Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வீதி விபத்தில்சிக்கி ஒரே நாளில் 8 பேர் மரணம்
வீதி விபத்தில்சிக்கி ஒரே நாளில் 8 பேர் மரணம்
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி எட்டு பேர்
பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர்
நாள் தோறும் இலங்கையில் வீதி விபத்துகளில் சிக்கி நல்லவர் பலியாகி வருகின்றனர் என்ற
அதிர்ச்சிகர புள்ளி விபரம் உள்ளமை குறிப்பிட தக்கது
அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு
அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்ச மீட்பு
இந்தியா கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட நிலையில் அறுபத்தி எட்டு மில்லியன் ரூபா
பெறுமதியான கஞ்சா மீட்க பட்டுள்ளது
அரியாலை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்க பட்டிருந்த நிலையில் இந்த கஞ்சா
கடற்படையின் உதவியுடன் மீட்க பட்டுள்ளது
இந்த கடத்தலோடு தொடர்புடைய சிலரும் கைது செய்ய பட்டுள்ளனர்

கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்
கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்
கனடாவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கை கூலியாகவும் கோட்டாவின் செல்ல
பிள்ளையாகவும் வலம் வரும் தேச துரோகி சுமந்திரன் பயணம் செய்தார் ,அங்கு
மக்களை சந்தித்து பேசிட கூட்டம் ஒன்று அவரது வால்களினால் ஒழுங்கு செய்ய பட்டிருந்தது ,
அங்கு அவரை சுற்றிவளைத்த மக்கள் துரோகி சுமந்திரன் இங்கு இருந்து தப்பி ஓடு ,
கூட்டி குடு என்ற கெட்ட வார்த்தைகளும் பயன் படுத்த பட்டது, இது மக்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாக அங்கு ஒலித்துள்ளது
மேலும் கனடாவிற்கு வராதே என கூறும் காட்சி வைரலாகி வருகிறது
இலங்கையில் அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை ,சட்டத்தரணி என்ற கோதாவில் மிரட்டுவது
போல வெளி நாடுகளில் உள்ள புலி தமிழர்களை மிரட்டலாம் என கனவு கண்டு வந்த சுமந்திரனுக்கு மக்கள் செருப்படி வழங்கியுள்ளனர்
கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்
அடுத்து வரும் தேர்தலில் சுமந்திரன் தோற்கடிக்க படுவார் ,இதில் இருந்து கூட்டமைப்பிற்கு மக்கள்
செல்வாக்கு குறைந்து வருவதனையும் ,மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து கூட்டமைப்பு சந்தித்து
வருவதும் கிழட்டு சம்பந்தர்
தலைமை பதவியில் இருந்து விலகி ஓடும் நாட்களும் வரும் தேர்தலில் இடம்பெற போவதற்கான
முன் அறிவிப்பாக இதனை அவதானிக்க முடிகிறது
இது தாண்டா துரோகி சுமந்திரன் ,தமிழர் ஒற்றுமை ,போய் கோட்டாவிடம் சொல்லு என்ற
வாசகங்களும் முழங்கின ,சுமந்திரா இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா .?
வெட்கம்,மான ,ரோசம், ஏதும் இருந்தால் திருந்துவர என்ற கோஷமும் அங்கு ஒலித்ததாம்
தமிழ் தேசிய அரசியல் பேசிய படி தமிழ் மக்களின் முதுகில் குத்தும் நாரதர் வேலைகளை சுமந்திரன் புரிந்து வருகிறார்
சுமந்திரனின் இந்த செயலானது இலங்கை அரசுகளை காப்பாற்றும் நகர்வாக அமைகிறது
அதனை நன்கு புரிந்து கொண்ட ஈழ தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூலியாக செயல் படும் சுமந்திரன் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்
தமது எதிர்ப்பை வலிமையாக காண்பித்துள்ளார் – வன்னி மைந்தன்.
மாவீரர் நாள் நடத்த தடை – தமிழர்கள் கொதிப்பு
மாவீரர் நாள் நடத்த தடை – தமிழர்கள் கொதிப்பு
யாழ்ப்பாணத்தில், மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களில், பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை, நாளை (22) நடைபெறவுள்ளது.
பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்திலும், சுன்னாகம், தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை
ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திலும், வெள்ளிக்கிழமை (19), மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி, விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இன்று 21ஆம் திகதி தொடக்கம் வரும் நவம்பர் 28ஆம் திகதி வரை, இந்த தடை உத்தரவு வழங்குமாறு, பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டக்கோவையின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்று தெரிவித்த பொலிஸார், இதனை தடை செய்யுமாறும் கோரியுள்ளனர்.
அத்துடன், நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரமும் பொதுமக்களை ஒன்றுதிரட்டுவதற்கு தடை உள்ளதாக, பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள், வெள்ளிக்கிழமை (19), இரண்டு நீதிமன்றங்களிலும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது, பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டோர் மன்றில் முன்னிலையாகவில்லை.
இதனைத் தொடர்ந்து, அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை (22) நடைபெறும் எனவும் அதன் பின்னர் கட்டளை பிறப்பிப்பதாகவும் குறிப்பிட்ட நீதிமன்றங்கள், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை சேர்ப்பிக்க உத்தரவிட்டன.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அனுமதி அளித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்,
தடை உத்தரவு கட்டளையை நேற்று முன்தினம் (19) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமந்திரனால் மக்களுக்கு பயனில்லை – தங்கமாளிகை அனந்தி கொதிப்பு
சுமந்திரனால் மக்களுக்கு பயனில்லை – தங்கமாளிகை அனந்தி கொதிப்பு
சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களிற்கு எதையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை எனவும் அறைகளிற்குள் விளக்கேற்றி படங்களை பிரசுரிப்பதை விடுத்து பொது வெளிக்கு வர வேண்டும் எனவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் 27ம் திகதிவரை மாவீரர் தினம். அதேபோல மே 18ம் திகதி பொதுமக்களிற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். தற்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் இந்த இரண்டு நிகழ்வுகளையும் தடுத்து வந்திருக்கின்ற நிலையில் கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு முதல்நாள் சடுதியாக அந்த ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்ப்டுள்ளதாக செய்தியை கொண்டுவந்தார்கள்.
முல்லைத்தீவு வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டால் ஒரு கிழமை, முன்றுநாள், ஐந்து நாள் என்று சென்ற நிலையில் உடினடியாக அதன் முடிவுகளை சொல்லி கொத்தணி உருவாகுவது புால் மாஜையை காட்டினார்கள்.
எங்களுடைய நிகழ்வுகள், போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபொழுது, கொரோனாவை சாட்டாக வைத்துக்கொண்டு அவர்கள் பழிவாங்குகின்ற அல்லது குரள்வளையை நெரிக்கின்ற செயற்பாட்டை முன்னெடுத்த வருகின்றார்கள்.
கடந்த மாவீரர் தினத்திலும் இவ்வாறு நீதிமன்ற தடைகளை எடுக்கப்பட்டிருந்தது. இம்முறையும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓடியோடி இந்த தடைகளை நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இந்த தடையை பொலிசார் கொண்டுவர விரும்பினால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
அது கொண்டுவர வேண்டுமாக இருந்தால் பாராளுமன்ற கெசட் நோட்டிபிக்கேசன் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் குறிப்பிட்ட ஒரு இடத்தை சொல்லாமல், வெறுமன இன்ன இன்ன தொகுதியை அல்லது மாவட்டத்தை மையப்படுத்தி தடைகளை எடுத்து வருகின்றார்கள்.
இந்த விடயத்தை சவாலுக்குட்படுத்தக்கூடிய சட்டத்தரணிகள் குழாம் இருக்க வேண்டும். அந்த சட்டத்தரணிகள் குழாம் தமிழ்த் தேசியம் சார்ந்து விவாதிக்கவேண்டிய வேளை வந்திருக்கின்றது. மனமுவந்து சட்டத்தரணிகள் குழாம் இதற்கு தயாராக வேண்டும். நினைவுகூரல் என்பது மனித உரிமைக்குரிய ஓர் நிகழ்வு.
அந்த நினைவுகூரலுக்கு கடந்த அரசாங்கமும் எமக்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் கண்டும் காணாதும் இருந்தார்கள். அதனை எமது மக்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். ஆனால் இப்பொழுது அதற்கு அனுமதிக்காத வகையில் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றது.
