திருமலையில் ரவுடிகள் அட்டகாசம் – லொறி ,கடைகள் எரிப்பு

Spread the love

திருமலையில் ரவுடிகள் அட்டகாசம் – லொறி ,கடைகள் எரிப்பு

திருகோணமலை – கந்தளாய், பளுகஸ்வெவ சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்

வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளதோடு, சொத்துக்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ள சம்பவத்தால்

அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றிருந்த நிலையில், வாள்வெட்டுக்கு இலக்கான நபர் பலத்த

காயங்களுடன் கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் அங்கிருந்த லொறி, பெட்டிகடை ஒன்று தீவைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன்

தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கைது செய்து பொலிஸார் மேலுதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply