மாணவர்களுக்கு பஸ் சேவை – அசத்தும் கோட்டா
தற்போது நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு மேலதிக சிசுசரிய பேருந்துகளை ஈடுபடுத்துமாறு
இலங்கை போக்குவரத்து சபை (SLTB) டிப்போ முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
சிசு சரிய பேருந்துகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக மேலும் பல பேருந்துகள் திங்கட்கிழமை
முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.