மழைக்காலத் துன்பங்கள்

மழைக்காலத் துன்பங்கள்
Spread the love

மழைக்காலத் துன்பங்கள்

தட்டத் தட்டத் தீப்பெட்டியும்
தானா உதிர்ந்து பிய்யுது
சட்டைத் துணிகள் காயாமல்
தண்ணி தண்ணியா வடியுது

கொட்டும் பெரும்மழையால
கூரை பிஞ்சு ஒழுகுது
சட்டி பானை வைத்தாலும்
சருவம் நிரம்பி வழியுது

சொட்டு இடமும் மீதமின்றி
சேறாய் வழுக்கி விழுத்துது
குட்டி நாய்கள் ஆடுமாடு
குளிரும் கூடி அழுகுது

அட்டைப்பூச்சி மட்டைத்தேள்
அணிவகுத்து வருகுது
மட்டை ஓலை தேங்காயும்
மண்டையில விழுகுது

வெட்டி வெட்டி விட்டாலும்
வெள்ளம் வீட்டுக்க பெருகுது
விட்டு விட்டு இடுப்பு நாரி
விறைச்சுக் கால்கள் நோகுது

நட்டுவைச்ச பயிரெல்லாம்
நாசமாத் தான் புதையுது
விட்டுவிடாத இயற்கையால
வாழ்வாதாரம் சிதையுது

கஸ்ரபட்ட எங்களுக்கு
ஏன்தான் இப்படி நடக்குது
கட்டையில போகுமட்டும், இந்தக்
கட்டமாத் தானே இருக்குது !

-பிறேமா(எழில்)-