Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

40 மணித்தியாலமாக எரியும் அமெரிக்கா விமான தாங்கி கப்பல் -59 பேர் பாதிப்பு – வீடியோ

Diego கடல் படை தளத்தில் தரித்து நின்ற Bonhomme Richard, என்ற கப்பல் திடீரென பற்றி எரிகிறது ,.40 மணித்தியாலமாக எரியும் அமெரிக்கா விமான தங்கி கப்பல் -59 பேர் பாதிப்பு – வீடியோ

அமெரிக்காவின் மிதக்கும் விமான தாங்கி கப்பல் ஒன்று கடந்த

நாப்பது மணித்தியாலங்காக பற்றி எரிந்த வண்ணம் உள்ளது

விமானத்தின் இரண்டாவது உள்ளடுக்கு மாடியில் பற்றி பிடித்த

தீயினை அணைக்க முடியாது கடற்படையினர் தினறிய வண்ணம் உள்ளனர் .

இதில் நச்சு வாயுக்கள் எதுவும் கசிவு ஏற்படவிலை எனவும் அவ்விதமாக ஏதுவும் இந்த கப்பலில் ஏற்படுத்த படவில்லை என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது

இந்த கப்பலில் இவ்வேளை பணியில் இருந்து 59 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

அதிக மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் இவர்கள் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

மேலும் ஐந்து பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது


கப்பலில் இருந்து வெடி பொருட்களும் வெடித்து சிதறியுள்ளதாக எதிரி நாடுகள் சூளுரைத்துள்ளன

ஈரான் கப்பல் மீது இவ்விதமான சம்பவம் நிகழ்ந்து இரு மாதத்தில் அமெரிக்கா கப்பல் இவ்விதமான சேதத்திற்கு உள்ளாகியுள்ளது

இது லேசர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      இஸ்ரேலிய இராணுவத்தால் உருவாக்க பட்டுள்ள புதிய Unit 9900 என்ற உளவு படை

      இஸ்ரேலிய இராணுவத்தால் உருவாக்க பட்டுள்ள புதிய Unit 9900 என்ற உளவு படை

      இஸ்ரேலிய பாதுகாப்பு அமிச்சினால் தற்போது புதிய Unit 9900 என்ற குறியீட்டு

      பெயர் கொண்ட புதிய சிறப்பு உளவுத்துறை படை ஒன்று உருவாக்க பட்டுள்ளது

      உலகில் மொசாட் என அழைக்க படும் இஸ்ரேல் உளவுத்துறையினர் மிக சிறந்த புலனாய்வாளர்கள் என பெயர் பெற்று இருக்கும்

      பொழுது தற்பொழுது இந்த விசேட படையினர் உருவாக்க பட்டுள்ளனர்

      இவர்கள் நாட்டுக்குள் நிலவும் ,எதிரி நாடுகளின் ஊடுருவல் மற்றும் அதன் தற்காப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தும்

      மேலும் தமது நாட்டின் மீது மேற்கொள்ள படவுள்ள எதிரி நாடுகளின் தாக்குதல்களை

      இந்த அணியினர் முறியடித்து நாட்டை காப்பாற்றி கொள்வார்கள் என தெரிவிக்க படுகிறது

      இஸ்ரல் கூறுவது போல ஈரான் ,கிஸ் புல்லாக்கள் நகர்வினையும் தாக்குதல்களையும்

      முறியடிக்க முடியுமா என்ற கேள்வியே பரவலாக முன் வைக்க படுகிறது

      வரும் காலங்களில் இந்த புதிய உளவுத்துறையினர் நடவடிக்கை உலக நாடுகள் முன் விரித்து வைக்க படும் என்பதில் சந்தேகம் இல்லை

      இஸ்ரேலிய இராணுவத்தால்
      இஸ்ரேலிய இராணுவத்தால்
          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

          ஈரான் அணு சோதனை மையத்தை -கைக்கிங் செய்து வெடிக்க வைத்த அமெரிக்கா,இஸ்ரல்

          ஈரான் அணு சோதனை மையத்தை -கைக்கிங் செய்து வெடிக்க வைத்த அமெரிக்கா,இஸ்ரல்

          ஈரான் தலைநகர் அருகில் மிக இரகசியமாக இயங்கி வந்த அணு உலை

          யுரேனியம் தயாரிக்க பட்டு வரும் அனுகூட உலைமீது அமெரிக்கா ,இஸ்ரேல்

          கைக்கர்கள் இணைந்து தாக்குதல் நடாத்தி வெடிக்க வைத்துள்ளனர் ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது

          இந்த வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் பிழையாகி இருந்தனர்

          மேற்படி நாடுகளே இந்த நாசகார வேலையினை செய்துள்ளதாக நாம் நன்கறிவோம் .

