அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன் ,நமது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான எந்த ஒரு மேலதிக கருத்துக்களும் நண்பன் மயூரன் சிவப்பிரகாசம் அவர்களுடன் இணைந்தே வெளியிடப்படும்.
எனது அரசியல் சம்பந்தமான பேச்சாளராக மயூரன் சிவப்பிரகாசம் தொடர்ந்து பயணிப்பான்.


எனது நண்பனுக்கு அவனது அரசியல் பயணத்திற்கு உதவ விரும்பும் சாவகச்சேரியின் அன்பு பெருமக்கள் அவனுடன் நீங்கள் தொடர்பு கொண்டு மேலதிகமான உங்கள் ஆதரவினை தெரிவிக்கலாம்.


நன்றி
இப்படிக்கு வைத்திய கலாநிதி
இராமநாதன் அர்ஜுனா.

என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி
Posted in இலங்கை செய்திகள்

ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி

ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி

ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி ,நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளதாகவும், அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலி சமனல ரணில், அநுரவிற்கு சஜித் பதிலடிவிளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய மக்கள்

சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மக்கள் விடுதலை முன்னணியும், ஜனாதிபதியும் இணைந்து, எங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நேரத்தில், பொய்யான வதந்திகளை பரப்பி, ஃபேஸ்புக் மற்றும் பல்வேறு

இணையதளங்களில், பணத்தினை வழங்கி நாங்கள் ஒன்றாக சேர்கிறோம் என போலி பிரசாரம் செய்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியின் பின்னர் எதிர்வரும் 21ஆம் திகதி இந்நாட்டின் 220 இலட்சம் பொது மக்களுடன் இணைவோம் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன்.

இந்த நலிந்த மற்றும் மிகவும் ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகளிடம் நாங்கள் செல்ல மாட்டோம்.

தலைவனும், திசைகாட்டி தலைவனும் ஒன்று சேர பெரும் ஆசை.

அவர்கள் விரும்பினால் சேரலாம். எக்காரணம் கொண்டும் நாட்டை சீரழிக்கும் கும்பலுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது” என்றார்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி
Posted in இலங்கை செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, மாத்தறை நோக்கிச் செல்லும் அனைத்து கனரக வாகனங்களையும் பின்னதுவயில் இருந்து வெளியேறுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

பின்னதுவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெற்றியின் பின்னர் அதிரடி நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வெற்றியின் பின்னர் அதிரடி நடவடிக்கை

வெற்றியின் பின்னர் அதிரடி நடவடிக்கை

வெற்றியின் பின்னர் அதிரடி நடவடிக்கை ,தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை

பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற பின்னர் விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறுகிறார்.

ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எமக்கு வெற்றி கிடைத்தால் ஆரம்பத்திலேயே பாராளுமன்றம் கலைக்கப்படும்.

அப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த பாராளுமன்றம் நியமிக்கப்படும் வரை அமைச்சரவைக்கு என்ன நடக்கும் என சிலர் கேட்கின்றனர்.

கவலைப்பட வேண்டாம். நாம் அரசியலமைப்பு ரீதியாக நாட்டை ஆள்வோம். இதற்கிடையில் ஒரு விடயம் என்னவென்றால், நான் ஜனாதிபதியாகும்போது, ​​​​ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி காலியாக இருக்கும், அதற்கு ஒருவர் வரலாம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருடன் நானும் நான்கு பேர். 4 பேர் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்படும்.

அது சாத்தியமில்லை என்றால், அனைத்தையும் வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரலாம்.

இந்த பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கினர் அடுத்த பாராளுமன்றத்தில் இருக்க மாட்டார்கள் என்பதை இங்கு உறுதிப்பட கூறுகிறேன்” என்றார்.

தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்

தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்

மருத்துவர் அர்ச்சுனாவை முகநூலில் தொடரும் ஆதரவாளர்களாகிய எங்களுக்கும் அந்தக் குற்றத்தில் பங்கு உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

திங்கள் இரவு சுமார் 9pm, மருத்துவர் அர்ச்சுனாவின் முகநூல் செயல் இழந்து போகிறது.


முகநூல் ஆதரவாளர்கள் பரபரப்பாக தொடங்கிறார்கள்.
தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி நடக்கிறது.
தொலைபேசியும் துண்டிக்கப் பட்டுள்ளது. பரபரப்பு உச்சத்தை தொடுகிறது.

