Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல்
அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல்
அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல் ,220 இலட்சம் மக்கள் முன்னிலையில் இன்று கீரியும் பாம்பும் ஒன்றாக இணைகின்ற நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கும் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அரசியல் திருமணம் இடம்பெறுகிறது.
இந்த இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்து மோசமான கூட்டமைப்பொன்றை உருவாக்கி என்னை தோல்வி அடையச் செய்ய முயற்சிக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு 200 மில்லியன் ரூபா செலவாகும். இவர்கள் இருவரும் கலந்தாலோசித்து ஜனாதிபதி பதவியையும், பிரதமர் பதவியையும் பிரித்துக்கொண்டால் 200 மில்லியன் செலவிலிருந்து குறைவடையும் என்றும், இதுவரை காலமும் இவர்கள் நாடகமாடி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.
இது இவர்களுடைய டீல். இந்த டீலோடு தபால் மூல வாக்களிப்புக்கு முந்தைய தினம் அரச ஊடகத்தில் உரையாற்றுவதற்கு அநுர குமாரவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எமது நாட்டு வரலாற்றிலே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஒருவர் தோல்வி அடைவேன் என தெரிவித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
தற்போதைய ஜனாதிபதி தோல்வி அடைவார் என அவரே தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க நினைத்திருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியாளர்களும், மொட்டுக் கட்சி ஆதரவாளர்களும் அந்த வாக்குகளை வீணடிக்காமல் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் 36 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எஹலியகொட நகரில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் கூட்டணியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் என பெரும் திரளானோர் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். இத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் வரலாற்றுக் காலம் நெடுகிலும் வழி தவற செய்கின்ற மற்றும் காட்டிக் கொடுக்கின்ற வேலையை செய்திருக்கின்றார்.
2019 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் தன்னை தோல்வி அடையச் செய்வதற்காக கோட்டாபய உடன் டீல் செய்து கொண்டார். அவர் தோல்வி அடைந்தமையால் தன்னுடைய 40 ஆயிரம் பேர்களின் வேலைகளை இல்லாது செய்ததோடு பதவி உயர்வுகளையும் இல்லாது செய்து பழிவாங்கி இருக்கிறார்.
அந்த வேலைகளை செய்த பதில் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்திலும் பழிவாங்கப்பட்ட 40 ஆயிரம் பேர் குறித்து சிந்திப்பதில்லை. அவருக்கு மக்களுடைய எதிர்பார்ப்புகள் குறித்த உணர்வுகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டு நிர்கதியாகியுள்ள 40 ஆயிரம் பேரையும் தான் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும், unp ஜனாதிபதிக்கு அதைச் செய்ய முடியாது என்பதால், அவர்களை தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
இன்று காணப்படுகின்ற சேறு பூசுகின்ற அழுக்கு அரசியலில் மக்களை ஏமாற்றி முட்டாளாக்குகின்ற கீழ்தரமான அரசியல் முறையை நாம் இல்லாதொழிக்க வேண்டும்.
இன்று வருகின்றார்கள் செல்கின்றார்கள் என்ற வதந்திகள் பரப்பப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தில் எந்த ஒரு மக்கள் பிரதிநிதியையும் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளவோ அல்லது வைத்துக் கொள்ளவோ இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நாட்டுக்கு உள்ள ஒரே மாற்று வழி ரணில் அநுர தொடர்பு அல்ல. மக்களின் வேதனையை மக்களின் உயிர் நாடியை உணருகின்ற மக்கள் மயமான, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியுமாகும். என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தான் தெற்கிலே வெற்றி அடைந்திருப்பதாக அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு சென்று கூறுகின்றார். அது வெறும் கனவு.
அநுரவும் ரணிலும் அரசியல் ரீதியான சம்பந்த உறவு வைக்கின்ற போது ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களுடன் ஒப்பந்தம் செய்கின்றது. தம்மிடம் திருடர்களுடனான டீல் இல்லை. தமது ஒரே பொறுப்பு துன்பத்தில் இருக்கின்ற மக்களை மீட்டெடுப்பதாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்
திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்
திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இரண்டு தேர்தல் பிரசாங்களில் பங்கேற்பதாக யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா, இந்து சமய முறைப்படி வரவேற்றார்.
