாயகர்களே
உமை நினைந்துருகி
கார்த்திகைப் பூவெடுத்து
கார்த்திகை 27 இல்
உம் பாதந் தொழுதிடுவோம்!
விழித்திரையில் நீர் வழிந்திட
எம் மி(ம)னத்தின் குறைகளை சொல்லிக் கதறிட
மொழியுரை ஏதுமற்று
நடைப் பிணமாக
உமைத் தேடி
நிரை நிரையாக வந்து
விம்மி யழுதிடுவோம்!
கல்லாக இருந்து எமைக் காக்கும் கடவுளர் போல்
தில்லாக நின்று
எமை யழித்த படையழித்து
ஈழவளின் மானம் காத்து
கார்த்திகைக்கு பெருமை சேர்த்த
உமை கணமும்
நினைந்து ருகிடுவோம்!
இளமைக் காலக் கனவுகளைத் துறந்து
எமதினத்தின்
வருங்கால சந்ததிக்காக
ஈழத்தின் யாகத் தீயில்
ஆகுதியாகிய உமை
நிதமும்
போற்றித் துதித்திடுவோம்!
ஈழத்தின் தலைமகனின் கனமறிந்து தோள் கொடுத்து
காலத்தின் தேவையை
ஈடேற்றி
ஞாலத்தில் வரலாறாகிய
தீரர்களே
உம் கனவை ஈடேற்ற எமக்கு வல்லமை
தாருமென்று இறைந்துருகி
நெய் விளக்கேற்றிடுவோம்!
நிலாதமிழ்.17.11.2023.
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
அன்பினாலே எங்களை அரவணைத்தவன்
அன்றாடம் எமக்கு உதவி நின்றவன்
உடன் பிறந்தார் போலெம்மை அரவணைத்தவன்
உதட்டினிலே பொய்யில்லா பேசிநின்றவன்
வயல் விதைக்க வந்து நின்று
வளம் தந்தவன்
வாலிபத்தில் எங்களுக்கு
துணை நின்றவன்
அறத்தினாலே எங்களை ஆர்ப்பரித்தவன்
அந்தோபார் இன்றெம்மை அழவைத்தவன்
வீதியிலே போகையில வீழ்ந்து போனவன்
விபத்தினிலே விதியிடை மாண்டுபோனவன்
காலையிலே வந்த சேதி
கண்ணீர் தந்தது
கை தொழுதேன் கண்ணீர் மல்க
கண்ணீர் அஞ்சலி
முரசுமோட்டையை சேர்ந்த சேற்றுக்கண்டி
தோழர் ரூபன் அவர்கள் 14-11-2023 கனடாவில் விபத்தில் மரணமான செய்தியறிந்த பொழுது …
வந்து விடு
வந்து விடு
நித்தம் உனக்கு முத்தமிட்டு
நீண்டுறங்க ஆசை
நீ எனக்கு உரித்தானால்
நித்தமிட ஆசை
பத்து திங்கள் ஆக்கி வைத்து
பார்த்துவிட ஆசை
பார் காணும் இரவெல்லாம்
பகலாக்க ஆசை
நெஞ்சுக்குள்ள நீ துடிக்க
நித்தம் என்ன செய்வேன்
காத்திருப்பு போது மடி
கண் மணியே வாடி
போர்வைக்குள்ள நீ இருந்தா – உலக
போரெல்லாம் தோற்குமடி
வேர்வைக்குள்ள நீ குளிக்க
வேண்டுதலும் தீருமடி ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-11-2023
இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்
இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்
கத்தி வாய் அழுதாலும்
கை கட்டி நின்றாலும்
பொத்தி வாய் இருந்தாலும்
பொறுக்கலையே பொறுக்கலையே
சத்தி வாய் வயிறோடும்
சாகாத வாயதோடும்
நீள துயர் தோய்ந்து
நீளம் எது போவதுவோ
துடிக்காத இதயமும்
துயர் அறியா பேனையும்
இருந்தென்ன வாழ்ந்தென்ன
இருந்தென்ன வாழ்ந்தென்ன
உலக சட்டத்தின்
உவமானம் இதுவென்றால்
தமிழனுக்கு அவமானம்
தலை குனிகிறேன்
நிறையாத வயிறோடு
நீளம் நடக்கின்ற
கண்ணீர் துளிகளின்
கால் தடம் பாராய்
சொந்த நிலம் பறித்து
சோகத்தை நீயளிக்க
வெந்து நான் பார்க்கவோ
வேதனை சேர்க்கவோ
என் துயரை நீ பார்த்து
ஏளனமாய் சிரி
உன் துயரை நான் பார்த்து
உனக்காய் அழுவேன்
அடங்காத குணத்தோடு
அகிலத்தை ஆள்கின்ற
விளங்காத வாய்களின்
விலாசம் இதுவோ ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 7-11-2023