தடுப்பதற்கான முயற்சிகள் கடந்தவாரமே எடுக்கப்பட்டிருக்கின்றது. வழமையாக எந்த கடும் தேசிய தமிழ்க்கட்சிகளாக இருந்தாலும் பூட்டிய அறைக்குள் அல்லது தமது வளவிற்குள் நினைவேந்தலைசெய்து படங்களை பிரசுரிப்பதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
உண்மையில் சுமந்திரனுடைய சட்டம், சட்ட புலமை தமிழ் மக்களிற்கு பயன்பட்டதாக இல்லை. ஏனைய தமிழ் கட்சிகளினுடைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரனுடைய கட்சியாக இருக்கட்டும் எல்லோருமே ஒன்றுபட்டு இது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்டு உடனடியாக இதனை எவ்வாறு எதிர்கொள்வது பேசப்பட வேண்டும்.
வெளுமனே வீட்டுக்குள் கொழுத்துவதென்பது பொருத்தமானதல்ல. நாங்கள் சொல்லாவிடினும் வீடுகளில் மாவீரர்களை நினைந்து அவர்கள் விளக்கேற்றத்தான் போகின்றார்கள். ஆனால், உலகிற்கு சொல்வதற்கு ஒரு பொது வெளியில் வரவேண்டும். சகல கட்சிகளிலும் சட்டத்தரணிகள் நிறையப்பேர் இருக்கின்றார்கள்.
இந்த முறையாவது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களிற்குள் பேசி எவ்வாறு இந்த எவ்வாறு இவ்விடயத்தை விவாதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது இப்பொழுது தேவையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
கொட்டலில் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு
கொட்டலில் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு
அனுராத புரம் பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில் வசித்து வந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்க
பட்டுள்ளார் ,இவர் எவ்விதம் இங்கு இறந்தார் என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆம்பிக்க
பட்டுள்ளன
சடலம் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
வெடி பொருட்களுடன் இருவர் கைது
வெடி பொருட்களுடன் இருவர் கைது
இந்தியாவில் இருந்து படகுமூலம் கடத்தி வரப்பட்டு வீடொன்றில் பதுக்கி வைக்க பட்டிருந்த
பெருமளவான
வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்
கொழும்பு – பொலிஸ் பகுதியில் கட்டடமொன்றில் பாரிய தீ சம்பவம்
கொழும்பு – பொலிஸ் பகுதியில் கட்டடமொன்றில் பாரிய தீ சம்பவம்
கொழும்பு – கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரீட் வீதி பகுதியல் கட்டடமொன்றில்
பாரிய தீ சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இன்று(20) காலை பாரிய சத்தத்துடன் இந்த தீ சம்பவ இடம் பெற்றுள்ளது.
பழைய குதிரை பந்தய திடலின் பார்வையாளர் அரங்கில், அமைந்துள்ள சர்வதேச உணவுத்
தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான உணவு விடுதியில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவினால்
இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
கொழும்பு தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் பொலிசார் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தினால் எவருக்கும் உயிர்ச் சேதமோ காயங்கள் ஏற்பட்டதாகவோ இதுவரை தககவில்லையென அவர் கூறினார்.
வெடிப்பு சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக ,அரச இரசாயன ஆய்வாளர்
ஆய்வுகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவமேலும் தெரிவித்தார்.
வீதியில் குப்பைகளை கொட்டியவரை – அவரை வைத்து அள்ள வைத்த பொலிஸ்
வீதியில் குப்பைகளை கொட்டியவரை – அவரை வைத்து அள்ள வைத்த பொலிஸ்
யாழ்.தொல்புரம் பகுதியில் பொதுமக்கள் பாவனையில் உள்ள வீதியில் குப்பைகளை வீசி சென்றவர் சீ.சி.ரீ.வி கமராவில் சிக்கியதால், கொட்டிய குப்பைகளை அவரையே பொலிஸார் அள்ள வைத்தனர்.
உழவு இயந்திரத்தில் தன்னுடைய வீட்டு குப்பைகளை ஏற்றிவந்த குறித்த நபர் மக்கள்
பாவனையில் உள்ள வீதிகளில் பொறுப்பற்ற விதமாக வீசியவாறு சென்றுள்ளார்.