          இவர்களின் இந்த செயலுக்குரிய விளைவுகளை அவர்கள் விரைவில் சந்திக்க நேரிடும் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது

          ஈரான் இரண்டாம் நிலை தலைவரும் புரட்சி காவல் படையின் தளபதியுமாக

          விளங்கிய சோலைமானியின் படு கொலையை அடுத்து அமெரிக்கா ,

          இஸ்ரேல் ,ஈரானுக்கு இடையில் பலத்த முறுகல் எழுந்துள்ளது ,அவை ஏவுகணை தாக்குதல் போரில் முடிவடைந்தது .

          அந்த படுகொலை சம்பவத்திற்கு எதிராக ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதலை

          அமெரிக்கா இராணுவம் மீது நடத்தி வருகிறது ,அவ்வாறான நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுளளது மேலும் முறுகளை அதிகரித்துள்ளது

          இவை பெரும் போர் ஒன்றை ஏற்படுத்த கூடும் என அஞ்ச படுகிறது

          ஈரான் அணு சோதனை மையம் -கைக்கிங் செய்து வெடிக்க வைத்தது அம்பலம்
          ஈரான் அணு சோதனை மையம் -கைக்கிங் செய்து வெடிக்க வைத்தது அம்பலம்
              Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

              லண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு

              லண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு

              பிரித்தானிய உளவு துறையினருக்கு தண்ணி காட்டி வந்த மிக பெரும் மாபியா கும்பல் ஒன்று பிரிட்டன் நாட்டு உளவு துறையின் உதவியுடன் மடக்கி பிடிக்க பட்டனர்

              தொலைபேசிகள் ஒட்டு கேட்க முடியாத படி புதிய EncroChat, an encrypted வலையமைப்பை பயன் படுத்தி போதைவஸ்து கடத்தல்

              ,மற்றும் இரகசிய தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்ள வசதி செய்து கொடுத்து பல மில்லியன் பணத்தை சம்பாதித்து வந்த

              மிக பெரும் மாபியாக்களை நீண்ட நாள் உளவுத்துறை தகவல் தேடுதலின் பின்னர் கண்டு பிடிக்க பட்டுள்ளது

              இவர்களது இரசகிய மென்பொருளை உடைத்து அக்குவேறாக ஆராய்ந்த உளவுத்துறை தொழில்நுப்ட நிபுணர்கள் ,அதனை ஒட்டு

              கேட்க்கும் வழிமுறைகளை சரியாக கணக்கிட்டு அந்த நகர்வை மேற்கொண்டனர்

              இதன் வாயிலாக 750 கைது செய்ய பட்டுள்ளனர்
              எண்ணூறு மில்லியன் பணம் மீட்க பட்டது அவற்றில் 54 மில்லியன் பணமாக பைகளில் கட்டி வைக்க பட்ட நிலையில் மீட்க பட்டது

              77 துப்பாக்கிகள்,நூறுக்கு மேற்பட்ட தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளது ,இவற்றுடன் போதைவஸ்துக்களும் மீட்க பட்டுள்ளது

              இவர்கள் இந்த கருவியை வாடிக்கையாளர்களுக்கு ஆறுமாத வாடகை அடிப்படையில் 1500 பவுண்டுகள் வசூல் செய்ய பட்டுள்ளது

              ,இவ்விதம் இதனை அறுபதாயிரம் பேர் பாவித்து வந்துள்ளனர் ,இதில் பிரிட்டனில் இருந்து மட்டும் பத்தாயிரம் பேர் பாவித்துள்ளனர் ,இதில் சில எம்பிகளுக்கும் அடங்கும் என ஒரு தகவல் தெரிவிக்கிறது

              இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த பட்டு தண்டிக்க பட வேண்டும் என பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது ,

              தொடர்ந்தும் ஓடி கொண்டிருப்பவர்களை கைது செய்யும் நகர்வில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

              ஐரோப்பா எங்கும் இயங்கிய மிக பெரும் வலையமைப்பு இதன் ஊடாக மடக்கி பிடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                  Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                  ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்

                  ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்

                  ரஷியாவின் அரசியலமைப்பில் திருத்தம் செய்யலாமா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட தேர்தலில் பெரும்பான்மையானோர்

                  ஆதரவு தெரிவித்துள்ளதால் விளாடிமிர் புதின் 2036 ஆம் ஆண்டுவரை அதிபராக செயல்பட முடியும்.

                  இனி எந்த தடையும் இல்லை – ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்
                  புதின்

                  விளாடிமிர் புதின் 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ரஷியாவின் அதிபராக பதவியேற்றார். அப்போது முதல் ரஷியாவின் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில்

                  தன்னை நிலைநிறுத்திவந்த புதின் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றார்.

