Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
விமான விபத்தில் -பலியானவர்கள் உடல்கள் அனுப்ப நடவடிக்கை
விமான விபத்தில் -பலியானவர்கள் உடல்கள் அனுப்ப நடவடிக்கை
ஈரான் தலைநகர் பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய உக்கிரேன் நாட்டு பயணிகள் விமானத்தில் பலியான சுமார் 180 பேரில் கணிசமான அளவு உடல்கள் மீட்க பட்டுள்ளன .
அவ்வாறு மீட்க பட்ட சடலங்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் கையளிக்கும் நகர்வுகள் முடக்கிவிட பட்டுள்ளன .
இந்த விமானம் ஈரான் இராணுவத்தால் தவறுதலாக ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அமெரிக் புதிய விளக்க கொடுத்துள்ளது ,
மேலும் இந்த விமானம் சுட்டு வீழ்த்த படும் காட்சி போன்ற ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

விமானத்தை நாங்கள் சுடவில்லை -கறுப்பு பெட்டி பிரான்சுக்கு அளிக்க தாயார் ஈரான்
விமானத்தை நாங்கள் சுடவில்லை -கறுப்பு பெட்டி பிரான்சுக்கு அளிக்க தாயார் ஈரான்
ஈரான் வான் எல்லையில் வைத்து உக்கிரேனிய போயிங் 737 ஏயர் பஸ் விமானம் விபத்தில் சிக்கி வீழ்ந்து நொறுங்கியது .
இந்த விமானம் இயந்திர கோளாறால் என்று முன்னரும் ,பின்னர் ஏவுகணை தாக்குதல் எனவும் ,அதனை ரசியாவே மேற்கொண்டது எனவும் ஊடகங்களில் பர பரப்பாக பேச பட்டன ,
ஆனால் இவை யாவும் வதந்தி எனவும் ,ஈரானின் புரட்சி காவல் படையை இழிவு படுத்தும் நோக்க கொண்ட பதிவுகள் இவை என சுட்டி காட்டிய ஈரான் .
இந்த விமானம் எட்டாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது ,அப்பொழுது வேறு நாட்டு விமானங்களும் அவ்வேளை அதே பாதை வழியாக பறந்து சென்றன .
ஒரு விமான விபத்தை மட்டும் வைத்து இவ்வாறு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது .
மேலும் மீட்க பட்ட கறுப்பு பெட்டி அதில் உள்ள தரவுகளை பிரித்து எடுக்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,எம்முடன் உக்கிரேன் நாட்டு அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .read more
மேலதிக சிறப்பு உதவி தேவை ஏற்பட்டால் அந்த கறுப்பு பெட்டியை பிரான்சிடம் நாங்கள் ஒப்படைப்போம் என
ஈரானின் சிவில் விமான அமைப்பின் தலைவரும் துணை போக்குவரத்து அமைச்சருமான அலி அபெட்ஸாதே சற்று முன்னர் தெரிவித்துளளார் .
அப்படி என்றால் கறுப்பு பெட்டி கைமாற போகிறது .ஆடு களத்தில் அமெரிக்கா என்ன சொல்ல போகிறது ..?
விமானத்தை நாங்கள் சுடவில்லை

ஈரான் தாக்குதலில் தப்பியுள்ளோம் – அமெரிக்கா video
ஈரான் ,ஈராக்கில் உள்ள அமெரிக்கா இரு விமான தளங்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் இருந்து இப்பொழுது நங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என அமெரிக்காவின் பிரதி ஜனாதிபதி Penceதெரிவித்துள்ளார் .
விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக இவரது பேட்டி அமைந்துள்ளது read more
தெரியாது சிக்கி விட்டோம் என்பதையே இவரது பேச்சு காண்பிக்கிறது ,அது தவிர மறை பதில் தாக்குவோம் என்பதே full video
சூட்கேசில் மனித உடல் பாகம் – விமான நிலையத்தில் பதட்டம்
சூட்கேசில் மனித உடல் பாகம் – விமான நிலையத்தில் பதட்டம்
நெதர்லாந்து – Schiphol சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரது சூட்கேசில்
இருந்து மனித உடல் பாகங்கள் மீட்க பட்டுள்ளன .
இந்த மனித உடல் பாகங்களை ஏன் எடுத்து வந்தார்கள் ,இது யாருடைய சடல பாகம் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .
நெதர்லாந்து நாட்டின் குற்ற புலனாய்வு துறையினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
எனினும் எந்த விமானத்தில் எந்த நாட்டில் இருந்து இந்த மனித சூட்கேஸ் சடலம் வந்துள்ளது என்பது தொடர்பாக
விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
ஆப்கானிஸ்தான் நாட்டின் இராணுவத்திற்கு சொந்தமான எம்ஜ-35’ ரக உலங்கு வானூர்தி ஒன்று
வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இதில் அந்த அந்த விமானத்தை ஓட்டி சென்ற இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர் .
உலங்கு வானூர்தி இயந்திரகோளாறு காரணமாக வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக
இராணுவம் அறிவித்துள்ளது .
ஆனால் தலிபான்கள் தாக்குதலினால் இந்த உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என ஒரு தகவல் தெரிவிக்கிறது .
ஈராக்கில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகளிற்கு ஆதரவு தரும் நாடுகள் மீதும் ,அந்த அமெரிக்கா இராணுவ நிலைகள் மீதும்
எமது தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்து வரும் நிலையில் இந்த உலங்கு வானூர்தி வீழ்ந்துள்ளமை சுட்டி காட்ட தக்கது
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
குறித்த விபத்து தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளனராம் ,ஆனால்
விசாரணை முடிவில் சுட்டு வீழ்த்த பட்டிருந்தால் அதனை ஏற்று மக்களுக்கு அறிவிக்க வா போகின்றனர் என்ன ..?
இதற்கு முன்னர் இடம்பெற்ற விமான விபத்துக்களின் பொழுதும் அவற்றை விபத்து என்ற சொல்லுக்குள்ளேயே
குறித்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு பதுங்கி கொண்டது ,உண்மை நிலவரத்தை அது இறுதிவரை தெரிவிக்கவில்லை .
ஆனால் தாலிபான்கள் உரிமை கோரி காணொளியுடன் தாம் சுட்டு வீழ்த்தியதாக உரிமை கூறியமை இங்கே சுட்டி காட்ட தக்கது

ஈரான் அணு உலைக்கு அருகில் நிலநடுக்கம்-7 பேர் காயம்
திடீரென- ஈரான் அணு உலைக்கு அருகில் நிலநடுக்கம்
ஈரானில் உள்ளூர் நேரம் காலை 06.49 மணியளவில் Borazjan. பகுதியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .
இந்த நில நடுக்கம் 4.5 ஆக பதிவாகியுள்ளது ,
இந்தநில நடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு
அருகிலேயே ஈரானின் மிக பெரும் அணு உலைகள் நிறுவ பட்டுள்ளன .
இந்த நில நடுக்க அதிர்வால் குறித்த அணு உலைகளிற்கு பாதிப்பு ஏற்பட்டனவா என தெரியவில்லை .
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன (பெறவில்லை .)
தற்போது கிடைத்த தகவலின் படி ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
எனினும் அணுமின் நிலையத்திற்கு சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை
மேலதிக தகவல்கள் விரைவில் இணைக்க படும் …..
ஈராக்கிற்கு அறிவித்து தாக்கிய ஈரான்-முக்கிய அமெரிக்கா அதிகாரிகள் பலி
ஈராக்கிற்கு அறிவித்து தாக்கிய ஈரான்-முக்கிய அமெரிக்கா அதிகாரிகள் பலி
ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்கா விமான தளங்கள் மீது மீது ஈரான் நடத்திய 22 ஏவுகணை தாக்குதல் நடத்திட முன்பு ஈரான் ,ஈராக்கிய அதிபருக்கு தாம் ஈரானிய இராணுவ
தளபதி ஈராக்கில் படுகொலை செய்ய சுலைமானியின் பழிக்கு அமெரிக்கர்களுக்கு விரைவில் பதிலடி வழங்க
போகிறோம் என்பதையே அறிவித்து விட்டே தாக்குதலை நடத்தியதாக ஈராக் செய்திகள் தெரிவித்துள்ளன .
.
இந்த செய்தி ஈராக்கிற்கு ஈரான் பரிமாறிய நிலையிலேயே அமெரிக்காவின் உளவுத்துறை ஈரான் தாக்குதலை நடத்த
போகிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக கடந்த இரவு அறிவித்திருந்தது .