மாவை சேனாதிராஜாவின் தனிப்பட்ட அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி, அவரின் இல்லத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என நம்புவதாக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி
34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி
34கோடியில் லண்டனில் புலிகள் காணி ,பிரிட்டன் லண்டன் புறநகர் பகுதியில் 137 ஏக்கர் காணி வாங்கிய தலைமை செயலகம் எனும் வரலாற்று மைய அமைப்பினர் பண மோசடிகள் அம்பலமாகியுள்ளது .
மாவீரர் மயானம் ,ஆலயம் அமைப்பதற்கு என இந்த காணியானது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது .
இது மாடுகள் மேய்வதற்கான ஒரு மேய்ச்சல் நிலமாக காணப்படுகிறது .
அவ்வாறு வாங்கப்பட்ட மேய்ச்சல் நிலத்தை வாங்கிய தலைமை செயலகம் எனும் வரலாற்று அமைய அதிர்ச்சியில் தமிழர் .
மாவீரர் மயானம்,ஆலயம் அமைப்பதற்காக மக்களிடம் வாங்கிய பணம் ,மக்கள்.
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்
திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்
திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்,பாதுக்கை மஹிங்கல, பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி மற்றும் முச்சக்கர வண்டியும் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன.
ஹொரணை மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் சென்ற போதிலும் வாகனங்கள் இரண்டும் ஏற்கனவே தீப்பிடித்து எரிந்தே காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏலத் தோட்டத்தில் அமைந்துள்ள இந்த நிலத்துக்குள் யாரும் நுழைய முடியாது என்றும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த வாகனங்களுக்கு யாராவது தீ வைத்தனரா அல்லது ஒரு வாகனம் தீப்பிடித்ததால் மற்றைய வாகனமும் தீப்பிடித்து எரிந்ததா? என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார்
ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார்
ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார் ,ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக முல்லைத்தீவில் நேற்றைய தினம் (06) மாலை 06.30 மணிக்கு இருளிலிருந்து நாட்டை ஒளியேற்றிய தலைவர் எனும்
தொனிப் பொருளில் தீப்பந்தம் தாங்கி ஆதரவு தெரிவிக்கும் கவனயீர்ப்பு நடைபெற்றவிருந்த வேளையில் தேர்தல் அதிகாரி மற்றும் பொலிஸாரால் கவனயீர்ப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக முல்லைத்தீவில் தீப்பந்தங்கள் தாங்கியவாறு முல்லைத்தீவு சுற்றுவட்டத்திற்கு அருகில் நடைபெறவிருந்த கவனயீர்ப்புக்கு ஏற்பாடுகள் செய்வதற்காக ஜனாதிபதி வேட்பாளர்
ரணில் விக்கிரமசிங்கவின் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் பரப்புரை அலுவலகத்திற்கு முன்னாள் சுமார் 25 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்றுகூடியிருந்த வேளையில் முல்லைத்தீவு தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் வருகைதந்து கவனயீர்ப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையானது தேர்தல் விதிமுறைக்கு மீறிய செயலெனவும் அவ்வாறு கவனயீர்ப்பு மேற்கொள்ளப்படுமாயின் கைது செய்யப்படுவீர்கள் எனவும் பொலிசாரால் எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து கவனயீர்ப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
தடுத்து நிறுத்தப்பட்ட கவனயீர்ப்பை தொடர்ந்து கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் பரப்புரை அலுவலகத்துக்கு முன்னாள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி
லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி
லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி ,பொலன்னறுவை ஜயந்திபுர 23 ஆம் தூண் பகுதியில் நேற்று (6) இரவு வேனும் லொறியும் மோதியதில் இடம்பெற்ற கார் விபத்தில் இந்திய பிரஜைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவையில் இருந்து மின்னேரியா நோக்கி பயணித்த வேன், அரிசி ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் உட்பட இந்தியப் பிரஜைகள் இந்நாட்டில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிய வந்தவர்கள் எனவும், அவர்கள் தங்குமிடத்திற்குச் செல்லும் போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வேகமாக வந்த வேன் லொறியின் பின்புறம் மோதியதில் சாரதி இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த இந்தியர் உயிரிழந்தார்.