இது தொடர்பாக ஆராய்ந்த அப்பகுதி பிரதேசசபை உறுப்பினர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரீ.வி கமராக்களை ஆராய்ந்துள்ளார்.
இதன்போது வேண்டுமென்றே குப்பைகளை வீசி சென்றமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்
அதனை ஆதாரமாக கொண்டு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் குப்பைகளை வீசி சென்ற நபரை அடையாளம் கண்ட பொலிஸார் அந்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவரை கண்டித்துள்ளார்.
மேலும் கொட்டிய குப்பைகளை அகற்றவேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து குப்பையை
வீசிய நபரும், குப்பைக்கு சொந்தக்காரரான கடை உரிமையாளர் ஒருவரும் பொதுமக்கள் முன்னிலையில் குப்பைகளை அள்ளி அகற்றினர்.
முசுலீம்களை புலிகளிடம் இருந்து காப்பாற்றியவர் மகிந்தாவாம் – கூவும் அடிமை
இலங்கை
முசுலீம்களை புலிகளிடம் இருந்து காப்பாற்றியவர் மகிந்தாவாம் – கூவும் அடிமை
இந்த நாட்டு முஸ்லிம்களை அன்று புலிகளின் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றியவர் தான் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 76 ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு நல்லாசி வேண்டி
கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் வியாழக்கிழமை (19) விசேட துஆப்பிரார்த்தனை நடைபெற்றது.
புத்த சாசன அமைச்சின் வழிகாட்டலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில்
உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திணைக்களத்தில் தலைவர் இப்ராஹிம் அன்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர்
மேலும் உரையாற்றுகையில், ‘கடந்த 14 வருடங்களாக நான் அவருடன் சேர்ந்து வேலைசெய்து வருகின்றேன். எனது செயல்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
அவர் சகல இன மக்களையும் சமமாக பார்க்கக்கூடிய ஒருவர். மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் ஆட்சியை ஏற்றபோது இலங்கையின் மூன்றில் இரண்டு பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
குறிப்பாக வடக்கு மாகாண முஸ்லிம்களை விடுதலைபுலிகள் பிரதேசத்தை விட்டு
வெளியேறுமாறு குறுகிய கால அறிவித்தல் மூலம் வெளியேற்றினார்கள். இவ்வாறு
வெளியேற்றியவர்களை, பயங்கரவாதத்தை ஒழித்து மீண்டும் தங்களது சொந்த பிரதேசங்களுக்கு
செல்லக்கூடிய நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் மூலம் அவர் சிறந்த தலைமைத்துவத்தை வழிநடத்தக்கூடிய தலைவராகக் காணப்படுகின்றார்.
சிலர் கூறினார்கள் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது அவர்கள் கேட்பதை
கொடுத்து பிரச்சினையை தீர்க்குமாறு. இப்படிப்பட்ட நிலையிலேயே பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி கொடுத்தவர்.
முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலைமைகளால் எல்லா முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் சிறந்த முடிவுகளை எடுத்து தீர்த்து வைத்துள்ளார்.
ஓட்டமாவடியில் இடம் ஒதுக்குவதில்கூட அவரின் ஒத்துழைப்பு கிடைத்தது.
உதிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களை ஏனைய சமூகத்தினர் சந்தேகத்துடன்
பார்த்து வருகிறார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கான நிலைமையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.’ என்று நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இவ் விசேட துப் பிரார்த்தனையை பிரதமரின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் கலாநிதி ஹசன் மௌலானா நிகழ்த்தினார்.
குண்டு வெடிப்பு கண்டு பிடிப்பு – கிசுபுல்லா சிறையில் அடைப்பு
குண்டு வெடிப்பு கண்டு பிடிப்பு – கிசுபுல்லா சிறையில் அடைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க முடியாது என புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமது நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என இவ்வழக்கை விசாரிக்கவென
நியமிக்கப்பட்ட சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்து பிணை குறித்த தனது தீர்மானத்தை அறிவித்தார்.