யாரிடம் கேட்பது? யாரை தொடர்பு கொள்வது? எல்லோருக்கும் படபடப்பு.

முகநூல் நண்பர்களாக இருந்தாலும் ஏற்கனவே அறிமுகம் இல்லாதவர்கள் கூட ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள்,

WhatsApp, Tik Tok குழுக்களில் இருப்பவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு கருத்துக்களை பரிமாறுகிறார்கள்,

நெருங்கிய தொடர்பில் உள்ள நண்பர்கள் யார்? என்ற தேடல்,

“ஐயோ டொக்டருக்கு ஏதோ ஆகிவிட்டது, யாராவது அவரை போய் பாருங்கள், காப்பாற்றுங்கள் என்ற கதறல்கள்”,

பொலிசால் கைது செய்யப் பட்டாரா?

ஏதாவது குழுக்களால் கடத்தப்பட்டாரா?

உயிரோடு இருக்கிறாரா, இல்லையா?

ஆயிரம் கேள்விகள், குழப்பங்கள்…

வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் உள்நாட்டு நண்பர்களுக்கு அழைப்பு எடுக்கிறார்கள்…

இந்த இடத்தில்தான் தம்பி ஐயா மாட்டுப் படுகிறார்…

போனுக்கு மேல் போன்,

“ஐயா டொக்டர் அர்ச்சுனாவை காணவில்லை ஐயா, ஒருக்கால் போய் பாருங்க, எங்க இருக்கிறார், என்ன நடந்தது ஒண்டும் தெரியவில்லை, ஒருக்கா போய் பாருங்க ஐயா”

கதறல்கள்…

சுமார் இரவு 10:00 மணி, வயதான அந்த மனிதர் மருத்துவர் அர்ச்சுனாவை தேடி புறப்படுகிறார்…..
தம்பி ஐயாவின் தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது…

எங்களுக்கு இருந்த பரபரப்பை நாம் அவர்மேல் கொட்ட, அவற்றை சுமந்து கொண்டு ஐயா போகிறார்…

ஆனால் சாவகச்சேரி மருத்துவமனையில் நின்ற ஊழியர்களுக்கு அந்த பரபரப்பு இல்லை,
காரணம் அர்ச்சுனாவின் முகநூல் அவர்களால் கவனிக்கப் படவில்லைபோல் உள்ளது,

மேலும் சற்று முன் எப்போதும்போல அவர் காரில் வந்து இறங்கி, விடுதிக்கு போனதை நேரடியாக பார்த்திருக் கிறார்கள்.
அதன் காரணமாக அங்கிருந்த ஊழியர்கள் நிலமையை சாதாரணமாக கையாள முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் தொலைதூரத்தில் இருந்து கொண்டு நிலமையை நேரடியாக பார்க்க முடியாத Dr.அர்ச்சுனாவின் அன்பு உறவுகளுக்கு பதட்டம் தணியவில்லை,
இறுதியில் ஏதேதோ நடந்து முடிகிறது.

பல நாட்கள் சரியான ஓய்வு உறக்கம் இல்லாத நிலையில் அன்று உள்ளே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த Dr.அர்ச்சுனாவுக்கு வெளியில் நடந்த இந்த கலோபரங்கள் எதுவும் தெரியாது.

ஏதோ சத்தம் கேட்டு திடீரென கண்முழித்த போது கதவை உடைத்துக் கொண்டு காவலர்கள் உள்ளே நின்றதை பார்த்து திகைத்து போகிறார் மருத்துவர்….

இதில் தம்பி ஐயா சிறு சிறு தவறுகள் விட்டுள்ளார் என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன்.
அதற்கு நாமும் ஒரு காரணம் என்பதையும் முழுமையாக ஏற்கிறேன்.
அந்த தவறுகள் நிச்சயம் மன்னிக்கப்பட வேண்டியவையே!

இந்த நேரத்தில் நாம் தம்பி ஐயாவுக்கு ஆதரவாக நிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அவருடைய கட்சி, கொள்கைகள் சார்ந்த பழைய தவறுகள் எதுவும் இங்கே பொருத்தப் படுவது ஞாயம் இல்லை என்பது என்கருத்து.