                  இதனால் 2024-வரை ரஷியாவில் புதினின் ஆதிக்கம் இருக்கும். இந்த வெற்றியின் மூலம் தொடச்சியாக இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

                  இதற்கிடையில், ரஷியாவில் உள்ள சட்டத்தின்படி ஒரு நபர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.


                  இதனால், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் புதின் போட்டியிட முடியாத சூழல் இருந்து வந்தது.

                  இந்த தடையை நீக்கும் விதமாக அதிபர் தேர்தலில் போட்டுயிடுவதற்கான சட்டத்தை புதுப்பிக்கும் விதமாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது.

                  அந்த மசோதாவின் படி, பழைய நடைமுறைகள் அழிக்கப்பட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அமலுக்குவரும்.

                  அதாவது, ஏற்கனவெ தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் சட்டம் புதிக்கப்பட்டதால் மீண்டும் முதலில் இருந்தே அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்.

                  சுருக்கமாக கூற வேண்டுமானால் தற்போது அதிபராக உள்ள புதின் அடுத்துவரும் 2024-ம் ஆண்டு மற்றும் 2030-ம் ஆண்டு ஆகிய இரண்டு தேர்தல்களிலும் எந்தவித தடையும் இன்றி போட்டியிடலாம்.

                  இதையடுத்து, இந்த மசோதா தொடர்பாக அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யலாமா? என்பது குறித்து முடிவு செய்ய

                  பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பு தேர்தல் நடைமுறையில் நடைபெற்றது. மக்கள் தங்கள் கருத்துக்களை வாக்குகளாக அளித்தனர்.

                  இந்த தேர்தலில் 65 சதவிகித மக்கள் வாக்களித்ததாக ரஷிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பதிவான வாக்குகள் அனைத்தும்

                  நேற்று எண்ணப்பட்டன. அதில் 77 சதவிகித வாக்காளர்கள் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய ஆதரவு, 23 சதவிகித மக்கள்

                  சட்டத்திருத்திற்கு எதிராகவும் வாக்களித்துள்ளதாக ரஷிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

                  இதன் மூலம் ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நிலவி வந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.

                  அதாவது ஏற்கனவே தொடர்ந்து 2 முறை நாட்டின் அதிபராக இருந்த நபர் மேலும் இரண்டு அதிபர் தேர்தல்களில் பங்கேற்கலாம்.

                  ஆகையால், தற்போது ரஷியாவின் அதிபராக உள்ள புதின் 2024 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் இரண்டு அதிபர் தேர்தல்களிலும் அவர் பங்கேற்கலாம்.

                  அந்த தேர்தல்களில் வெற்றிபெறும் பட்சத்தில் 2036-ம் ஆண்டுவரை அதாவது தனது 83 வயது வரை ரஷியாவின் அதிபராக விளாடிமிர் புதின் செயல்படுவதில் இனி எந்த சட்ட சிக்கலும் இல்லை.

                  இதற்கிடையில் விளாடிமிர் புதின் தனது வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்க எல்லா வேலைகளையும் செய்துவருவதாக ரஷிய எதிர்க்கட்சி தலைவரான அலெஸ்சி நவல்னி குற்றச்சாட்டியுள்ளார்.

                      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                      ரசியா விமானத்தை சுட்டு வீழ்த்த முயன்ற அமெரிக்கா – தோல்வியில் முடிந்த சமர்

                      ரசியா விமானத்தை சுட்டு வீழ்த்த முயன்ற அமெரிக்கா – தோல்வியில் முடிந்த சமர்

                      ரசியாவின் அதி உயர் ரக விமானமாக விளங்கும் Russian Su-27 fighter விமானங்களை

                      சுட்டு வீழ்த்த முயன்ற அமெரிக்காவின் முயற்சி தோல்வியில் முடிந்துளளது

                      கருங்கடல் மேலாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த

                      அமெரிக்கா கப்பல்கள் மேலாக பறந்து சென்று ,அமெரிக்கா விமானங்களை இடைமறித்து மிரட்டி சென்றது

                      மேற்படி விமானங்களின் உள் நுழைதலை முன்னரே அறிவிக்க அமெரிக்கா உளவு துறை தவறியது ,தகவல்கள் சேகரிப்பு கிடைக்காத நிலையில் தோல்வியில் முடிந்துள்ளது எனவும்

                      அதனாலேயே அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தவோ ,அல்லது இடைமறித்து

                      விரட்டியடிக்கவோ முடியாது போனதாக அமெரிக்கா உளவுத்துறையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன

                      தொடர்ந்து இவ்வாறான சம்பவங்களினால் இரு நாடுகளுக்கு இடையில் இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