அதன்படி இந்த வழக்கானது எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி சாட்சி
விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அன்றைய தினம் வழக்கின் முதல் சாட்சியாளரை மன்றில் ஆஜராக நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது.
அத்துடன் அன்றைய தினத்தில் பிரதிவாதிகளான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட
இருவரையும் மன்றில் கண்டிப்பாக ஆஜர் செய்யுமாறு நீதிபதி குமாரி அபேரத்ன, நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சருக்கு விஷேட உத்தரவினைப் பிறப்பித்தார்.
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் புத்தளம் மேல்
நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரம் மீதான வழக்கு விசாரணை இன்று மீளவும் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின்
நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், முதலில் கடந்த தவணையின் போது அறிவித்ததர்கு அமைய,
நீதிபதி குமாரி அபேரத்ன, பிரதிவாதிகளின் பிணைக் கோரிக்கை தொடர்பிலான தனது தீர்மானத்தை அறிவித்தார்.
பிரதிவாதிகளுக்கு பிணையளிக்க இந்த நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை
என்பதால், அவர்கலின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கபப்டுகிறது.´ என மேல் நீதிமன்ற நீதிபதி தனது பிணை குறித்த தீர்ப்பில் அறிவித்தார்.
வீடுகளுக்குள் திடீரென புகும் பொலிஸார்
இலங்கை
வீடுகளுக்குள் திடீரென புகும் பொலிஸார்
மாவீரர் வாரத்தினை நினைவு கூருவதற்கு பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு
அமைய வவுனியா நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக் கட்டளையைக் உரியவர்களுக்கு வழங்குவதற்காக சரியான முகவரிகள் இன்றி வவுனியா பொலிசார் வீடு வீடாக சென்று வருகிறார்கள்.
வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குள் 20.11.2021 தொடக்கம் 29.11.2021 வரை மாவீரர் நாளினை நினைவு கூருவதற்கு வவுனியா தலைமையகப் பொலிசாரரினால் வவுனியா நீதிமன்றில் தடை
உத்தரவு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை ஆராய்ந்த மன்று குறித்த நிகழ்விற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், பொலிசாரினால் பெயர் குறிப்பிட்டப்பட்ட 8 பேருக்கும் தடை உத்தரவு கட்டளையை வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் முன்னால் அரசியல் கைதியான செல்வநாயகம் அரவிந்தன், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி கா.ஜெயவனிதா, காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர்
கோ.ராஜ்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம்,
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உப தலைவர் சி.கஜேந்திரகுமார், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முக்கிய செயற்பாட்டாளர் சு.தவபாலன் ஆகியோருக்கு குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதில் பெயர் குறிப்பிட்ட சிலரது முகவரிகள் தவறாக பொலிசாரினால் வழங்கப்பட்டுள்ளமையால் குறித்த நபர்களை தேடி வவுனியா பொலிசார் வீடு வீடாக திரிந்து வருகின்றனர். பின்னர்
தொலைபேசி அழைப்பெடுத்து அவர்கள் நிற்கும் இடங்களுக்கு சென்று குறித்த தடை உத்தரவுகள வழங்கப்பட்டடு வருகின்றது.
