Posted in உலக செய்திகள்

ரசியா வதை முகாமில் 600 உக்கிரேனிய மக்கள்

ரசியா வதை முகாமில் 600 உக்கிரேனிய மக்கள்

உக்கிரேன் நாட்டின் மீது வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் ரசியாவின் அகோர தாக்குதலில் சிக்கி உக்கிரேன் பேரழிவை சந்தித்து வருகிறது
இதுவரை ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட உக்கிரேன் மக்கள் பலியாகியுள்ளனர்

தொடர்ச்சியாக முன்னேறி வரும் ரசியா இராணுவத்தினரால் உக்கிரேன் முக்கிய நகரான Kherson பகுதியில் வைத்து அறுநூறு அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்


ரசியா இராணுவத்தால் கைது செய்ய பட்ட அறுநூறு மக்களும் Kherson மாவட்டத்தின் chambers பகுதியில் கைதானவர்கள் ,அவர்களே கோர வதைகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

இங்கு சிறை பிடிக்க பட்ட அறுநூறு மக்களும் Crimea மானில பகுதிக்கு அழைத்து செல்ல பட்டு அங்கு கோர வதைகளிற்கு உள்ளாக்க பட்டு வருவதாக உக்கிரேன் உளவுத்துறை ஆதார தகவலுடன் செய்தி வெளியிட்டுள்ளது

ரசியா நாட்டின் இந்த சம்பவம் மனித உரிமை மீறலாக பதிய பெற்றுள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சபை முதல், பல நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன

ரசியா வதை முகாமில் தடுத்து வைக்க பட்டுள்ள மக்கள் அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது,
ஆனால் ரசியா நாடோ உக்கிரேனின் இந்த தகவலை மறுத்து வருகிறது

ரசியாவின் இந்த மறுப்பு தகவலின் வெளிப்பாடு அங்கு கைது செய்ய பட்டு வதைகளிற்கு உள்ளாக்க பட்டு வரும் அனைவரும் படுகொலை செய்யபடலாம் என அஞ்ச படுகிறது

ரசியா வதை முகாமில் 600 உக்கிரேனிய மக்கள்

இதுவரை இரு நூற்றுக்கு மேலான மனித புதைகுழியை தாம் கண்டு பிடித்துள்ளதாக உக்கிரேன் தெரிவித்து வருகிறது,அந்த புதை குழிகளிற்குள் கண்கள், கைகள் கட்ட பட்ட சடலங்கள் மீட்க பட்டுள்ளன


ரசியா வதை முகாமில்

உக்கிரேன் மண்ணில் இடம்பெறும் மனித படுகொலைகளும் ,அங்கு இடம்பெறும் அநீதிகளுக்கு ,மக்கள் வாழ்விடங்கள் அழிவிற்கும் யார் பொறுப்பு கூறுவது என்ற கேள்வி எழுகிறது

உக்கிரேன் மண்ணில் இடம்பெறும் இந்த பேரழிவுகளுக்கு உக்கிரேன் ஆளும் அதிபரே கரணம் என்கிறது உக்கிரேன் நாட்டின் மக்கள் குழு ஒன்று

ரசியா வதை முகாமில் உயிருக்கு போராடுவது உக்கிரேனிய மக்கள் மற்றும் நாட்டை பாதுகாக்க துணைப்படைகளாகவும் ,இராணுவமாக மாறிய அப்பாவிகளே இரு நாட்டு அரச அதிபர்களின் கடும் போக்கால் பலியாகிய வண்ணம் உள்ளனர் என்பதே கள நிலவரம்

முள்ளி வாய்க்காலில் சிங்கள இராணுவம் அப்பாவி தமிழர்களையும் விடுதலை புலிகள் உறுப்பினர்களையும் இவ்வாறே கட்டி வைத்து வெட்டி கொன்றது ,போரில் இவ்வாறான காட்சிகள் இயல்பான ஒன்றே என்பதை இந்த சம்பவங்கள் மீள் இடித்து உரைக்கின்றன

அப்பாவிகளின் உயிர்களை காப்பாற்ற முடிவில்லா தொடரும் இந்த போர் என்று முடிவுக்கு வரும் இதுவே உலக நாடுகளின் எதிர் பரப்பாக உள்ளது

  • வன்னி மைந்தன்
    Posted in உலக செய்திகள்

    ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

    ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

    உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ தாக்குதலுக்கு எதிராக உக்கிரேனும் தாக்குதல் நடத்தி வருகிறது இந்த தாக்குதலில் ரசியா இராணுவத்தின் 1390 முதல் தர தாக்குதல் டாங்கிகள் அழிக்க பட்டுள்ளன

    முன்னேறி வரும் ரசிய இராணுவதின் தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் பேரழிவை சந்தித்துள்ளது ,ஆனாலும் மேற்குலக நாடுகள் வழங்கி வரும் போராயுதங்கள் துணையுடன் தொடர்நது போராடி வருகிறது

    பிரிட்டன் அமெரிக்கா வழங்கும் நவீன ஆயுதங்கள் மூலம் தனது தலை நகரை உக்கிரேனது இராணுவம் தக்க வைத்துள்ளது

    நூற்றி மூன்று நாட்கள் கடந்து நடைபெறும் உக்கிர சமரில் ரசியா படைகளில் 31 600 பேர் பலியாகியும் ,இருபதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்

    பல நூறு முக்கிய ஆயுத தளபாடங்கள் அழித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளது

    இன்று வரை தொடர்ந்து வரும் ரஷியா இராணுவத்தினரது மோதல்களில் உக்கிரேன் பேரழிவை சந்தித்துள்ளது ,முக்கிய பகுதிகள் சூடு காடாக காட்சி அளிக்கிறது

    ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

    ரசியா படை முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக மார் தட்டும் உக்கிரேன் நாடு சந்தித்துள்ள பேரழிவில் இருந்து அந்த நாட்டை மீள கட்டியெழுப்ப பல்லாண்டுகள் செல்லும் என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது

    எதிர் வரும் கோடை காலத்திற்குள் தமது எதிரிகளது நாட்டின் மீதான போர் முடிவுக்கு வந்து விடும் என ரஷியா இராணுவம் தெரிவித்து வருகிறது

    இவர்களின் இந்த கூற்று மெய்ப்பிக்கும் வகையில் சமீப நாட்களில் ரசியா இராணுவம் பாரிய படையெடுப்பை மேற் கொள்வதுடன் அதிக எறிகணை தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

    ரசியா, டாங்கிகள், அழிப்பு,

    ரசியாவின் தாக்குதல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் அமெரிக்கா ,பிரிட்டன் படைகள் நீண்ட தூர பல் குழல் ரொக்கட் ஏவுகணைகளை வழங்கினர்

    இதன் ஊடாக மேற்கொள்ள பட்ட தாக்குதலில் ரசியா நாட்டு இராணுவத்தின் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை செய்ய பட்டுளளார் இவரது இளப்பு பேரிழப்பாக பார்க்க படுகிறது

    தமது தாய் மண்ணை மீட்க இறு திவரை போராடுவோம் என உக்கிரேன் மக்கள் சபதம் எடுத்து களத்தில் நிற்கின்றனர்
    இது வரை எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டைய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்

    ரசியா இராணுவம் அதிகம் முன்னேற்ற நட வடிக்கைக்கு பயன் படுத்த படும் டாங்கிகள் அழிப்பு ,ரசியா இராணுவத்திற்கு பெரும் பின்னடைவு என உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது

    ரசியா இராணுவ டாங்கிகள் அழித்துள்ள காட்சிகளை உக்கிரேன் இராணுவம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது ,தாமே வென்றவர்கள் என உலகில் காட்டி மகிழ்கிறது

    இது உக்கிரேனுக்கு கிடைத்துள்ள தற்கால மகிழ்ச்சி என்பது ரசியா நாட்டின் பதிலாக வீழ்ந்துள்ளது , உக்கிரேன் போரில் வெல்ல போவது ரசியாவா உக்கிறேனா ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .

    • வன்னி மைந்தன் –
      Posted in உலக செய்திகள்

      பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது

      பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது

      ஆபிரிக்கா நாட்டில் சுரங்க பணி மற்றும் கணனி தொழில் நுட்பம் தொடர்பான நிறுவனத்தை ஆரம்பித்து

      தென் ஆப்பிரிக்காவில் 1,3 மில்லியன் பணத்தை ஆட்டையை போட்ட இரண்டு இந்திய செல்வந்தர்கள் சர்வதேச போலீசாரின்சிவப்பு பிடி விராந்தின் ஊடாக துபாயில் கைது செய்ய பட்டுள்ளனர்

      ஆப்பிரிக்காவில் பெரும் நிறுவனத்தை நடத்தி வந்த இவர்கள் அங்கு அந்த நாட்டின் அதிபருடன் இணைந்து லஞ்சம் மற்றும் ஊழல் மோசடி புரிந்துள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது

      இந்த இரு இந்தியா செல்வந்தர்களும் சகோதரர்கள் ஆவர்கள், குப்தா சகோதரர்கள் என இவர்கள் அழைக்க படுகின்றனர்

      மக்களின் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் கைது செய்ய பட்ட இவர்கள் நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளனர்

      இவர்கள் ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்த பட்டு அங்கு வைத்து விசாரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது ,


      இந்தியா தொழில் அதிபர்கள் என்றாலே மோசடிக்காரர்கள் என்ற நிலையில் அகில பரப்பில் அண்மைய காலங்களாக வெளிவரும் செய்திகள் ஊடாக காண முடிகிறது

      1993 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் நிறுவனம் வைத்து நடத்தி மக்கள் பணம் மோசடி மற்றும் அரச பணத்தை மோசடி செய்துள்ள குற்ற சாட்டு இவர்கள் மீது விதிக்க பட்டுள்ளது

      பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது

      பண மோசடி புரிந்த குப்தா சகோதர்கள் நீண்ட நாட்களாக சர்வதேச போலீசார் சிவப்பு தேடுதல் பட்டியலில் இணைக்க பட்டு தேட பட்டு வந்த இவர்கள் டுபாயில் டுபாய் பொலிஸாரினால் கைது செய்ய பட்டுள்ளனர்

      இலங்கையில் மகிந்த ராஜக்சே குடும்பமும் அவரது தோழமைகளும் பல மில்லியன் டொலர்களை பணம் கொள்ளையடித்துள்ளனர்

      அவர்களும் இவ்விதம் கைது செய்ய பட்டு தண்டிக்க பட வேண்டும் என்பது மக்கள் ஆவலாக உள்ளது
      குப்தா சகோதர்கள் பண மோசடி கைது போராட்ட காரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது

      இவர்களது நீதிமன்ற பண மோசடி விசாரணைகள் திறந்த வெளி மக்கள் அரங்கின் முன்பாக நிகழ்த்த பட வேண்டும் என்பதும் மக்களின் கருத்தாக பதிய பெறுகிறது

      சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்தி பண மோசடி புரிந்த இரு இந்தியா செல்வந்தர்கள் தப்பித்து விடுவார்களோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது

        Posted in உலக செய்திகள்

        நாடெங்கும் இராணுவம் குவிப்பு -பதட்டத்தில் மக்கள்

        நாடெங்கும் இராணுவம் குவிப்பு -பதட்டத்தில் மக்கள்

        இலங்கை தழுவிய நிலையில் நாடெங்கும் திடீரென சிங்கள இராணுவத்தினர் குவிக்க பட்டு வருவதால் மக்கள் மத்தியில் பதட்ட நிலை ஏறட்டுள்ளது

        ஆயுதம் தங்கிய இராணுவத்தினர் இவ்வாறு குவிக்க படுவது ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது

        நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் பொருட்கள் நெருக்கடி காரணமாக
        மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்


        இவ்வாறான கால பகுதியில் இந்த இராணுவ குவிப்பு இடம்பெற்று வருவது மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

        தொடரும் இந்த பதட்ட நிலைக்கு மத்தியில் மக்களை பாதுகாத்து கொள்வதற்கு தமது படைகள் காவலுக்கு வைக்க பட்டுள்ளனர் என கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்

        இலங்கை ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் வாயிலாக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மக்கள் பாதுகாப்புக்கு நிலை நிறுத்த பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

        இலங்கை தேசத்தில் மீளவும் ஒரு போர் ஆரம்பிக்க பட்டு விட்டதா என்ற சந்தேகத்தை இந்த திடீர் இராணுவ ரோந்துகளும் சோதனைகளும் மக்களுக்கு நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது

        நாடெங்கும் இராணுவம் குவிப்பு -பதட்டத்தில் மக்கள்

        மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பொருட்களை உரிய முறையில் விநியோகிக்க மறக்கும் அரசு தமது அரசாட்சியை நிலை நிறுத்தி கொள்ள மேற்கொள்ளும் இந்த விடயங்கள் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

        எதிர் வரும் சில மாதங்களில் நாடு பெரும் மோசமான நிலைக்கு செல்லும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்து இருந்தார்

        அவ்வேளை மக்கள் புரட்சியை அடக்கவும் ஒடுக்கவும் இந்த ஆயுத படைகள் உதவிகள் தேவை படும் என எதிர் பார்க்க படுகிறது

        அதற்கு அமைவாக இந்த சிங்கள இராணுவ படை குவிப்பை மேற்கொள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே கட்டளை பிறப்பித்துள்ளதாக நம்ப படுகிறது

        பதட்டமாகும் இலங்கையின் பொருளாதர நெருக்கடியும் அதானல் கோபம் கொண்டு பொங்கி வெடிக்கும் மக்களின் நீதியான போராட்டங்கள் முன்பாக

        அதிகாரம் தமக்கு உள்ளதாக நினைத்து தம்மை அரியணை ஏற்றிய மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அடக்கி ஒடுக்க முனையு ராஜபக்சே குடும்பம்

        இலங்கையில் மீளவும் அதிகாரத்தை நிலை நாட்டை முடிய நிலைக்கு செல்ல கூடும் என்பது தற்போது நிகழும் விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .

        • வன்னி மைந்தன் –
          Posted in உலக செய்திகள்

          மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை – இன்றிலிருந்து ஆரம்பம்

          மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை – இன்றிலிருந்து ஆரம்பம்

          இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மின்சார இணைப்பின்றி வாழுகின்ற குடும்பங்களுக்கும், மிக கஷ்ட நிலைமையில் வாழுகின்ற குடும்பங்களுக்கும் இலவசமாக மண்ணெண்ணை வழங்கும் திடம் ஆரம்பிக்க பட்டுள்ளது

          மட்டக்களப்பு குச்சவெளி பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் மாண்புடன் தெரிவித்தார்.

          இலங்கை நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மிக கஷ்ட நிலைமையில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு இந்த உதவிகள் சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்த பட்டுள்ளது

          வறுமைக்குள் உள்ளான குடும்பங்கள், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுள், மின்சார வசதியற்று வாழுகின்ற குடும்பங்கள் ஆகியோருக்கு வீட்டுத் தேவைக்கான மண்ணெண்ணையை இலவசமாக வழங்க படுகிறது

          திட்டமிடப் பட்டுள்ளதாகவும், அதன் ஆரம்பக் கட்டமாக புல்மோட்டை பிரதேசத்துக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

          குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் ஏழ்மை நிலைமையில் வாழுகின்ற
          குடும்பங்கள் தங்களின் தகவல்களை புல்மோட்டை உப அலுவலக தவிசாளர் காரியாலயத்திற்கு (திருமலை சந்தி) வருகைதந்து சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது

          இந்த இலவசமாக மண்ணெண்ணை பெற்றுக்கொள்ள விருப்புகின்றவர்கள் தங்களின்

          பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டு மண்ணெண்ணையை பெற்றுக் கொள்வதற்கான டோக்கனை பெற்றுக் கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

          நாட்டில் நிலவும் வாழ்வாதர நெருக்கடி மாற்று பொருட்கள் தட்டுப்பாடு நிலைமை காரணமாக மக்களை காப்பாற்றும் நோக்கத்தில் ஏற்படுத்த பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்று கொள்ள பட்டுள்ளது

          மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை – இன்றிலிருந்து ஆரம்பம்

          தொடர்ந்து மக்களின் விருப்பை அறிந்து உரிய நேரத்தில் முன்னெடுக்க படும் இந்த இலவச மண்ணெண்ணை கையளிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          இலவசமாக இந்த எரிபொருள் வழங்க ப்படுகின்றன செய்தி தற்போது காட்டுத் தீ போல பரவி வருவதால் பிர கிராமங்களை சேர்ந்த மக்களும் இங்கு வருகை தர ஆர்வம் காட்டுகின்றனர்

          ஆனால் அவர்களுக்கு இவ்ரகளினாலே உதவிட முடியா நிலை ஏற்படுகிறது மின்சாரம்

          நாள் தோறும் இரத்து செய்யப் பட்டு அது மின் வெட்டுக்கு உள்ளாகி வருகின்ற நிலையில் நாடு பல மணி நேரம் இருளில் மூழ்கியுள்ளது

          இது போர்க் காலத்தை நினைவு படுத்தும் முகமாக உள்ளது இலவசமாக மண்ணெண்ணை வழங்கும் திட்டம் மேலும் தொடர வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பாக உள்ளது .

            Posted in உலக செய்திகள்

            லெபனான் கடலுக்குள் இஸ்ரேல் போர்க்கப்பல்

            லெபனான் கடலுக்குள் இஸ்ரேல் போர்க்கப்பல்

            லெபனான் ஆளுகைக்குள் உள்ள கடல் பகுதியில் லெபனானின் எதிரியான இஸ்ரேல் இராணுவத்தின் கடல் படை கப்பல்கள் அத்துமீறி நுழைந்து சென்றுள்ளன

            லெபனானின் கடல் பரப்பிற்குள் அத்து மீறி நுழைந்த இஸ்ரேல் கடல் படையினர் வலிந்து தாக்குதலை தொடுக்கும் போரியல் தந்திரயுத்திக்கு லெபனான் அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

            லெபனானனை தளமாக கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பு இஸ்ரேல் மீது பெரும் நாசகார தாக்குதல்களை மேற்கொள்ள தயராகி வருகின்றனர் என இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாட் பல காலமாக எச்சரிக்கை விடுத்து வருகிறது

            குறித்த போராளிகள் அமைப்பிற்கு ஈரான் பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது


            ஈரானின் பின்புலத்தில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் விரைவில் மாபெரும் அதிர்ச்சிகர தாக்குதல் ஒன்றை இஸ்ரேல் மீது தொடுப்பார்கள் எனவும்

            அது இஸ்ரேல் அரச இராணுவத்திற்கு வரலாற்று நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

            இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முன்பாக முந்தி கொண்டு தாம் தாக்குதலை நடத்திவிட இஸ்ரேலிய இராணுவத்தினர் தொடர் வலிந்து தாக்குதல்களை தரை வான் வழியாக லெபனானின் எல்லையோரங்களில் நடத்திய வண்ணம் உள்ளனர்

            லெபனான் கடலுக்குள் இஸ்ரேல் போர்க்கப்பல்

            ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினரின் ஆயுத கூடங்கள் என பல தாக்க பட்டதும் ,ஹிஸ்புல்லாவின் போராளிகள் தளபதிகள் சிரியாவில் இருந்து தரைவழியாக தமது அணிகளுடன் பயணித்து கொண்டிருந்த பொழுது உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது

            ஆனாலும் இஸ்ரயேலிய படைகளின் கொடிய வான் தாக்குதல்களில் இருந்து சிலர் தப்பித்தனர்


            இஸ்ரேலியர்கள் வலிந்து தாக்கிட ஆழம் பார்க்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளதை மேற்படி கடல் நுழைவு எடுத்து காட்டுகிறது

            பலஸ்தீனத்தில் காமாஸ் போராளிகள் நடத்திய ஆயிரத்துக்கு மேற்பட்ட ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலிய அரச இயந்திரம் முற்றாக சீர்குலைந்த நிலையில் காணப்பட்டது ,

            அவர்கள் ஏவிய ரொக்கட்டுக்களை சுட்டு வீழ்த்த முடியாது திணறின ஒரே தடவையில் பல நூறு ரொக்கட்டுக்களை போராளி குழு ஏவியதால் தானியங்கி முறையில் செயல் படும் ஏவுகணை செலுத்திகள் இயங்க முடியாது திணறின

            அவற்றினால் எதிரிகளின் தாக்குதலை தடுக்க முடியவில்லை, இதனால் இஸ்ரேலிய இராணுவ மையங்கள் முதல் பல பலத்த சேதத்திற்கு உள்ளாகின

            அவ்வாறான அதிர்ச்சி வைத்தியத்தை போல ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பும் விரைவில் இஸ்ரேலிய அரச பயங்கரவாத அரசுக்கும் அதன் படைகளுக்கும் வழங்கும் என எதிர் அடித்து கூறலாம் .

            – வன்னி மைந்தன் –

              Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

              ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

              ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

              ஈரான் நாட்டை சேர்ந்த பதினாறு பேருக்கு எதிராக அமெரிக்கா அரசினால் தடைகள் விதிக்க பட்டுள்ளது


              இவர்கள் ஈரானை விட்டு வேறு நாடுகள் எங்கும் செல்லா முடியா வண்ணம் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

              ஈரானுக்கு விதிக்க பட்ட புதிய தடைகளில் ஈரான் நாட்டு புரட்சிகர படைப் பிரிவை சேர்ந்த முக்கிய தளபதிகளும் அடக்கம் பெறுகின்றனர்

              கிரேக்க பகுதியில் வைத்து இரண்டு அமெரிக்கா எண்ணெய் கடத்தல் கப்பல்களை ஈரான் கடலோர காவல் படையினர் சிறை பிடித்து சென்று இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா அரசினால் இந்த பயண தடை விதிக்க பட்டுள்ளது

              அமெரிக்கா அரசினால் பிரகடன படுத்த பட்டு அறிவிக்க பட்டவர்கள் தீவிரவாதாத்துக்கு பண பரிவர்தனம் செய்து வருகின்றனர் எனவும் இந்த பணப்

              பரிமாற்றம் Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia and the UAE குறித்த நாடுகளில் மேற்கொள்ள பட்டு வருவதாகவும் அமெரிக்கா சுட்டி காட்டியுள்ளது

              அப்படி என்றால் அமெரிக்காவினால் மேலும் பலர் இந்த நாடுகளில் குறி வைக்க பட்டுள்ளனர் என்பதும் அவர்களுக்கும் விரைவில் இவ்விதமான அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கலாம்

              ஈரானுக்கு அமெரிக்கா விதித்த இந்த புதிய தடைகள் ஈரான் நாட்டை பாதிக்குமா என்பதே சந்தேகம் ஆனாலும் விதித்துள்ளது

              ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு


              பொருளாதார தடைகளை விதித்து ஈரானிய நாட்டினை அடி பணிய வைக்கும் முயற்சியில் அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈடுபட்டு வருகிறது ஆனால் அதில் அவர்கள் தோல்வியை தழுவியுள்ளன

              பல தொடர் தடைகள் விதிக்க படுகின்ற பொழுதும் ஈரானோ அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை, மாறாக தனது பொருளாதாரத்தை அசுர வேகத்தில் மேம்படுத்திய வண்ணம் தனது அபிவிருத்தி மற்றும் செல்வ சேர்ப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது

              தனது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்ப ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளது ,தற்போது அணுகுண்டு தயாரிக்கும் அணுஉலை சோதனையும் முக்கிய கட்டத்தை அண்மித்துள்ளது

              இவ்வாறான நெருக்கடிகளை தகர்த்து பயணிக்கும் ஈரானுக்கு புதிய தடைகள் ஈரானை பதற வைக்குமா நிலை குலைய வைக்குமா என்பதே சந்தேகமே ..!

