ஈராக்கில் -அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை
தாக்குதல்
ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியில் உள்ள அமெரிக்கா கிரீன் சூன்
பகுதி மீது திடீரென Katyusha rocket தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த பகுதி பெரும் புகை மூட்டம் காணபடுகிறது
ஆனால் ,வழமை போல தமக்கு எதுவித பாதிப்புக்களும்
ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது
ஈரான் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டு இருபத்தி
நான்கு மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது
மேலும் ஈரான் இராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என
அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக அறிவித்த தன் பின்னர் மேற்கொள்ள பட்ட தாக்குதலாகவும் இதனை பார்க்க முடிகிறது
அரேபிய நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக வெளியேற
வேண்டும் என ஈரான் தொடராக கூறி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
ஈரான் ஆதரவு படைகள் இந்த தாக்குதலை
மேற்கொண்டுள்ளளதாக தெரிவிக்க படுகிறது