நாடெங்கும் இராணுவம் குவிப்பு -பதட்டத்தில் மக்கள்
இலங்கை தழுவிய நிலையில் நாடெங்கும் திடீரென சிங்கள இராணுவத்தினர் குவிக்க பட்டு வருவதால் மக்கள் மத்தியில் பதட்ட நிலை ஏறட்டுள்ளது
ஆயுதம் தங்கிய இராணுவத்தினர் இவ்வாறு குவிக்க படுவது ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் பொருட்கள் நெருக்கடி காரணமாக
மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
இவ்வாறான கால பகுதியில் இந்த இராணுவ குவிப்பு இடம்பெற்று வருவது மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
தொடரும் இந்த பதட்ட நிலைக்கு மத்தியில் மக்களை பாதுகாத்து கொள்வதற்கு தமது படைகள் காவலுக்கு வைக்க பட்டுள்ளனர் என கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்
இலங்கை ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் வாயிலாக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மக்கள் பாதுகாப்புக்கு நிலை நிறுத்த பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இலங்கை தேசத்தில் மீளவும் ஒரு போர் ஆரம்பிக்க பட்டு விட்டதா என்ற சந்தேகத்தை இந்த திடீர் இராணுவ ரோந்துகளும் சோதனைகளும் மக்களுக்கு நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது
நாடெங்கும் இராணுவம் குவிப்பு -பதட்டத்தில் மக்கள்
மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பொருட்களை உரிய முறையில் விநியோகிக்க மறக்கும் அரசு தமது அரசாட்சியை நிலை நிறுத்தி கொள்ள மேற்கொள்ளும் இந்த விடயங்கள் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
எதிர் வரும் சில மாதங்களில் நாடு பெரும் மோசமான நிலைக்கு செல்லும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்து இருந்தார்
அவ்வேளை மக்கள் புரட்சியை அடக்கவும் ஒடுக்கவும் இந்த ஆயுத படைகள் உதவிகள் தேவை படும் என எதிர் பார்க்க படுகிறது
அதற்கு அமைவாக இந்த சிங்கள இராணுவ படை குவிப்பை மேற்கொள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே கட்டளை பிறப்பித்துள்ளதாக நம்ப படுகிறது
பதட்டமாகும் இலங்கையின் பொருளாதர நெருக்கடியும் அதானல் கோபம் கொண்டு பொங்கி வெடிக்கும் மக்களின் நீதியான போராட்டங்கள் முன்பாக
அதிகாரம் தமக்கு உள்ளதாக நினைத்து தம்மை அரியணை ஏற்றிய மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அடக்கி ஒடுக்க முனையு ராஜபக்சே குடும்பம்
இலங்கையில் மீளவும் அதிகாரத்தை நிலை நாட்டை முடிய நிலைக்கு செல்ல கூடும் என்பது தற்போது நிகழும் விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
- வன்னி மைந்தன் –