அதே வேளை இரவிரவாக நித்திரை கொள்வதற்குகூட விடாமல் நடுச்சாமம் கடந்து டிக் டொக் உரையாடல்களுக்கு Dr.அர்ச்சுனாவை அழைக்கும் வன்னி மைந்தனின் செயல் தவறானது என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

வெளிநாட்டில் இருப்பவர்களை விடவும் உள்நாட்டில் இருக்கும் மக்களோடு அதிக உறவை வளர்க்க நேரத்தை செலவிடும்படி என் அன்புத் தம்பி Dr. அர்ச்சுனாவை கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு வெளிநாட்டில் வாழும்
அன்பு +அக்கறை உள்ள
Dr. அர்ச்சுனாவின் அக்கா..இவ்வாறு அர்ச்சுனா முக நூலியில் வெளியிட .பட்டுள்ளது

இதற்கு எனது கருத்து கீழ்வருமாறு .அமைகிறது

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் காணியானது பறிக்க படும் நிலையில் ,வைக்க படும் பொறி ,
ஆரம்பமாகும் சம்பவங்கள் .திரளும் மக்கள் கூட்டம்

அக்கா வன்னி மைந்தன் ஆகிய எம் மீது வைத்த கருத்து தவறு என்பதையும் அதன் உள்ளார்ந்தம் எது என்பதை புரியமுடிகிறது ,மக்கள் சேவைக்கு வந்தவன் நேரத்தை கருத்தில் கொள்வதில்லை ,தனது நோக்கத்தில் குறியாக இருப்பான் .

இந்த சம்பவம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் மக்கள் பலம் , செயல்பாடுகள் கண்டு ஆதிக்க சமூகம் அலறியுள்ளது நாம் அறிவோம் .

.இது அர்ச்சுனாவுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி .அர்ச்சுனா எமக்காக இருக்கும் வரை அவருக்கான ஆதரவு வன்னி மைந்தன் ஆகிய என்னால் ,எம் டிக் டாக் அணியினரால் வழங்க படும் ,எமது எதிரி இணையமும் களத்தில் நிற்கும் ,

களத்தை கண்டவர்கள் நாங்கள் ,சரித்திரம் படைக்க வந்திருக்கும் சாதனையாளன் வீர மகன் மக்கள் நாயகன் அர்ச்சுனவோடு நான் நிற்பேன் .

காலம் பலவிடயங்களை பகிரும் பொழுது நம் உயிரோடு இருக்க மாட்டோம் ,வரலாறு அப்படி தான் காணப்படுகிறது நன்றி –

நட்புடன் -வன்னி மைந்தன்

டீச்சர் வைத்தியசாலையில் கொலை
Posted in இலங்கை செய்திகள்

டீச்சர் வைத்தியசாலையில் கொலை

டீச்சர் வைத்தியசாலையில் கொலை

டீச்சர் வைத்தியசாலையில் கொலை ,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிளிநொச்சி செந்திரேசா பாடசலையில் கல்வி பயிற்றுவித்து வந்த டீச்சர் ஒருவர்,

யாழ்ப்பாண போதனா வைத்தியாயசாலையின் முறையற்ற சிகிச்சையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

கிட்னி சோதனை என கூறப்பட்டு நடைபெற்ற சோதனை தோல்வியில் முடிவடைந்து அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் சிலர் இவ்வாறான மருத்துவ சோதனை ஆராய்ச்சிக்கு உள்ளாக்க பட்டு அதன் ஊடக அவர்கள் ,படுகொலை செய்யப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

புதிய கண்டு பிடிப்பு என்கின்ற போரவையில் ஓசையின்றி நடக்கும் இவ்வாறான சம்பவங்கள் ஊடக அப்பாவி டீச்சர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுளளார் என பாதிக்க பட்ட தரப்பில் குற்றம் சுமத்த படுகிறது .

கடந்த சில மாதமாக இடம்பெற்று வரும் முறையற்ற சிகிச்சையால் சில நோயாளிகள் உயிர் இழந்தும் ,படு கொலை செய்ய பட்டு வருகின்றனர் என்கின்ற விடயம் மீளவும் அம்பலமாகியுள்ளது .

இதற்கு யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி சத்தியமூர்த்தியின் கருது என்ன என்பதே நமது கேள்வியாகவும் .

