வாலிபனை கொம்பல குற்றி எறியும் மாடு காணொளி
Posted in உலக செய்திகள்

வாலிபனை கொம்பல குற்றி எறியும் மாடு காணொளி

வாலிபனை கொம்பல குற்றி எறியும் மாடு காணொளி

ஸ்பெயின் நாட்டில் இடம்பெற்ற காளை அடக்கும் போட்டியில் வாலிபன் ஒருவரை மாடு கொம்பால் குற்றி தாக்கும் சம்பவம், இடம்பெற்றுள்ளது .

பாதுகாப்பாக டயர் மேலே நின்ற இவரை அங்கு வந்த மாடு தேடி பிடித்து கொம்பால் குற்றி தனது கோபத்தை தனிப்பதை இந்த காணொளியில் காணலாம் .

அந்த காட்சிகள் இங்கே .

https://www.youtube.com/watch?v=RCAobsRg6jU
    அமேசன் வானை திருடி சென்ற திருடன் துரத்திய பொலிஸ் வீடியோ
    Posted in உலக செய்திகள்

    அமேசன் வானை திருடி சென்ற திருடன் துரத்திய பொலிஸ் வீடியோ

    அமேசன் வானை திருடி சென்ற திருடன் துரத்திய பொலிஸ் வீடியோ

    அமெரிக்கா ; அமெரிக்காவில் முதன்மை நிறுவனமாக விளங்கும் அமேசன் நிறுவனத்தின் வான் ஒன்றை கறுப்பின திருடன் ஒருவர் திருடி சென்றுள்ளார் .

    அதனை அறிந்த பொலிஸ் உலங்கு வானூர்தி உதவியுடன் அந்த திருடனை துரத்தி பிடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது

    அதிக வாகன போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையில் உயிராபத்தை விளைவிக்க கூடிய விதத்தில் செயல்பட்ட திருடன் செயல் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.

    அந்த அக்காணொளியை நீங்களும் பாருங்கள்.

      லண்டனில் வெடித்து சிதறிய காற்றலை மின்சாரம்
      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டனில் வெடித்து சிதறிய காற்றலை மின்சாரம்

      லண்டனில் வெடித்து சிதறிய காற்றலை மின்சாரம்

      லண்டன் நகர்புற பகுதியில் காற்றாலை மின்சாரம் ஒன்று வெடித்து சிதறியுள்ளது .


      லண்டனில் அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட தீ பற்றால் காரணமாக எரிந்து வெடித்து சிதறியுள்ளது.


      இந்த காற்றலை மின்சாரம் வெடித்து சிதறும் காட்சிகள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது.

      இந்த காற்றலை மின்சாரம் தீயில் எரிந்து வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

        அமெரிக்கா காங்கிரஸ் பெண் உள்ளிட்ட நால்வர் விபத்தில் மரணம்
        Posted in உலக செய்திகள்

        அமெரிக்கா காங்கிரஸ் பெண் உள்ளிட்ட நால்வர் விபத்தில் மரணம்

        அமெரிக்கா காங்கிரஸ் பெண் உள்ளிட்ட நால்வர் விபத்தில் மரணம்

        அமெரிக்கா ஐந்தியான பகுதியில் காங்கிரஸ் பெண் மேல் சபை உறுப்பினரான Republican Jackie Walorski அவர்கள் கார் விபத்தில் பலியாகியுள்ளார் .

        இவருடன் மேலும் நால்வர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .

        இவர்கள் மரணம் திட்டமிடப்பட்ட படுகொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

        அமெரிக்காவில் காங்கிரஸ் முக்கிய மேல் சபை உறுப்பினர் விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பங்கு சந்தை காணொளி பார்க்க இதில் அழுத்துங்க

          ரஷ்ய அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை
          Posted in உலக செய்திகள்

          ரஷ்ய அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை

          ரஷ்ய அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை

          ரஷ்ய ; உக்கிரேன் நாட்டில் முழுமையாக நுழைந்து தமது இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்கா இராணுவம் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளதாக ரஷ்ய குற்றம் சுமத்தியுள்ளது.

          தமது உளவுத்துறை ஆதாரங்களுடன் இந்த தகவலை திரட்டியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

          ரஸ்யாவின் இந்த நேரடி அறிவிப்பு அமெரிக்கா மற்றும் நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

          இதுவே மேலும் பலமான போரினை நாடுகள் ரீதியில் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

          உக்கிரேன் நாட்டையும் அதன் இராணுவத்தையும் தமது இராணுவம் பாதுகாக்கும் என அமெரிக்கா பிரிட்டன் தொடர்ந்து
          தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

          ஒரே நாளில் லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 700 அகதிகள்
          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          ஒரே நாளில் லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 700 அகதிகள்

          ஒரே நாளில் லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 700 அகதிகள்

          பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆங்கில கால்வாயை கடந்து லாண்டன் டோவர் பகுதிக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் நுழைந்துள்ளனர் .

          பிரிட்டன் வரலாற்றில் சமீப காலங்களில் இடம்பெற்ற அகதிகள் வருகையில் இதுவே அதிகமானதாக பதிவாகியுள்ளது.

          லண்டனுக்குள் நுழையும் அகதிகள் ரூவாண்டவனுக்கு அனுப்பி அங்கு சிறை வைக்க படுவார்கள் என்கின்ற அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது .

          அவ்விதம் இருந்தும் அகதிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து செல்கின்றமை ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

            அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்
            Posted in உலக செய்திகள்

            அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்

            அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்

            அமெரிக்கா கென்டிக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 37 பேர் மரண மாகியுள்ளனர் .

            மேலும் 12 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் ,

            நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன .

            இங்கே ஏற்பட்ட வெள்ள பெருகினால் பல மில்லியன் டொலர் சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

            தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

            அமெரிக்கா வெள்ளத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.

              அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்
              Posted in உலக செய்திகள்

              அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்

              அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்

              அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்

              கார் மாற்றும் வான் என்பன நேரெதிர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

              இரண்டு வாகனங்களும் மோதிய வேளையில் கார் வெடித்து தீ பற்றி கொண்டது .

              ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட ஏழுபேர் பலியாகியுள்ளனர்.

              சிறுவரக்ளை ஏற்றிய வண்ணம் காரை ஓட்டி சென்ற பெண் தவறான வழியூடாக காரினை செலுத்தி சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

              ஏன் இவ்வாறு தவறான வழியின் ஊடாக சிறுவர்களுடன் காரினை செலுத்தி சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .


              காயமடைந்த இருவர் உலங்குவானூர்தி மூலம் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

              அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த கோர விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

                லண்டன் கீத்திரோ விமான நிலையைத்தில் புகைக்குள் பறந்த விமானங்கள்
                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                லண்டன் கீத்திரோ விமான நிலையைத்தில் புகைக்குள் பறந்த விமானங்கள்

                லண்டன் கீத்திரோ விமான நிலையைத்தில் புகைக்குள் பறந்த விமானங்கள்

                லண்டன் கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் தீ புகைக்குள் பறந்த பயணிகள் விமானங்கள் .

                லண்டன் கீத்திரோ விமான நிலையத்தின் டெமினல் இரண்டின் அருகே பாரிய தீ பற்றி பிடித்துள்ளது .

                இதன் பொழுது அந்த பகுதி வழியாக பறந்து கொண்டிருந்த விமானங்கள் அந்த புகையில் சிக்கிய படியே பறந்து சென்றன .

                நூறுக்கு மேற்பட்ட விமானங்கள் இந்த புகைக்குள்ளால் பறந்துள்ளன .

                கீத்திரோ விமான நிலையத்தில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு விமானம் என்ற அடிப்படையில் இங்கே இறங்கி செல்வதாக தெரிவிக்க படுகிறது .

                அவ்வாறான நிலையில் இந்த தீ விபத்து பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .

                விமானங்கள் இவ்விதம் ஆபத்தான வழியூடாக பறக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

                https://twitter.com/i/status/1554119801420881920
                  லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து

                  லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து

                  லண்டன் ; கிழக்கு லண்டன் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ஆமை ஒன்று காணப்பட்டதால் அந்த வழி போக்குவரத்து தடை பட்டது .

                  கிழக்கு லண்டன் Norwich and Cambridge. இடையில் பயணிக்கும் ரயில்வே தண்டவாளத்தில் காயமடைந்த நிலையில் ஆமை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது.

                  குறித்த ஆமையை அவ்வழியால் பயணித்த பயணிகளில் ஒருவர் படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

                  அதில் குறித்த பகுதியில் தண்டவாளத்தில் ஆமை ஒன்று உள்ளது எனவும் காயமுற்ற நிலையில் உயிருடன் உள்ளது என அவர் பதிவிட்ட நிலையில் இந்த காட்சி பதிவு விலங்குகள் அமைப்பின் கவனத்திற்கு ரயில்வே நிலையத்தின் கவனத்திற்கும் பறந்து சென்றது .

                  லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து

                  விரைந்து செயல் பட்ட ரயில்வே அதிகாரிகள் அந்த வழி ரயில் போக்குவரத்தை தடை செய்து ஆமையை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

                  இந்த ஆமை ரயில்வே தண்டவாளத்தில் காணப்பட்டத்தை அடுத்து மதியம் ஒன்று முப்பது மணியளவில் ரயில்வே பயணம் சில மணிநேரம் தடை பட்டது .

                  விலகுங்கள் மீது மக்கள் எவ்விதம் அக்கறையுடன் உள்ளனர் என்பதனை இந்த ஆமை மீட்பு விடயங்கள் எடுத்து காட்டுகிறது .


                  ஆனால் நம்ம இலங்கை இந்தியாவில் கண்ணுற்றால் அதனை கல்லால் அடித்து கொன்று விடுவார்கள்.

                  இது அவர்கள் சிந்தனை ,வெள்ளையர் நாடுகளை போல விழிப்புணர்வு அற்ற தேசமாக இலங்கை இந்திய மக்கள் வசித்து வருவது கவனிக்க தக்கது.

                    பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு
                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு

                    பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு


                    பிரான்ஸ் ; தெற்கு பிரான்ஸ் நாட்டின் Gignac, பகுதியில் உள்ள நீச்சல் தடாகம் ஒன்றில் பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

                    நீச்சல் குளத்தில் சடலமாகா மீட்க பட்ட பிரிட்டன் தம்பதிகள் எண்பது வயதுடையவர்கள் என அடையாளம் காண பட்டுள்ளது.

                    எவ்வாறு இந்த நீச்சல் குளத்தில் பலியானார்கள் என்பது தொடர்பில் தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                    குறித்த பிரிட்டன் தம்பதிகள் சடலத்தை அவர் தம் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      வீதியில் எரிந்த வான் தப்பி ஓடிய சாரதி

                      வீதியில் எரிந்த வான் தப்பி ஓடிய சாரதி

                      லண்டன் A2 near Dartford பகுதியில் வான் ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது .


                      இந்த தீ விபத்தில் சிக்கி அந்த வான் எரிந்து நாசமாகியுள்ளது .எனினும் இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்களை ஏற்படவில்லை.

                      வீதியில் வானை எரிந்த நிலையில் கைவிட்டு சாரதி உயிர் தப்பிக்க தப்பி ஓடியதால் உயிரிழப்ப்பு தவிர்க்க பட்டுள்ளது .

                      இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                        Posted in உலக செய்திகள்

                        அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

                        அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

                        ஈராக் Saladin பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ வாகன தொடரணியை இலக்கு வைத்து கண்ணிவெடி தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது.

                        இதில் அமெரிக்கா வாகன தொடரணி பலத்த சேதங்களை சந்தித்துள்ளது .


                        இந்த வீதியோர கண்ணிவெடி தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தின் கவசவண்டிகள் சேதமடைந்துள்ளது.

