Author: நலன் விரும்பி
40 பெட்ரோல் நிலையங்களுக்கு அடித்து பூட்டு
40 பெட்ரோல் நிலையங்களுக்கு அடித்து பூட்டு
நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊழியர்களை மிரட்டி வாடிக்கையாளர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட
நடவடிக்கை காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்தார்.
அந்த நிரப்பு நிலையங்களுக்கு கோரப்பட்டுள்ள அனைத்து எரிபொருளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே இவ்வாறான அதிகளவான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 5 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தை முறையாக மேற்கொள்ள ஆதரவு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை
அதிகரிக்கலாம் என பெற்றோலிய
விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-
நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
முறைப்பாட்டினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி முறைப்பாட்டினை அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரக்பி விளையாட்டின் ஊக்குவிப்புக்காக என குறிப்பிட்டு ´கிரிஷ்´ என்ற நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டு
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது
நிதி அமைச்சராக ரணில் பதவி ஏற்பு
நிதி அமைச்சராக ரணில் பதவி ஏற்பு
இலங்கையில் பிரதமராக விளங்கி வரும் ரணில் விக்கிரமசிங்க புதிய நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்
ஜனாதிபதி கோட்டா முன்பாக இவர் இந்த பதவியினை ஏற்றுள்ளார்
எதிர் வரும் ஆறு வாரத்தில் புதிய வரவு செலவு அறிக்கையை இவர் சமர்ப்பிப்பார் என எதிர் பார்க்க படுகிறது
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம்
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம்
இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம்
நிறைவேற்றியுள்ளதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் திரு.நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண உதவிகள், ஈழத்தமிழ் மக்களை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்
என கோரியுள்ள இத்தீர்மானம், ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் தமிழக அரசிடம் இருந்து ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பதாக கோரியுள்ளது.
சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவீனங்களின் அடிப்படையில் தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து
சிறிலங்கா இராணுவத்தினை வெளியேற்ற தமிழ்நாடு அரசு, இந்த வேளையில் வலியுறுத்த வேண்டும் என்பதனையும் எதிர்பார்ப்பதாக தீர்மானம் கோரியுள்ளது.
கடந்த மே21-22 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அசரவையில் உறுப்பினர் திரு நிமால் விநாயகமூர்த்தி அவர்களால முன்மொழியபட்டு, அரசவையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முழுவிபரம் :
தமிழ்நாட்டுக்கும் ஈழத்தமிழர் தேசத்துக்குமான உறவு என்பது உணர்வுபூர்வமானது. அது தொப்புள்கொடி உறவு. நிலத்தால் வேறுபட்டிருந்தாலும், உணர்வால்,
கலாசாரத்தால் பிரிக்கவியலாத ஒரு இனமாகும். ஈழத் தமிழர்களுக்கான நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் செயல்வடிவம் கொடுப்பதில் இந்திய அரசின் பங்களிப்பு
முக்கியமானதொன்றாகும் தங்கியிருக்கின்றது. இதற்கான திறவுகோல் எப்போதும் தமிழ்நாடாகவே இருக்கின்றது. இது வரலாறு முழுவதும் நிருபிக்கப்பட்டுவரும் உண்மையாகும்.
ஈழத்தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போதும், எமக்காக குரல் கொடுக்கும், எமக்குதவும் முதல் கரமாக, தமிழ்நாடே இருக்கின்றது. இந்த பின்புலத்தில்தான், மாண்புமிகு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு,
இலங்கைதீவின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் ஈழத்தமிழர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதை, ஈழத்தமிழர்களாகிய நாம் வரவேற்று மகிழ்கின்றோம். இது தொடர்பில், ஏற்கனவே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
பிரதமர். உருத்திரகுமாரன் அவர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின், மனிதபிமான நிவாரண உதவி முயற்சியை வரவேற்றிருந்ததோடு,
சிங்கள அரசாங்கங்கள் எவையும் தமிழ்மக்களை பாரபட்டசமின்றி நீதியாக நடத்தப் போவதில்லை. இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளிலும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள். இந்நிலையில் நேரடி
உதவிப்பொறிமுறையொன்றினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே தலைமை தாங்கி உருவாக்குமாறும் கோரியிருந்ததர் என்பதனையும் இந்த சந்தர்பத்தில் மீ;ண்டுமொருமுறை சுட்டிக்காட்டுகின்றது.