              • வன்னி மைந்தன் –
                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி

                பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி

                பிரிட்டன் ஆளும் போரிஸ் ஜோன்சன் மீது பாராளுமன்றில் நம்பிக்கையில்லா, வாக்கெடுப்பு நடத்த பட்டது

                அதில் அவர் தோற்கடிக்க பட்டு ஆட்சி அதிகாரம் கலைக்க படும் என ஏதிர் பார்க்க பட்டது ஆனால் அவர் மேலதிக வாக்குகளை பெற்று தனது அதிகாரத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்

                பிரிட்டனில் ஏற்பட்டுள்ள எரிவாயு மற்றும் எரி பொருள்,மின்சார விலைகளினால் மக்கள் பெரிதும் சொல்லென்ன துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,

                இதனால் ஆளும் கன்சவர்டி கட்சி தோற்கடிக்க பட்டு தொழில் கட்சி அரியணை ஏறிட துடிக்கிறது

                அதற்கு அமைவாக கொண்டுவரப்பட்ட இந்த வாக்கெடுப்பில் பிரிட்டன் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தப்பித்து கொண்டார்

                மக்களின் செல்வாக்கு பெற்ற ஒருவராக விளங்கி வருகின்ற பொழுது மக்கள் தோளில்

                அதிக சுமைகள் ஏற்படுத்த பட்டதினால் இலங்கையை போன்று இவரது ஆட்சி பீடத்தை இழந்து வீடு செல்லும் நிலைக்கு தள்ள பட்டுள்ளார்

                பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட வாக்கெடுப்பில் 211க்கு 148.என்கின்ற

                விகிதத்தில் தோற்கடிக்க பட்டு அபாரா பலத்தை நிரூபித்து தனி காட்டு ராசாவாக ஆளும் இங்கிலாந்து ஆட்சியாளர் திகழ்ந்து வருகிறார்

                பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி

                அரசியல் சித்து விளையாட்டில் கொடி கட்டி பறக்கும் இங்கிலாந்து ஆள்பவர் அவரது ஆயூள் காலம் முடியும் வரை அவரை யராலும் வீழ்த்திவிட முடியாது என்ற வரலாறு மீளவும் நிரூபித்து வீர நடை போடுகின்றார்

                சர்ச்சைகளில் சிக்கினாலும் அதனை கடந்து தனது அரசியல் பயணத்தில் சளைக்காது பயணிக்கிறார் நம்ம தனி காட்டு சிங்கம்

                ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் பிரிந்து செல்ல காரணமாக விளங்கிய இவரது

                அரசியல் சாணக்கியமும் அபார துணிச்சலும் பிரித்தானியாவில் அசைக்க முடியாத வீரம் மிக்க அரசியல் சக்தியாக இவர் விளங்கி வருகிறார்

                அரசியல் போர் முனையாகவும் தந்திர விளையாட்டின் சதுரங்க நாயகனாகவும் வெடி குண்டாய் உலாவும் இவர் அறிவின் துடிப்பின் சிகரம் எவரும் அருகில் நெருங்க முடியாது என்பது விதியாக உள்ளது போலும்

                – வன்னி மைந்தன்

                  Posted in உலக செய்திகள்

                  புயலில் சிக்கி பிரான்சில் 14 பேர் காயம்

                  புயலில் சிக்கி பிரான்சில் 14 பேர் காயம்

                  பிரான்சில் இடம் பெற்று வரும் புயல் மழை காரணமாக அந்த புயலில் சிக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ளார் மேலும் பதின் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்

                  பிரான்ஸை புரட்டி போட்ட இந்த புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி பல வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன


                  இந்த புயலின் அகோரத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் அவசர அம்புலன்ஸ் சேவை பிரிவின் ஊடாக மீட்க பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்

                  கால நிலை தொடர்பான முன் எச்சரிக்கை விடுக்க பட்டிருந்த பொழுதும் மக்கள்,
                  இந்த புயல்மழையில் சிக்கி பலியாகியும் படுகாயமடைந்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                  பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன வீதிகள் மற்றும் வீடுகளில் மரங்கள் என்பன முறிந்து வீழ்ந்துள்ளன சில பகுதிகளில் மின்சாரம் தடை பட்டுள்ளது

                  புயல் மழையில் சிக்கி ஆண்டு தோறும் நாடளாவிய ரீதியில் பல ஆயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர்

                  கால நிலை பருவ மற்றம் காரணமாக இந்த கோடை காலத்தில் மழை பொழியும் நிலை ஏற்பட்டுள்ளது காலம் தப்பி பொழியும் மழையும் அதனால் ஏற்படும் இயறக்கை அனர்த்தங்கள் பூமியில் மனிதனால் மேற்கொள்ள படும்

                  இயற்கைக்கு எதிரான நடவடிக்கையின் வெளிப்பாடு அவனுக்கே பூமியால் திருப்பி வழங்க படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்

                  புயலில் சிக்கி பிரான்சில் 14 பேர் காயம்

                  மரங்களை அழித்து வீடுகளை கட்டி வசிக்கும் மனிதன் நாளை சுவாசிக்க காற்றும் இன்றி அவதி படும் நிலை தோற்றம் பெறும் எனவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

                  நாளாந்தம் பணியில் ஈடுபடும் மக்கள் வானிலை அறிக்கையை நாள் தோறும் பார்த்திட மறுப்பதன் எதிரொலியே இந்த உயிரிழைப்பு ஏற்பட காணமாக அமைவாதன கருத்துக்கள் முன் வைக்க படுகின்றன

                  புயலில் சிக்கி மரணமாகியும் காயமடைந்தவர்களு பிரான்ஸ் அதிபர் கவலையையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்

                  தனது மக்கள் சிறு பாதிப்புக்கு உள்ளானாலும் வருத்தம் தெரிவிக்கும் அதிபர்கள் ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் காண முடிகிறது

                  இலங்கையில் இவ்வாறா உள்ளது ..?

                  • வன்னி மைந்தன் –
                    Posted in உலக செய்திகள்

                    ரசியா இராணுவ அதிகாரி படுகொலை

                    ரசியா இராணுவ அதிகாரி படுகொலை

                    ரசியா நட்டு இராணுவத்தினர் உக்கிரேன் மீது பெரும் போர் ஒன்றை தொடுத்து வருகின்றனர்


                    இவர்களின் இந்த இராணுவ நகர்விற்கு தலைமை வகித்து வந்த முக்கிய மேயர் ஜெனரல் தரத்தை
                    சேர்ந்த Russian Major General Roman Kutuzov iதளபதி Popasna பகுதியில் மேற்கொள்ள பட்ட உக்கிரேனின் தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளார்

                    இவருடன் மிக பெரும் மூன்றாவது முக்கிய இராணுவ அதிகாரிகள் உக்கிரேன் இராணுவத்தால் படு கொலை செய்ய பட்டுள்ளனர்

                    ரசியா இராணுவத்தின் மிக முக்கிய தாக்குதல் மூளையாக செயல் பட்டு வந்த Russian Major General Roman Kutuzov படுகொலை ரசியா இராணுவத்தில் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

                    எனினும் இதற்கு பதிலடியாக ரசியா இராணுவத்தினர் உக்கிர தாக்குதல்களை உக்கிரேன் மீது மேற்கொள்ள கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                    பரம எதிரியாக விளங்கும் உக்கிரேன் தனது முதல் நிலை எதிரிகளிடம் இருந்து ஏவுகணைகளை பெற்று தாக்குதல் நடத்தி வருகிறது

                    ரசியாவை வீழ்த்தும் நோக்குடன் ரசியா எதிரிகளான அமெரிக்கா பிரிட்டன் தொடராக ஏவுகணைகளை வழங்கிய வண்ணம் உள்ளன

                    பல் குழல் ஏவுகனை செலுத்திகள் முன்னேறி வரும் ரசியா இராணுவத்தினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது

                    ரசியா இராணுவ அதிகாரி படுகொலை

                    உலகில் முதல் வல்லரசாக விளங்கிய சோவியத் ரசியா உக்கிரேனில் இடம்பெற்று வரும் இந்த நூறு நாள் போரில் , ரசியாவின் ஆயுத பாலத்தின் மீதும் அந்த நாட்டு இராணுவத்தின் பலத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது

                    ராசியா அதிபருக்கு மிக நெருக்கமான நம்பிக்கை தரும் ஒருவராக விளங்கி வந்த Russian Major General Roman Kutuzov மரணம்
                    ரசியா ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                    உக்கிரேன் நாட்டின் இராணுவ தலைமையகம் ரசியா நாட்டின் இராணுவ தளபதியின் மரணத்தை உறுதி செய்துள்ளதுடன் அவர் இறந்து கிடக்கு காட்சிகளையும் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தி வருகிறது

                    அமெரிக்கா உளவுத்துறையினர் வழங்கிய துல்லியமான உளவு தகவலின் அடிப்படையில் ரசியாவின் முக்கிய தாக்குதல் மூளையாக செயல் பட்டு வரும் இவ்வாறான இராணுவ உயர் அதிகாரிகள் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்

                    ரசியாவின் இராணுவ நகர்வுகள் அவர்களின் முக்கிய ஆயுத தளபாட நகர்வுகளை செய்மதி ஊடாக கண்காணிக்கும் அமெரிக்க்கா இராணுவம் உக்கிரேன் இராணுவத்தினருக்கு வழங்கியா பின்னர் இராணுவம் இந்த தேடி அழிக்கும் தாக்குதலில் நடத்தியுள்ளது

                    பிரிட்டன் அமெரிக்கா வழங்கிய குறும் தூர ஏவுகணை செலுத்திகள் ஊடான இந்த தாக்குதல்கள் ரசியாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது ,அப்படி என்றால் ரசியா

                    இராணுவம் முக்கிய தாக்குதல் நிலைகளுக்குள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவை உள்ளடக்குமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது

                    அதற்கான வலிந்து தாக்குதல்களை தீவிரமாக பிரிட்டன் அமெரிக்கா திட்டம் போட்டு நகர்த்தி செல்கின்றன

                    இவ்வகையான தாக்குதல் போர் மூன்றாம் உலக போர்

                    ஒன்றை நேரடியாக விரைந்து உருவாக்கும் சாத்தியங்களை அதிகரித்து செல்வதாக எதிர் பார்க்க படுகிறது

                    • வன்னி மைந்தன் –
                      Posted in உலக செய்திகள்

                      உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்

                      உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்

                      உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி அந்த மண்ணை ஆக்கிரமித்து வருகிறது

                      ரசியாவின் இந்த நில ஆக்கிரமிப்பிற்கு கு எதிராக அமெரிக்கா பிரிட்டன் நேட்டோ உள்ளிட்ட நேச நாடுகள் கடும் அதி திருப்தியை வெளியிட்ட வண்ணம் உள்ளன

                      உக்கிரேன் எதிரி ரசியா படைகள், அந்த மண்ணில் துடைத்தழிக்க பட்டு ,ரசியா இராணுவத்தின் பலம் சிதைக்க பட்டு வருவதாக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட உளவுத்துறைகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன

                      உக்கிரேனில் வைத்தே ரசியாவுக்கு சமாதி கட்ட வேண்டும் என அமெரிக்கா நேச நாடுகள் கங்கணம் கட்டி தொடராக புதிய ஆயுதங்களை வழங்கிய வண்ணம் உள்ளது ,

                      அத்துடன் நிற்காது செய்மதி வெளியான தமது உளவு தகவல்களையும் உக்கிரேன் இராணுவத்தினருக்கு வழங்கிய வண்ணம் உள்ளன

                      தொகுதி தொகுதியாக பல மில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கிய வண்ணம் உள்ளன ,அமெரிக்கா,பிரிட்டன் முதுகில் ஏறி நின்றவறே உக்கிரேன் இராணுவத்தினர் எதிரியாக விளங்கும் ரசியா படைகளுக்கு எதிராக போர் புரிந்த வண்ணம் உள்ளனர்

                      கருங்கடல் பகுதியில் இருந்து உக்கிரேன் தலை நகர் மற்றும் அதனை அண்மித்த ரயில்வே நிலையங்கள் மீது எல்லாம் எதிரி படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன

                      உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்

                      இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் முகமாவே பிரிட்டன் பல் குழல் ரொக்கட் செலுத்திகளை உக்கிரேனுக்கு வழங்கியுள்ளது

                      உக்கிரேனுக்கு எவர் எல்லாம் ஆயுதம் வழங்கு கிறார்களோ அவர்கள் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரசியா ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் மிரட்டல் விடுத்துள்ளார் ,ஆனால் அதனை மேற்குலக நாடுகள் புரிந்து கொள்வதாக இல்லை

                      ரசியா உங்கள் எதிரி மட்டும் அல்ல எங்கள் எதிரி கூட என்றே அமெரிக்கா,பிரிட்டன் நேச நாடுகள் கூறி வருகின்றன

                      உக்கிரேன் ரசியாவிடம் முற்றாக வீழ்ச்சியுற்றால் அதுவே ஐரோப்பாவுக்கு பெரும் ஆபத்தாக மாறிவிடும் என்பதால் பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வேக வேகமாக நவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றது

                      இவர்களின் இந்த நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ளாமலா ரசியா இருக்கும் ..?
                      எதிர் வரும் நாட்கள் உக்கிரேன் களம் என்றும் இல்லாதவாறு குண்டுகளினால் அதிர போகிறது ,பல்லாயிரம் மக்கள் பலியாக போகின்றனர்

                      பிரிட்டன் அமெரிக்கா ஆயுதங்கள் ரசியா மேற்கொள்ள போகும் புதிய ஆயுத பாவனை முன்னால் தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

                      • வன்னி மைந்தன் –
                        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                        வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

                        வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

                        வடகொரியா நாடானது தற்போது குறும் தூர ஏவுகணை ஒன்றை சோதனை புரிந்துள்ளது


                        தென் கொரியா கடல் பகுதியில் ,தென்கொரியா இராணுவம் மற்றும் அமெரிக்கா படைகள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது

                        தென் கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,குறித்த ஏவுகணைகள் நான்கு நிலைகளில் இருந்து வட கொரியா ஏவி சோதனை புரிந்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது

                        வட கொரியா ஏவிய இந்த குறும் தூர ஏவுகணையின் வீச்சு எல்லை 110 முதல் 670 கிலோ மீட்டர் ஆகும் என தென்கொரியா தெரிவித்துள்ளது


                        எனினும் வடகொரியா இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக எதனையும் அறிவிக்கவில்லை

                        வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வந்த பொழுதும் ரொக்கட் கிங் அடங்குவதாக தெரியவில்லை

                        அவர் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என கூறிய படி ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்திய வண்ணம் உள்ளார் ,

                        தமது நாட்டை எதிரி இராணுவத்திடம் இருந்து பாதுகாத்து கொள்ள, வேண்டுமெனின் எமக்கு இது போன்ற ஏவுகணை சோதனைகள் அவசியம் என வடகொரியா இராணுவம் அடித்து கூறுகிறது

                        வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

                        உலக நட்டு தலைவர்களதும் ,உலக சண்டியர்களின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி வருகிறார் ரொக்கட் கிங்

                        மத்திய கிழக்கு நாடுகள் மீது பயங்கரவாதம் என்ற போர்வையில் அமெரிக்கா போரை நடத்தி தோற்று போயுள்ளது ,தற்போது தென் ஆசியா மீது தனது பார்வையை திருப்பியுள்ளது ,

                        வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் தற்போது அதிவேகமாக தமது ஆயுத உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன ,இது அமெரிக்கா வல்லாதிக்க சக்திகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

                        வட கொரியா தொடராக நடத்தும் இவ்விதமான ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை மேலும் பீதியடைய வைத்துள்ளது .

                        • வன்னி மைந்தன் –
                          Posted in உலக செய்திகள்

                          தேவாலயம் மீது தாக்குதல் -50 பேர் பலி

                          தேவாலயம் மீது தாக்குதல் -50 பேர் பலி

                          கடந்த தினம் நையீரியா St Francis Catholic Church தேவாலயம் மீது மர்ம ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி ஐம்பதுஅப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்

                          குறித்த நாளன்று வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த கிறிஸ்தவ மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இந்த அப்பவி மக்கள் படு கொலை செய்ய பட்டுள்ளனர்

                          ஆயுத தாரிகள் நடத்திய கண்மூடித் தனமான தாக்குதலில் இதுவரை,அங்கிருந்து வரும் தகவலின் அடைப் படையில் ஐம்பது பேர் பலியாகியும் மேலும் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                          உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என நம்ப படுகிறது , எனினும் இந்த தாக்குதல் சேத விபாரங்கள் முழுமையாக வெளியாகவில்லை

                          தாக்குதல் நடந்துள்ளது எனவும் ஐம்பது அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளது
                          ,நையீரியாவில் இது போன்ற தாக்குதல்கள் மற்றும் கடத்தல்கள் என்பன அதிகரிக்க பட்டுள்ளன

                          அமைதி வழியில் தமது தேவனை வழிபட சென்ற மக்கள் மீது தீவிரவாதிகள் இந்த திடீர் தாக்குதலை நடாத்தி நட்டு மக்களை அச்சுறுத்தியுள்ளனர் ,

                          பொக்கோ கராம் என்ற அமைப்பினர் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி மாணவிகள் ,மற்றும் மக்களை கடத்தி சென்றனர் ,அது தவிர கிராமங்களுக்குள் புகுந்து அந்த கிராம

                          மக்களையும் கொன்று குவித்ததுடன் அவர்கள் வீடுகளையும் எரித்து விட்டு தப்பி ஓடினர்

                          தேவாலயம் மீது தாக்குதல் -50 பேர் பலி

                          நாள் தோறும் நையீரியாவில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது ,
                          தாக்குதல் நடத்த பட்ட ஆலய பகுதி எங்கும் நையீரியா அரச இராணுவம் குவிக்க பட்டு எதிரிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது .

                          தேவாலயத்தில் நடத்த பட்ட இந்த தாக்குதலுக்கு வெளிநாடுகள் ,மற்றும் மத ஒருமைப் பாட்டு சம்மேளனங்கள் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளன

                          நையீரியாவில் தொடரும் இவ்விதமான வன்முறை தாக்குதல்கள் உடன் தடுத்து நிறுத்த பட வேண்டும் ,அது தவறின் இது போன்று மேலும் பல்லாயிரம் மக்கள் பலியாகும் பேரவலம் இடம்பெறும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

                          நையீரியாவில் பாய்ந்தோடும் இரத்த ஆறு என்று தடுக்க படும் ,அங்கு அமைதியான சூழல் என்று எப்போது உருவாகும் என்பதே உலக சமுதாயத்தின் கேள்வியாக உள்ளது

                          ஆளும் ஆட்சியாளர்கள் சம்பந்த பட்டவர்களுடன் பேசி புரையோடி போயுள்ள பிரச்சனைக்கு தீர்வு கண்டு ,ஒன்றித்த தேசமாக வாழும் நிலை என்று ஏற்படுகிறதோ அன்றே இந்த துப்பாக்கி குண்டு சத்தங்கள் ஓய்ந்து சமாதானம் நிலவும் என்பது உலகில் நடந்த போர்கள் வரலாறாக கற்பித்துள்ளன .

                          • வன்னி மைந்தன் –
                            Posted in உலக செய்திகள்

                            உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

                            உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

                            உக்கிரேன் நாட்டின் மீது ரசியா நூற்றி இரண்டாவது நாளாக இராணுவ நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் உள்ளது

                            கடந்த தினம் உக்கிரேன் தலை நகர் கீவ் நகர் மீது முதன் முதலாக ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது


                            இந்த ஏவுகணைகள் யாவும் மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுத கிடங்கு ஒன்றை இலக்கு வைத்து நடத்த பட்டுள்ளது

                            கார் திருத்தும் இடம் என தெரிவித்து அங்கு வைத்து சேதமாக்க பட்ட டாங்கிகள் திருத்த

                            பட்டு வந்துள்ளது, அவ்விதமான ஆயுத கிடங்கு மீதே ரசியா இராணுவம் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன

                            இவ்வாறு ரசியா இராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றை தமது வான் காப்பு

                            படைகள் வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது

                            கருங்கடல் பகுதியில் ஐந்து ரசியா போர்க் கப்பல்கள் திடீரென குவிக்க பட்டுள்ளது என நாம் தெரிவித்தோம் அல்லவா


                            இந்த கப்பல்கள் திடீர் குவிப்பின் பின்னால் ரசியா பெரும் தாக்குதலுக்கு தயராகும் என தெரிவித்தோம் அல்லவா தற்போது அவை இடம் பெற்றுள்ளது

                            கோடை காலம் முடிவதற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் என ரசியா தெரிவித்ததன் நோக்கம் இது தான் போலும்

                            மேற்குலக நாடுகள் தொடராக ஆயுதங்களை வழங்கி வருகின்றன ,அவர்களின் ஆயுத தொகுதிகள் யாவும் உக்கிரேனில் வைத்து அழிக்க படும் என ரசியா தெரிவித்துள்ளது

                            மேலும் மேற்குலக நாடுகள் வலிந்து போருக்கு தம்மை இழுத்து வருகிறது எனவும் அது அவர்களுக்கு சிறந்தது அல்ல எனவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளது

                            உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

                            எதிரிகள் தம்மை வம்புக்குக்கு இழுத்தால் எதிரி கோட்டைகள் தகரும் என ரசியா காட்டமாக தெரிவித்துள்ளது

                            எதிரி நாடான உக்கிரேன் தலை நகர் தற்போது ரசியாவின் நேரடி தாக்குதல் எல்லைக்குள் உள்ளாக்க பட்டுள்ளது ,வரும் நாட்களில் அகோர தாக்குதல்

                            உக்கிரேன் தலை நகர் கீவ் மீது மேற்கொள்ள பட போகிறது என்பதற்கு இந்த திடீர் ஏவுகணை நேரடி தாக்குதல்கள் கட்டியம் இடுகின்றன

                            அப்படி என்றால் உக்கிரேன் முழுவதுமாக உக்கிர தாக்குதலை ரசியா இராணுவம் நடத்த போகிறது ,இங்கு இதுவரை பாவிக்க படாத ,புதிய வகை ஆயுதங்களை ரசியா

                            பாவனைக்கு உட்படுத்த பட போகிறது, அப்படி என்றால் பெரும் பேரழிவை உக்கிரேன் சந்திக்க போகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது.

                            • வன்னி மைந்தன் –
                              Posted in உலக செய்திகள்

                              மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி

                              மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி

                              நேற்று இரவு அமெரிக்கா Philadelphia பகுதியில் கூடியிருந்த மக்களுக்குள் புகுந்த மர்ம ஆயுததாரி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தாள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

                              இந்த துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ இடத்தில பதினொரு பேர் பிழையாகினர் ,மேலும் இருபத்தி எட்டு பேர் படுகாயமடைந்தனர்

                              காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள்
                              தெரிவித்துள்ளன

                              நிறைந்திருந்த மக்கள் கூட்டத்திற்குள் திடிரென துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டது ,இதனை அடுத்து மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்

                              சினிமா காட்சி போல சொற்ப நேரத்திற்குள் நடந்து முடிந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,

                              இறந்த நிலையிலும் மேலும் பலர் கதறலுடன் காயத்துடன் துடித்த வண்ணம் இருந்தனர்
                              என நேரில் கண்ட சாட்சிகள் கண்ணீர் மல்க கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்

                              அமெரிக்காவில் தொடராக இடம் பெற்று வரும் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சமப்வத்தில் சிக்கி பல நூர் மக்கள் பலியாகியுள்ளனர்

                              மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி

                              அதிகரித்து செல்லும் இந்த முறைகேடான துப்பாக்கி பாவனையை அடுத்து மக்கள் துப்பாக்கிகள் பயன் படுத்த தடை என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது

                              எதிரிகள் போல வேடமிட்டு நுழைந்து அப்பாவி மக்களை கொன்று குவித்து அதில் மகிழ்ச்சி காணும் மனோ நிலையில் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்

                              தொடர்ந்து இடம் பெறும் இந்த சூட்டு சம்பவங்களின் பின்னால் மிக பெரும் அரசியல்வாதிகள் உள்ளதாக சந்தேகம் வலுப் பெற்றுள்ளது

                              டிரம்ப் ஆட்சியை விட்டு அகன்றதன் பின்னர் இவ்வாறான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகிறது

                              எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் அரியணை ஏறிட காத்திருக்கும் டிரம்ப் இவ்வாறான சம்பவங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துவார் என எதிர் பார்க்க படுகிறது

                              மக்களை கொன்று தாம் அரசியலுக்கு வந்து கொள்ளையடித்தால் போதுமென்று சில அரசியல்வாதிகள் உலாவத்தான் செய்கின்றனர்

                              அரசியலில் இதெல்லாம் சகயமப்பா ..!