காயமடைந்தவர்களில் 4 பேர் இந்தியர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது சாரதி உட்பட அனைவரும் படுகாயங்களுடன் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லொறி மற்றும் சாரதி பொலன்னறுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (7) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு
புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு
புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு ,புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக
வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நேற்றைய தினம் (6) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
யுத்தத்திற்கு பின்னர் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கில் வாழ்வதாகவும் தமிழ் அரசியல் தலைவர் களோ புலம்பெயர் அமைப்புக்கள் இதுவரை அவர்களுக்கு முழுமையான வாழ்வாதார உதவிகளை வழங்க
வில்லை எனவும் அதன் அடிப்படையில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், அதே நேரம் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படக் கூடாது, அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட
வேண்டும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ்வதற்கான சுகந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இதன் அடிப்படையிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று
ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று
ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று ,2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று (07) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
‘March 12 Movement’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி இன்று (07) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5 மணிவரை ‘அத தெரண’ மற்றும் ‘அத தெரண 24’ ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்படும். அத்தோடு, ‘அத தெரண’வின் சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்படும்.
இன்றைய விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, ‘சர்வஜன அதிகார’ ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பி. அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
பொது வேட்பாளர் பொதுக்கூட்டம் தட்டுமுனை-வாகரை 04/08/2024 இடம்பெற்றது ,இந்த பொது கூட்டத்தில் குணரெட்ணம்,சிறிநேசன்நடராசா,பாரளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் .
இங்கு இடம்பெற்ற இந்த பொது கூட்டத்தில் பொது வேட்பாளர் முக்கியத்துவம் ஏன் அவருக்கு வகைக்கு செலுத்த வேணும் என்பது தொடர்பில் பேச பட்டுள்ளது .
காலத்தின் முக்கியத்துவம் அறிந்து மக்கள் செயலாற்ற வேண்டும் என்கின்ற தத்துவார்த்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது .
மக்கள் நலன் சார்ந்து பயணிக்க வேண்டிய தேவை பொருந்திய காலகட்டமாக இது உள்ளது .

ஆகையால் பொதுவேட்பாளரை சங்கு சின்னத்திற்கு வாக்களித்து வெல்ல வைக்க வேண்டும் எங்கன்ர விடயம் எடுத்து விளக்க பட்டுள்ளது .




- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
மக்கள் சந்திப்பு சங்கு கட்சி கூட்டம் ஏறாவூர்-5 பகுதியில் இடம்பெற்றது .
சங்கு சின்னத்தில் போட்டியிடும் பொது வேட்பாளர் அரியேந்திரனை ஆதரித்து இந்த பரப்புரை இடம்பெற்றது .
இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில்
ஜி.சிறிநேசன்,எம்.நடராசா,வசந்தராசா,குணரெட்ணம்,ஸ்ரீமகேசன்,காணுகிருஷ்ணா,சண்முகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தமது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக எடுத்து விளக்கினார் .
பொது வேட்பாளர் ஏன் அவசியம் மக்கள் வாக்கு ஏன் வழங்க வேண்டும் என்பது போன்ற தெளிவூட்டல் கருதரங்காத இது காணப்பட்டடது .
ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டி இடம்பெற்று வரும் இந்த கால பகுதியில் ,பொது வேட்பாளர் முக்கியத்துவம் அதன் ,நிகழ்வுகள் ஏன் முக்கியம் என்பது தொடர்பாகவே இங்கு எடுத்து விளக்க பட்டுள்ளதாக நிகழ்வில் ; கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர் .

சங்கு சின்னத்தில் போட்டியிடும் அரியேந்திரனுக்கு ஆதரவாக மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .


- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

தம்பிராசா பிணையில் விடுதலை
தம்பிராசா பிணையில் விடுதலை
தம்பிராசா பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் .சாவகச்சேரி மருத்துவமனையில் வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதனை தேடி சென்ற பொழுது ,ஏற்பட்ட விடயம் காரணமாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட அவர் இப்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளார் .
மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் முகநூல் முடக்க பட்டு ,தொலைபேசி செயல் இழந்த நிலையில் ,அர்ச்சுனா இராமநாதனுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் மக்கள் அறிய ஆவலாக இருந்தனர் .
அந்த காணபொழுது ஏற்பட்ட பதட்டம் காரணமாக அந்த சம்பவத்தை ரோந்து மருத்துவமனைக்கு சென்ற பொழுது ,அதனை நேரலை செய்து இருந்தார்.