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழில் ரத்து
Posted in இலங்கை செய்திகள்

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழில் ரத்து

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழில் ரத்து

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழில் ரத்து ,பணத்தை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாத சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழிலை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சரத் ​​விஜேசிறி டி சில்வா என்ற சட்டத்தரணியின் சட்டத் தொழிலை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இரண்டு காணி வழக்குகளில் ஆஜராவதற்காக குறித்த சட்டத்தரணி உரிமையாளரிடம் இருந்து 44 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு முறையாக ஆஜராகவில்லை என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தொழிலில் இருந்து விலக்கப்பட்டவர் மூன்று மாதங்களுக்குள் மூன்று மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக “அத தெரண” நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது
,60,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு வருவான வரி பரிசோதகர்ளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிரதேச சபையின் அனுமதியின்றி காணியொன்றில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் அதனை உடைத்து அகற்றாமல் இருப்பதற்கும் இந்த தொகை கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக முதலில் 350,000 ரூபா பணம் கோரப்பட்டதாகவும், பின்னர் அது 1 இலட்சமாக குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 60,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் படி, கரைச்சி பிரதேச சபையின் இரண்டு வருவான வரி பரிசோதகர்கள் குறித்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக பணத்தை பெற்றுக்கொண்ட போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

IMF அனுரவின் நிலைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

IMF அனுரவின் நிலைப்பாடு

அனுரவின் IMF நிலைப்பாடு

IMF அனுரவின் நிலைப்பாடு ,சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு பாதிப்பில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், தமது அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலக எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியத்துடனான இந்த திட்டமானது, நமது சர்வதேச உறவுகள் அனைத்தையும் சர்வதேச நாணய நிதியம் என்ற கூடையில் சேர்க்கப்பட்டுள்ளது. இருதரப்பு கடன் பரிவர்த்தனைகள் சர்வதேச நாணய நிதியத்தின் கூடைக்குள் காணப்படுகிறது.

எமது அனைத்து எதிர்கால செயற்பாடுகளும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான தருணத்தில் யாராவது ஒருதலைப்பட்சமாக திட்டத்திலிருந்து விலக நினைத்தால், அது குடிமகன் அல்லது நாட்டிற்கான பொறுப்பை கைவிடுவதாகும்.

எனவே நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறோம். சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தால் நாம் நிறைவேற்ற வேண்டிய பல அளவுருக்கள் உள்ளன.

அடுத்த ஆண்டு முதன்மை கணக்கு இருப்பு 2.3 ஆக இருக்க வேண்டும். 2032இற்குள் நமது கடன் விகிதம் 98% ஆக இருக்க வேண்டும். எங்களுக்கு பல அளவுருக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவை ஒரு நாட்டுக்கு தீங்கானவை அல்ல. அவற்றை அடைவது ஒரு மோசமான விடயம் அல்ல.

யார் ஊடாக கொடுத்தாலும் அது மோசமான பொருளாதார இலக்கு அல்ல” என்றார்.

அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு
Posted in இலங்கை செய்திகள்

அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு

அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு

அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு ,கறுப்புப் பொருளாதாரத்தில் சிக்கியுள்ள இந்த நாட்டில் அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என சர்வஜன வேட்பாளர் தொழில் முனைவொர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்கள் குழுவை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவை மற்றும் மாகாண அரச சேவையில் அங்கீகரிக்கப்பட்ட 49,000 ஊழியர்களைக் கொண்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (03) சர்வஜன வேட்பாளர் தொழில்முனைவோரான திலித் ஜயவீரவை சந்தித்தனர்.

கொழும்பில் உள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சர்வஜன வேட்பாளர் தொழில்முனைவோர் திலித் ஜயவீர,

அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்

அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்

அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம் ,ஐயோ அண்ணா..
நான் கண்விழித்துப் பார்த்தபோது ஒருவர் என்னை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் சோட்சுடன் படுத்து இருந்தேன்..
இருவர் தலைமாட்டிலும் கதவுக்கு வெளியாலும் நின்று இருந்தார்கள்..


நான் நினைத்தேன் இவர்கள் திட்டமிட்ட ரீதியில் என்னை மீண்டும் அரெஸ்ட் பண்ணத்தான் வந்திருக்கிறார்கள் என்று..
நித்திரையில் கண்ணால் முடித்த போது நான் வேறு என்னத்தை கற்பனை பண்ண முடியும்..


ஆதலால் தான் நீங்கள் எவ்வாறு எனது குவாட்டர்ஸின் கதவை உடைத்தீர்கள் என்று கேட்டேன்..
அது சட்டப்படி முரணானது..


ஆனால் எனக்கு நான் நித்திரையாக போனவுடன் இவ்வளவு விடயம் நடந்ததை இப்போதுதான் ஒன்றாக யூடியூபில் பார்த்தபடி போய்க்கொண்டிருக்கிறேன்..