பலஸ்தீன யுத்தம் அல் அசாத் புயல்; நடவடிக்கையின் பின்னர் அழிக்கப்டும் மக்கள் கண்டு
இன்றைய பாலஸ்தீனம்
இன்றைய பாலஸ்தீனம் ..
மூச்சு விட முடியாது
முண்டியடிக்கும் கூட்டம்
காற்று வரும் திசையறிந்து
கை காட்டி நிற்கிறது
வீச்சு வலை வீசி இஸ்ரேல்
விதமாய் உயிர் குடிக்கிறது
காத்துவிட மாட்டாயா
கரங்கள் தொழுகிறது
பேச்சு இழந்து போக வா
பெரும் கூட்டம் திரள்கிறது
பேர் பெற்ற வல்லரசின்
பெருமை நன்றே தெரிகிறது
வாலாட்டி திரிவதுவோ
வாழ்க்கை சிரிக்கிறது
கோலேற்றி வாழ்ந்து விட
கொள்கை துடிக்கிறது
நாள் ஒன்று கழிகையிலே
நாடி சோர்கிறது
நான் இறந்து போவேனோ
நம்பிக்கை இழக்கிறது
இப்படித்தான் ஊர்கிறது
இன்றைய பாலஸ்தீனம்
இறந்தாலும் அழுது விட
இங்கு இன்னும் தடை தான் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-11-2023
பலஸ்தீன யுத்தம் அல் அசாத் புயல்; நடவடிக்கையின் பின்னர் அழிக்கப்டும் மக்கள் கண்டு
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
மலர்களே❗
சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
கார்த்திகை மாத
காவிய தேவருக்காய் மலர்ந்துவிட்டோம்.
வான்மழை பெய்யும்
கானகம் எங்கும் கலந்துவிட்டோம்.
மங்கையரே❗
எம்மை மன்னித்துக்கொள்ளுங்கள்.
வாசம் வீசும் உங்கள் கூந்தல்களில்
வந்து குடிகொள்ளப் போவதில்லை.
தேசம்மீட்க உயிர்துறந்த
தெய்வங்களை துயிலெழுப்ப போகிறோம்.
சாமிகளே❗
கொஞ்சம் சகித்துக்கொள்ளுங்கள்.
பக்தர்கள் பூத்தட்டுகளில்
காத்திருக்கப் போவதில்லை.
உத்தம வேள்வியில் நீராடியவர்களின்
உடல்களைத் தழுவப்போகிறோம்.
தேனீக்களே❗
உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள்.
மகரந்த சேர்க்கைக்கு மலரவில்லை.
மாவீரரின் விடுதலை
வேட்கைக்காகவே மலர்ந்துள்ளோம்.
மகிழ்ச்சிக்காக மலரவில்லை.
இனத்தின் எழிச்சிக்காக மலர்ந்துள்ளோம்.
ஆசைக்காக மலரவில்லை.
புனிதர் நாளின்
பூசைக்காக மலர்ந்துள்ளோம்.
காய்ந்து விழும்
காலத்துக்காக மலரவில்லை.
கல்லறையில் விழும் கண்ணீரை ஏந்துவதற்காக மலர்ந்துள்ளோம்❗
-பிறேமா(எழில்)-
- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை

- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்

- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை

- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு

- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன

- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்

- நெதர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்தில் வெடிப்பு

- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் சம்மன்

- போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஜனாதிபதி பணிப்பு

- ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

- ஆலோசனை கூட்டத்திற்கு முன் விஜய்யுடன் ஆனந்த் பேச்சு

- வியட்நாம் ஜனாதிபதி இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை

- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்
