அதன் காரணமாக கைது செய்ய பட்ட தம்பிராசா ஐயா அவர்களே இப்பொழுது பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் என்ற தகவல் வெளியிட பட்டுள்ளது .
இந்த சம்பவத்தில் தம்பிராசாவுக்கு ஆதரவாக மக்கள் திரண்டு காணப்பட்டதும் மக்கள் கருத்துக்கள் ஊடகங் காண முடிந்தது குறிப்பிட தக்கது .
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

10 ஆயிரம் ரூபாவுக்காக நடந்த கொலை
10 ஆயிரம் ரூபாவுக்காக நடந்த கொலை
10 000 ரூபா பணம் கேட்டு அதனை தர மறுத்த 80 வயது மூதாட்டியின் கழுத்தை மிதித்து மூச்சு திணறடித்து கொலை செய்த சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி பெண்ணின் வீட்டிற்கு செல்வது மற்றும் குறித்த பெண்ணிடம் இருந்து கழற்றிச் சென்ற காதணிகளை செட்டித் தெருவில் உள்ள கடையொன்றுக்கு விற்பனை செய்தமை சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் மகளின் கணவருக்குச் சொந்தமான கட்டிடப் பொருட்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.
இவர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விடுமுறை பெற்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொட்டாவ மாலபே வீதியின் நான்கு வழிச் சந்திக்கு அருகில் உள்ள வீட்டுக்கு வந்து அங்கிருந்த பெண்ணிடம் 10,000 ரூபா பணம் கேட்டுள்ளார்.
பணத்தை தராததால் கோபமுன்ற நபர், அந்த பெண்ணின் காதணிகளை கழற்ற முயன்றுள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் பெண்ணை தரையில் வீழ்த்தி பெண்ணின் கழுத்தை காலால் மிதித்து அவர் அணிந்திருந்த காதணிகளை கழற்றி செட்டித் தெருவில் உள்ள நகைக்கடையில் விற்றுவிட்டு 5 ஆயிரம் ரூபாயுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சந்தேகநபர் ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரார். அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்வளப் பிள்ளையார் புது பாடல்
நீர்வளப் பிள்ளையார் புது பாடல்
நீர்வளப் பிள்ளையார் புது பாடல் ,விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நம்முடைய பாவேந்தன் கலையகம் வலையொளியில் நீர்வளப் பிள்ளையார் எனும் விநாயகர் பக்திப் பாடலை வெளியீடு செய்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறது பாவேந்தன் கலையகம்!!!
பாடல் தயாரிப்பு :
செ.ஜெகநான்
பாடல் வரிகள் :
கவிஞர்
பசுவூர்க்கோபி (நெதர்லாந்து)
இசை :
இளங்கோ செல்லப்பா
பாடியவர் :
பாவேந்தன் இளங்கோவன்
நன்றி!!!
நாதஸ்வரக் கலைஞர், வட இலுப்பை ஆனந்தன் அவர்கள், சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முன்னாள் மாணவர்.சிறந்த எடிட்டிங் சிறப்பொடு இந்த பாடல் வெளியாகியுள்ளது விசேட அம்சமாக காணப்படுகிறது .
இப்பாடலை உருவாக்க உழைத்த அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் பாவேந்தன் கலையகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி!!!
இப்பாடலைக் கேட்டு, அதைப் பகிர்ந்து உங்களின் பேராதரவைத் தாருங்கள்!!!
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் சந்தித்தார் எம்பி
கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் சந்தித்தார் எம்பி
கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் சந்தித்தார் எம்பி ,ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச . குகதாசன் அவர்களை தமிழரசுக் கட்சி மாவட்ட பணிமனையில், வியாழக்கிழமை (05) சந்தித்தனர்.
இச் சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தல் நிலவரங்கள் பற்றியும், திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் பற்றியும் கலந்துரையாடினர்.
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை ,இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை உடனே விடுவிப்பதுடன், மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை தள்ளுபடி செய்யவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கிறது.
தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இந்தப் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள் தமிழக மீனவர்களுக்கு பல தலைமுறைகளாக
வாழ்வாதாரமாக திகழும் நிலையில், மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழக மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த ஜூலை 21 ஆம் திகதி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம், 1.5 கோடி ரூபா அபராதம் விதித்துள்ளது.