                                Posted in உலக செய்திகள்

                                டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் கொலை

                                டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் படுகொலை

                                உக்கிரேன் மீது பாரிய இராணுவ படையெடுப்பை மேற்கொண்டு வரும் எதிரி படைகள் மீது உக்கிரேன் அரச இராணுவம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியால மேற்கொண்ட தாக்குதல்களில் மட்டும்

                                ஐந்து டாங்கிகள் 13 armoured combat vehicles, 8 UAVs, and 23 pieces of automotive equipment

                                மற்றும் எரிபொருள் பவுசர்கள் இவற்றுடன் 100 ரசியா இராணுவத்தினரும் படு கொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது

                                நூற்றி ஒரு நாட்களை கடந்து பயணிக்கும் இந்த கொடிய போரில் தாம் வெற்றியை தம தாக்கி வருவதாக உக்கிரேன் அரச இராணுவத்தினர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்

                                முன்னேறி வரும் ரசியா டாங்கிகள் பலமாக அழிக்க பட்டு வருகிறது ,அந்த போர் ஆயுத

                                வண்டிகளில் பயணிக்கும் இளம் வயதுடைய ரசியா எதிரி படைகளும் பலியாகி சிதறி கிடக்கும் காட்சிகள் வெளியிட பட்டு வருகின்றன

                                துருக்கிய இராணுவத்தின் உளவு விமானங்களின் துல்லியமான களமுனை காட்சிகள் ஊடாகவே உக்கிரேனிய அரச இராணுவத்தினர் ரசியா டாங்கிகள் மற்றும் அதன் இராணுவம் மீது துல்லியமான தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளன

                                உக்கிரேன் போர்க் களத்தில் ரசியா எதிரி படைகள் பலமான இழப்புக்களை சந்திக்க துருக்கிய தயாரிப்பான ஆள் இல்லாத உளவு விமானங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது

                                டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் படுகொலை

                                இதனால் என்னவோ உக்கிரேனுக்கு குறித்த உளவு விமானங்களை வழங்க வேண்டாம் என துருக்கியை ரசியா அரசு வேண்டி நின்றது

                                இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசியா டாங்கிகளை தாம் அழித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு புள்ளி விபாரங்களுடன் அதன் வகைகளை குறிப்பிட்டுள்ளது

                                இந்த டாங்கிகள் யாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மூலம் அழிக்க பட்டுள்ளமையும் ,அதன் திறம்பட்ட தாக்கும் திறன் இந்த படைக்கல இழப்பின் ஊடாக உலகத்திற்கு காண்பிக்க பட்டுள்ளது

                                உக்கிரேன் கள முனையில் ரசியாவின் டாங்கி படையின் முன்நகர்வு அளப்பரிய ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

                                • வன்னி மைந்தன் –
                                  Posted in உலக செய்திகள்

                                  ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்

                                  ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்

                                  உக்கிரேன் கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வான் வழி தாக்குதல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த எதிரி விமனங்கள் நான்கை தமது வான் எதிர்ப்பு படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் அரச இராணுவம் அறிவித்துள்ளது

                                  இந்த எதிரி விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தி கொண்டிருந்த பொழுது ,தமது ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளது

                                  உக்கிரேன் மீது எதிரி படைகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் ,இந்த தாக்குதல்களில் எதிரிகளின் போர் விமானங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது

                                  இவர்களின் துல்லியமான தாக்குதல் ஊடாகவே உக்கிரேன் அரச இராணுவத்தினருக்கு ரசியா போர் விமானங்களால் பாரிய சேதங்களை ஏற்படுத்த பட்டு வருகிறது

                                  இதுவரை முப்பத்தி ஓராயிரத்து ஐநூறு ரசியா எதிரிகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

                                  நூறு நாட்களை கடந்து தொடரும் போரில் இரு தரப்புக்கும் பலத்த ஆளணி மற்றும் ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ளது

                                  மேலும் இரு நாடுகளின் பொருளா தாரத்திலும் பலத்த அடி வீழ்ந்துள்ளது ,ஆனால் அதனை கருத்தில் கொள்ளாது போரில் மட்டும் நாட்டம் காட்டிய வண்ணம் போரை நடத்திய வண்ணம் உள்ளனர்

                                  ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்

                                  இந்த கொடிய போரினை தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற் கொள்ள பட்டு வருகிறது பொழுதும் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் தொடர் ஆயுத உதவிகளுடன் உக்கிரேன் பெரும் எதிர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

                                  உக்கிரேனில் எதிரியாக விளங்கும் ரசியா இராணுவம் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே போரை தீவிரமாக நடத்திய வண்ணம் உள்ளன

                                  அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகள் மூலம் ரசியா விமானம் சுட்டு வீழ்த்த படுதல் தொடர்நது வருகிறது ,இது எதிரி இராணுவத்தினருக்கு பெரும் படைக்கல இழப்பை ஏற்படுத்தியுள்ளது

                                  இது மேற்குலக வல்லரசுகளின் பழி வாங்கும் தாக்குதல் என உளவுத்துறை ஊடகங்கள் சாடி வருகிறது ,

                                  அமெரிக்கா அதன் நேச நாடுகளின் முதுகில் ஏறி இருந்து சவாரி செய்யும் உக்கிரேன் இந்த போரில் தோல்வியை தழுவும் என்பதே நமது அவதானிப்பாக உள்ளது

                                  எதிர் வரும் நாட்களில் எதிரி இராணுவம் கெமிக்கல் தாக்குதல்களை நடத்த கூடும் என அச்சம் மேலோங்கி காணப்படுகிறது

                                  • வன்னி மைந்தன் –
                                    Posted in உலக செய்திகள்

                                    தீயில் கருகிய மனித உடல்கள் 16பேர் மரணம் -150 பேர் காயம்

                                    தீயில் கருகிய மனித உடல்கள் 16பேர் மரணம் -150 பேர் காயம்

                                    பங்களாதேஸ் Sitakunda, துறைமுக பகுதியில் இடம் பெற்ற தீயில் கருகி 16 பேர் மரணித்துள்ளனர்
                                    மேலும் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                                    கொண்டனர் தரித்து வைக்க படும் துறைமுக பகுதியில் பணியாற்றி கொண்டிருந்த பணியாளர்களே இந்த தீ விபத்தில் சிக்கி பாதிக்க பட்டுள்ளனர்

                                    இங்கு பற்றிய தீயானது இரு கிலோ மீட்டர் அப்பாலும் வானில் புகைமண்டலங்களாக காணப்பட்டதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன

                                    இந்த தீயில் சிக்கிய மனிதர்கள் பலர் மூச்சு திணறலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் ,

                                    இங்கு இடம் பெற்ற தீ விபத்தில் சிக்கியவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

                                    இந்த தீ விபத்துக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,ஆளும் அதிபர் இந்த தீ விபத்து தொடர்பில் உடன் விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படி வேண்டுதல் விடுத்துள்ளார்

                                    பங்களாதேஷில் இவ்விதமான தீ பற்றல் சம்பவங்கள் அதிகரித்த வண்னம் உள்ளது

                                    தீயில் கருகிய மனித உடல்கள் 16பேர் மரணம் -150 பேர் காயம்

                                    ,புடவை தொழில் சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் அங்கு பணியாற்றிய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தீயில் கருகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                                    இந்த தீ விபத்து திட்டமிடப்பட்ட ஒன்றா அல்லது விபத்தா என்பது தொடர்பில் சில நாட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்க படுகிறது

                                    தீயில் கருகிய மனித உடல்களின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் ஆளும் ஆட்சியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை இந்த தீ சம்பவம் ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

                                    முறையான நிர்வாகத்தின் கீழ் பேணப்படாத நிலையில் இந்த தீ விபத்துக்கள் அதிகரித்து செல்வதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .

                                    கடந்த சில ஆட்சியாளர்களுக்கு எதிராக இராணுவம் இரகசிய சதி முயற்சியில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்ப்பதற்கு இவ்விதமான நாசகார செயல்களில் ஈடுபட்டு வந்தமை பின் நாட்களில் கண்டு பிடிக்க பட்டு அவை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை இங்கே கவனிக்க தக்கது .

                                    • வன்னி மைந்தன் –
                                      Posted in உலக செய்திகள்

                                      ரசியா ஆயுத வண்டிகள் சிதறல் – உக்கிரேன் தாக்குதல்

                                      ரசியா ஆயுத வண்டிகள் சிதறல் – உக்கிரேன் தாக்குதல்

                                      ரசியாவின் ஆயுத வண்டி தொடரணியை இலக்கு வைத்து உக்கிரேனே அரச இராணுவத்தினர் நடத்திய துல்லியமான ஏவுகணை தாக்குதலில் ,அந்த ஆயுத தொடரணி முற்றாக அழிக்க பட்டுள்ளது .

                                      அந்த ஆயுத வண்டிகளில் பயணித்த எதிரி படைகளும், படு கொலை செய்ய பட்டுள்ளன ,எதிரிகளின் சடலங்கள் அங்காங்கே சிதறி கிடக்கிறது

                                      அதி நவீன ஆயுத தளபாடங்களுடன் ,பாரிய முன்னகர்வை மேற்கொண்டு வந்த, எதிரி படைகள் மீது ,தாம் வீரமிகு தாக்குதலை நடத்தி ,பாரிய இழப்பினை வழங்கியுள்ளதாக உக்கிரேன் அரச இராணுவம் நெஞ்சை நிமிர்த்தி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது

                                      தொடராக ரசியாவின் ஆயுத வண்டிகளை இலக்கு வைத்து உக்கிரேன் இராணுவம் பாரிய தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

                                      அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக வழங்கி வரும் நாவீன ஆயுதங்களை பயன் படுத்தி நூறாவது நாளில் எதிரிகளை பந்தாடி வருகிறது உக்கிரேன் இராணுவம்

                                      ,எதிரிகள் மீது வீச பட்டு வரும் நவீன ஆயுத தளபாடங்கள் பெரும் இழப்பை எதிரிகளுக்கு ஏற்படுத்திய வண்ணம் உள்ளது என்கிறது உக்கிரேன் .

                                      பிரிட்டன் அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள், மற்றும் தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் என்பன உக்கிரேன் போர்க் களத்தில் துள்ளி விளையாடி வருகின்றன

                                      அமெரிக்கா,பிரிட்டன் என்பன தமது புதியவகை ஆயுதங்களை நேரடியாக தமது பரம எதிரிகள் மீது உக்கிரேன் இராணுவத்தை பயன் படுத்தி சோதனை வெள்ளோட்டம் செய்து வருகிறது

                                      ரசியா ஆயுத வண்டிகள் சிதறல் – உக்கிரேன் தாக்குதல்

                                      உக்கிரேன் இராணுவத்தினருக்கு உதவி என்ற கோதாவில் ,பல பில்லியனுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து கொள்ளை இலாபம் ஈட்டி வருவதுடன் ,தமது ஆயுதங்களையும் எதிரி படைகள் சோதனை செய்கிறது

                                      எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல , இந்த நாடுகளின் திடீர் எதிரி என்ற கூட்டணி தொடர்புகள் ஆண்டுகள் நூறு நிலைக்குமா என்பதே கேள்வியாக உள்ளது

                                      மேற்கு நாடுகளின் ஆயுதங்களுடன் ,எதிரி படைகளை மீள அவர் தம் எல்லைக்கு விரட்டி வரும் உக்கிரேன் இராணுவம் மீது ,ரசியா அதிவேக அதிரடி தாக்குதலை நடத்தலாம் என ஆவலுடன் எதிர் பார்க்க படுகிறது ,

                                      ரசியாவியுன் ஆயுத வண்டிகள் சிதறிய காட்சிகள் வெளியிட்டு மகிழ்வுறும் உக்கிரேன் இராணுவம் பெரும் இழப்பை சந்திக்க கூடும் என்பது, எதிரி நாடான ரசியாவின் இராணுவ பரப்புரையாக உள்ளது

                                      வரும் நாட்களில் உக்கிரேன் போர்க்களம் சற்று அகோரமானதாக மாற்றம் பெறலாம் என்பது நமது கணிப்பாக உள்ளது

                                      • வன்னி மைந்தன் –
                                        Posted in உலக செய்திகள்

                                        மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி

                                        மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி- அடுத்து என்ன

                                        மாலி நாட்டில் இடம்பெற்று வரும் உள் நாட்டு போரில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர்


                                        இவ்வேளை மாலியில் சமாதான பணிகளில் ஈடுபட்டிருந்த, ஐக்கிய நாடுகள் தூதரக பணியாளர்கள்பயணித்த வாகனம் மீது திடீரென இந்த வன்முறை தூண்டும் குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                                        மாலியில் ஐநா பணியாளர்கள் பயணித்த வாகனம் மீது நடத்த பட குண்டு தாக்குதலில்

                                        சிக்கி இருவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்

                                        நாடுகளில் நடை போரின் ,யுத்த வலய பகுதிகளில் சமாதான தூதர்களாக பயணிக்கும்

                                        இவர்கள் ,இரட்டை உளவாளிகளாக செயல் பாட்டு வந்தமை ஈழ தமிழர் போராட்த்தில் அப்பட்டமாக இடம்பெற்றுள்ளது

                                        அவ்விதம் இவர்கள் கறுப்பு கண்ணாடி மாட்டிய உளவாளிகள் என வர்ணித்த , போராளி குழுக்களினால் கொலை செய்ய பட்டுள்ளனர்

                                        எதிரி எமக்கு நண்பன் என கூறும் போராளி குழு ,இவர்களே எமது, பரம எதிரிகள் என கூறி வருகினறனர்


                                        ,புரையோடி போயுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்ல வேண்டிய அரசியல் வாதிகள் ,தமது சட்டை பைகளை நிறைத்த வண்ணம்

                                        உள்ளதை ,ஆசிய நாடுக்ளின் அரசியல் சாபக்கேடுகாட்டி நிற்கிறது

                                        மாலியில் வெடித்து சிதறும் குண்டுகளினால் அப்பாவி மக்களும் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,முடிவில்லா தொடரும் இந்த போருக்கு, ஐக்கிய நாடுகள் சபை எவ்விதம் தீர்வு காணலாம் என்பதே கேள்வியாக உள்ளது

                                        மாலியில் இதற்கு முன்னரும் வெடித்த குண்டு தாக்குதலில் ,ஐநா பணியாளார்கள் இவ்விதம் படுகொலை செய்ய பட்டனர் ,

                                        அதனை தொடர்ந்து , அந்த நாட்டில் இருந்து ஐநா வெளியேற போவதாக அறிவித்த நிலையில் மீளவும் இந்த தாக்குதல்கள்
                                        இடம்பெற்றுள்ளது

                                        ஆளும் மாலிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,தமது நாட்டின் நலன்

                                        சார்ந்து செயல் படும் இந்த பணியாளர்கள் ,சமாதன வேடம் இட்டவாறு வெள்ளை

                                        வண்டிகளில் பயணித்து சொகுசு வாழ்ககை அனுபவித்து வருகினறனர்

                                        மேற்படி குண்டு தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .