Posted in உலக செய்திகள்

துருக்கி இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

துருக்கி இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

துருக்கி இராணுவத்தின் அதிமுக்கிய விமான தளம் அடங்கிய இராணுவ முகாமாக விளங்கி வரும் Zelikan இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ரொக்கட் தாக்குதலில் சிக்கி துருக்கிய இராணுவ முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

குறித்த துருக்கி இராணுவம் முகாம் மீது குருதீஸ் போராளிகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.

வடக்கு ஈராக்கில் உள்ள குருதிஸ் பகுதிகள் மீது துருக்கிய இராணுவம் நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிக்கி பல டசின் மக்கள் பலியாகிய நிலையில் இந்த பதிலடி தாக்குதலாக ரொக்கட் தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது.

குருதிஸ் போராளிகள் தாயாக பகுதிகளை துருக்கிய இராணுவம் ஆக்கிரமித்து அந்த மக்களை மிரட்டி அடிமைகளாக்கி வருகிறது.

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் போன்ற போராளிகள் அமைப்பாக தமது தேசிய விடுதலைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி
வருகின்ற அமைப்புகளில் குருதீஸ் போராளிகள் அமைப்பும் ஒன்று என்பது இங்கே குறிப்பிட தக்கது.

    Posted in உலக செய்திகள்

    ரஷிய su 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் வீடியோ

    ரஷிய su 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் வீடியோ

    உக்கிரேன் ; ரஷிய நாட்டின் அதி உயர் சண்டை விமானமாக விளங்கி வரும் SU 35 ரக விமனம ஒன்று உக்கிரேன் எதிரி இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

    உக்கிரேன் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்த படும் ரஷ்ய விமான காட்சிகள் வெளியிட பட்டுள்ளன.

    அவை தற்பொழுது சமுக வலைத் தளங்களில் அதிகம் பகிர பட்டு வருகிறது.

    போர் முனையில் உள்ள உக்கிரேன் இராணுவ சிப்பாய்கள் விமானம் வீழ்வதை படம் பிடித்து வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது வைராலகிய வண்ணம் உள்ளன.

    இதே போன்ற சண்டை விமானத்தை அமெரிக்கா உக்கிரேனுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது.

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் அதிக வெப்பத்தினால் 13 பேர் மரணம்

      பிரிட்டனில் அதிக வெப்பத்தினால் 13 பேர் மரணம்

      ,

      பிரிட்டனில் கடந்த தினம் நிலவிய அதிக வெப்பத்தின் காரணமாக நாடு தழுவிய ரீதியில் 13 பேர் பலியாகியுள்ளனர் .

      மேலும் இந்த அதிக வெப்பத்தினால் பலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

      சம்பவ தினம் பிரிட்டனில் 40 செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது.

      இந்த அதிக வெப்பநிலை காரணமாக ரயில்வே தண்டவாளங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது .

      மேலும் பல வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன .இதே போல வாகனங்களும் எரிந்துள்ளன .

      போர் கோலமாக பிரிட்டனில் அதிக வெப்பநிலை காணப்பட்டது .அன்றைய தினம் மக்கள் பெரும் இடர்களை சந்தித்தனர் என்பது வரலாறாக பதிவாகியுளளது .

        Posted in உலக செய்திகள்

        ரஷ்ய ஜனாதிபதிக்கு கொடிய நோய் உளவுத்துறை விளையாட்டு ஆரம்பம்

        ரஷ்ய ஜனாதிபதிக்கு கொடிய நோய் உளவுத்துறை விளையாட்டு ஆரம்பம்

        ரஷ்ய மோஸ்க்கோ ; ரஷ்ய ஜனாதிபதி பிளாடீமீர் புட்டீன் கொடிய நோயின் தாக்குதலில் சிக்கியுள்ளார் என பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது .

        உக்கிரேன் மீது போரினை தொடுத்து வரும் ரஷ்ய அதிபரின் மனோ நிலையை குழப்பிடவும், போரிடும் இராணுவத்தின் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தவும் ,இவ்விதமான கட்டு கதைகளை அமெரிக்கா பிரிட்டன் உளவுத்துறைகள் கூட்டாக தெரிவித்து வருகின்றன .