இது ஏற்கெனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதுடன், அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும்.
எனவே, இலங்கை வசம் உள்ள மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும், மீனவர்களை தாயகம் அழைத்து வரவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட
அபராதத் தொகை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்
அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள்
அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள்
அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள் ,நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் அனுரா
இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் அனுரா
இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் அனுரா ,ரணிலுடனும், சஜித்துடனும் ஒழிந்து நிற்கும் இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும், புதிய அரசியலமைப்பை உருவாக்க உள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (05) பகல் 3 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் தேர்தல்கள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. நீங்களும் பல கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றீர்கள். உங்களுடடைய வாக்குகளால் பல அரசுகள் உருவாகியிருக்கின்றன.
ஆனால், அந்த அரசாங்கங்களால் இலங்கையில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. மக்கள் வாறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். யுத்தம் உருவானது. கல்வி, சுகாதாரம் அழிந்தது.
இத்தனைக்கும் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் பிரச்சினைகளை சந்திக்கவில்லை. மாறாக அவர்கள் வளர்ச்சி அடைந்தார்கள். பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைந்தார்கள்.
அதனால்தான் மாற்றம் தொடர்பில் சிந்திக்க வேண்டி உள்ளது. அவ்வாறான மாற்றத்தை உருவாக்க வேண்டும். விசேடமாக வடக்கில் உள்ள மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனை எழுந்துள்ளது.
இன்று ஆட்சி மாற்றம் தொடர்பில் மக்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். இந்த தேர்தலில் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என மக்கள் சிந்திக்கின்றனர்.
நீங்கள் அறிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினரிடம் கேட்டுப்பாருங்கள். தபால்மூல வாக்களிப்பில் 80 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளனர்.
இந்த தேர்தலில் தென்னிலங்கையில் எவ்வாறான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, வடக்கு மக்களும் அந்த வெற்றியில் எம்முடன் இணைய வேண்டும்.
இதுவரை வந்த அரசுகள் வடக்கு மக்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கவில்லை. முன்னொரு தேர்தலில் இங்குள்ள மக்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவினை முழுமையாக வழங்கிய போதிலும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
பின்னர் கோட்பாய ராயபக்சவிற்கு எதிராக வாக்களித்தீர்கள் ஆனாலும் அதிலும் அரசாங்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்திக்கு இம்முறை வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்கின்றோம்.
வடக்கு, கிழக்கு,தெற்கு இன்றி அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் நல்ல அரசாங்கம் ஒன்றை உருவாக்கவுள்ளோம். சீர்கெட்டுள்ள அரசை மீட்க நீங்களும் ஒத்துழைக்க வேண்டம். அதற்காக வேலைத்திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றது.
நாங்கள் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய வகையில் தீர்வு கிடைக்கும். நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறான எமது அரசாங்கத்தில் குறிப்பிட்ட சில விடயங்களை முன்னெடுக்க உள்ளோம். குழந்தைகளுக்கு கல்வி என்பது எமது பிரதான நோக்கமாகும். கிராமப்புற குழந்தைகளுக்கும், பாடசாலைக் கல்வியையும் மேம்படுத்தவுள்ளோம்.
பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகள், பாடலை வளங்களை சீர் செய்வதுடன்,பெற்றோருக்கு சுமையான கல்வி முறையில் மாற்றத்தினையும் கொண்டு வருவது எமது பிரதான திட்டமாகும்.
கிளிநொச்சி மக்கள் அதிகமாக விவசாயத்தை தம்பி வாழ்கின்றனர். அவர்களின் விவசாயத்தில் அபிவிருத்தியினை கொண்டுவருவதும் எமது அரசின் திட்டமாகும். சிறந்த விதைகளை பெறுவதில் கடினம் ஏற்படுகின்றது.
விதை ஆராய்ச்சி நிலையங்கள், விதை சந்தைகளை உருவாக்குவோம். விவசாயிகளிற்கு விவசாயத்திற்காக காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்.
அத்துடன் இங்குள்ள பிரதான பிரச்சின நீர் வழங்கள் காணப்படுகின்றது. 126 குளத்துக்கு மேல் அபிவிருத்தி செய்யப்படாமல் இருப்பதாக விவசாயி எனக்கு தெரிவிக்கின்றார். 400 குளங்கள் வரை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றார். ஒரு வருத்திற்குள் அனைத்துக் குளங்களும் சீர் செய்து கொடுக்கப்படும்.
விவசாய உரம், மருந்துகள் உள்ளிட்டவை சலுகை விலையில் பெற்றுக்கொடுக்கப்படும். அத்துடன் விவசாய உற்பத்திகளுக்கு சிறந்த நியாயமான விலை பெற்றுக்கொடுக்கப்படும்.
இன்று எமது நாட்டு மக்கள் பெரும் பிரச்சினையாக எதிர்கொள்வது போதைப் பொருள் பாவனையாகும். போதைப் பொருட்களை அரசியல்வாதிகளே விநியோகிக்கின்றனர். கெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுவதில்லை.
போதைபெ்பொருட்கள் வெளிநாடுகளிருந்து இறக்கப்படுகின்றது. அவ்வாறான போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். அரசு அமைக்கப்பட்ட பின் விரைவில் போதையிலிருந்து எமது நாடு விடுவிக்கப்படும்.
இதேவேளை எமது நாட்டில் நீதி சமபடுத்தப்படும். மொழி, மதம், இனத்தின் அடிப்படையில் நீதி நடைமுறைப்படுத்தப்படாது. அனைத்து இனம், மதம்,சமயங்களையும் சமமாக மதிக்கும் வகையில் நீதி நிலைநிறுத்தப்படும்.
இன்று எமது நாட்டில் உள்ள மக்கள் வறுமையில் உள்ளமைக்கு அரசியல்வாதிகளின் களவும், திருட்டுக்களுமே காரணம். அவ்வாறு மக்களன் பணங்களையும், பொது சொத்துக்களையும் திருடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். அவர்களிடமிருந்து திருடப்பட்ட மக்களின் சொத்துக்களை பறிப்போம்.
திருட்டு, மோசடி இல்லாத அரசாக தேசிய மக்கள் சக்தி மட்டுமே இருக்கும். எமது அரசாங்கத்தில் அவ்வாறானவர்கள் மட்டுமே இருப்பார்கள். வறுமையில் உள்ள மக்களுக்கு10,000 ரூபா வழங்குவோம். விரைவில் மின்கட்டணம் குறைக்கப்படும். உணவு, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு வரி இல்லாது செய்யபபடும். அதனால் ஏழை மக்களின் வாழ்வில் மறு மலர்ச்சி உருவாகும்.
எமது நாடு, எந்த பக்கமிருந்து பார்த்தாலும் பெறுமதியான நாடாக இருக்கின்றது. அதனை இதுவரை வந்த அரசுகள் அழித்தனர். தெற்கு பகுதியிலிருந்து தேசிய மக்கள் சக்தி தொடர்பில் செய்திகள் வருகின்றதா?
அடுத்த 2 வாரமும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காலங்களாகும். பழைய பாதையிலிருந்து விலகி புதிய பாதைக்குள் செல்வோம். இங்குள்ள மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று இதுவரை தீர்மானிக்கவில்லை. ஆகவே சிந்தித்து செயற்பட வேண்டும்.
இதுவரை காலமும் இவாதம் பேசி இனவாத அரசாங்கமே முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு இனவாதம் பேசியவர்கள் இன்று எங்கு இருக்கின்றார்கள் தெரியுமா?
மொட்டுக் கட்சியே அதிகம் இனவாதம் பேசியது. அந்த மொட்டுக்கட்சியில் இருந்தவர்கள் இன்று ரணிலுடனும், சஜித்துடனும் நிற்கின்றார்கள். ராயபக்சவின் இனவாதம் இன்று சிறிதாகிவிட்டது
11 வருடங்கள் ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்த பீரிஸ் கோட்டாவின் அரசியல் 2 வருடம் இருந்தார்.இன்று சஜித்துடன் நிற்கின்றார். மொட்டின் மறு அவதாரம் சஜித். மொட்டுடன் இருந்த பலரும் சஜித்துடன் நிற்கின்றார்கள்.