                          Posted in உளவு செய்திகள்

                          11 விமானங்கள் மூலம் இராணுவம் ஆயுதங்களை லிபியாவில் குவிக்கும் ரஷியா

                          11 விமானங்கள் மூலம் இராணுவம் ஆயுதங்களை லிபியாவில் குவிக்கும் ரஷியா

                          ரஷியாவில் இருந்து பதினொரு விமானங்கள் மூலம் ரசியா தனது

                          இராணுவம் மற்றும் அதி நவீன ஆயுதங்களை

                          லிபியாவில்,அவசரமாக தரை இறக்கியுள்ளது

                          சிரியா மற்றும் லிபியாவில் துருக்கிய இராணுவம் குவிக்க பட்டுள்ள நிலையியல்

                          ரசியாவின் இந்த அவசர இராணுவ குவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                          குறித்த இரு நாடுகளில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற உள்ளதை மேற்படி விடயங்கள் அம்பல படுத்துகின்றன

                          ரசியா மேற் கொள்ளும் இந்த திடீர் இராணுவ குவிப்பினால் குறித்த பிராந்தியத்தில்

                          பெரும் பதட்டம் நிலவுகிறது ,எதிர்வரும் நாட்களில் பெரும் மோதல்கள் வெடிக்கலாம் என்பதை இந்த இராணுவ குவிப்பு புல படுத்துகிறது

                          11 விமானங்கள் மூலம்
                          11 விமானங்கள் மூலம்
                              Posted in உளவு செய்திகள்

                              ரஷியா எல்லை அருகே அமெரிக்கா விமானங்கள் குவிப்பு – ஏன் இந்த பதட்டம் ..?

                              ரஷியா எல்லை அருகே அமெரிக்கா விமானங்கள் குவிப்பு – ஏன் இந்த பதட்டம் ..?

                              ரசியா நாட்டின் எல்லையில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர்

                              தொலைவில் அமெரிக்காவின் மூன்று மிக முக்கிய விமானங்கள் பறக்க விட பட்டுள்ளன

                              திடீரென அமெரிக்கா இராணுவத்தின் விமானங்கள் குவிக்க பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                              ரசியா ,சீனா,வடகொரியா,ஈரான் இணைந்து அமெரிக்கா மீது பெரும் தாக்குதல் ஒன்றை தொடுக்கலாம் என அமெரிக்கா எதிர் பார்க்கிறது ,

                              சிரியாவில் அமெரிக்காவினை ஆழம் பார்த்த அமெரிக்காவின் போரியல்

                              யுத்திகள்,மற்றும் அரசியல் நகர்வுகள் என்பனவும் ,அங்கு அறிமுக படுத்த

                              பட்ட புதிய போராயுத பயன்பாடுகள் விளைவே இந்த பரபரப்புக்கு காரணமாக அமைந்துள்ளது

                              அது தவிர அமெரிக்காவை விட பத்து மடங்கு அதிக பாதுகாப்பு நிதியை ஒதுக்கி ரசியா இரகசியமாக தனது நகர்வுகளை முடக்கிவிட்டுள்ளது

                              புதிய ஆயுத தயாரிப்பு ,மற்றும் அமெரிக்காவின் ஏவுகணைகளை செயல்

                              இலக்க வைக்கும் அமெரிக்காவின் விமானங்களின் நடமாட்டங்கள் ,அதில் பொருத்த

                              பட்டுள்ள கருவிகள் என்பனவற்றை கண்டறியும் நோக்குடனே இந்த விமானங்கள் அந்த பகுதிகளில் சுற்றி பறக்கின்றன

                              அப்படி என்றால் கொரனோ முடிவில் உலக சண்டியர் ஏதோ ஒரு நாடு

                              மீது போரை தொடுக்க போகின்றார் என்பதற்காக சிக்னலாக இதனை பார்க்கலாம்

                              • வன்னி மைந்தன் –
                                  Posted in உளவு செய்திகள்

                                  இரண்டு உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய சவூதி

                                  இரண்டு உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய சவூதி

                                  சவூதி நாட்டின் எல்லையோரத்தில் கண்காணிப்பில் ஈடுப்பட்டு கொண்டிருந்த

                                  Houthis in Yemen இராணுவத்தின் இரண்டு உளவு விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சவூதி தெரிவித்துள்ளது

                                  தமது இலக்குகள் மீது தாக்குதல் தொடுக்கும் நோக்குடன் இவை உளவு

                                  பார்த்தலில் ஈடுபட்டிருந்த பொழுது தாம் இதனை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது

                                  தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் மோதல்கள் தீவிரமாக இடம் பெற்ற