இதேவேளை ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் நாம் இவ்வேளையில் எதிர்பார்கின்றது.
தீர்மானம் :
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் வெளி முழுமையாக இல்லாத நிலையிலும், புலம்பெயர் ஈழத்தழர்களுக்கான தேசக்கட்டுமானமாகவும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை
- இலங்கைத்தீவுக்கு வெளியே சர்வதேச அரசியல் வெளியில் வெளிப்படுத்தும் ஜனநாயக போராட்ட வடிவம் என்னும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்னெடுக்கப்படும், நலிவுற்ற இலங்கை
- மக்களுக்கான, மனிதாபிமான நிவாரண உதவியை வரவேற்பதுடன், அதற்கான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் நாடுகடந்த தமிழீழ
- அரசாங்கம் தோழமையினை வெளிப்படுத்தும் வகையில் நிதியுதவியையும் வழங்கும்.
- தமிழ்நாட்டு அரசாங்கத்தின் இந்த மனிதாபிமான நிவாரண உதவிகள், தமிழர் தாயகத்தின் நலிவுற்ற எமது உறவுகளை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் வேண்டுகின்றது.
- இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 1.4ம் சரத்தில் குறிப்பிட்டவாறு, இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம்
- என்பதனை உறுதிசெய்தே, சிறிலங்காவுக்கான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவீனங்களின் அடிப்படையில் தமிழர்
- தாயகப்பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினை வெளியேற்ற தமிழ்நாடு அரசு, இந்த வேளையில் வலியுறுத்த வேண்டும் என்பதனையும் எதிர்பார்கின்றது.
- மேலும், உலகெங்கும் பரந்துவாழும் உலகத்தமிழ் உறவுகள், மாண்புமிகு,
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்னெடுக்கப்படும் இலங்கை மக்களுக்கான மனிதாபிமான நிவாரண திட்டத்திற்கு தாராளமாக உதவிகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றது என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய சமந்தா
விபத்தில் சிக்கிய சமந்தா
குஷி படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் காயம் அடைந்தனர்.
விபத்தில் சிக்கிய சமந்தா – விஜய் தேவரகொண்டா
சமந்தா – விஜய் தேவரகொண்டா
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவரை விவாகரத்து செய்த பிறகு மேலும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்
சேதுபதி ஜோடியாக நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைக்கு வந்தது. அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ள யசோதா, சாகுந்தலம் படங்கள் ரிலீசுக்கு
தயாராக உள்ளன. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் தேவரகொண்டா – சமந்தா
நடிகையர் திலகம் படத்தை அடுத்து சமந்தா, விஜய் தேவரகொண்டா மீண்டும் சேர்ந்து நடிக்கும் படம் குஷி. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது சண்டை காட்சி
ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம்
அடைந்தார்கள். இது குறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது, காயம் அடைந்ததும் இருவருக்கும் முதலுதவி கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை
படப்பிடிப்பின்போது இருவருமே முதுகு பகுதி வலிப்பதாக தெரிவித்தனர். உடனே அருகில் உள்ள ஹோட்டலில் அவர்களை தங்க வைத்து பிசியோதெரபிஸ்ட்டை
வரவழைத்தோம். இருவருக்கும் பிசியோதெரபி போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் இருவருக்கும் அருகில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்றார். காஷ்மீரில்
படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திங்கட்கிழமை மதியம் படக்குழு ஹைதராபாத் கிளம்பி வந்தது. குஷி படம் வரும் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு
தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு
நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என் தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு அறிக்கை
சிம்பு – டி.ராஜேந்தர்
பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.
இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர்.
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை
மேற்கொண்டு வருவதாகவும், தற்போது நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியது.
இந்நிலையில் டி.ராஜேந்தரின் உடல்நலம் குறித்து அவருடைய மகனும் நடிகருமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.
எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய
இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர்
சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார்.
உங்கள் பிராத்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
ரணில் நிதி அமைச்சர் -அடுத்து என்ன ..? கயானா காலியாகும் ..!
ரணில் நிதி அமைச்சர் -அடுத்து என்ன ..? கயானா காலியாகும் ..!