இவ்வாறு இரண்டு அவதாரங்களாக ரணிலுடனும், சஜித்துடனும் ஒழிந்து நிற்கின்றார்கள். அவர்களை நாங்கள் பக்கத்திலும் எடுக்க மாட்டோம். மஞ்சள் நீராடினாலும் அவர்கள் செய்தவை அழிந்துவிடுமா? இங்குள்ள மக்கள் இனவாதிகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்திய மத்திய வங்கி ஆளுநர்
பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்திய மத்திய வங்கி ஆளுநர்
பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்திய மத்திய வங்கி ஆளுநர் ,இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஆளுகைச் சபை மற்றும் நாணயக் கொள்கைச்சபையின் உறுப்பினர்கள், பிரதி ஆளுநர்கள் உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பாராளுமன்ற அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் 80 (2) (அ) பிரிவுக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநர், ஆளுகைச் சபை மற்றும் நாணயக் கொள்கைச் சபையின் உறுப்பினர்கள், மத்திய வங்கியின் அனைத்து பிரதி ஆளுநர்கள் ஆகியோர் பாராளுமன்றத்தின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்றத்தினால் அல்லது அதன் ஏதாவது ஒரு குழுவினால் மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு தடவை வங்கியின் விவகாரங்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற சட்டத் தேவையை நிறைவேற்றும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
தற்பொழுது காணப்படும் நிலைமைக்கு ஒப்பீட்டளவில் இலங்கையின் பணவீக்கத்தை 5 வீதமாகக் குறைக்க முடிந்திருப்பதாகவும், கொள்கை வட்டி வீதம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
கையிருப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் நாணயமாற்று வீதத்தை வலுப்படுத்தி ரூபாவின் பெறுமதியை மேலும் உறுதிப்படச் செய்ய முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் நிதிக் கட்டமைப்பை ஸ்திரப்படுத்துவது தொடர்பான விடயங்களை மத்திய வங்கியின் ஆளுநர் இங்கு தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த நாட்டில் வங்கி முறை வீழ்ச்சியடைவதை தடுக்க முடிந்தமை விசேட விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய மத்திய வங்கிச் சட்டம் மற்றும் வங்கி முறையை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டங்களும் உதவியது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வங்கி முறை, வங்கியல்லாத நிதி அமைப்பு, பங்குச் சந்தை மற்றும் காப்புறுதித் துறை உள்ளிட்ட முழு நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மைக்காக புதிய மத்திய வங்கி சட்டத்தின் மூலம் நிதிக் கட்டமைப்பு மேற்பார்வைக் குழுவை நியமித்தல் உள்ளிட்ட இலங்கையின் நிதி அமைப்பை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவற்றின் தொழில்நுட்ப ரீதியான விடயங்கள் குறித்தும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், தற்போதைய நிதி நிலைமை மற்றும் அதுதொடர்பான விடயங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் பதில் வழங்கினார்.
மத்திய வங்கியின் வகிபாகம் மற்றும் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறலுடனும் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்தி இவ்வாறு கலந்துரையாடுவது மிகவும் முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
2024 Global Finance’s Central Banker அறிக்கையின் படி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கௌரவத்தைப் பெற்றுக் கொண்டமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பெண் குளிப்பதை பார்வையிட்ட பொலிஸ்
பெண் குளிப்பதை பார்வையிட்ட பொலிஸ்
பெண் குளிப்பதை பார்வையிட்ட பொலிஸ் ,3.4.2024 அன்று நான் என் குடும்ப உறுப்பினர் சகிதம் 8 பேர் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு சென்றோம் .
ஒரு தலைக்கு 50 ருபா கொடுக்க வேண்டும் அங்கு குளித்து உடுப்பு மாற்றுவதற்கு இடம் இருக்கவில்லை .
முன்பு உடுப்பு மாற்றுவதற்கு என ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஒவ்வொரு பகுதிகள் காணப்பட்டன, அதை நினைத்து நாமும் குளித்து உடுப்பு மாற்றுவதற்கு போனோம் .
குளித்த பின் பார்த்தபோது எல்லா இடங்களும் தகரத்தாலும் பரல்களாலும் அடைக்கப்பட்டு இருந்தது எமக்கு என்ன செய்வதென தெரியவில்லை.
பின்பு பற்றை காடுகள் இருந்தது அதற்குள் மறைந்திருந்து உடுப்பை மாற்றினோம் .
மேலே போலீச இருந்தார்கள் நாம் அவர்களுக்கு தென்படாதபடி உடுப்புகளை மாற்றிவிட்டு எமக்கு டிக்கெட் தந்தவருடன் கதைத்தோம் .