                        இவ்வேளை அதில் பயணித்த இராணுவத்தினர் பலியாகியும் காயமடைந்துள்ளனர்.

                        எனினும் அமெரிக்கா இராணுவம் தமது இழப்புக்களை வெளியிடவில்லை.

                        தொடர்ந்து ஈராக்கில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

                          Posted in உலக செய்திகள்

                          ரஷ்ய சிரியா திடீர் இராணுவ போர் ஒத்திகை

                          ரஷ்ய சிரியா திடீர் இராணுவ போர் ஒத்திகை

                          சிரியா ரஷ்ய இராணுவம் இணைந்து திடீர் இராணுவ போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன .


                          சிரியா மற்றும் ரசியா இராணுவத்தினரின் முப்படைகள் இணைந்தது இந்த இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

                          சிரியாவில் தொடர் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ள நிலையிலும் உக்கிரேன் மீது ரஷ்ய தொடர்ந்து தாக்குதல்களை
                          நடத்திய வண்ணம் உள்ளது .

                          இவ்வாறன நெருங்கடியான நிலையில் இந்த போர் ஒத்திகை இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.

                            Posted in உலக செய்திகள்

                            அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்

                            அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்

                            அமெரிக்கா கென்டிக்கி பகுதியி ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை இருபத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

                            வெள்ள நீர் தொடர்ந்து வடியா நிலையில் காணப்படுவதால் மக்கள் வீடுகளில் இருந்து அகற்ற பட்டுள்ளனர்.

                            நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மின்சாரம் முற்றாக துண்டிக்க பட்டுள்ளது .

                            வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                            அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்
                            அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்


                            குறித்த பகுதி எங்கும் அவசரகால பிரகடன படுத்த பட்டு உதவி சேவைகள் வழங்க பட்ட வண்ணம் உள்ளது.

                            மின்சாரம் தொலைத் தொடர்புகள் என்பன துண்டிக்க பட்டுள்ளன .

                            அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த வெள்ள பெருக்கில் உயிர் இழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

                            அமெரிக்கா அதிபர் பாதிக்க பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குபடி பணித்துள்ளார்.

                              Posted in உலக செய்திகள்

                              உக்கிரேனுக்கு 14 கவச வண்டிகளை அன்பளிப்பு செய்த நோர்வே

                              உக்கிரேனுக்கு 14 கவச வண்டிகளை அன்பளிப்பு செய்த நோர்வே

                              நோர்வே ; உக்கிரேன் இராணுவத்தினருக்கு 14 14 Iveco LAV III light armored vehicles கவச வண்டிகளை நோர்வே நாடு அன்பளிப்பு செய்துள்ளது .

                              உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் தொடராக நடத்தி வரும் இராணுவ தாக்குதல்களை அடுத்து நோர்வே நாடானது இரண்டாவது தடவையாக இந்த ஆயுத வண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளது .

                              உக்கிரேன் நாட்டின் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ரஷ்ய இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது .

                              இவ்வாறான இராணுவ தாக்குதல்கள் தொடரும் நிலையில்
                              உக்கிரேனுக்கு நோர்வே அதி நவீன ஆயுத வண்டிகளை விநியோகம் செய்துள்ளமை குறிப்பிட தக்கது.

                                Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

                                பிரிட்டனில் துப்பாக்கி முனையில் பெண்ணை கற்பழித்த நபர் மடக்கிய பொலிஸ்

                                பிரிட்டனில் துப்பாக்கி முனையில் பெண்ணை கற்பழித்த நபர் மடக்கிய பொலிஸ்

                                பிரிட்டன் Boston, Lincolnshire. பகுதியில் பெண் ஒருவரை நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் கற்பழித்துள்ளார் .

                                குறித்த பெண் விபச்சாரம் புரிந்து வருபவர் .இவ்வாறான அந்த பெண்ணை துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் அவர் மிரட்டி கற்பழித்ததுள்ளார் .

                                துப்பாக்கி முனையில் கற்பழிப்புக்கு உள்ளாக்க பட்ட பெண் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த ஆயுததாரி மடக்கி பிடிக்க பட்டார் .