                                  வண்ணம் உள்ளது ,இதே போல சவுதியின் உளவு விமானங்களையும் இதே

                                  இராணுவத்தினர் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தி இருந்தமை குறிப்பிட தக்கது

                                  இரண்டு உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய
                                  இரண்டு உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய

                                      Posted in உளவு செய்திகள்

                                      போர்களமான அமெரிக்கா – வெடித்து பறக்கும் மோதல் – வீடியோ

                                      போர்களமான அமெரிக்கா – வெடித்து பறக்கும் மோதல் – வீடியோ

                                      அமெரிக்காவில் காவல்துறையின் இனவெறியால் கறுப்பினத்தவர் காலில்

                                      போட்டு கழுத்தில் நெரித்து படுகொலை செய்ய பட்டார் ,மேற்படிசி காட்சியை

                                      படம் பிடித்த பெண்மணி ஒருவர் அதனை வெளியிட்டார் அதுவே தற்போது அமெரிக்காவில் போராக வெடித்துள்ளது

                                      எனினும் இந்த சம்பவங்களின் பின்னரும் காவல்துறையினர் இரும்பு கரம்கொண்டு மக்களை அடக்கி வரும் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

                                      இந்த மக்கள் மோதல்களின் பின்புலத்துடன் டிரம்ப் ஆட்சி கவிழ்க்க படும் நிலை தோற்றம் பெற்றுள்ளது

                                          Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                                          போருக்கு பின் இலங்கையில் நடப்பது என்ன ..?- வெளிவர காத்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்

                                          போருக்கு பின் இலங்கையில் நடப்பது என்ன ..?- வெளிவர காத்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்

                                          இலங்கையி, இறுதி போர் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற தன் பின்னர் ,இலங்கையில்

                                          போருக்கு பிந்திய காலத்தில் என்ன நடக்கிறது என்பது தொடர்பான பல்வேறு


                                          பட்ட விடயங்கள் அடங்கிய ஆவண பதிவுகளை ஐரோப்பிய முக்கிய வெள்ளையர் ஊடகங்கள் காட்சி படுத்தி வருகிறது

                                          பத்து ஆண்டுகளில் தமிழர் பகுதிகளில் தமிழர்கள் சந்திக்கும் இன்னல்களை இது விவரிக்கிறது .
                                          இதுவரை வெளிவராத பல திடுக்கிடும் தகவல்கள் ,

                                          சிங்கள இராணுவ புலனாய்வாளர்களின் பல்வேறு பட்ட நாசகார தகவல்கள் சிங்கள இராணுவ அதிகாரிகள் மூலமே பெற பட்டு ஆவணமாக பட்டுள்ளதாம்

                                          அப்படி என்றால் இந்த காட்சிகள் வெளிவந்தால் கண்டிப்பாக சிங்கள இராணுவத்தில் , இரட்டை உளவாளிகளாக விளங்கும் முக்கிய

                                          சிங்கள இராணுவ தளபதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற படும் என அடித்து கூறலாம்

                                          எப்படி எப்போது இந்த ஆதாரங்கங்கள் வெளிவரும் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும் ,

                                          இது வெளிவந்தால் ஆளும் அரசாட்சி நிச்சமயமாக கவிழ்க்க படும் நிலையை இது ஏற்படுத்தும் ,

                                          ஏன் எனில் தமிழர்கள் பட்டது போலவே சிங்களவர்கள் பட்ட இன்னல்களும் காட்சி படுத்த பட்டுள்ளனவாம்

                                          விடயம் கொஞ்சம் வில்லங்கமானது ,தமிழர் அரசியல் தலைவர்கள் சிலரது தலையும் இதில் உருள போகிறது


                                          இதனை ஆவண படுத்திய அந்த நல்ல உள்ளங்களுக்கு உலக மக்கள் நன்றிகளை கூற கடமை படுவார் என்பது காட்சிகள் வெளிவந்த முதல் தெரியவரும்

                                          மீண்டும் சொல்கிறோம் சிங்கள அரசு தனக்கு தானே புதைகுழி வெட்டி கொள்கிறது ,

                                          அவர்களுக்கு ஆலோசகராக இருக்கும் தமிழர்கள் மாற்றி யோசித்து விடயத்தை விளங்க படுத்தி தீர்வு நோக்கி வேகமாக நகர வேண்டும்

                                          தவறின் மிக பெரும் அபாயத்தை இலங்கை மத்தி சந்திக்க போகிறது,சொலவ்து நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் ..ஆபத்து மிக அருகில் ….!