இலங்கையில் ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா
எதிர் வரும் நிதி அமைச்சராக பதவி பிராமணம் செய்திட உள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன
இவ்விதம் பதவி ஏற்கும் ரணிலினால் நெருக்கடியில் உள்ள நாட்டினை
முன்னிறுத்தி செல்லுமா என்பதே கேள்வியாகும் ..!
23 அமைச்சர்களுக்கு 23 செயலர்கள் தெரிவு
23 அமைச்சர்களுக்கு 23 செயலர்கள் தெரிவு
இலங்கையில் கலப்பு ஆட்சியில் அங்கம் வகிக்கும் இருபத்தி மூன்று அமைச்சர்களுக்கு
23 செயலர்கள் நியமிக்க பட்டுள்ளனர்
நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ,இந்த அமைச்சர்கள் தெரிவு என்பது
நெருக்கடியை தனிக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்
ஈழப் படு கொலை சுவடுகள் நூல் சீமானால் வெளியீடு video
ஈழப் படு கொலை சுவடுகள் நூல் சீமானால் வெளியீடு video
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் முள்ளி வாய்க்கால் சிங்கள படு கொலையின் கோர தாண்டவம் ,தமிழ் இன
அழிப்பு தொடர்பான ஈழ படுகொலை சுவடுகள் என்ற நூல் ஒன்று முள்ளிவாய்கால் தினத்தில் தமிழகத்தில் செந்தமிழன் சீமானால் வெளியிட பட்டுள்ளது
தமிழர்களின் போரின் வலியையும் ,சிங்கள அரச பயங்கரவாததின் படுகொலை கோர
வெறி காட்சிகளை இந்த நூல் அம்பல படுத்துகிறது ,தமிழர்களே வாங்கி படியுங்கள்
,என சீமான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிராக மக்கள் போராட்டம்
தமிழ் அரசியல்வாதிகளையும் ‘கர்மா விடாது’ என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான போராட்டம், நேற்றையதினத்தோடு 1919 நாளை எட்டியுளளது.
இதனையொட்டி, நேற்று (23) இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்கள், வடக்கு- கிழக்கில் இராணுவத்தை அகற்றுமாறுஇ சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்ததால் , இலங்கை பொருளாதாரத்தின் 15 சதவீத செலவீனம் இதுவாகும்.
இது தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையாகும். இதனைத்தெடர்நது மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள் இந்த கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும்.
‘ஐ நா கூட்டத்தொடருக்கு முன்பு இலங்கைக்கு உதவிகள் வழங்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் வலுவான கோரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள்,
சிவில்அமைப்புக்கள் முன்வைக்கவேண்டும். இல்லாவிடில், கர்மா அனைவரையும் பாதிக்கும்.
‘சிங்கள அரசியல் வாதிகள் பதவிக்கு வந்ததும் இனவாதிகளாக பேசுவார்கள். இதுதான்
74 வருட தமிழர்களின் வரலாறு. நல்லிணக்கம் மற்றும் தெற்கு அரசியல் பற்றிபேசும் தமிழ் அரசியல்வாதிகள் இனப் படுகொலைக்கான
நீதியை பெறமுடியாது’ என்றனர்.
ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்
ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்
இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பை அடுத்து பேரூந்து ,மற்றும் ஆட்டோ
பயண செலவுகள் அதிகரிக்க பட்டுள்ளது ,ஆட்டோ ஒன்றின் முதலாவது கிலோ மீட்டருக்கு நூறு ரூபா
அறவிட தீர்மானிக்க பட்டுள்ளது
இந்த கடுகதி விலை உயர்வினால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வழங்கும் இந்தியா
இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வழங்கும் இந்தியா
இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்க
இந்தியா தீர்மானித்துள்ளது குறித்த தொகை பணத்திற்கு எரிபொருள் வழங்க தீர்மானிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
நாட்டின் தற்கால நெருக்கடியை தீர்க்க இந்தியாவில் கடனை வாங்கி குவிக்கும்
இலங்கை ,அதனை மீள செலுத்திட முடியாத நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட போகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை
குறிப்பிட தக்கது
வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது
வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது
இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளி நாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற அறுபத்தி ஏழுபேர்
கடற் படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் திருகோணமலை சல்லிசம்பல் தீவு பகுதியில் குழுமியிருந்த வேளையே கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படுவர் என எதிர் பார்க்க படுகிறது
நாட்டில் எகிறிய எரிபொருள் விலை – கொதிப்பில் மக்கள்
நாட்டில் எகிறிய எரிபொருள் விலை – கொதிப்பில் மக்கள்
இலங்கையில் எரிபொருள் விலை 30 முதல் 50 ரூபாவினள மேலும் அதிகரிக்க பட்டுள்ளது
இந்த விலை உயர்வினால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
நாட்டில் நிலவி வரு பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க அத்தியாவசிய பொருட்களின் விலை
அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
ஜனாதிபதி பல்லு பிடுங்கும் -21 ஆவது திருத்தம் சமர்ப்பிப்பு
ஜனாதிபதி பல்லு பிடுங்கும் -21 ஆவது திருத்தம் சமர்ப்பிப்பு
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும்
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் அவதானிப்புகளுக்காக திருத்தத்தின் பிரதிகளை விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது
இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (27) கலந்துரையாடப்படும் என்றும் இந்த திருத்தம் இறுதி அனுமதிக்காக அமைச்சரவைக்கு
அனுப்பி வைக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆறு மைல் தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்
ஆறு மைல் தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்
இலங்கை மாத்தே கொட பகுதியில் இருந்து ஆறு மைல் தூரத்திற்கு மக்கள் எரிபொருள் கொள்வனவு
செய்திட வரிசையில் காத்துள்ள அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது
நாட்டில் நிலவும் பொருளாத நெருக்கடி நிலை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது
போராட்ட காலத்தில் தமிழர்கள் வன்னி யாழ் பகுதியெங்கும் மெழுகுவர்த்தியில்
வாழ்ந்த வரலாற்றை சிங்களவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதே பாதிக்க பட்ட தமிழர்கள் விருப்பமாக உள்ளது
பால்மா இன்றி இறந்த சிசு – கொதிப்பில் மக்கள்
இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹல்தும்முல்லை பகுதியில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளது.
உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற பெற்றோருக்கு, சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்காவில்லை.
குழந்தையை வைத்தியசாலை எடுத்துச் செல்ல ஆட்டோ ஒன்றைத் தேட ஒரு மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் கழிந்துவிட்டது. அவர்களின் வீட்டிலிருந்து
ஹல்தும்முல்லை வைத்தியசாலைக்கு செல்ல அரைமணிநேரம் தான் பயணிக்க வேண்டும். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று
குழந்தை அம்புலன்ஸ் ஊடாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
எனினும் இரத்தத்தில் சீனியின் அளவு கடுமையாக குறைவடைந்த காரணத்தினால் குழந்தை இறந்துவிட்டது.
வாலிபனை அடித்து இழுத்து சென்ற கொடூரம்
நாவலப்பிட்டி நகரிலுள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வருகைத் தந்த இளைஞர் ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலைய
உரிமையாளர், அவரது மகன் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று, நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது ஓட்டோவுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த போது, குறித்த எரிபொருள்
நிரப்பு நிலைய உரிமையாளரின் நண்பர் ஒருவர் வரிசையில் நிற்காமல் எரிபொருளை பெற முயற்சித்துள்ளார்.
இதன்போது இந்த விடயம் தொடர்பில் குறித்த இளைஞன், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே குறித்த இளைஞன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு நாவலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் வீசப்பட்டுள்ளான்.
இதனையடுத்து, 1990 அம்பியூலன்ஸ் ஊடாக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன், மேலதிக சிசிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்,
குறித்த இளைஞனுக்கு எதிராக நாவலப்பிட்டி பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், இச்சம்பவம் இடம்பெற்ற போது,
பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்
அமைதியாக இருந்ததாக வரிசையில் நின்ற நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
வீடுகளை எரிச்சிட்டாங்க – எம்பிக்கள் முறைப்பாடு
வீடுகளை எரித்தமை உட்பட தமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றும் ஆணைக்குழுவில் மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான முறைப்பாடுகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வீடுகளை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஜனநாயக நாடு என்ற வகையில் அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளை மதிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முறைப்பாடு செய்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள்,
அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என சுட்டிக்காட்டியுள்ளனர்.
10 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்பு
10 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்பு
இலங்கையில் இன்று மேலும் பத்து அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஆளும் ஜனாதிபதி கோட்டா பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது கோட்டா பதவி விலக மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது







