இதயம் உன்னை தேடுதே
உன்னை எண்ணி பார்க்கையில
உள்ளம் கலங்குமடி
ஊரின் வாசம் தேடையில
உன் நினைவு துரத்துமடி
சின்ன வயதில் நீ இருந்து
சீண்டிய நினைவு பொழியுமடி
அச்சம் இல்லா நீ பொழிந்த
அன்பை தேடுமடி
எதையும் அறியா எனை ஏற்ற
எண்ணம் பிடிக்குதடி – அதை
எண்ணி எண்ணி பார்க்கையில
என் மனம் வியக்குதடி
கள்ளம் இல்லா பேச்சழகும்
கனிந்த மொழி பண்பழகும்
இன்றும் நினைவில் இனிக்குதடி
இதயம் உன்னை தேடுதடி
தரிசா தரை கிடந்தாலும்
தாமரை குளம் போதுமடி
வருடம் பல ஆனாலும்
வளமாய் வயல் செழிக்குமடி
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023
எமது வைபர் குழுவில் VIDEO காட்சிகள் பார்க்க விரும்புவார்கள் இணைக
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்
- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது
- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது
