காலை 8 மணிக்கு போலீஸ் தலைமை அதிகாரிக்கு கால் பண்ணி மன்னிப்பும் கோரி எவ்வாறு இது நடந்தது யார் இதை உடைக்க சொன்னார்கள் எனக்கு எதுவுமே தெரியாது என்று அவரிடம் சொன்னபோது நீங்கள் வந்து ஒரு ஸ்டேட்மெண்ட் ஒன்றை போலீசில் கொடுத்து விடுங்கள் உங்களை பாதுகாக்க தான் கதவை உடைத்தோம் என கேட்டார்கள்..


ஆம் என்று சொல்லி இருக்கிறேன்..
இது ராமநாதன் அர்ஜுனா அண்ணா தயவுசெய்து யோசித்து விட்டு கருத்தை பகிருங்கள்..


தம்பி ராஜா அண்ணா இன்று வரை ஒன்றுக்கொன்று முரணாக எனக்கு சார்பாகவும் எனக்கு எதிராகவும் கருத்தை வெளிவிட்டு கொண்டிருப்பது எனக்கு நன்றாக தெரியும்…


மன்னார் கோட்சில் கூட அவர் அங்கு நின்று பிரச்சனை பட்ட போது நீதிமன்ற அவமதிப்பு என்று மறுபடியும் நான் உள்ளே போய் இருப்பேன்..
அவர் வயது முதிர்ந்தவர் உணர்ச்சிவசப்பட்டு கார்த்தி குளரி ஒன்றையும் செய்யக்கூடாது..


ஏற்கனவே எட்டு வழக்குகளை வைத்துக் கொண்டிருக்கிறேன்..
இனி மறுபடியும் வைத்தியசாலை குவாட்டர்ஸில் நான் உள்ளே இருந்து திட்டமிட்ட ரீதியில் இவற்றையெல்லாம் செய்தேன் என்று யூட்யூபில் எழுதிக் கொண்டிருப்பார்கள்..


அதனால் தான் எனக்கு கோபம் வந்தது..
எனக்கு இதுவரை உள்ள வழக்குகள் போதும்.
வைத்திய சாலையில் உள்ளே லைப் போடக்கூடாது என்று அவருக்குத் தெரியாதா..


நான் சூசைட் பண்ண போகிறேன் என்று தனக்கெல்லாம் சொல்லி இருக்கிறேன் என்று முட்டாள்தனமாக சொல்லி இருக்கிறார்..
ஒருவரில் உதவி செய்கிறோம் என்று உரிமை எடுத்து அவரை தலைகீழாக மாற்றுவது முட்டாள்தனம்..


எனக்கும் தம்பி ராஜா எனப்படுகின்ற சம்பந்தப்பட்ட நபருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர் எனது ஆதரவாளராக நான் எந்தக் கூட்டத்திலோ எந்த யூடியூப்பிலும் எந்த நேர்காணல் கருத்து தெரிவிக்கவில்லை..


இந்த நிமிடத்தில் நான் யாரையாவது எனது ஆதரவாளர் என்று சொல்லும்போது அவர்கள் செய்கின்ற முட்டாள்தனமான வேலைகளுக்கு எல்லாம் நான் தான் நீதிமன்றத்தில் பதில் சொல்லிக் கொள்ள வேண்டி இருக்கும்..


தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.
என் மீது வைத்திருந்த அன்பு என்றே சொல்லிக் கொள்வோம்..


அதை எப்போது கண்டிக்காவிடில் நாளை ஒரு போலீசாருக்கு அடித்து விட்டு சொல்லுவார்கள் அர்ச்சுனாவில் உள்ள அன்பால் அடித்தோம் என்று..


வன்முறையையும் தனிப்பட்ட விளம்பரங்களையும் என்னால் அனுமதிக்க முடியாது அவ்வாறாயின் அரசியல் செய்ய முடியாது அது சாணக்கியன் சுமந்திரன் அரசியல்..


இது இராமநாதன் அர்ச்சுனாவின் அரசியல்..
யாரும் என்னை தெரியும் என்னுடன் பழக்கம் இவருக்கு காசு போடுங்கள் என்று இன்றுவரை காசு சேர்க்கவில்லை..


யாரும் நான் இவரின் நண்பன் என்று சொல்லி இன்றுவரை மார் தட்டிக் கொள்ளவில்லை..


அவரவர் தகுதிக்கேற்ப அவரவர் என் மீது கொண்ட பாசத்திற்கு ஏற்ப நியாயமானதாக என்ன உதவி கேட்டாலும் செய்யலாம்..


அர்ச்சுனாவை தெரியும் என்பதற்காக வித்தியா படுகொலை போல் போலீசாருடன் ஒருபோதும் சொல்லப்போவதில்லை அவரை விட்டு விடுங்கள் என்று..


என்னை பின்தொடர்புலுக்கு கனிவான வேண்டுகோள் தயவுசெய்து தங்களுடைய சுயலாபத்திற்காக பின் தொடர வேண்டாம்..


உங்களுக்கு தமிழினத்தின் பால் அன்பு இருக்குமாயின் நீங்கள் என்னுடன் நிக்கலாம் நான் உங்களுடன் உயிரைத் தந்து நிற்பேன்..

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம் ,இந்த ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை (04) ஆரம்பமாகவுள்ளன.

மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ்

நிலையங்கள், சிறப்பு அதிரடிப் படை முகாம்கள், சிறப்பு பொலிஸ் பிரிவுகள் மற்றும் உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாளை தபால் மூலம் தனது வாக்கினை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாளைய தினத்திற்கு மேலதிகமாக குறித்த இடங்களில் 6ஆம் திகதியும் தபால் வாக்குகளை அடையாளப்படுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

தபால் வாக்குகளை குறித்த திகதிகளில் அடையாளப்படுத்த முடியாத தபால் வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில், எதிர்வரும், 11, 12ம் திகதிகளில், தபால் வாக்குகளை அடையாளப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 712,319 தபால்மூல வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதுடன், குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களாக 76,977 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்டிக்கர்கள் மற்றும் சுவரொட்டிகளை வாகனங்களில் ஒட்டுவது சட்டவிரோதமானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறான வாகனங்களில் உள்ள சுவரொட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் ,கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இக்கொலைச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திவுரும்பிட்டிய, கெடஹெத்த பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர்கள் இருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

இளைஞர்கள் இருவர் படுகொலை

இளைஞர்கள் இருவர் படுகொலை

இளைஞர்கள் இருவர் படுகொலை ,இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (02) பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.

அநுராதபுரம், தன்னாயன்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மிஹிந்து மாவத்தை, பரசன்கஸ்வெவ பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த போது, ​​நண்பருடன் கருத்து வேறுபாட்டில் இருந்த சிலர் அவரது வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, இரு குழுக்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலில் காயமடைந்த இரு தரப்பையும் சேர்ந்த நான்கு பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ரத்கம, சிறிகந்துரவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த நபர் ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரலஜயபுர சிறிகந்துரவத்த பிரதேசத்தில் வசித்து வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தபால் வாக்காளர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும்
Posted in இலங்கை செய்திகள்

தபால் வாக்காளர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும்

தபால் வாக்காளர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும்

தபால் வாக்காளர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும் ,தமிழரசு கட்சியின் சஜித்தை ஆதரிக்கும் அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும். வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் (தபால்)

வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வாரம் இடம்பெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்கும் வாரமாக இருப்பதனால் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் உறுதியாக தபால் மூலம் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த பொது வேட்பாளர் விடயத்தில் சிவில் சமூக அமைப்பினர் நமக்கு ஒரு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தனர். தமிழரசு கட்சியையும் இந்தக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து எமது பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற விடயத்தில் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தமிழரசு கட்சிக்குள்ளேயே இவ்விடயம் சம்பந்தமாக இரு வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் நேற்று இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்திருந்தனர.;

இந்த அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும் இதற்குரிய முடிவை மக்கள் உரிய காலத்தில் வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் சஜித்தை ஆதரிக்கும் அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும். வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் (தபால்) வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வாரம் இடம்பெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்கும் வாரமாக இருப்பதனால் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் உறுதியாக தபால் மூலம் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த பொது வேட்பாளர் விடயத்தில் சிவில் சமூக அமைப்பினர் நமக்கு ஒரு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தனர். தமிழரசு கட்சியையும் இந்தக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து எமது பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற விடயத்தில் தெரிவித்திருந்தனர். ஆனால் தமிழரசு கட்சிக்குள்ளேயே இவ்விடயம் சம்பந்தமாக இரு வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் நேற்று இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும் இதற்குரிய முடிவை மக்கள் உரிய காலத்தில் வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊட சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் ,சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி பகுதியில் கடந்த முதலாம் திகதி (1) இரவு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாவடி தெற்கு பத்திரகாளி கோவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரவு 9:30 மணி அளவில் உள் நுழைந்த மர்ம நபர்கள், இளைஞன் மீது வாள் வெட்டினை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 22 வயதான இளைஞன் கையில் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