இப்பொழுது புரிகிறதா ஈராக்கில் ஈரான் இராணுவ தளபதி முக்கிய அணி வருகிறது என்ற தகவல் எப்படி அமெரிக்காவிற்கு சென்று சேர்ந்துள்ளது என்பதை .
அப்படியானால் இந்த தகவலை வழங்கிய அந்த நாடுகளை ஈரான் பழிவாங்க துடிக்கிறது ,அப்படி எனறால் ஈரானுக்கு
அந்த தகவலை வழங்கிய நாட்டினது உளவாளிகள் தொடர்பாக ஏதோ முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது என்பதே இதன் ஊடாக கணிக்க முடிகிறது .
கழியும் நிமிடங்கள் பெரும் பதட்டமாக உள்ளது ,விமான விபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்த வண்னம் உள்ளனர் ,
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சீன என்பன அமெரிக்கா ஈரானை சமரசமாக செல்லும் படி வேண்டி கொண்டுள்ளன .
எனினும் பதட்டம் தொடர்கிறது .
அமெரிக்கா ஜனாதிபதி டிரம் ஆரம்பித்து வைத்த ஆடு கள ஆட்டத்தை அவரே முடிவுக்கு கொண்டுவரவேண்டிய நிலையில் உளளார் .
ஈராக்கிற்கு அறிவித்து தாக்கிய ஈரான்-முக்கிய அமெரிக்கா அதிகாரிகள் பலி
இந்த பதட்டங்களுக்கு உரிய காரணங்கள் டிரம்பின் தலையில் வீழ்ந்துள்ளது
,ஆனாலும் தாம் பலமானவர்கள் நாம் யாரையும் கொலை செய்வோம் நீங்கள் வாய் மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் அதிகார வெறிக்கு ஈரான் தகுந்த பதிலடி வழங்கியுள்ளது
ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவின் முக்கிய தாக்குதல் இராணுவ தளபதிகள் மற்றும் உளவுத்துறை தளபதிகள் என்பன படுகொலை செய்யப் பட்டுள்ளனராம் .
மேலும் ஈரானின் தளபதி சுலைமானி படுகொலைக்கு தலைமை ஏற்ற அந்த அமெரிக்கா தளபதியும் ஈரானின் இந்த
தாக்குதலில் கொலை செய்ய பட்டுள்ளதாக ஈரான் தகவலை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன .
அந்த செய்தியை அடுத்தே ஈரான் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர்
,அப்படியானால் அமெரிக்கா என்ன செய்ய போகிறது ..? சமாதானமா ..? தாக்குதலா ..?
ஈராக்கிய அமெரிக்கா இராணுவ தளம் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலில் 80 பேர் ,பலியாகியும் 200 பேர்
படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய அரச சேவை செய்தி தெரிவிக்கிறது .
இதனை அமெரிக்கா ஜனாதிபதியும் ஏற்றுகொண்டுள்ளார் .ஆனால் உயிரிழப்பு சேதங்கள் இவ்வளவு என்பதை அவர் இதுவரை வெளியிடவில்லை
- வன்னி மைந்தன்-

ஈரானில் 56 பேர் பலி -213 பேர் காயம் – அதிர்ச்சி வீடியோ
ஈரானில் 56 பேர் பலி -213 பேர் காயம் – அதிர்ச்சி வீடியோ
ஈரானில் – ஈரான் இராணுவ தளபதி சுலைமானியின் இறுதி கிரியைகள் அவர் பிறந்த மாவட்டத்தில் நல்லடக்கம் செய்ய பட்டது .
அந்த பகுதியில் பெரும் திரளாக திரண்ட மக்கள் கூட்டத்தின் நெரிசலில் சிக்கி சுமார் 56 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் .
மேலும் சுமார் 213 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
மூச்சு திணறல் ஏற்பட்டே இந்த மக்கள் அங்கு இறந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது vide
அங்கு இறந்த நிலையில் உள்ள மக்கள் ,மற்றும் காய பட்டு கதறும் மக்கள் காட்சிகள் வெளியாகியுள்ளன .
படத்தில் அழுத்தி வீடியோ பார்க்கவும் ,பயந்தவர்கள் காணொளி பார்க்க தடை video

குப்பை வாளியில் இருந்து மீட்க பட்ட சிசு
குப்பை வாளியில் இருந்து மீட்க பட்ட சிசு
சிங்கப்பூரில் -Aljunied-Hougang Town Council. பகுதியில் குப்பை வாளி ஒன்றுக்குள் பை ஒன்றில் சுற்றப்பட்டு வீச பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்க பட்டுள்ளது .