இதேவேளை, குறித்த தடை உத்தரவில் தமது பெயர்கள் இருக்கின்ற போதும் முகவரிகள்
பிழையாக உள்ளதாகவும், பொலிசாரால் வழங்கப்பட்ட கட்டளையில் தமிழ் எழுத்து பிழைகள் அதிகமாக உள்ளதாகவும் தடை உத்தரவைப் பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு சென்ற வான் சிதறல் = நடந்த சோகம்
திருமணத்திற்கு சென்ற வான் சிதறல் = நடந்த சோகம்
பதிவு திருமணத்திற்காக வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் வாகனம்
விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா – கொழும்பு வீதியில் உள்ள கல்கமுக பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ஹயஸ் வாகனம் இன்று (18) அதிகாலை மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இடம்பெறவிருந்த தமது புதல்வியில் பதிவு திருமணத்திற்காக வவுனியா,
தோணிக்கல் பகுதியில் இருந்து சென்ற குடும்பத்தினரே விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில்
வாகன சாரதி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் என 6 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்கமுக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் கல்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து
செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்கமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு பஸ் சேவை – அசத்தும் கோட்டா
மாணவர்களுக்கு பஸ் சேவை – அசத்தும் கோட்டா
தற்போது நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு மேலதிக சிசுசரிய பேருந்துகளை ஈடுபடுத்துமாறு
இலங்கை போக்குவரத்து சபை (SLTB) டிப்போ முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
சிசு சரிய பேருந்துகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக மேலும் பல பேருந்துகள் திங்கட்கிழமை
முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
திருமலையில் ரவுடிகள் அட்டகாசம் – லொறி ,கடைகள் எரிப்பு
திருமலையில் ரவுடிகள் அட்டகாசம் – லொறி ,கடைகள் எரிப்பு
திருகோணமலை – கந்தளாய், பளுகஸ்வெவ சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்
வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளதோடு, சொத்துக்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ள சம்பவத்தால்
அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றிருந்த நிலையில், வாள்வெட்டுக்கு இலக்கான நபர் பலத்த
காயங்களுடன் கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் அங்கிருந்த லொறி, பெட்டிகடை ஒன்று தீவைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன்
தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கைது செய்து பொலிஸார் மேலுதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மகன் இறந்து நான்கு நாளில் தாய் மரணம்
மகன் இறந்து நான்கு நாளில் தாய் மரணம்
மாரடைப்பு காரணமாக, மகன் இறந்து நான்கு நாள்களில் அவரது தாய் உயிரிழந்த சம்பவம்
மாத்தளை- பலாபத்வல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான கிர்ஷாந்தனும் அவரது தாயாரான 59 வயதான பொன்செல்வி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனது இறப்பையடுத்து, குறித்த தாய் திடீரென நோய்வாய்ப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் மாத்தளை பிரதேச இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமானவர் என்றும்
பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தாய் மற்றும் மகனது இறுதிக்கிரியைகள் இன்று மாத்தளை- வாவன்னாவத்த பொது மையானத்தில் இடம்பெறவுள்ளது.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – கூவும் இலங்கை
எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – கூவும் இலங்கை
இலங்கையில் இந்த வரும் இறுதி வரைக்குமான எரிபொருள் இருப்பில் உள்ளதாகவும் அதனால்
அதற்கு தட்டு பாடு ஏற்படாது என ஆளும் அரசு தெரிவித்துள்ளது
கோட்டா ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர் நாட்டில், எரிபொருள் விலையும் ,அதற்கான தட்டுப்பாடும்
நிலவி வருகின்றமை குறிப்பிட தக்கது
விபச்சாத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது
விபச்சாத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது
இலங்கை கொழும்பு புறநகர் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆறு இளம் பெண்கள்
காவல்துரையினரால கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளனர் .போலீசாருக்கு
கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
14 பிக்குகளுக்கு கொரனோ
14 பிக்குகளுக்கு கொரனோ
இலங்கையில் ஆனமடுவ கொட்டுக்கச்சி வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில்
பகுதியில் தங்கி பயின்று வரும் 14 மாணவ பிக்குகளுக்கு கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளதாக
சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்
நாட்டில் மேலும் கொரனோ நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது
நகை கொள்ளையார் சுமந்திரன் – பாராளுமன்றில் டக்கிளஸ் செம்பு தூக்கி கூவல் – வீடியோ
நகை கொள்ளையார் சுமந்திரன் – பாராளுமன்றில் டக்கிளஸ் செம்பு தூக்கி கூவல் – வீடியோ
இலங்கை பாராளுமன்றில் சுமந்திரன் முள்ளி வாய்க்காலில் இறந்த தமிழர் உடல்களில் இருந்து
நகைகளை திருடி வந்தவர் என டக்கிளஸ் கூலி கும்பல் தலைவன் ஒருவர் பாராளுமனற
உறுப்பினர் என கூறிய படி சிறிதரன் எம்பியுடன் மோதினார்
அவரை கீழ்த்தரமான வார்த்தைகள் ஊடாக திட்டுவதை இங்கே காணலாம்
இவன் எல்லாம் ஒரு எம்பி தூ ,உங்களை போட்டு தள்ள பிரபாகரன் மீள் வரணுண்டா
click here video