நீங்கள் டிக்கெட் தரும்போது எங்களுக்கு சொல்லி இருக்க வேண்டும் அல்லவா நாம் குளிக்காது திரும்ப வந்திருப்போம்.
அதற்கு அவர் சொன்னார் பார்க்க போவதற்கு தான் 50 ரூபாய் என நான் சொன்னேன் நீங்கள் இதில் விளம்பரப்படுத்தி இருந்தால் நாங்கள் குளிக்க போயிருக்க மாட்டோம் என நீங்கள் இதில் எழுதி போட்டோ இருக்க வேண்டும் உடுப்பு மாற்றுவதற்கு இடம் இல்லை என.
அப்படி எழுதி போட்டிருந்தால் நாங்கள் குளிக்காம வந்து இருப்போம் இது சம்பந்தமாக நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்களா என்று கேட்டபோது ஓம் என்று சொன்னார்.
இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இதுவரை ஏன் எடுக்கவில்லை என கேட்டோம் .
இவ்விடயம் தொடர்பாக இது சம்பந்தமாக யாருடன் கதைக்க வேண்டும் என்று தொல்பொருள் திணைக்களத்துடன் கதைக்க வேண்டும் என்று சொன்னார்.
அப்போது நான் சொன்னேன் இதனை ஊடகங்களுக்கு தெரிய ப்படுத்தவா என்று ஓம் என தெரிவித்தார் .
உண்மையில் எங்களுக்கு முன் மூன்று பெண் பிள்ளைகள் உடுப்பு மாற்றினவர்கள் அவர்கள் மேலே இருக்கிற போலீஸ்காரர்களை அவதானித்தார்களோ தெரியவில்லை.
திருகோணமலை வெந்நீர் ஊற்றில் நடக்கின்ற இந்த விடயம் அங்கு செல்லும் மக்களுக்கு பெரும் இடர்களை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறு அங்கு சென்று பாதிக்க பட்டவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள் .
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை யை பாரப்படுத்தும் நடவடிக்கையில் புலம் பெயர் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .
வன்னி மைந்தன் டிக் டாக் லைவ் ஊடாக இந்த விடயம் அறிவிக்க பட்டுள்ளது .மூத்த மருத்துவர்கள் ,அரசியல் ஆலோசகர்கள் ,சமூக சேவகர்கள்,சட்டத்தரணிகள் என்கின்ற குழுவோடு இந்து ,காணாமல் ஆக்க பட்டோர் தொடர்பாக வாவழக்கு ஒன்றை தாக்கல் செய்யும் நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வருகின்றனர் .
இதற்கு காணமல் ஆக்க பட்டோர் உறவுகள் விபரங்கள் தேவை படுகிறது ,குறைந்த நூறு பெயர்து விபரமாவது தேவை படுகிறது .
எனவே காணாமல் ஆக்க பட்டோர் உறவுகள் தயவு செய்து எம்முடன் இணைந்து இலங்கை புரிந்த மனித குலத்திற்கு எதிரான இன அழிப்பு ,போர்க்குற்ற ,அதன் ஊடக காணாமல் ஆக்க பட்டவர் விடயம் தொடர்பாக தமிழ் மக்கள் தரப்பில் விபரம் கேட்க படுகிறது , .
நீங்கள் வழங்கும் தகவலே சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை அழகைவிட பேருதவியாக இருக்கும் .
இது மக்கள் ,விடுதலை விரும்பிகள் என்பனவர்கள் தன்னிச்சையாக இணைந்து செயலாற்ற முனைகின்றனர் .
தயவு செய்து பாதிக்க பட்ட மக்களே விபரங்களை எமக்கு தாருங்கள் ,இதனை உங்கள் நண்பர்க்ளுக்கு பகிர்ந்து ,தமிழர் வென்றிட ,பாதிக்க பட்ட மக்களுக்கு நீதியை பெற்று கொடுத்திட ,எடுத்து பரப்புங்கள் .
தமிழால் தமிழராய் ஒன்றிணைவோம் ,வா தமிழா
தொடர்புகளுக்கு வன்னி மைந்தன் வாட்சப் ,வைபர் , 0044 7536707793


































