Posted in சினிமா

நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க புகார்

நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க புகார்

இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க புகார்
விஜய்சேதுபதி


ஈரோடு மாவட்டம் கோபி போலீஸ் நிலையத்துக்கு நேற்று கோபி பா.ஜ.க.

நிர்வாகிகள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தில்

ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள்

கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் சேதுபதி ஒரு தனியார்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அது மத ரீதியாகவும் தேசிய இறையாண்மைக்கு எதிராகவும், மத கலவரத்தை

தூண்டும் வகையிலும் இருந்தது. விஜய் சேதுபதியின் இந்த பேச்சால் மனவேதனை

அடைந்துள்ளோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு

அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். அதன்பின்னர் பா.ஜ.க.வினர்

அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் கோபி போலீஸ்

நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சி படைகள்

      உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சி படைகள்

      சிரியாவின் இட்லி குதிக்கு மேலாக பறந்து உளவு பார்ப்பதில் ஈடுபட்ட ,

      சிரிய அரச இராணுவத்தின் உளவு விமானம் ஒன்றை கிளர்ச்சி படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

      குறித்த பகுதியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று உளவு விமானங்களில்

      ஒன்றின் மீது இலக்கு வைத்து மேற்கொள்ள பட்ட தாக்குதலில் இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது

      தொடர்ந்து குறித்த பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்ற உள்ளன .


      பிறி தொரு சம்பவத்தில் பத்துக்கு மேற்பட்ட கிளர்ச்சி படைகளை தாம்

      கொன்று குவித்துள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது

      உளவு விமானத்தை
      உளவு விமானத்தை