குப்பை அகற்றும் கிளீனர் ஒருவர் சிசுவை கண்ணுற்று பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சிசு மீட்க பட்டு
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளது
தற்பொழுது குறித்த சிசுவின் தாயாரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் video

பிரிட்டனில் கோர வெப்பத்தில் சிக்கி 900 பேர் மரணம்
பிரிட்டனில் கோர வெப்பத்தில் சிக்கி 900 பேர் மரணம்
பிரிட்டனில் கடந்த வருடம் நிலவிய கொடும் வெப்பத்தில் சிக்கி சுமார் 900 பேர் பலியாகியுள்ளதான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .
இந்த கொடிய வெப்பம் வைகாசி மாதம் முதல் செப்டம்பர் மாதம் அளவிலான கால பகுதியிலேயே அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கன்றன .
இவ்வாறான தொகையில் மக்கள் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவ்வாறு இறந்தவர்களில் இலங்கையரும் உள்ளடங்களும் என தெரிவிக்க படுகிறது
மூச்சு திணறல் ,அதானல் ஏற்பட்ட இரதம் அழுத்தம் மாரடைப்பு என்பன மக்களை தாக்கியுள்ளது ,இதற்குரிய காரணம் இந்த வெப்ப நிலையே என தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் கடந்த வருடம் நிலவிய கொடும் வெப்பத்தில் சிக்கி சுமார் 900 பேர் பலியாகியுள்ளதான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .
இந்த கொடிய வெப்பம் வைகாசி மாதம் முதல் செப்டம்பர் மாதம் அளவிலான கால பகுதியிலேயே அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கன்றன .
இவ்வாறான தொகையில் மக்கள் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவ்வாறு இறந்தவர்களில் இலங்கையரும் உள்ளடங்களும் என தெரிவிக்க படுகிறது
மூச்சு திணறல் ,அதானல் ஏற்பட்ட இரதம் அழுத்தம் மாரடைப்பு என்பன மக்களை தாக்கியுள்ளது ,இதற்குரிய காரணம் இந்த வெப்ப நிலையே என தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் 190 பேரை கற்பழித்த நபர் சிக்கினார்
பிரிட்டனில் – மன்ஸிஸ்டர் பகுதியில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 190 பேரை கற்பழித்த , பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இரவு விடுதிகளில் கூடும் இவர் அங்கு வரும் பெண்கள் ,மற்றும் ஆண்களை அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் .
சுமார் 136 ஆண் ,பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதுடன் ,
8 பேரை கற்பழிக்க முனைந்துள்ளார் ,14 பேருக்கு செக்ஸ் தொல்லை புரிந்துள்ள்ளார் ,மேலும் ஒருவரை
அணைத்து பக்கங்களையும் பாவிக்கும் படி டார்ச்சர் புரிந்துள்ளார் .
தற்போது கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ள இவரினால் பாதிக்க பட்ட முதல் கட்ட நபர்களது விபரங்கள்
இது எனவும் மேலும் பலர் பாதிக்க பட்டு இருக்க கூடும் என போலீசார் அச்சம் வெளியிட்டுள்ளனர் .
தொடர்ந்து இவரால் யாரவது பாதிக்க பட்டு இருந்தால் எமக்கு அறியத்தரும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .
பிரிட்டனில் 190 பேரை கற்பழித்த நபர் சிக்கினார்
மேலும் பாதிக்க பட்ட ஆண்கள் தமக்கு நடந்தவற்றை கூறவும் ,தம்மை காட்டி கொள்ளவும் மறுத்து மறைந்து வருவதாகவும் சுட்டி காட்ட பட்டுள்ளது .
பிரிட்டன் வரலாற்றில் அதிக நபர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர் இவர் என்ற சாதனையை இவர் இடம் பிடித்துள்ளார் .
மேற்படி சமபவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,
இவருக்கு முப்பது வருட கடூழிய சிறை தண்டனை ,அல்லது அதற்கு மேல் கிடைக்க பெறும் எனவும் இவர் பிணையில் வெளிவரமுடியாது எனவும் தெரிவிக்க படுகிறது .