                                          • மாறன் –
                                              Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                                              சுமந்திரனை தண்டிக்க மறுக்கும் சம்பந்தர்-கொதிக்கும் தமிழர்கள்

                                              சுமந்திரனை தண்டிக்க மறுக்கும் சம்பந்தர்-கொதிக்கும் தமிழர்கள்

                                              இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளை கொச்சை படுத்தி பேசிய சுமந்திரனின் சர்ச்சை பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின

                                              அதனை அடுத்து எழுந்த மக்கள் கொந்தளிப்பபை தணிக்க சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பட்டு அவர் அந்த கட்சியில் இருந்து நீக்க படுவார் என எதிர் பார்க்க பட்டது

                                              ஆனால் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எவ்வித நகர்வையும் மேற்கொள்ளவில்லை


                                              கடந்த பத்து ஆண்டுகளாக தமிழீழ விடுதலை போரை கொச்சை படுத்தி பேசி வரும் சுமந்திரன் மீது செருப்படி நடத்த பட்டது

                                              ஆறாத வலியோடு பயணிக்கும் தமிழர்கள் மனதில் ஓங்கி அறை விட்டது போலவே சுமந்திரன் செயல் பாடுகள் அமைய பெற்றன

                                              கோத்தபாயவின் ஜனாதிபதி சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வை பெற்று தர போகின்றார் ..?

                                              ,புலிகள் ஆயுத போரை ஏற்று கொள்ள முடியாது என்பன போன்ற பல்வேறு பட்ட இழிநிலை பிரச்சாரங்களை சுமந்திரன் ,சம்பந்தரும் மேற்கொண்ட வண்ணமே உள்ளனர்

                                              ஆனால் சுமந்திரன் விடும் தவறுகள் அனைத்திற்கும் ஆதரவு வழங்கிய படியே சம்பந்தர் பயணிக்கின்றார்

                                              வரும் பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் ,சம்பந்தரை மக்கள் தோற்கடிக்க வேண்டும் ,

                                              இவர்கள் பதவிகள் அகற்ற பட்டு புதிய தலைவர்கள் நியமிக்க பட்டு கட்சி மறுசீரமைப்புக்கு உள்ளாக்க பட வேண்டும்

                                              இதனை செய்திட தவறினால் விக்கினேஸ்வரன் தலமையிலான அணியினரை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் ,

                                              அவர்கள் முள்ளி வாய்க்கால் படுகொலையினை தமிழ் இன அழிப்பு என்றே கூறி வருகின்றனர்


                                              ,ஆனால் தமிழ் தேசிய் கூட்டமைப்பு சுமந்திரன் ,சம்பந்தன் ,அது ஒரு போர்க்குற்றம் என்ற முழங்கி செல்கின்றனர்

                                              சுமந்திரன் புரியும் இழி செயல்களை இனியும் அனுமதிக்க முடியாது ,ஒன்று பட்டு மக்கள் எழுவதன் மூலமே

                                              தமிழர் தேசிய அறவழி போரை முன்னெடுத்து செல்ல முடியும் என்பதே,சுமந்திரன் செயல் பாடுகள் உணர்த்தியுள்ளன

                                              • வன்னி மைந்தன் –
                                                  Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                                                  உளவுத்துறை தலைமையகம் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் 9 பேர் பலி -40 பேர் காயம்

                                                  உளவுத்துறை தலைமையகம் மீது மனித வெடிகுண்டு தாக்கல் 9 பேர் பலி -40 பேர் காயம்

                                                  ஆப் கானிஸ்தான் Ghazni மாகாணத்தில் அரச இராணுவ உளவுத்துறை மையம் மீது கார் மனித வெடிகுண்டு
                                                  தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                                                  இந்த தாக்குதலில் அரச இராணுவ உளவுத்துறையை சேர்ந்த ஏழு பேர் பலியாகியுள்ளனர்

                                                  மேலும் நாப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,கடந்த மாதம் அரச இராணுவ

                                                  உளவுத்துறை தலைவர் படு கொலை செய்ய பட்டார் ,,அதனை அடுத்தும்

                                                  தற்பொழுது இன்று இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                                                  உயிர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

                                                      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                                                      ஈராக்கில் -அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்

                                                      ஈராக்கில் -அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை

                                                      தாக்குதல்

                                                      ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியில் உள்ள அமெரிக்கா கிரீன் சூன்

                                                      பகுதி மீது திடீரென Katyusha rocket தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                                                      இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த பகுதி பெரும் புகை மூட்டம் காணபடுகிறது


                                                      ஆனால் ,வழமை போல தமக்கு எதுவித பாதிப்புக்களும்

                                                      ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது

                                                      ஈரான் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டு இருபத்தி

                                                      நான்கு மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                                                      மேலும் ஈரான் இராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என

                                                      அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக அறிவித்த தன் பின்னர் மேற்கொள்ள பட்ட தாக்குதலாகவும் இதனை பார்க்க முடிகிறது