        வடகொரிய அதிபர் இறந்து விட்டார் என்கின்ற வதந்திகளை பரப்பி உலக நாடுகள் மத்தியில் பீதியை கிளப்பியது அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள்.

        உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்

        அதன் பின்னரே மக்கள் முன்பாக வடகொரியா அதிபர் தோன்றினார் .

        அதே போன்ற உளவுத்துறை சித்து விளையாட்டில் அமெரிக்கா பிரிட்டன் நேட்டோ நாடுகளை இணைந்து மேற்கொண்டு வருகின்றன .


        அவர்தம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக இந்த வதந்தியை பரப்பிய வண்ணம் உள்ளனர் .

        மேற்படி நாடுக்ளின் போலி பரப்புரை இவை வதந்தி எனவும் நம்பாதீர்கள் என ரஷ்ய உளவுத்துறை அறிவித்துள்ளது .

        அரசியலில் இதெல்லாம் சகாயமப்பா .

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்

          பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்

          ,

          பிரிட்டன் லண்டன் ; பிரிட்டன் பிரதமராக போட்டியிட தற்போது நிதியமைச்சராக விளங்கிய ரிஷி சுனெக்கை இலக்கு வைத்து பிரிட்டன் ஊடகங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றன .

          இவர் இந்தியர் என்கின்ற நிலையில் மக்கள் முதுகில் குத்துவார் என்கின்றதான நிலையில் கருத்துக்கள் வேகமாக பரப்பப் பட்டு வருகின்றன . .

          இவருக்கு எதிரான மக்கள் அலையை கிளறி வெளிவிவகார அமைச்சராக விளங்கும் பிரிட்டன் நாட்டு அம்மணியை பிரதமராக்கும் நிலையில் ஊடகங்கள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.

          பிரிட்டன் பிரதமராகும் இந்தியா வம்சாவளி நிதியமைச்சர் சுனெக்

          இவை நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் உளவுத்துறை பின்புலத்தில் இருந்து நடத்த படுவதாக நோக்க முடிகிறது .

          பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்


          118 வாக்குகளை பெற்று முன்னிலையில் ரிஷி சுனெக் உள்ளார் .அதனை தொடர்ந்து 92 வாக்குகள் பெற்று இரண்டாம் நிலையில் அம்மையார் உள்ளார் .

          இவ்வாறு ஒரே கட்சிக்குள் நடந்து வரும் மோதலினால் சுனெக் பின் தள்ளப்பட்டு பிரிட்டன் நாட்டில் பிரதமராக துடிக்கும் இந்தியர் ஓரம் கட்ட படுகிறார் என்பதாக அந்த பக்கங்களை காணாமுடிகிறது என்கிறது மக்கள் சமூகம் .

          பாக்கலாம் இறுதி சுற்றில் வெல்ல போவது இந்தியாரா அல்லது அம்மணியா என்பதை .

            Posted in உலக செய்திகள்

            அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரனோ

            அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரனோ

            அமெரிக்கா ,நியூயோர்க் ; அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கொரனோ தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

            70 வயதாகும் ஜோ பைடன் நித்திரை கொள்ள கடினப்படுகிறார் என அந்த குறிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.

            அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரனோ தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்கின்ற செய்தி ஊடாக அமெரிக்காவில் வேகமாக மீளவும் கொரனோ நோயானது பரவி வருகிறது என்பதை அமெரிக்கா தெரிவித்துள்ளது .

            இவ்விதம் நோக்கின் விரைவில் அமெரிக்கா அடித்து பூட்டும் நிகழ்வுக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

            போலந்தில் பிட்சா சாப்பிட்ட அமெரிக்கா ஜனாதிபதி

            பிரேசில் நாட்டில் நாள் தோறும் முன்னூறுக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகிய வண்ணம் உள்ளனர் .

            அவ்விதம் அமெரிக்காவில் ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

            .

              Posted in உலக செய்திகள்

              இத்தாலிய பிரதமர் பதவி விலகல் -பொருளாதார நெருக்கடி இலங்கை போல மாறுமா

              இத்தாலிய பிரதமர் பதவி விலகல் -பொருளாதார நெருக்கடி இலங்கை போல மாறுமா

              இத்தாலிய பிரதமர் Mario Draghi தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்

              இத்தாலியில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக இந்த பதவி விலகலை அவர் மேற்கொண்டுள்ளார் .