இந்த நபர்களை இவர் எவ்வாறு கபளீகரம் செய்தார் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
விசாரணை முடிவில் மேலும் பலர் சிக்க கூடும் எனவும் ,இவரது தொடர்பில் இருந்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்
மேலும் இவரது தொடர்புகள் கிண்ட படுகின்றன ,இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
விசாரணை முடிவில் மேலும் பல அதிர்ச்சிக்கார தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்க படுகிறது
லிபியா இராணுவம் இழந்த மூன்றாவது நகரத்தை மீட்டது -தொடரும் சண்டை
லிபியா இராணுவம் இழந்த மூன்றாவது நகரத்தை மீட்டது -தொடரும் சண்டை
லிபியாவில் கடாபியின் ஆட்சி கவிழ்க்க ப்பட்ட பின்னர் அங்கு அமெரிக்காவின் அகல கால் படர்ந்துள்ளது
,இவ்வாறான நிலையில் தற்பொழுது லிபியா இராணுவம் இழந்த தமது மூன்றாவது
முகம் பெரும் நகரமான Sirte ஈட்டை மீட்டுள்ளதாக லிபியம் இராணுவம் அறிவித்துள்ளது .
இதே வேளை துருக்கிய படைகளும் இங்கே முன்னேறி வருகின்றன

அவனை கைது செய்
நெல்லை கண்ணன் கைது எதிரொலி ,வெடித்து பறக்கும் தமிழர் கொந்தளிப்பு
இங்கே நடக்கும் இந்த அரசியல் கெடுபிடியை இங்கே கொஞ்சம் பாருங்க video
ஈரான் புரட்சி தலைவரை கிண்டல் அடிக்கும் அமெரிக்கா
இவரு பொம்மை -ஈரான் புரட்சி தலைவரை கிண்டல் அடிக்கும் அமெரிக்கா
ஈராக்கில் வைத்து அமெரிக்கா படைகளினால் பாடுகொலை செய்ய பட்ட
ஈரானிய தளபதி சுலைமானியின் இழப்பிற்கு தற்போது
தெரிவு செய்ய பட்டுள்ள இவர்
ஒரு பொம்மை என அமெரிக்கா கிண்டல் அடித்துள்ளது
இவரால் அவர் போல செயல் பட முடியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளதும் ,இவரை தான் இவர் நியமிப்பார்
என்பதை முன்னரே உளவு தகவல் மூலம் அறிந்து வைத்திருந்த அமெரிக்கா இவ்வாறு கிண்டல் அடித்துள்ளது .
அது ஒரு புறம் நகர தற்போது இந்த அமெரிக்கா சாதிக்கு ,இவர்கள் பயணத்த துல்லியமாக அமெரிக்காவுக்கு தகவல்
வழங்கிய நாத நபர்கள் யார் என்பதை ஈரான் ,லெபனான் ,ஈராக் என்பன சுழியோடி தேடுகின்றன . video

கனடாவில் தப்பிய விமானம்
கனடாவில் தப்பிய விமானம்
sunday நேற்று கனடா ரொறொண்டோ ப்குதியில் உள்ள விமான தலத்தில் பயணிகளுடன் தரை இறங்கிய Boeing 737-
800 என்ற விமானம் அங்கு பொழிந்திருந்த பனிமழையில் சிக்கி இழுத்து செல்ல பட்டுள்ளது .
எனினும் இதனால் அதில் பயணித்த பயணிகள் எவரும் காயம் இன்றி தப்பித்தார் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
இந்த விமான விபத்தை அடுத்து பல விமான பயணங்கள் திடீரென இரத்து செய்ய பட்டு பிற விமான தளங்களுக்கு மாற்றிவிட பட்டன video

ஈரான் படைத்தலைவர் சுலைமானிக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி.
ஈரான் படைத்தலைவர் சுலைமானிக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி.
அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானிக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் படைத்தலைவர் சுலைமானிக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.
பாக்தாத்:
ஈரானுக்கும் இடையே தீராப்பகை நிலவி வருகிறது. இந்த தருணத்தில் ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானி
(வயது 62) நேற்று முன்தினம் வந்திருந்தார். அப்போது சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்கா திடீரென நடத்திய வான்தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்
. இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்தில் அமைந்துள்ள தங்களது தூதரகத்தை ஈரான் ஆதரவு போராளிகள் கடந்த புதன்கிழமை முற்றுகையிட்டு சூறையாடியதற்கு பதிலடியாக இந்த தாக்குதலை
உலக சண்டியர் அமெரிக்கா நடத்தி உள்ளது. அதுவும் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது ஈரான்மீது அமெரிக்கா தொடுத்துள்ள போர் என ஐ.நா. சபைக்கான ஈரான் தூதர் மஜித் டாக்த் ரவான்சி கருத்து தெரிவித்தார்.
இந்த தாக்குதல் உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லப்பட்ட ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானி, ஈரானின் உயர்ந்த அதிகாரம் படைத்த மத தலைவர் அயதுல்லா அலி காமெனிக்கு அடுத்த நிலையில் வைத்து பார்க்கப்பட்டவர்.
அவர் கொல்லப்பட்டிருப்பது ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்களது படைத்தலைவரின் உயிர்ப்பலிக்காக அமெரிக்கா மீது
பழிதீர்க்கப்படும் என்று ஈரான் கூறி உள்ளது.
இழந்த ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானி மற்றும் அவருடன் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் இறுதி ஊர்வலம் பாக்தாத்தில் நேற்று நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் கருப்பு நிற உடை அணிந்து, ஈராக் கொடி ஏந்திச்சென்றனர்.
ஈராக் நாட்டின் இடைக்கால பிரதமர் அதெல் அப்தெல் மஹதி, முன்னாள் பிரதமர் நூரி அல் மாலிகி உள்ளிட்ட பலம்
வாய்ந்த ஷியா முஸ்லிம் தலைவர்கள், ஷியா மத குரு அம்மர் அல் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இறுதி ஊர்வலம் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள ஹரியா சதுக்கத்தில் முடிந்தது. அங்கு காசிம்
சுலைமானி உள்ளிட்டவர்கள் உடல்கள் வைக்கப்பட்டு மக்கள் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
இராணுவத்தளபதி சுலைமானி தவிர்த்து மற்றவர்களின் உடல்கள் ஷியா பிரிவு புனித நகரமான நஜாப் எடுத்து செல்லப்பட்டு, அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டன.

சுலைமானி உடல் ஈரான் தலைநகர் டெஹ்ரான் கொண்டு செல்லப்பட்டு அங்கு இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.
பாக்தாத்தில் நேற்று நடந்த காசிம் சுலைமானி இறுதி ஊர்வலத்துக்கு முன்பாக, அங்கு அமெரிக்கா மீண்டும்
வான்தாக்குதல் நடத்தியது. ஹசாத் அல் ஷாபி என்று அழைக்கப்படுகிற ஈரான் ஆதரவு போராளிகளின் வாகனங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 5 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.
ஈரானின் 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் -அமெரிக்கா
ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – டிரம்ப் எச்சரிக்கை
ஈரானில் உள்ளமுக்கிய இடங்களின்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் உள்ள ஈரானின் 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – டிரம்ப் எச்சரிக்கை
டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்:
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் 2-வது சக்திவாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி
குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவை பழி தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது. மேலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க ராணுவ முகாமை
குறிவைத்து ஈரான் ராணுவத்தின் காத்ஸ் பிரிவு இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களின்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பதில் தாக்குதல் நடத்தும் விதமாக அமெரிக்காவின் சொத்துகளைத்
தாக்கப்போவதாக ஈரான் பேசிக் கொண்டிருக்கிறது. அப்படித் தாக்கப்படும்பட்சத்தில் எங்களது எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும். ஈரானின் முக்கிய 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என பதிவிட்டுள்ளார்
ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவாளர்கள் சென்ற வாகன அணிவகுப்பை குறிவைத்து அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈராக்கில்அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: 6 பேர் பலி?
வான் தாக்குதல் (கோப்பு படம்)
பாக்தாத்:
ஈராக்தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதகரத்தை சமீபத்தில் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
அமெரிக்காவின்நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டம் பற்றி அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக விசாரித்த போது ஈரானில் உள்ள துணை ராணுவபடையான ஹஷீத் அல்-ஷாபி பற்றி சில திடுக்கிடும் தகவல்கள்
கிடைத்தன. இந்த துணை ராணுவ படை காசிம் சுலைமானி என்பவர் தலைமையில் செயல்பட்டு வரும் அமைப்பாகும்.
இந்த துணை ராணுவ படை ஈரான் அரசுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. இந்த துணை ராணுவ
படையில் பெரும்பாலும் ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அமைப்புக்கு ஈரான் மக்களிடம் மிகுந்த செல்வாக்கு உள்ளது.
ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
வெளிநாட்டில் இஸ்லாமிய அமைப்புகளிலும் ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவ படைக்கு ஆதரவு பெருகியது. இந்த அமைப்பு அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்த
திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது. இதைத்தொடர்ந்து இந்த அமைப்பை அமெரிக்கா கண்காணித்து வந்தது.
இந்தநிலையில் கடந்த புதன்கிழமை பாக்தாத்தில் ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவ படை ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியபோது அமெரிக்கா கடும் கோபம்
அடைந்தது. இதைத்தொடர்ந்து பாக்தாத்தில் நேற்று அதிகாலை காசிம் சுலைமானி சென்று கொண்டிருந்த வாகன அணிவகுப்பு மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியது.
ஆளில்லாத விமானங்கள் மூலம் ஏவுகணை வீசி இந்த தாக்குதலை அமெரிக்க ராணுவம் நடத்தியது. இதில் ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவ அமைப்பு தலைவர் காசிம்
சுலைமானிகொல்லப்பட்டார். அவருடன் துணை தலைவர் அபுல் மஹதி உள்பட மேலும் 7 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கஅதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க ராணுவம் மீது காசிம் சுலைமானி தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி
இருந்தது உறுதியாக தெரிய வந்ததால் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
காசிம்சுலைமானி கொல்லப்பட்டதால் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் கடும் ஆவேசம் அடைந்துள்ளனர்.
அதுபோல ஈரான் நாட்டு அரசும் கடும் கோபம் அடைந்துள்ளது. காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்காக
அமெரிக்காவைபழி வாங்குவோம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானியும், பயங்கரவாதிகளும் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவையும், ஈரானையும் உலக நாடுகள் சமரசம் செய்தனர். அமெரிக்காவின் தாக்குதலுக்கு
ரஷியா, சிரியா உள்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்தியா, சீனா உள்பட பல நாடுகள் அமெரிக்காவைசமரசம் செய்தன.
விமான நிலைய தாக்குதல்
ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) அமெரிக்க ராணுவம் மீண்டும் ஈராக் நாட்டில் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. நேற்று கொல்லப்பட்ட காசிம் சுலைமானிக்கு ஆதரவு
தெரிவித்து பாக்தாத்தில் இன்று ஈரான் நாட்டு ஆதரவாளர்கள் மிகப்பெரிய மவுன ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக ஏராளமானோர் கார்களில் சென்றனர். அந்த வாகன அணிவகுப்பின் மீது அமெரிக்காவின் ஆளில்லாத விமானங்கள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தின.
இதில் ஏராளமான வாகனங்கள் சிதறின. நிறைய வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
இன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஈரானின்துணை ராணுவ படையை முழுமையாக அழிக்கும் வகையில் இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத் நகரின் அருகே நடந்த இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளை ஈராக் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோ காட்சிகள் மூலம் இந்த தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஈராக்கில்அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து முதல் கட்டமாக 750 ராணுவ வீரர்களை அமெரிக்கா பாக்தாத்துக்கு அனுப்பி இருந்தது.
நேற்று காசிம் சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து கூடுதலாக 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் ஏற்கனவே அமெரிக்காவின் 14 ஆயிரம் வீரர்களை கொண்ட
மிகப்பெரிய ராணுவ அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஈராக்கில் மட்டும் சுமார் 5 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர்.
ஈரானில்துணை ராணுவ படையினர் கைவரிசை காட்டாமல் இருப்பதற்காக அமெரிக்கா இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகள் பகுதியில் கடும் பதட்டம்
ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஈரானுக்கு ஆதரவான பயங்கரவாத அமைப்புகளும் அமெரிக்கா படைகள் மீது திடீர் தாக்குதல்
நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி
உள்ளது.
ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
தாக்குதல் ஈராக்கில் நேற்றும், இன்றும் அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் கச்சா எண்ணை விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 70
டாலரை நோக்கி உயர்ந்தபடி உள்ளது. பதட்டம் அதிகரித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 80 டாலரை கடந்து செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இத்தகைய நிலை ஏற்பட்டால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணை தேவைக்கு வளைகுடா நாடுகளையே நம்பி உள்ளது. ஈராக்கில் இருந்து மிக அதிகமான கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
….ஈராக்நாடு கச்சா எண்ணை வழங்கும் அளவை குறைத்தால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும்.