                                                      அரேபிய நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக வெளியேற

                                                      வேண்டும் என ஈரான் தொடராக கூறி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                                                      ஈரான் ஆதரவு படைகள் இந்த தாக்குதலை

                                                      மேற்கொண்டுள்ளளதாக தெரிவிக்க படுகிறது

                                                      ஈராக்கில் -அமெரிக்கா
                                                      ஈராக்கில் -அமெரிக்கா
                                                          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                                                          ரசியா கடல் படையில் புதிய நான்கு – நாசகார ஏவுகணை கப்பல்கள் இணைப்பு

                                                          ரசியா கடல் படையில் புதிய நான்கு – நாசகார ஏவுகணை கப்பல்கள் இணைப்பு

                                                          உலக நாடுகளை மிரள வைத்து வரும் ஆயுத போட்டியின் உச்ச கட்டமாக

                                                          ரசியா தற்போது கண்டு பிடித்துள்ள புதியவகை cruise missile, air defense ,

                                                          வான் காப்பு ஏவுகணை திட்டம் அடங்கிய ஆயுத கப்பல்கள் நான்கு இணைக்க பட்டுள்ளது

                                                          ரசியாவின் போர் கப்பல்களில் இவை மாறுபட்ட செயல் பாட்டையும் ,புதிய தொழில் நுட்பத்துடன் கொண்டவையாக உள்ளன

                                                          முதல் கட்டமாக இந்த அனைத்து கப்பல்கள் இணைக்க பட்டுள்ளன ,
                                                          எதிர்

                                                          வரும் ஆண்டுகளில் மேலும் பல டசின் இது போன்ற கப்பல்களை இணைப்பதற்கு ரசியா முயன்று வருகிறது

                                                          உலக வல்லரசுகளின் ஆயுத போட்டியின் உச்ச கட்டமாக இது பார்க்க படுகிறது

                                                          ரசியா, கடல்,படையில்,
                                                          ரசியா, கடல்,படையில்,
                                                                Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                                                                சிரியா ,ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

                                                                சிரியா ,ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

                                                                ஈராக்,மற்றும் சிரியாவில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள்

                                                                ,உடனோ அன்றி கட்டம் கட்டமாகவோ வெளியேற வேண்டும் ,அவ்வாறு

                                                                வெளியேற மறுத்தால் அவர்கள் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்

                                                                என ஈரான் அதிபர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

                                                                சிரியாவில் உள்ள ஈரான் இராணுவ தளங்கள் மீது அமெரிக்கா ,இஸ்ரேல்

                                                                கூட்டாக தாக்குதல் நடத்துவோம் என அறிவிப்பு விடுக்க பட்ட 48 மணித்தியாலத்தில் ஈரான் சுப்ரீம் லீடர் இந்த அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்

                                                                ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா இராணுவம் தமது மண்ணில் இருந்து

                                                                விலக வேண்டும் என்ற அறிவிப்பு பிரகடனம் செய்த நிலையில் ,அங்கிருந்து

                                                                விலக மறுத்து அமெரிக்கா தொடர்ந்து நிலை கொண்டுள்ள
                                                                நிலையில்

                                                                இவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, ஏதோ மிக பெரும் விடயத்தை ஈரான் நடத்த தயாராகி வருவதனை இது காண்பிக்கிறது

                                                                சிரியா ஈராக்கில் இருந்து
                                                                சிரியா ஈராக்கில் இருந்து
                                                                    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                                                                    ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா கடல் படை தாக்குதல்

                                                                    ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா கடல் படை தாக்குதல்

                                                                    Gulf of Aden கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பல் ஒன்றின்

                                                                    மீது நீரூந்து விசைப்படகுகளில் இடைமறித்த அமெரிக்கா இராணுவத்தினர் திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தினர்

                                                                    இவர்களின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குறித்த கப்பலில் பாதுகாப்பு

                                                                    பணியில் ஈடுபட்டிருந்த ஆயுத காவலர்களும் திருப்பி தாக்கினர் .இதனால்

                                                                    அமெரிக்கா அகப்பல்கள் பின்வாங்கின .இதில் கப்பலில் பலத்த துப்பாக்கி குண்டுகள் பட்டு சேதமடைந்ததது

                                                                    இந்த தகவல் கடல்படைகளுக்கு வழங்க பட்ட நிலையில் பாதுகாப்பு பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்

                                                                    ஏமான் நாட்டுக்கு அருகில் உள்ள கடல்வழியாக நுழைந்த கடல் கொள்ளையர்கள்

                                                                    ஈரான் கப்பல் வெனிசுவிலோ நாட்டுக்கு பத்து மில்லியன் எண்ணெய்களை

                                                                    ஏற்றி சென்று கொண்டிருந்த பொழுதே அமெரிக்கா கடல் படைகள் சட்ட விரோத தாக்குதலை நடாத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது

                                                                    எனினும் வழங்கவில்லை

                                                                    பிரிட்டன் எண்ணெய்
                                                                    பிரிட்டன் எண்ணெய்
                                                                        Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                                                                        சீனாவின் புதிய ஏவுகணை சோதனை – கொதிக்கும் அமெரிக்கா – வீடியோ

                                                                        சீனாவின் புதிய ஏவுகணை சோதனை – கொதிக்கும் அமெரிக்கா – வீடியோ

                                                                        தற்போது பரிசோதனைகள் முடிந்து இராணுவ பாவனைக்கு அனுமதிக்க பட்டுள்ளது

                                                                        அமெரிக்காவின் புதிய ஏவுகணைகளை அப்படியே காப்பி அடித்து சீனா தற் பொழுது தமது தயாரிப்பில் புதிய ஏவுகணையாக்களை தயாரித்துள்ளது


                                                                        130 கிலோ மீட்டார் சென்று தாக்கவல்ல கூறும் தூர ஏவுகணைகளே இவை

                                                                        இதுபோலவே அமெரிக்காவின் மிக உயர்ரக விமானத்தையும் அப்படியே

                                                                        காப்பி அடித்து சீனா வெளியிட்டுள்ளது ,இதனால் அமெரிக்கா பெரும் கொதிப்பில் உறைந்துள்ளது


                                                                        காப்பி அடிப்பதில் சீனாவை மிஞ்சிட எவராலும் முடியாது என்பதற்கு இவைகள் சிறந்த உதாரணம்

                                                                        சீனாவின் புதிய ஏவுகணை
                                                                        சீனாவின் புதிய ஏவுகணை
                                                                            Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                                                                            ஈரான் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் அமெரிக்கா கூட்டாக அறிவிப்பு

                                                                            ஈரான் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் அமெரிக்கா கூட்டாக அறிவிப்பு

                                                                            சிரியாவில் உள்ள தெற்கு ,மேற்கு ,மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ஈரான் இராணுவ நிலைகள் மீது தொடர் தாக்குதலை

                                                                            மேற்கொள்வோம் என அமெரிக்கா ,இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ளன

                                                                            கடந்த சில வாரங்களாக ஈரானிய இராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்தது .

                                                                            இவ்வாறான சூழலில் தற்பொழுது இரு நாடுகள் கூட்டு தக்குதல் அறிவிப்பு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது

                                                                            சிரியா கடந்து அரேபிய நாடுகளில் பரவி தரித்து நிற்கும் அமெரிக்கா படைகள் பெரும் விலையினை கொடுக்க வேண்டி

                                                                            வரும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ,தற்போது இஸ்ரேல் அமெரிக்கா இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

                                                                            சிரியா களமுனையில் ரசியா வழங்கிய எஸ் 400 ரா வான் இடைமறிப்பு ஏவுகணைகள் செயல் இழந்துள்ள நிலையில் ,சிரியா

                                                                            கள முனையில் பாரிய சரிவு நிலயை அரச இராணுவம் சந்தித்து வருகிறது ,

                                                                            இதற்கு மாற்றீடாக ரசியா என்ன செய்ய போகிறது ..? ஈரான் இராணுவம் சிரியாவின் மூன்று முக்கிய பகுதிகளில் நிலை

                                                                            கொண்டுளள்து ,சிரியா போரினை ஈரான் வழிநடத்தி செல்வதாக இஸ்ரேல் ,அமெரிக்கா குற்றம் சுமத்தி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                                                                            ஈரான் நிலைகள் மீது
                                                                            ஈரான் நிலைகள் மீது
                                                                            Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                                                                            உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சி படைகள்

                                                                            உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சி படைகள்

                                                                            சிரியாவின் இட்லி குதிக்கு மேலாக பறந்து உளவு பார்ப்பதில் ஈடுபட்ட ,

                                                                            சிரிய அரச இராணுவத்தின் உளவு விமானம் ஒன்றை கிளர்ச்சி படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                                                            குறித்த பகுதியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று உளவு விமானங்களில்

                                                                            ஒன்றின் மீது இலக்கு வைத்து மேற்கொள்ள பட்ட தாக்குதலில் இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது

                                                                            தொடர்ந்து குறித்த பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்ற உள்ளன .


                                                                            பிறி தொரு சம்பவத்தில் பத்துக்கு மேற்பட்ட கிளர்ச்சி படைகளை தாம்

                                                                            கொன்று குவித்துள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது

                                                                            உளவு விமானத்தை
                                                                            உளவு விமானத்தை