                                பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பி சென்று கொண்டிருந்த காரினை சோதனை புரிந்த பொழுது அந்த காருக்குள் கத்தி மற்றும் துப்பாக்கி என்பன இருந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டது.

                                கை விலங்கு மாட்டப்பட்டு குறித்த ஆயுத தாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளார் .

                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

                                  லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

                                  ,

                                  லண்டன் லூசியம் பகுதியில் வீட்டு வாத்துரூம் கூரை இடிந்து வீழ்ந்தவருக்கு எட்டு ஆயிரம் தண்டம் அறவிட பட்டுள்ளது ..

                                  குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு பலமுறை முறைப்பாடு செய்தும் அவர் வாத்துருமை அதனை திருத்தி கொடுக்கவில்லை .

                                  சம்பவ நாள் ஒன்று அந்த கூரை இடிந்து வீழ்ந்துள்ளது .வீட்டில் வசித்தவர்கள் கவுன்சிலுக்கு அறிய தந்த நிலையில் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது .

                                  லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

                                  தற்போது வீட்டினை வாடகைக்கு வழங்கியவர் உரியமுறையில் உயிர் பாதுகாப்பு பேணப்படாது ஆபாயகரமான நிலையில் வீட்டை வழங்கியதால் எட்டு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது.

                                  லண்டன் லூசியம் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க

                                  லண்டனில் சில தமிழர்களும் இவ்வாறு வீடுகளை வாடகைக்கு வழங்குவதும் வீட்டில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அதனை திருத்தி கொடுக்காது காலம் தாழ்த்துவது .

                                  வீட்டில் உள்ளவர்களை கேவலமாக பேசி வந்த நிலையில் அவர்களும்
                                  இவ்விதமான சிக்கலுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே கவனிக்க தக்கது.

                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்

                                    துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்

                                    ,

                                    துருக்கி ,பிரிட்டனில் இருந்து துருக்கி நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பெண் அங்கு குழந்தை பெற்றார் .


                                    இவரது மருத்துவ அனுமதி கட்டணம் 4500 பெறப்பட்டுள்ளது .

                                    அதன் பின்னர் பிள்ளை பேறு மற்றும் தாயார் பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவுகள் உள்ளடங்களாக ஐம்பதாயிரம் பவுண்டுகள் கட்டணம் குவிந்துள்ளது.

                                    இதனால் குறித்த தம்பதிகள் என்ன செய்வது என தெரியாதது திண்டாடி வருகின்றனர் .

                                    உல்லாச பயணம் சென்ற கர்ப்பிணி அங்கு குழந்தை பெற்றவுள்ளதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது .

                                    மேலு இவருக்கு மருத்துவக்காப்புறுதி வழங்கிட காப்புறுதி நிறுவனம் மறுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

                                    குறித்த தம்பதிகள் மருத்துவ கட்டணம் செலுத்திட மக்களிடம் பணம் சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

                                      Posted in உலக செய்திகள்

                                      வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா 16 பேர் பலி

                                      வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா 16 பேர் பலி

                                      அமெரிக்கா Kentucky பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 மக்கள் பலியாகியுள்ளனர் .

                                      மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டுள்ளது .

                                      .இந்த வெள்ளத்தில் சிக்கி இருபத்தி மூவாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்த வண்ணம் உள்ளனர்.


                                      மீட்பு படையினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.

                                      Kentucky ஆளுநர் பாதிக்க பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகள் வழங்க பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.


                                      வீடுகள் வெள்ளத்தில் மூக்கியுள்ளதால் பல மில்லியன் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது .

                                      வெள்ளநீர் தொடர்ந்து நீடித்து செல்வதால் மக்கள் பெரும் இடர்களுக்கு உள்ளாகியுள்ளனர் .


                                      வாகனங்கள் என்பன வெள்ள நீரில் அடித்து செல்ல படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                      இந்த அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என எதிரி பார்க்க படுகிறது .