              தற்போது இத்தாலிய ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டி புதிய பிரதமரை தெரிவு செய்திடும் நிலையில் உள்ளார் .

              உக்கிரேன் ரஷ்ய போர் காரணமாக உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.

              இவ்வாறான மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் இத்தாலியும் மூழ்கிய நிலையில் அரசியலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக வியாழன் இன்று பதவி விலகியுள்ளார் .

              இத்தாலிய பிரதமர் பதவி விலகல் -பொருளாதார நெருக்கடி இலங்கை போல மாறுமா

              பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகிய நிலையில் தற்போது இத்தாலிய பிரதமர் பதவி விலகியுள்ளார் .

              இலங்கையை விட்டு கோட்பாயாவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களினால் துரத்த பட்டார்.

              தற்போது ரணில் விக்கிரமசிங்க பதவியும் ஊசலாடி வருகிறது.

              ஆக உக்கிரேன் ரஷ்ய போர் பெரும் நெருக்கடிகளை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளதன் வெளிப்பாடே இந்தபதவி விலகல் உள்ளமை குறிப்பிட தக்கது.

                Posted in உலக செய்திகள் கனடா செய்திகள் வினோத வீடுப்பு

                கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ

                கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ

                , ,

                கனடா ரொராண்டோ பகுதியில் உள்ள வாகன நெரிசல் கொண்ட சாலை ஒன்றில் கம்பியால் கார் சாரதியை தாக்க சென்ற தமிழர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

                இந்த காணொளியில் உள்ளவர் இலங்கை தமிழர் என நம்ப படுகிறது .தனது காருக்குள் இருந்து யக்கை தூக்கி சென்று சாரதியை தாக்கிட செல்லும் இவரது ரவுடி தனத்தை 8,407,062 views மக்கள் பார்வை இட்டுள்ளனர்.

                தற்போது வரை இந்த காணொளி வைரலாகிய வண்ணம் உள்ளது 8.44 நிமிடத்தில் இருந்து பார்க்கவும் ..

                கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ

                காரில் உள்ள கமராவில் இவரது வன்முறை தோய்ந்த மிரட்டல் சம்பவங்கள் யாவும் ஆதாரமாக பதிவாகி கொண்டுள்ளது என்பதை அறியாத இவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் .

                கனடா quebec வேகா வீதியில் தரை இறங்கிய விமானம்

                வந்த நாடுகளில் அதன் விதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதை விடுத்து இலங்கையை போல எண்ணி இந்த நாடுகளில் இவ்விதம் செயல் படும் அநாகரிக செயல் பாடுகள் ஒட்டு மொத்த இலங்கை வாழ் தமிழர்களுக்கு அவப்பெயரை உருவாக்கி விடுகிறது .

                கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் ,மக்கள் கருத்தில் இவரை கழுவி ஊற்றியுள்ளனர் .

                இப்பொழுது வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் இந்த காணொளியை குறித்த நபர் பார்க்கும் பொழுது தனது தவறு என்ன என்பதை அவரே புரிந்து கொள்வார் .தவிர அவரது நண்பர்களும் இதனை கண்டு தெளிவார்களாக .

                  Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                  சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட சீனத்தவர் கைது

                  சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட சீனத்தவர் கைது

                  ,

                  ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான Malawi பகுதியில் சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட சீனா நாட்டை சேர்ந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். .

                  இவர் அங்கிருந்து ஐந்து நாடுகளுக்கு சிறுவர்களை கடத்தி விற்றுள்ளது தெரிய வந்துள்ளது .

                  முக்கிய மேற்குலக ஊடகம் ஒன்று வழங்கிய ஆவண குறிப்பில் இந்த நபர் அந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது வெளியான நிலையில் காவல்துறையினர் இந்த சீனத்து மனித ஆள்கடத்தல் காரனை கைது செய்தனர் .

                  இலங்கையில் சிறுவர்களை கடத்தும் மர்ம கும்பல் மடக்கி பிடிப்பு

                  சிறுவர்களுடன் காரினை கடத்திய நபர்கள்

                  கைதானா சீனத்தவர் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் இவர் நீதிமன்றில் பாரபடுத்த பட்டுள்ளார்.

                  எனினு இதுவரை இந்த சீனத்து சிறார் கடத்தல் காரனினால் எத்தனை சிறுவர் கடத்த பட்டனர் என்பது தொடரபாக தெரியவரவில்லை .

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    சிக்கிய 125 கிலோ போதைவஸ்து அதிர்ச்சியில் பொலிஸ்

                    சிக்கிய 125 கிலோ போதைவஸ்து அதிர்ச்சியில் பொலிஸ்

                    ,

                    பிரிட்டன் ; பிரிட்டனில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு டீசல் ஜெனரேட்டர் இயந்திரம் ஒன்றுக்குள் மறைத்து வைக்க பட்ட நிலையில் கடத்தி செல்ல பட்ட 125 கிலோ போதைவஸ்து சுங்கப்பிரிவினரிடம் சிக்கியது .

                    பிரிட்டனில் இருந்து மிக லாவகமாக அனுப்பி வைக்க பட்ட இந்த போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு பிரிட்டன் அதிகாரிகளை மிரள வைத்துள்ளது.

                    லண்டன் புறநகர் பகுதிகளில் இயங்கி வந்த மூன்று இயந்திர தொழில்துறை நிறுவனங்களும் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டது.

                    சிக்கிய 125 கிலோ போதைவஸ்து அதிர்ச்சியில் பொலிஸ்

                    அப்பொழுது இதேபோல இயந்திரம் ஒன்று தயாரான நிலையில் வைக்க பட்டதும் அதற்குள் இருந்தும் போதைவஸ்து மற்றும் கஞ்சா என்பனவும் மீட்க பட்டன.

                    போதைவஸ்து கடத்திய நீர்மூழ்கி கப்பல்கள் துரத்தி பிடித்த கடற்படை

                    போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று சிறை பிடிப்பு


                    மேலும் பொலிசார் நடத்திய சோதனையில் திருட பட்ட நகைகள் மற்றும் வாகனங்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளது.

                    கைதான போதைவஸ்து கடத்தல் காரர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

                      Posted in உலக செய்திகள்

                      அமெரிக்கா இராணுவ தளபதி சிரியாவுக்கு திடீர் பயணம்

                      அமெரிக்கா இராணுவ தளபதி சிரியாவுக்கு திடீர் பயணம்

                      அமெரிக்காவின் Lieutenant General Michael Kurilla முக்கிய தளபதி ஒருவர் சிரியாவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .

                      இவரது இந்த பயணம் அதி முக்கியதத்துவம் வாய்ந்த ஒன்றாக கருத படுகிறது.

                      அமெரிக்கா இராணுவ முகாமில் வெடிப்பு சத்தங்கள்

                      அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல்

                      சிரியா மீது அமெரிக்கா மற்றும் அதன் நேச படைகள் தாக்குதலை நடத்தி வருகின்ற பொழுதும் ரசியாவின் கடும் எதிர்ப்பினால் அது கை கூடவில்லை .

                      இவ்வாறான நிலையில் அமெரிக்கா இராணுவ தளபதி திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிது.

                      அமெரிக்கா இராணுவத்தினர் ரசியாவினால் கைது

                      போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்

                      அமெரிக்கா இராணுவ படையணியின் முக்கிய தளபதியின் இந்த பயணத்தின் பின்னர் முக்கிய தாக்குதல் நகர்வுகள் உள்ளடங்கி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                        Posted in உலக செய்திகள்

                        இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்

                        இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்

                        இந்திய டில்லி பகுதியில் செருப்பு தொழில் சாலையில் பணிபுரிந்த 15 வயது இளம் பெண்ணை அந்த நிறுவனத்தின் மேனேஜர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                        தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என அந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்ற கணவன் தனது மனைவியுடன் இணைந்து இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

                        மூன்று நாட்களாக கொடூரமாக கற்பழித்த அவர் பின்னர் பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பொழுது அவளது வாய்க்குள் அசிட்டை ஊற்றியுள்ளார் .

                        இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்

                        அதனை அருந்திய இளம் பெண் உடல் பகுதியில் பலமாக எரிந்த நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.

                        கொலை கற்பழிப்பு மற்றும் கடத்தல் வழக்கில் மேனேஜர் கைது செய்யப்பட்டு நீதிமனற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

                        மேற்படி இளம் பெண் கற்பழிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                        பெண்கள் அமைப்புக்கள் இந்த கற்பழிப்பை புரிந்த நபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என போராட்டங்களில் குதித்துள்ளனர்.

                        தனது மனைவியுடன் இணைந்து இளம் பெண்ணை கற்பழித்த கணவன் செயல் உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                          Posted in உலக செய்திகள்

                          ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை

                          ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை

                          ரசியா இராணுவத்தின் முக்கிய படை தளபதிகளாக விளங்கிய மூன்று கேணல் தர இராணுவ அதிகாரிகள் உக்கிரேன் தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளனர்.

                          இவர்களே முக்கிய தாக்குதல்களை உக்கிரேன் மீது திட்டமிட்டு வழிநடத்தி வந்தவர்கள் .

                          அவ்விதமான மூவரும் இந்த போர் முனையில் உக்கிரேன் தாக்குதலில் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

                          ரசியாவின் இராணுவ முக்கிய கேணல் தர நபர்கள் நடமாட்டங்களை அமெரிக்கா உளவுத்துறை கண்காணித்து தகவல் வழங்க அந்த செய்மதி தகவலுடன் ரசியா இராணுவம் மீது உக்கிரேன் தாக்குதலை நடத்தி வருகிறது

                          .ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை

                          இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் வழங்கிய உளவு விமானங்களை பயன் படுத்தி ரசியா உக்கிரேன் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

                          ஈரானின் இந்த உளவு விமானங்களின் செயல் பாடுகள் மிக முக்கியமான பலத்தை ரசியா இராணுவத்திற்கு வழங்கியுள்ளது.

                          உக்கிரேன் கிழக்கு பகுதிகள் மீது ரசியா இராணுவம் அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.

                          இதுவரை இன்றைய நாளில் அறுபதுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக உக்கிரேன் தெரிவிக்கிறது .

                          Posted in உலக செய்திகள்

                          ஆர்மேனியாவில் புதிய இராணுவ தளம் 2000 ரசியா இராணுவம் குவிப்பு

                          ஆர்மேனியாவில் புதிய இராணுவ தளம் 2000 ரசியா இராணுவம் குவிப்பு

                          ஆர்மேனியாவில் ரசியா இராணுவம் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைக்கிறது .

                          இந்த புதிய இராணுவ முகாமில் சுமார் இரண்டாயிரம் ரசியா இராணுவம் தங்க வைக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன .


                          விமான தளத்துடன் கூடிய நவீன வசதிகளுடன் இந்த இராணுவத் தளத்தை ரசியா இராணுவம் அமைத்து வருகிறது.

                          ஆர்மேனியாவில் ரசியா இராணுவம் நிறுவ படுவதால் அமெரிக்கா நேட்டோ இராணுவம் கொதிப்பில் உறைந்துள்ளது .


                          மேலும் இந்த ரசியா இராணுவ முகாம் அமைத்தல் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          மலிவு விற்பனையில் லண்டன் Bexley Bromley Greenwich and Lewisham
                          பகுதிகள் வீடுகள்

                          மலிவு விற்பனையில் லண்டன் Bexley Bromley Greenwich and Lewisham
                          பகுதிகள் வீடுகள்

                          லண்டன் Bexley Bromley Greenwich and Lewisham
                          பகுதிகள் உள்ள மாநகர சபைகளில் வீடுகள் ஐந்து லட்சம் வரை கடந்த பன்னிரெண்டு மாதங்களுக்குள் மலிவு விலையில் விற்பனை செய்யப் பட்டுள்ளன.

                          கொரனோ தொற்று நோயானது வேகமாக பரவிய நிலையில் அந்த நோயின் தாக்குதலின் பொழுதும் வீடுகள் மலிவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

                          இந்த பகுதிகளில் வீடுகளின் விலை ஐந்து லட்சம் முதல் £573,280.வரையிலான விலைக்குள் அதிகமாக விற்பனை செய்ய பட்டுள்ள புதிய புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.


                          மேலும் இதே பகுதிகளில் மக்கள் வீடுகளை வாங்கி குவித்திட முயன்று வருவதாக அந்த தகவலில் மேலும் தெரிவிக்க பட்டுள்ளது .


                            Posted in உலக செய்திகள்

                            துப்பாக்கி சூடு 14 பேர் மரணம் 9 பேர் காயம்

                            துப்பாக்கி சூடு 14 பேர் மரணம் 9 பேர் காயம்

                            தென் ஆப்ரிக்கா tavern பகுதியில் மக்கள் கூடும் பகுதியில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் சிக்கி 14 மக்கள் பலியாகினர் .

                            மேலும் இந்த துப்பாக்கி தாக்குதலில் சிக்கி ஒன்பது பேர் படுகாயமடைந்தனர் ,காயமடைந்தவர்கள் ஐந்து பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                            தென் ஆப்பிரிக்காவில் இடம்பெற்ற இந்த மர்ம ஆயுததாரி நடத்திய துப்பாககி சூட்டு தாக்குதல் ஏன் என்பது தொடர்பாக தெரியவரவிலை .

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            லண்டனில் சிறுவனை கடித்து குதறிய நாய்

                            லண்டனில் சிறுவனை கடித்து குதறிய நாய்

                            லண்டன் Cumberland Avenue, Canterbury பகுதில் ஒன்பது வயது சிறுவன் ஒருவனை நாய் ஒன்று திடீரென கடித்து குதறியது .

                            இந்த சம்பவத்தின் பொழுது அந்த சிறுவன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அம்புலன்ஸ் உலங்குவானூர்தி மூலம் லண்டன் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டான்.

                            தற்போது லண்டன் மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வரும் சிறுவன் நிலை தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை.

                            நாயின் உரிமையாளர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்.

                              Posted in உலக செய்திகள்

                              துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்

                              துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்

                              அமெரிக்காவில் கடந்த பத்து வாரங்களில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,.மேலும் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

                              அமெரிக்காவில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து துப்பாக்கி பாவனை மக்கள் மத்தியில் தடுக்க படுவதற்குரிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு அதன் மூலம் ஆயுத பாவணை கட்டு படுத்தலை அமெரிக்கா அரசு தீவிரமாக்கியுள்ளது.

                              இந்த புதிய சட்டங்களின் பின்னர் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் நிறுத்த படுமா என்பதே நமது கேள்வியாகும்.

                                Posted in உலக செய்திகள்

                                போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு

                                போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு


                                ஈரான் – ஈரானில் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் ஈரான் நாட்டின் எல்லை வழியாக கடத்தி வரப்பட்ட போதைவஸ்து பறிமுதல் செய்யப்பட்டது.

                                அவ்விதம் பறிமுதல் செய்ய பட்ட போதைவஸ்து எண்ணெய் ஊற்றி எரிக்கும் காட்சிகள் வெளியிட பட்டுள்ளது.

                                போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் சிறை பிடிப்பு

                                பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது

                                லண்டனில் காரை திருடி போதைவஸ்து வியாபாரம்


                                ஈரானில் போதைவஸ்து கடத்தி வருபவர்கள் கைது செய்யப்பட்டால் மக்கள் முன்பாக அவர்கள் தூக்கில் மாட்டி படுகொலை செய்ய பட்டு வருகின்றனர் .

                                அவ்வாறான கொடிய சட்டங்கள் பிறப்பிக்க பட்ட பொழுதும் இவ்விதமான போதைவஸ்து கடத்தல்கள்
                                தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                                Posted in உலக செய்திகள்

                                விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்து 332 பேர் காயம்

                                விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்து 332 பேர் காயம்

                                கொலம்பியா ; விளையாட்டு மைதானம் ஒன்று கொலம்பியாவில் இடிந்து வீழ்ந்ததில் அந்த கட்டட இடி பாடுகளுக்குள்ள சிக்கி 332 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

                                இந்த இந்த விளையாட்டு மைதான இடிபாட்டில் சிக்கி இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 12 பேர் மிக அபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

                                கிளிநொச்சியில் 60.000 பார்வையாளர்களை கொண்ட விளையாட்டு மைதானம்

                                இந்த விளையாட்டு மைதானம் இடிந்து வீழ்ந்த விபத்து தொட்ரபில் ஆராய விசேட குழு ஒன்று நியமிக்க பட்டுள்ளது.

                                இந்த விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்த
                                சம்பவம் கொலம்பியா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.