Tag: டில்லி
டில்லி முதல்வராகிறார் ரேகா குப்தா
டில்லி முதல்வராகிறார் ரேகா குப்தா
டில்லி முதல்வராகிறார் ரேகா குப்தா ,டில்லி பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். அவர் இன்று பதவியேற்கிறார்.
டில்லியின் பா.ஜ.க. முதல்வரை முடிவு செய்ய, அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் பா.ஜ.கவின் 48 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
இதில் டில்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
டில்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா அவர்களை வரவேற்றார்.
தொடர்ந்து டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தற்போது பெண் முதல்வர்கள் எவருமே இல்லை.
இதனால், எதிர்கட்சிகளின் மிகவும் முக்கியத் தலைவரான மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பதிலளிக்கும் வகையில் டில்லியின் முதல்வராக ஒரு பெண் அமரும் வாய்ப்புகளும் உள்ளன என தெரிவிக்கப்பட்டது . அது தற்போது உறுதியாகி உள்ளது.
டில்லியின் ராம்லீலா மைதானத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு துணைநிலை ஆளுநர் புதிய முதல்வர் ரேகா குப்தாவுக்கு பதவி ஏற்பு செய்து வைக்கிறார். இவருடன் புதிய அமைச்சர்களும் இதே மேடையில் பதவி ஏற்க உள்ளனர்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள், திரை நட்சத்திரங்களுடன் முக்கியத் துறவிகளும் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. டில்லியின் 70 சட்டப்பேரவை தொகுதிகளில் பா.ஜ.க. 48, ஆம் ஆத்மி 22 இடங்களை பெற்றிருந்தன.
டில்லியின் அடுத்த முதல்வராக டெல்லி பா.ஜ.கவின் பல்வேறு முக்கிய தலைவர்களின் பெயர்கள் சொல்லப்பட்டன. இந்த நிலையில் ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்
இடிந்துவிழுந்த டில்லி விமானத்தள கூரை
இடிந்துவிழுந்த டில்லி விமானத்தள கூரை
இடிந்துவிழுந்த டில்லி விமானத்தள கூரை ,இந்திய டெல்லிக்கு விமான நிலையத்தின் டெமினல் ஒன்று பகுதியில் அமையப்பெற்றுள்ள கூரை திடீரென இடிந்து விழுந்ததில் மூன்று பேர் மரணம் ஆகியும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூரையானது எவ்வாறு இடிந்து விழுந்தது என்பது தொடர்பில் தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
டில்லி என்பது மிகப்பெரும் விமான நிலையமாக காணப்படுகிறது .
அதிலேயே மூவர் பலியாகியும் 6க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
கட்டட நிபுணர்கள் உரிய முறையில் இதனை வடிவமைக்க மறந்ததன் காரணத்தினாலேயே இந்த இடி பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
டெல்லி விமான நிலையத்தின் கூரைகள் இடிந்து விழுந்தது
டெல்லி விமான நிலையத்தின் கூரைகள் இடிந்து விழுந்த சம்பவம் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்து இந்தியாவின் மானத்தை வாங்கி வருகின்றது .
அனைத்திலும் லஞ்ச ஊழலில் ஊறி இருக்கும் இந்தியாவில் இந்த கட்டிடங்கள் பணியின் பொழுதும், லஞ்சங்களை பெற்றுக் கொண்டு அதனூடாக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தின் ஊடகவே இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தற்பொழுது பாதுகாப்பற்ற ஒரு விமான நிலையமாக டெல்லி முதலாவது டெர்மினல் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பலியான மக்களுக்கு உரிய நஷ்ட ஈடுகளை வழங்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சுதந்திரமான பயணத்தை மேற்கொள்ள வந்திருந்த பயணிகளின் மூவரை பலியடுத்து ,ஆருக்கு மேற்பட்டவர்களை காயம் அடைய செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இவை இந்திய அரசியலில் மோடிக்கு எதிரான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்
இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்
இந்திய டில்லி பகுதியில் செருப்பு தொழில் சாலையில் பணிபுரிந்த 15 வயது இளம் பெண்ணை அந்த நிறுவனத்தின் மேனேஜர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என அந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்ற கணவன் தனது மனைவியுடன் இணைந்து இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
மூன்று நாட்களாக கொடூரமாக கற்பழித்த அவர் பின்னர் பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பொழுது அவளது வாய்க்குள் அசிட்டை ஊற்றியுள்ளார் .
இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்
அதனை அருந்திய இளம் பெண் உடல் பகுதியில் பலமாக எரிந்த நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.
கொலை கற்பழிப்பு மற்றும் கடத்தல் வழக்கில் மேனேஜர் கைது செய்யப்பட்டு நீதிமனற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
மேற்படி இளம் பெண் கற்பழிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் அமைப்புக்கள் இந்த கற்பழிப்பை புரிந்த நபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என போராட்டங்களில் குதித்துள்ளனர்.
தனது மனைவியுடன் இணைந்து இளம் பெண்ணை கற்பழித்த கணவன் செயல் உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.