நான்கு பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞன் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் கடந்த வருடம் குறித்த இளைஞன் மீதும் தாயார் மீதும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த வாள்வெட்டு தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் குற்றத் தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை ,மருத்துவர் அர்ச்சுனாவுக்கு என்ன நடந்தது அறை திறக்க படவில்லை .

கைது செய்யப்பட்டாரா அல்லது அவர் ஏதும் செய்து கொண்டாரா என்பது தொடர்பாக தெரியவில்லை .

மக்கள் தற்போது பெரும் ; பதட்டத்தில் உறைந்து கொண்டுள்ளனர்

வீடியோ live

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு செய்யப்பட்டுள்ளது ,சங்கு சின்னத்திற்கு வாக்கினை அளிக்குமாறுஇ கோரி இந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .

பிரான்சை சேர்ந்த ஈழத்து பாடகராக விளங்கும் மயிலையூர் இந்திரன் அவர்களினால் எழுத பட்டு ,பாட பட்டுள்ளது .இதற்க்கு 13 வயது சிறுவன் இசை அமைத்து வெளியிட பட்டுள்ளது .

பொது வேட்பாளர் மிக முக்கியமாக கருதப்படுவதால் இந்த பாடல் அவருக்காக விரைந்து உருவாக்கம் பெற்று வெளியிட பட்டுள்ளது .

இந்த பாடல் உருவகத்தில் ஈடுபட்ட இந்திரன் மற்றும் இசை அமைப்பாளருக்கும் இவ்வேளை எதிரி இணையம் பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து கொள்கிறது .

இதில் அழுத்தி பாடல் பார்க்கலாம்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம் ,தமிழரசு கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ள காய்ச்சல் காரணமாக தவறிய மாவை சேனாதிராசா தோழர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் .

யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள தர்மலிங்கம் நினைவு தூபியில் ,அவரது நினைவு நாளில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் .

இதில் தர்மலிங்கத்தின் மகனான சித்தார்த்தன் ,அவருடன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் கலந்து கொண்டு தமது நினைவு அஞ்சலியை செலுத்தி .கொண்டனர்

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக ,தமிழரசு கட்சி செயலாற்ற போவதாக அறிவிக்க பட்ட நிலையில் ,மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது .

அதனை அடுத்து தற்பொழுது தமிழரசு கட்சி பொதுவேட்பாளருக்கு ஆதரவு தரமறுத்து சஜித்துக்கு ஆதரவை வழங்கிட முன் வந்த நிலையில் ,அந்த கட்சியின் கூட்டத்தில் வக்கெடுப்பில் கலந்து கொள்ள தனக்கு காய்ச்சல் சுகவீனம் என கூறி தப்பித்து கொண்ட மாவை தற்போது தோழர் நினைவிடத்தில் கொட்டாவி விட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார் .

பெட்டிகளுக்கு இவர்கள் பேரம் போயுள்ளது இந்த கட்சி படத்தை பார்க்கின்ற பொழுது தெளிவாகிறது .

அரசியல் வியாபாரிகள் இவர்கள் என மக்கள் கோரியது உண்மை தான் போலும் .

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்
Posted in இலங்கை செய்திகள்

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்,தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ,உள்ளே வெடித்த உச்ச சண்டைகள் .

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் கட்சிக்கு உள்ளேயே பாரிய நெருக்கடியை கொடுத்து அந்த கட்சியின் வளர்ச்சியை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது .

சங்கிற்கு மக்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில் தற்போது திடீரென சஜித்துக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக சுமந்திரன் ஆதரவாளர்கள் நடத்திய வாக்கெடுப்பு நடவடிக்கையும் ,உள்வீட்டு சதிகளும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

பெட்டியை வாங்கிவிட்டு சுமந்திரன் இவ்விதம் செய்துள்ளதாக மக்கள் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது .

சுமந்திரன் திட்டமிட்டு கட்சியை உடைத்து ,தமிழ் தேசிய கனவை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவே மக்கள் மன்றம் குற்றம் சுமத்துகிறது .