நீதிபதிகள் சென்ற விமானம் வீழ்ந்து நொறுங்கியது – 18 பேர் பலி
சூடானில் -நீதிபதிகள் சென்ற விமானம் வீழ்ந்து நொறுங்கியது – 18 பேர் பலி
சூடான் நாட்டில் -Sudanese town of El Geneina பகுதியில் இராணுவ விமானம் ஒன்று தரை இறங்க முன்னர் சிதறி வீழ்ந்ததில் அதில் பயணித்த பதினெட்டு பேர் பலியாகியுள்ளனர் .
இதில் மூன்று நீதிபதிகள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 18 பேர் பயணித்துள்ளனர் .
அவர்களே இந்த விபத்தில் பலியாகியுள்ளனர் .
இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகிறது .
இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என கருத படுகிறது
மத்திய கீழக்கிற்கு 3000 இராணுவத்தை அனுப்பி வைத்த அமெரிக்கா
அமெரிக்கா -மத்திய கீழக்கிற்கு 3000 இராணுவத்தை அனுப்பி வைத்த அமெரிக்கா
ஈராக்கில்- ஈரான் மற்றும் ஈரானிய இராணுவ தளபதிகளை அமெரிக்கா போட்டு தள்ளியதன் பின்னர் ஏற்பட்டுள்ள பதட்டத்தை அடுத்து மத்திய கிழக்கிற்கு
அமெரிக்கா மூவாயிரம் விசேட இராணுவ அணிகளை அனுப்பி வைத்துள்ளது .
அமெரிக்கா இலக்குகள் மீது ஈரான் கூட்டு படைகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில்
இந்த படைகள் விசேடமாக அனுப்ப பட்டுள்ளன .
தாம் ஈரானிய இராணுவ தளபதி படுகொலையின் பின்னர் எதையும் சந்திக்க தயார் என சண்டியர் அமெரிக்கா ஜனாதிபதி டிரம் அறிவித்துள்ளார் .
உங்கள் ஆளை போட்டு விட்டோம் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து பாருங்கள் என்ற திமிரில் அவர் பேச்சு உள்ளது ,எமக்கு எதிராக செயல் பட யார் முனைந்தாலும் இது தான் அவர்களுக்கு நடக்கும் .
போரில் ஈரானால் எம்மை வெல்ல முடியாது ,நாம் வெல்வோம் என்ற பாணியில் டிரம் பேச்சு அமைந்துள்ளது
ஈரான் மேற்கொள்ள போகும் அடுத்த கட்ட நடவடிக்கையை அடுத்தே எமது நகர்வுகள் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுளளார் .
அதாவது டிரம் சொல்ல வருவது ஈரானின் காலில் பந்துள்ளது .போரா..? சமதானமா என்பதை அவர்களே முடிவெடுக்கட்டும் .
நாம் பயங்கரவாதியை கொன்றோம் .
எமது நாட்டையும் மக்களையும் காப்பற்றியுள்ளோம் .
இரு நாட்டினது இரண்டு தளபதியை கொன்று விட்டு அமெரிக்காவின் இந்த திமிர் பேச்சு இவ்வாறு அமைந்துள்ளது மத்திய கிழக்கில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து இராணுவ ,மற்றும் ஜிகாத் மூலம் ஈரான் ஈராக் இணைந்து பழிவாங்கும் தாக்குதலை நடத்தலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .
இரண்டு இராணுவ தளபதிகள் நல்லடக்கத்தின் பொழுது தாக்குதல் வெடிக்கலாம் எனவே எதிர்பார்க்க படுகிறது
மத்திய கீழக்கிற்கு அனுப்ப படும் மேலதிக படையினரால் நாம் உங்களை வேட்டையாட வருகிறோம் ,எம்மிடம் ஏவுகணைகள் உள்ளன .
திறமையான இராணுவம் ,உளவுத்துறை உள்ளது ,என டிரம்ப் குறிப்பிட்டு பேசியுள்ளார் .
எமக்கு எதிராக இறந்த இராணுவ தளபதி போரை ஆரம்பிக்க இருந்தார் ,அது இப்பொழுது தடுத்து நிறுத்த பட்டு விட்டது என்கிறார் அமெரிக்கா ஜனாதிபதி .
– வன்னி மைந்தன் –







